Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒவொன்றாக வெளிவரும் ஜிகாதிகள் விபரங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாட் பதியுதீன் மீது படியும் நிழல்

சங்கரிலா, கிங்ஸ்புரி ஹோட்டலின் தாக்குதலில் இரு சகோதரர்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்களின் ஒருவரின் மூன்று மாத கர்ப்பிணியான மனைவியே 9வது குண்டுதாரியாவார்.

போலீசார் வந்தபோது, வீட்டில் தயாராக வைத்திருந்த குண்டினை வெடிக்க வைத்து ஒரு குழந்தை, இரு போலீசாருடன் மரணித்தார். பி. ராஜேந்திரன் என்னும் ஒரு ஏழை தமிழ் பெண்ணையும் காதலித்து, மதம் மாற்றி , மூளை சலவை செய்துள்ளனர் போல தெரிகிறது. இவரது முழு விபரம் இன்னும் தெரியவில்லை.  இவர் தானா  அந்த ஒன்பதாவது குண்டுதாரி என்று தெரியவில்லை.

இந்த இரு குண்டுதாரிகளின் தந்தையார் ஒரு வியாபாரி, அவர் ரிஸாடின் வலது கரமாக செயல்பட்டுள்ளார்.

இரு குண்டுதாரிகளில் ஒருவரான இன்சாப் அஹமட் அவிசாவளையில் ஒரு பித்தளை தொழிற்சாலை வைத்திருந்தார். இந்த தொழில்சாலைக்கு குண்டு தயாரிப்பதே நோக்கமாக இருந்தது.

ஆனாலும், புத்திசாலித்தனமாக, இலங்கை ராணுவத்திடம் இருந்து, வெறுமையான துப்பாக்கி தோட்டாக்களின் கவசங்களை வாங்கி இருக்கிறார். இதற்கு தேவையான அரசியல் செல்வாக்குக்கு ரிஷாட் உதவியுள்ளார்.

இந்த பித்தளை கவசங்களை உருக்கி இவர் குண்டுகளுக்கான ஆணிகள் உள்ளிட்ட பாகங்களை செய்வித்துள்ளார். அந்த பாக்டரியினை சீல் வைத்துள்ள போலீசார், முகாமையாளர் உள்பட்ட 9 பேரை கைது செய்துள்ளனர். அநேகமாக, அங்கே வேலை செய்தவர்களுக்கு, அவை ராணுவத்துக்காக செய்யப்படுபவை என்று சொல்லப்பட்டிருக்கலாம்.

வழக்கமாக இந்த வகை வெறுமையான துப்பாக்கி தோட்டாக்களின் கவசங்களை ராணுவ விதிகளின் படி, சிறு நிறுவனங்களுக்கு, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கொடுக்க முடியாது.

இருந்தாலும், ரிஸாடின் அழுத்தம், செல்வாக்கு காரணமாக, முழுவதுமே இந்த இன்சாப் அஹமட்ன் தொழில்சாலைக்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

இதற்க்கான விளக்கம் அவரிடம் விரைவில் கோரப்படலாம்.

ஆஸ்திரேலிய, இந்திய, சிரிய தொடர்பு 

தாஜ் ஹோட்டலுக்கு குண்டுடன் சென்ற அப்துல் லதீப் ஜமீல் முஹமட், அது வெடிக்காததினால் அங்கிருந்து வெளியேறி தெகிவளை சென்றார். அங்கே மீண்டும் ஒருமுறை முயன்று பார்த்தபோது, இம்முறை குண்டு வெடித்து அவரும், வேறு ஒருவருமான இருவர் இறந்து போக, இந்த தொடர் தாக்குதல்களில் மிக குறைந்த சேதாரம் கொண்ட அந்நாளின் 7வது  தாக்குதலாக இது அமைந்தது.

இவர் அவுஸ்திரேலியாவில் படிக்க சென்று இருந்த காலத்தில் (2009 - 2013) ஆஸ்திரேலிய அதிகாரிகளின் இரகசிய கவனித்தலுக்கு ஆளாகி இருந்தார் என தெரிய வருகிறது.

ஆஸ்திரேலியாவில் இயங்கிய, தற்போது சிரியாவில் இருந்து வெளியேற முயன்று, துருக்கியில் சிக்கி சிறையில் இருக்கும், நீல் பிரகாஷ் எனும் IS முகவருடன் இவர் கொண்ட தொடர்பினால், ஆஸி இரகசிய சேவையின் கவனிப்புக்கு ஆளானார். எனினும் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்ற காரணத்தினால் அவர் கைதாகவில்லை.

ஆஸ்திரேலியாவில், மூளைச்சலவை செய்யப் பட்டு , மிகவும் கோபக்காரராக இலங்கை திரும்பி, காஸ்மீர் சென்று ஓர், 'Course' ஒன்றினை முடித்து சிரியா சென்று பின்னர் இலங்கை திரும்பி இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு செல்லுமுன்னர் இவர் பிரிட்டனிலும் படித்து இருக்கிறார். 

