Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுமந்திரன் ஹிஸ்புல்லாவைச் சந்தித்தது எனக்கு தெரியாது; கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன்: மாவை!

Featured Replies

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புள்ளாவைச் சந்தித்த விடயமானது தமக்கு அதிர்ச்சியளித்திருந்ததாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

மேலும் இது கூட்டமைப்பின் தலைமைக்குத் தெரிந்துதான் நிகழ்ந்திருக்குமா என்பதும் தமக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் இடம்பெற்ற தொடர் தீவிரவாதத் தாக்குதல்களையடுத்து நாடாளுமன்ற உருப்பினர் எம்.ஏ சுமந்திரன் கிழக்கு மாகாண ஆளுநரை நேரில்சென்று சந்தித்திருந்தார். இது கூட்டமைப்பு சார்பானோரிடத்தில் கடும் எதிர்ப்பு நிலையினைச் சந்தித்திருந்த நிலையில், நாடாளுமன்றில் சுமந்திரன் அதுகுறித்த விளக்கத்தினைக் கொடுத்திருந்தார்.

மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் துக்கதினத்தை அனுட்டிக்குமாறு தான் அவரைக் கேட்டுக்கொண்டதாகவும் ஆனாலும் அவர் அதனைத் திரிபுபடுத்தி கிழக்கில் கடைகளைமூடி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்ததாகவும் சுமந்திரன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

எவ்வாறாயினும் தமிழ் மக்கள் தொடர்பில் கடும்போக்காளராகச் செயற்படும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புள்ளாவை சுமந்திரன் சந்தித்திருந்தமை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பானோரிடத்தில் சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே மாவை சேனாதிராசாவிடம் இதுகுறித்து ஐ.பி.சி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சிக்காக கேட்கப்பட்டது.

அதில் அவர் மேலும் கூறியதாவது,

ஹிஸ்புல்லா “இரத்த ஆறு ஓடும்” என தெரிவித்ததாக வரும் கருத்து அவரது கருத்து. அவர் இவ்வாறான இயக்கங்களின் பின்னணியில் பேசினாரா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவரது பேச்சுக்கள் தமிழ் மக்களுக்கு எதிரானதாக, தமிழ் மக்களது போராட்டத்துக்கு எதிரானதாக, தமிழ் மக்களது அபிலாசைகளுக்கு விரோதமானதாக அமைந்திருந்தமையை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இவ்வாறான நிலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தமையினைத்தொடர்ந்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புள்ளாவை உடனடியாக சந்தித்தமை தவறுதலாக இடம்பெற்றது என்பதை நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். இது கூட்டமைப்பின் தலைமையோடு பேசுப்பட்டு அல்லது ஆராய்ந்து நிகழ்ந்த விடயமாக நான் நினைக்கவில்லை. அவர் ஹிஸ்புள்ளாவைச் சந்திக்கப் போனதன்பிற்பாடு நான் மட்டக்களப்புக்குச் சென்றபொழுது, அங்கு வீரகேசரி ஊடகத்தில் வந்ததை அடிப்படையாக வைத்து என்னிடம் கேட்கப்பட்டது. அப்பொழுது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது.” என்றார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறிய விடயங்களை ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியில் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறும் சக்கரவியூகம் நிகழ்சியில் காணுங்கள்.

https://www.ibctamil.com/srilanka/80/118718?ref=home-imp-flag

  • தொடங்கியவர்

ஹிஸ்புல்லா தமிழருக்கு விரோதமானவர்; முஸ்லிம் அரசியல்வாதிகள் விசாரிக்கப்படவேண்டும்! வலியுறுத்துகிறது கூட்டமைப்பு!!

சர்வதேச பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்ற அடிப்படைவாத அமைப்புக்களுக்கு துணைபோகும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மீது நேர்மையான ஆணைக்குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அவ்வாறான செயற்பாடுகளுக்கு துணைபோவது நிரூபிக்கப்படுமாயின் அவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

ஐ.பி.சி தமிழின் சக்கரவியூகம் நிகழ்சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மாவை செனாதிராஜா மேற்படி கருத்தினை முன்வைத்துள்ளார்.

இங்கு மேலும் குறிப்பிட்டுள்ள அவர்,

”முஸ்லிம் தலைவர்கள்மீது தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிலரால் முன்வைக்கப்படும் குற்றச்சாடுக்கள் தொடர்பில் நான் ஆராய்ந்திருக்கவில்லை. தனியே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின்மீது குற்றம்சாட்டிவிடமுடியாது என்பதைப் பார்க்கவேண்டும். ஏனெனில் ஜே.வி.பி கூட ஒரு பதிலைச் சொல்லியிருக்கிறது, அவர்களது தரப்பில் நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட்ட ஒருவர் இந்த தீவிரவாதத்துடன் சம்மந்தப்பட்டவர் என்பதை. அதேபோல இதில் முக்கியமான இன்னொருவர், அவரது பெயரை மறந்துவிட்டேன், அவரை தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பாகவோ வேறு நடவடிக்ககள் தொடர்பாகவோ கைதுசெய்தபோது முஸ்லிம் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் பிணையில் எடுத்துவிட்டார்கள் என்றும் பேசப்பட்டிருக்கிறது.

