Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகிம்சையை கைவிடுங்கள்.. அதிரடி தாக்குதல் நடத்துங்கள்: இந்தியாவுக்கு இஸ்ரேல் அட்வைஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அகிம்சையை கைவிடுங்கள்.. அதிரடி தாக்குதல் நடத்துங்கள்: இந்தியாவுக்கு இஸ்ரேல் அட்வைஸ்!

 
  

பயங்கரவாதத்தினால் இந்தியா, இஸ்ரேல் மட்டுமல்ல பல்வேறு உலக நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு நாங்கள் (இஸ்ரேல்) அதிரடி தாக்குதல்களை நடத்திவருகிறோம். அந்த வகையில், தீவிரவாதம் – பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுக்கு எந்த வித நிபந்தனையுமின்றி முழுமையாக உதவ தயராக உள்ளோம் என அறிவித்துள்ளது இஸ்ரேல்.

ஜம்மு காஷ்மீர், புல்வாமா பகுதியில் கடந்த 14 ஆம் தேதி இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் – இ- முகமது என்ற அமைப்பு வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் சுமார் 45 வீரர்கள் பலியானார்கள். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ் – இ- முகமது என்ற அமைப்பை சார்ந்த 3 பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், ஜெய்ஷ் – இ- முகமது என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் பாகிஸ்தானிலேயே ஒளிந்திருப்பதாகவும், புல்வாமா தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் பங்கு உள்ளது எனவும் வெளிப்படையாக குற்றம் சாட்டிவருகிறது இந்தியா.

புல்வாமா தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், “பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா, இஸ்ரேல் மட்டுமன்றி பல்வேறு உலக நாடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. பயங்கரவாதிகளை ஒடுக்க இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அந்தவகையில் இஸ்ரேலின் அதிரடி தாக்குதல் நடவடிக்கையை இந்தியாவும் பின்பற்ற வேண்டுமென” தெரிவித்துள்ளார் இந்தியாவுக்கான புதிய இஸ்ரேல் தூதராக நியமிக்கப்பட்டுள்ள ரோன் மல்கா.

இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “காஷ்மீரில் இந்திய துணை ராணுவ படை வீரர்கள் மீதான தாக்குதல் கண்டத்துக்குரியது. வீரர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியா எங்கள் நெருங்கிய நட்பு நாடு. எனவே பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு நிபந்தனை இன்றி உதவ இஸ்ரேல் தயாராக உள்ளது. எங்கள் தொழில்நுட்பத்தையும் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருக்கிறோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

http://www.neruppunews.com/2019/02/20/அகிம்சையை-கைவிடுங்கள்-அ/

http://www.neruppunews.com/2019/02/20/அகிம்சையை-கைவிடுங்கள்-அ/

இந்திய, பாகிஸ்தானிய பொருளாதாரம் அழிவதற்கு இஸ்ரேல் அறிவுரை பகர்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

அகிம்சையை கைவிடுங்கள்.. அதிரடி தாக்குதல் நடத்துங்கள்: இந்தியாவுக்கு இஸ்ரேல் அட்வைஸ்!

இன்னுமா இந்தியாவில அகிம்சை இருக்குதென்று உலகம் நம்புது?

அகிம்சை பற்றி கதைத்தவர்களையே போட்டுத் தள்ளிய நாடாச்சே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவிலை அகிம்சை இருந்தால் எங்களுக்கு ஏன் இந்தப்பாடு????

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலுக்கும் இந்தியாவிற்கும் மிகவும் நெருங்கிய தொடர்பிருக்கிறது.

இஸ்ரேல், பாலஸ்த்தீனர்களின் பூமியை அடாத்தாக ஆக்கிரமித்துக்கொண்டு, அதற்கெதிராகப் போராடிவரும் பாலஸ்த்தீனர்களைப் பயங்கரவாதிகள் என்று கூறுகிறது. அதுமட்டுமல்லாமல், அயல் நாடுகளான லெபனன், ஜோர்டன் மற்றும் சிரியா ஆகியவற்றில் தலைமறைவாகச் செயற்படும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் ஆகிய பாலஸ்த்தீனப் போராளிக் குழுக்களைக் கட்டுப்படுத்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு அவ்வப்போது எல்லைகடந்து வலிந்த தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலின் இந்த அடாவடித்தனம் பற்றி எவருமே பேசுவதில்லை. அமெரிக்காவின் வெளிப்படையான ஆசீர்வாதமும், ஆதரவும் இருப்பதால் இஸ்ரேலினை அயலிலுள்ள அரபு நாடுகளால் எதுவுமே செய்ய முடிவதில்லை. 

