Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனப்பிரச்சினைக்கு சமஷ்டி மூலம் தீர்வு கிடைக்காது – சிறிலங்கா பிரதமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

இனப்பிரச்சினைக்கு சமஷ்டி மூலம் தீர்வு கிடைக்காது – சிறிலங்கா பிரதமர்

ranil-wickramasinghe-300x200.jpgஇனப்பிரச்சினைக்கு சமஷ்டியின் மூலம் தீர்வு காண முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று முன்தினம்  வணிக நிலையம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றிய அவர்,

“ஒன்றுபட்ட நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலமே தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

சிலவற்றைத் தவிர, பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள் இப்போது, பிளவுபடாத சிறிலங்காவுக்குள் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண முடியும் என்று ஏற்றுக் கொண்டிருக்கின்றன.

சமஷ்டியை உருவாக்க முயற்சிக்காமல் இதனை முன்னெடுக்க வேண்டும். இதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமும், பொதுவாக்கெடுப்பில் அங்கீகாரமும் பெற வேண்டும்.

தேசியப் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காணப்படுவது தான் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்ல. இந்த முயற்சியை சீர்குலைக்க எவரையும் அனுமதிக்கக் கூடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/01/29/news/36117

 

வாலாட்டும் சுமந்திரன் என்னத்த இவரிடம் இருந்து எங்களுக்கு தரப்போகின்றார் , ஆப்பு ,,,,,,,

  • கருத்துக்கள உறவுகள்

 விக்கியரை தேர்தலில் பாேட்டியிடாமல் தடுப்பதற்குரிய பரப்புரையை மேற்காெள்வதே இப்பாேதைக்கு இருக்கிற முதல்வேலை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தாங்கள் இழந்துவிட்ட அல்லது வலிந்து பறித்துக்கொள்ளப்பட்ட இறைமை/ஆட்சியுரிமையை கேட்பது எப்படி சிறிலங்காவை பிளவுபடுத்தும்? அதற்கான ஒரு வழிமுறையாக சுயாட்சியுடன் கூடிய சமஷ்டி முறையை கேட்கிறார்கள். அதனூடாக இலங்கையை ஒன்றுபடுத்தலாமே!

7 hours ago, nunavilan said:

இனப்பிரச்சினைக்கு சமஷ்டியின் மூலம் தீர்வு காண முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

தமிழ் ஈழம் தான் தீர்வு என்டு சொல்லாமல் சொல்றார்!

2 hours ago, Rajesh said:

தமிழ் ஈழம் தான் தீர்வு என்டு சொல்லாமல் சொல்றார்!

இது உங்களுக்கே ஓவராகத் தெரியவில்லையா?

9 hours ago, thulasie said:

இது உங்களுக்கே ஓவராகத் தெரியவில்லையா?

நாங்கள் இங்கை கிரிக்கெட் விளையாடவில்லை கண்டியளோ! 

7 minutes ago, போல் said:

நாங்கள் இங்கை கிரிக்கெட் விளையாடவில்லை கண்டியளோ! 

கிரிக்கெட் ஓவர் பற்றி, நான் கதைக்கவில்லை.

சுமந்திரன் திரும்பவும் வைத்துள்ள ஆப்பு , அவரின் குரு ரணில் தெளிவாக சொல்லிவிடடார் .
இனியும் சுமந்திரனை விட்டு வைப்பது நல்லதல்ல 
 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்றால் ஏன் கேலி, தமிழர்களுக்கு நாடு ஒன்று கிடைக்கணும் என்றிருந்தா அதை எதனாலும் தடுத்து நிறுத்தமுடியாது.

4 minutes ago, ஏராளன் said:

தமிழீழம் என்றால் ஏன் கேலி, தமிழர்களுக்கு நாடு ஒன்று கிடைக்கணும் என்றிருந்தா அதை எதனாலும் தடுத்து நிறுத்தமுடியாது.

நிட்சயமாக , இதுக்காக உயிர் விட்ட மாவீரர்களின் மற்றும் மக்களின் சுதந்திர வேட்கை இது. இதனை கேலி கூத்து என்று நினைப்பவர்களை .... மனித மிருகங்கள் என்று தான் பொருள் படும் .

  • கருத்துக்கள உறவுகள்

நாடு பிள‌வடையும் என‌ சொல்லி சொல்லி   கடைசியில் சீனாக்காரனுக்கு நாட்டுக்கு ப‌க்கத்தில் தீவை உருவாக்கி கொடுத்தது தான் மிச்சம்.....உதுக்குத்தான் அந்த காலத்தில் சனம் சொன்னது ........கவுன்கொண்டை ஜோதயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.