ஆனபடியால் முஸ்லிம் நாடாளுமன்ற உறுபினர்கள், அமைச்சர்கள், கட்சிகளில் இருப்பவர்கள் அவர்கள் நிச்சயமாக இந்த இயக்கத்துடன் சம்மந்தப்பட்டிருக்கலாம். இது நிச்சயமாக விசாரிக்கப்படவேண்டும். இதற்கென தனியான ஒரு நடுநிலையான ஆணைக்குழு நியமித்து சம்மந்தப்பட்டவர்களை பூரணமாக விசாரித்து சர்வதேச பயங்கரவாதிகளுடன் இணைந்து முஸ்லிம் அடிப்படைவாதத்தை நிலைநாட்டவேண்டும் என்கிற கோட்பாட்டோடு செயற்படுகின்ற அமைப்புடன் சம்மந்தமிருந்தால் அவர்கள்மீதும் அந்த கட்சிகள்மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு நிச்சயமாக இடமிருக்கவேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு.

ஹிஸ்புல்லா “இரத்த ஆறு ஓடும்” என தெரிவித்ததாக வரும் கருத்து அவரது கருத்து. அவர் இவ்வாறான இயக்கங்களின் பின்னணியில் பேசினாரா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவரது பேச்சுக்கள் தமிழ் மக்களுக்கு எதிரானதாகவும், தமிழ் மக்களது போராட்டத்துக்கு எதிரானதாகவும், தமிழ் மக்களது அபிலாசைகளுக்கு விரோதமானதாகவும் அமைந்திருந்தமையை நான் ஏற்றுக்கொள்கிறேன்.” என அவர் மேலும் கூறினார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறிய விடயங்களை ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியில் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறும் சக்கரவியூகம் நிகழ்சியில் காணுங்கள்.

https://www.ibctamil.com/srilanka/80/118712

  • கருத்துக்கள உறவுகள்

roflphotos-dot-com-photo-comments-20190420143431.jpg

ஆகா.... கூட்டமைப்பு,  நித்திரையால் எழும்பி விட்டது.
இனி அவர்கள் விடும், அறிக்கை போர்களை.. வாசிக்க விசர் வந்து விடும். 

எதிர்க் கட்சி பதவியில் இருந்து கொண்டு...  கிடைத்த கால அவகாசங்களையும், சந்தர்ப்பங்களையும்... 
பாவிக்கத் தெரியாமல்... சிங்களவனுக்கு வெள்ளை அடித்துக் கொண்டிருந்த, கூட்டமைப்பு...
இப்ப... லூசுக் கதையுடன், மக்களிடம் வருகின்றது. 

வெட்கம், மானம், ரோசம் என்று ஏதாவது...  கூட்டமைப்புக்கு இருந்தால்... 
வழக்கம் போல, வாயை... பொத்திக்  கொண்டு இருப்பதே, இப்பவும்  நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சின்ன பிள்ளையாக இருக்கும் பொழுது ,அப்பர் எதாவது சீறியஸ்சாக வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது நான் அப்பா சொக்லெட் வாங்கி தாரீங்களா என்று கேட்டா அவர் இப்படித்தான்  ஏசுவார் ....  "இந்த சீலைக்குள்ள உந்த சீலை  வேற‌....போ"....

9 hours ago, Rajesh said:

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புள்ளாவைச் சந்தித்த விடயமானது தமக்கு அதிர்ச்சியளித்திருந்ததாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

சுமந்திரனுக்கு ஹிஸ்புல்லா எவ்வளவு தொகையை அள்ளிக் கொடுத்திருப்பார் என்ற அங்கலாய்ப்பில் மாவைக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கு!

செய்தி பிரசுரம் ஆகும் போது அனேகமாக அதிர்ச்சியில்  இருந்து மீண்டு அடுத்த அதிர்ச்சிக்கு தயாராகி இருப்பார். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

roflphotos-dot-com-photo-comments-20190420143431.jpg

ஆகா.... கூட்டமைப்பு,  நித்திரையால் எழும்பி விட்டது.
இனி அவர்கள் விடும், அறிக்கை போர்களை.. வாசிக்க விசர் வந்து விடும். 