இந்தியாவும் இஸ்ரேலுக்குச் சளைத்தது அல்ல. தனக்குச் சொந்தமில்லாத காஷ்மீரில் லட்சக்கணக்கான படையினரைக் குவித்து வைத்துக்கொண்டு அம்மக்களை முற்றான ஆக்கிரமிப்பிற்குள் வைத்திருக்கிறது. தனது ஆக்கிரமிப்பிற்கெதிராகப் போராடிவரும் காஷ்மீர்ப் போராளிகளைப் பயங்கரவாதிகள் என்று கூறிக்கொண்டு, இஸ்ரேல் பாணியிலேயே அம்மக்களை அவப்போது கொன்றுவருகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று கூறிக்கொண்டு, தனக்குச் சொந்தமில்லாத நாட்டின் எல்லையொன்றில் போய்நின்றுகொண்டு மக்களை துன்புறுத்தி வருகிறது. ஈழ விடயத்தில், இலங்கைக்கு எதிராக தமிழ்ப் போராளிக் குழுக்களை 1980 களின் ஆரம்பத்தில் இந்தியா ஆதரித்தது போன்று, பாக்கிஸ்த்தான் காஷ்மீர் போராளிகளைப் பாவிக்கிறது. இந்திய - பாக்கிஸ்த்தானிய எல்லைச் சண்டையில் அநியாயமாகப் பாதிக்கப்பட்டு வருவது, காஷ்மீர் மக்களென்றால் அது மிகையாகாது.

ஆனால், ஒரு விடயத்தில் இஸ்ரேல் போன்று இந்தியாவினால் செயற்பட முடியாது. தனக்கு விரும்பிய நேரத்தில், விரும்பிய இடத்தில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் போன்று இந்தியாவினால் பாக்கிஸ்த்தான் மீது தாக்குதல்களை நடத்த முடியாது. அணுவாயுத வல்லமையைப் பெற்றிருக்கும் இவ்விரு நாடுகளும் ஒருவர் மீது மற்றையவர் தாக்குவதை தவிர்த்தே வருகின்றனர். இடைக்கிடையே கார்கில் போன்ற மரபுவழிப் போர்களில் ஈடுபட்டாலும்கூட, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகள் மீது தாக்குவதைத் தவிர்த்தே வந்திருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragunathan said:

இஸ்ரேலுக்கும் இந்தியாவிற்கும் மிகவும் நெருங்கிய தொடர்பிருக்கிறது.

இஸ்ரேல், பாலஸ்த்தீனர்களின் பூமியை அடாத்தாக ஆக்கிரமித்துக்கொண்டு, அதற்கெதிராகப் போராடிவரும் பாலஸ்த்தீனர்களைப் பயங்கரவாதிகள் என்று கூறுகிறது. அதுமட்டுமல்லாமல், அயல் நாடுகளான லெபனன், ஜோர்டன் மற்றும் சிரியா ஆகியவற்றில் தலைமறைவாகச் செயற்படும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் ஆகிய பாலஸ்த்தீனப் போராளிக் குழுக்களைக் கட்டுப்படுத்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு அவ்வப்போது எல்லைகடந்து வலிந்த தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலின் இந்த அடாவடித்தனம் பற்றி எவருமே பேசுவதில்லை. அமெரிக்காவின் வெளிப்படையான ஆசீர்வாதமும், ஆதரவும் இருப்பதால் இஸ்ரேலினை அயலிலுள்ள அரபு நாடுகளால் எதுவுமே செய்ய முடிவதில்லை. 

இந்தியாவும் இஸ்ரேலுக்குச் சளைத்தது அல்ல. தனக்குச் சொந்தமில்லாத காஷ்மீரில் லட்சக்கணக்கான படையினரைக் குவித்து வைத்துக்கொண்டு அம்மக்களை முற்றான ஆக்கிரமிப்பிற்குள் வைத்திருக்கிறது. தனது ஆக்கிரமிப்பிற்கெதிராகப் போராடிவரும் காஷ்மீர்ப் போராளிகளைப் பயங்கரவாதிகள் என்று கூறிக்கொண்டு, இஸ்ரேல் பாணியிலேயே அம்மக்களை அவப்போது கொன்றுவருகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று கூறிக்கொண்டு, தனக்குச் சொந்தமில்லாத நாட்டின் எல்லையொன்றில் போய்நின்றுகொண்டு மக்களை துன்புறுத்தி வருகிறது. ஈழ விடயத்தில், இலங்கைக்கு எதிராக தமிழ்ப் போராளிக் குழுக்களை 1980 களின் ஆரம்பத்தில் இந்தியா ஆதரித்தது போன்று, பாக்கிஸ்த்தான் காஷ்மீர் போராளிகளைப் பாவிக்கிறது. இந்திய - பாக்கிஸ்த்தானிய எல்லைச் சண்டையில் அநியாயமாகப் பாதிக்கப்பட்டு வருவது, காஷ்மீர் மக்களென்றால் அது மிகையாகாது.

ஆனால், ஒரு விடயத்தில் இஸ்ரேல் போன்று இந்தியாவினால் செயற்பட முடியாது. தனக்கு விரும்பிய நேரத்தில், விரும்பிய இடத்தில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் போன்று இந்தியாவினால் பாக்கிஸ்த்தான் மீது தாக்குதல்களை நடத்த முடியாது. அணுவாயுத வல்லமையைப் பெற்றிருக்கும் இவ்விரு நாடுகளும் ஒருவர் மீது மற்றையவர் தாக்குவதை தவிர்த்தே வருகின்றனர். இடைக்கிடையே கார்கில் போன்ற மரபுவழிப் போர்களில் ஈடுபட்டாலும்கூட, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகள் மீது தாக்குவதைத் தவிர்த்தே வந்திருக்கின்றன.

இது எதிரிக்கு எதரி  நண்பன்  கதை  தான்...

அத்துடன்  வியாபாரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.