இப்போது, மிக அவசரமாக தத்தமது நாடுகளில் இவரது நடவடிக்கைகள் குறித்து, பிரிட்டன், ஆஸ்திரேலிய, இந்திய இரகசிய சேவைகள் ஆராய்கின்றன. இந்த நாடுகளின் முகவர்கள் இப்போது கொழும்பில் கூடி ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர்.

இலங்கைக்கு கிடைத்த மூன்று எச்சரிக்கையின் பின்னும் இலங்கை அரசோ, அதிகாரிகளோ அதனை தீவிரமாக எடுக்காதது, மிகப் பெரிய பழிப்புக்குரிய ஒரு இழிவினை (scandal) உண்டாக்கி உள்ளது.

ஆக இலங்கையில் நடந்த தாக்குதல்கள், மிக, மிக துல்லியமான திட்டங்களுடன், உலகையே அதிர வைக்கும் வகையில் அமைந்து விட்டது.

Source : DailyMirror Colombo

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

இதற்கு தேவையான அரசியல் செல்வாக்குக்கு ரிஷாட் உதவியுள்ளார்.

நானாவுக்கு ஒன்னும் தெரியாது,இன்னும் அமைச்சராக இருக்கிறார்  ....... அடுத்த தடவை பிரதமராக வந்தாலும் வருவார்..... உண்மையிலயே சிங்களவர்கள்😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நடந்தவை நன்றாகவே நடந்தன. இனி நடப்பவையும் நன்றாகவே நடக்கும். இது உலக பொது விதி.

ஹிஸ்புல்லா மற்றும் ரிஷாட்  'இரத்த ஆறு ஓடும், முஸ்லீம் இலைஞர்கள் ஆயுதம் ஏந்துவர்' என்று கூறியவற்றின் வீடியோக்கள் உள்ளனா? யாராவது எடுத்து தந்தால் நல்லது

 

http://www.virakesari.lk/article/14262

2016-12-08 இந்த நாளின் பாராளுமன்ற உரையை எடுக்க முடியுமா என்று பாருங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

ரிஷாட் பதியுதீன் மீது படியும் நிழல்

சங்கரிலா, கிங்ஸ்புரி ஹோட்டலின் தாக்குதலில் இரு சகோதரர்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்களின் ஒருவரின் மூன்று மாத கர்ப்பிணியான மனைவியே 9வது குண்டுதாரியாவார்.

போலீசார் வந்தபோது, வீட்டில் தயாராக வைத்திருந்த குண்டினை வெடிக்க வைத்து ஒரு குழந்தை, இரு போலீசாருடன் மரணித்தார். பி. ராஜேந்திரன் என்னும் ஒரு ஏழை தமிழ் பெண்ணையும் காதலித்து, மதம் மாற்றி , மூளை சலவை செய்துள்ளனர் போல தெரிகிறது. இவரது முழு விபரம் இன்னும் தெரியவில்லை.  இவர் தானா  அந்த ஒன்பதாவது குண்டுதாரி என்று தெரியவில்லை.

இந்த இரு குண்டுதாரிகளின் தந்தையார் ஒரு வியாபாரி, அவர் ரிஸாடின் வலது கரமாக செயல்பட்டுள்ளார்.

இரு குண்டுதாரிகளில் ஒருவரான இன்சாப் அஹமட் அவிசாவளையில் ஒரு பித்தளை தொழிற்சாலை வைத்திருந்தார். இந்த தொழில்சாலைக்கு குண்டு தயாரிப்பதே நோக்கமாக இருந்தது.

ஆனாலும், புத்திசாலித்தனமாக, இலங்கை ராணுவத்திடம் இருந்து, வெறுமையான துப்பாக்கி தோட்டாக்களின் கவசங்களை வாங்கி இருக்கிறார். இதற்கு தேவையான அரசியல் செல்வாக்குக்கு ரிஷாட் உதவியுள்ளார்.

இந்த பித்தளை கவசங்களை உருக்கி இவர் குண்டுகளுக்கான ஆணிகள் உள்ளிட்ட பாகங்களை செய்வித்துள்ளார். அந்த பாக்டரியினை சீல் வைத்துள்ள போலீசார், முகாமையாளர் உள்பட்ட 9 பேரை கைது செய்துள்ளனர். அநேகமாக, அங்கே வேலை செய்தவர்களுக்கு, அவை ராணுவத்துக்காக செய்யப்படுபவை என்று சொல்லப்பட்டிருக்கலாம்.

வழக்கமாக இந்த வகை வெறுமையான துப்பாக்கி தோட்டாக்களின் கவசங்களை ராணுவ விதிகளின் படி, சிறு நிறுவனங்களுக்கு, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கொடுக்க முடியாது.