எதிர்க் கட்சி பதவியில் இருந்து கொண்டு...  கிடைத்த கால அவகாசங்களையும், சந்தர்ப்பங்களையும்... 
பாவிக்கத் தெரியாமல்... சிங்களவனுக்கு வெள்ளை அடித்துக் கொண்டிருந்த, கூட்டமைப்பு...
இப்ப... லூசுக் கதையுடன், மக்களிடம் வருகின்றது. 

வெட்கம், மானம், ரோசம் என்று ஏதாவது...  கூட்டமைப்புக்கு இருந்தால்... 
வழக்கம் போல, வாயை... பொத்திக்  கொண்டு இருப்பதே, இப்பவும்  நல்லது.

சிறித்தம்பி உங்களுக்கென்ன விசரே?

தமிழ்நாடு ஏன் இந்தியாவிலை இருக்கிற எல்லா நடிகர்மாரின்ரை பாணியிலை எங்கடை தமிழ் கூத்தமைப்புக்குள்ளையும் ஆக்கள் இருக்கினம்!!!! :grin:
ஈழத்து எம்ஜிஆர்....ஈழத்து சிவாஜி...ஈழத்து நம்பியார்...ஈழத்து விஜய்காந்து எண்டு எல்லாரும் இருக்கினம்....ஏலுமெண்டால் கண்டு பிடியுங்கோ பாப்பம்? tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சிறித்தம்பி உங்களுக்கென்ன விசரே?

தமிழ்நாடு ஏன் இந்தியாவிலை இருக்கிற எல்லா நடிகர்மாரின்ரை பாணியிலை எங்கடை தமிழ் கூத்தமைப்புக்குள்ளையும் ஆக்கள் இருக்கினம்!!!! :grin:
ஈழத்து எம்ஜிஆர்....ஈழத்து சிவாஜி...ஈழத்து நம்பியார்...ஈழத்து விஜய்காந்து எண்டு எல்லாரும் இருக்கினம்....ஏலுமெண்டால் கண்டு பிடியுங்கோ பாப்பம்? tw_glasses:

குமாரசாமி அண்ணை...  எனக்கு விசர் இல்லை, உங்களுக்குத்தான் விசர். 😍
நீங்கள்,  கேட்ட கேள்விக்கு...  கன  நேரம் யோசித்து பார்த்தும்.. 🧐
தமிழ்நாட்டு தலைவர்களுடன், ஒப்பிட்டு பார்க்கும் அளவிற்கு..
ஈழத்தில்.... ஒரு,  "ஈர வெங்காய"  அரசியல் வாதியும்  இல்லை.😎

ஆ... இப்ப கண்டு பிடிச்சுட்டன். 💥
ஈழத்து ரஜனிகாந்து....  தளர்பாதி  மாவை சேனாதிராசா.  🤣

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
7 hours ago, குமாரசாமி said:

தமிழ்நாடு ஏன் இந்தியாவிலை இருக்கிற எல்லா நடிகர்மாரின்ரை பாணியிலை எங்கடை தமிழ் கூத்தமைப்புக்குள்ளையும் ஆக்கள் இருக்கினம்!!!! :grin:
ஈழத்து எம்ஜிஆர்....ஈழத்து சிவாஜி...ஈழத்து நம்பியார்...ஈழத்து விஜய்காந்து எண்டு எல்லாரும் இருக்கினம்....ஏலுமெண்டால் கண்டு பிடியுங்கோ பாப்பம்? tw_glasses:

உது கொஞ்சம் கஷ்டம்!
ஆனா சகுனி, எட்டப்பன், காக்கைவன்னியன், சுப்ரமணியசாமி ரேஞ்சில கனபேர் இருக்கினம். tw_glasses:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Rajesh said:

உது கொஞ்சம் கஷ்டம்!
ஆனா சகுனி, எட்டப்பன், காக்கைவன்னியன், சுப்ரமணியசாமி ரேஞ்சில கனபேர் இருக்கினம். tw_glasses:

நான் உந்த கோணத்திலை யோசிக்கவேயில்லை........நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறுவீதம் சரி:grin:

7 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை...  எனக்கு விசர் இல்லை, உங்களுக்குத்தான் விசர். 😍
நீங்கள்,  கேட்ட கேள்விக்கு...  கன  நேரம் யோசித்து பார்த்தும்.. 🧐
தமிழ்நாட்டு தலைவர்களுடன், ஒப்பிட்டு பார்க்கும் அளவிற்கு..
ஈழத்தில்.... ஒரு,  "ஈர வெங்காய"  அரசியல் வாதியும்  இல்லை.😎

ஆ... இப்ப கண்டு பிடிச்சுட்டன். 💥
ஈழத்து ரஜனிகாந்து....  தளர்பாதி  மாவை சேனாதிராசா.  🤣

அதுவும் சரிதான்.....:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.