இருந்தாலும், ரிஸாடின் அழுத்தம், செல்வாக்கு காரணமாக, முழுவதுமே இந்த இன்சாப் அஹமட்ன் தொழில்சாலைக்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

இதற்க்கான விளக்கம் அவரிடம் விரைவில் கோரப்படலாம்.

ஆஸ்திரேலிய, இந்திய, சிரிய தொடர்பு 

தாஜ் ஹோட்டலுக்கு குண்டுடன் சென்ற அப்துல் லதீப் ஜமீல் முஹமட், அது வெடிக்காததினால் அங்கிருந்து வெளியேறி தெகிவளை சென்றார். அங்கே மீண்டும் ஒருமுறை முயன்று பார்த்தபோது, இம்முறை குண்டு வெடித்து அவரும், வேறு ஒருவருமான இருவர் இறந்து போக, இந்த தொடர் தாக்குதல்களில் மிக குறைந்த சேதாரம் கொண்ட அந்நாளின் 7வது  தாக்குதலாக இது அமைந்தது.

இவர் அவுஸ்திரேலியாவில் படிக்க சென்று இருந்த காலத்தில் (2009 - 2013) ஆஸ்திரேலிய அதிகாரிகளின் இரகசிய கவனித்தலுக்கு ஆளாகி இருந்தார் என தெரிய வருகிறது.

ஆஸ்திரேலியாவில் இயங்கிய, தற்போது சிரியாவில் இருந்து வெளியேற முயன்று, துருக்கியில் சிக்கி சிறையில் இருக்கும், நீல் பிரகாஷ் எனும் IS முகவருடன் இவர் கொண்ட தொடர்பினால், ஆஸி இரகசிய சேவையின் கவனிப்புக்கு ஆளானார். எனினும் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்ற காரணத்தினால் அவர் கைதாகவில்லை.

ஆஸ்திரேலியாவில், மூளைச்சலவை செய்யப் பட்டு , மிகவும் கோபக்காரராக இலங்கை திரும்பி, காஸ்மீர் சென்று ஓர், 'Course' ஒன்றினை முடித்து சிரியா சென்று பின்னர் இலங்கை திரும்பி இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு செல்லுமுன்னர் இவர் பிரிட்டனிலும் படித்து இருக்கிறார். 

இப்போது, மிக அவசரமாக தத்தமது நாடுகளில் இவரது நடவடிக்கைகள் குறித்து, பிரிட்டன், ஆஸ்திரேலிய, இந்திய இரகசிய சேவைகள் ஆராய்கின்றன. இந்த நாடுகளின் முகவர்கள் இப்போது கொழும்பில் கூடி ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர்.

இலங்கைக்கு கிடைத்த மூன்று எச்சரிக்கையின் பின்னும் இலங்கை அரசோ, அதிகாரிகளோ அதனை தீவிரமாக எடுக்காதது, மிகப் பெரிய பழிப்புக்குரிய ஒரு இழிவினை (scandal) உண்டாக்கி உள்ளது.

ஆக இலங்கையில் நடந்த தாக்குதல்கள், மிக, மிக துல்லியமான திட்டங்களுடன், உலகையே அதிர வைக்கும் வகையில் அமைந்து விட்டது.

Source : DailyMirror Colombo

உந்த லண்டனில் படிச்சவர் தீவிரவாத இயக்கத்தில் சேருவார் என்று தனக்கு முன்னமே தெரியும்  என்று அவருடைய லண்டன் பேராசிரியர் சொல்லி இருக்கிறாராம்...அவர்களிடமும் விசாரணை நடக்குதாம்...பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதே இப்படியான கல்விமான்கள் தான் 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, putthan said:

நானாவுக்கு ஒன்னும் தெரியாது,இன்னும் அமைச்சராக இருக்கிறார்  ....... அடுத்த தடவை பிரதமராக வந்தாலும் வருவார்..... உண்மையிலயே சிங்களவர்கள்😄

புத்தன்,  சொல்ல வந்ததை..... ஏன், அரைவாசியில் நிப்பாட்டிப் போட்டியள். :grin:
உண்மையிலேயே சிங்களவர்கள், மோட்டுச்  சிங்களவர்கள் என்று தானே... சொல்ல வந்தீர்கள்.
அதுதான்... உண்மை. அதனைத்தான்...  இன்று பார்க்கிறோமே...
இதனை முன்பு, இங்கு  பலர் சொன்னபோது.... அதற்கு வக்காலத்து வாங்கிய பலரை, இன்று காணவில்லை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

.... அதற்கு வக்காலத்து வாங்கிய பலரை, இன்று காணவில்லை.

அவர்கள் இப்பொழுது சிந்திக்கிறார்கள் எப்படி முஸ்லீம்களின் போராட்டதை நியாயப்படுத்தலாம் என்று.....முஸ்லீம்கள் பயங்கரவாதிகள் அல்ல ...ஒரு வெளிநாட்டு குழுதான் இதை செய்தது என வாதிட...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.