Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"புர்கா ஆடை நீக்க முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(நா.தினுஷா)

புர்கா ஆடை இஸ்லாமிய கலாசாரத்துக்கு உரித்தானதல்ல. அந்த ஆடையை நீக்குவதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம். ஆனால் புர்கா ஆடை பற்றி பேசி இந்த தொடர்குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னணியாக இருந்த சம்பவங்களை அரசாங்கம் மூடி மறைக்க முயற்சிக்க கூடாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸாம்மில் தெரிவித்தார்.

burka.jpg

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற அடிப்படைவாத தாக்குதல் கிறிஸ்தவ மக்களை மாத்திரம் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதல்ல. ஒட்டுமொத்த இலங்கை வாழ் மக்களுக்கும் எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க் கட்சி அலுவலகத்தில் இன்று ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் முஸலிம் இளைஞர் அணியினர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அவர் இதனை தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/54888

  • கருத்துக்கள உறவுகள்

burka.jpg

புர்க்கா தடைக்கு சட்டரீதியான ஏற்பாடுகளை முன்னெடுக்க்குமாறு பிரதமர் ஆலோசனை!

புர்க்காவை தடை செய்வதற்கான சட்டரீதியான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு பிரமர் ரணில் விக்ரமசிங்க நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஏற்கனவே இடம்பெற்ற சந்திப்பின் போது புர்க்காவை தடைச் செய்வதற்கு இஸ்லாமிய மதகுரு சங்கம் தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்திருந்தது.

இந்நிலையிலேயே அதை தடை செய்வதற்கான சட்டரீதியான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு பிரமர் ரணில் விக்ரமசிங்க நீதி அமைச்சர் தலதா அதுகோரலவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை பர்தாவை தடை செய்யப்படுவதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்ப்பதாக வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மைகளும் இல்லையென பிரதமர் அலுவலகம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/புர்க்காவை-தடைக்கு-சட்டர/

 

முஸ்லீம் சகோதர, சகோதரிகளே...  இலங்கையில் தலையை மூடும்  "புர்கா"  உடைக்கு, 
தடை வரப் போகுது என்பதால்... புதிதாக புர்க்கா உடைகளை... வாங்க வேண்டாம்.

ஏற்கெனவே  பாவித்த, புர்கா உடைகளை.... பாகிஸ்தானுக்கோ, ஆப்கானிஸ்தானுக்கோ... 
அனுப்பி வையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாக்கள்.. இப்பதான் திருகோணமலை சண்முகாவித்தியாசாலையில் புர்க்கா போட்டுத்தான் படிப்பிப்பன் என்று அடம்பிடித்து போனவை ..இனி அவை நீச்சலுடையிலை போவினமோ...அல்லது புல்லா ஆளுனர் இதுக்கும் வழி வைத்திருகிறாரோ... ஒருக்க விசாரிச்சுச் சொல்லுங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, alvayan said:

இந்தாக்கள்.. இப்பதான் திருகோணமலை சண்முகாவித்தியாசாலையில் புர்க்கா போட்டுத்தான் படிப்பிப்பன் என்று அடம்பிடித்து போனவை ..இனி அவை நீச்சலுடையிலை போவினமோ...அல்லது புல்லா ஆளுனர் இதுக்கும் வழி வைத்திருகிறாரோ... ஒருக்க விசாரிச்சுச் சொல்லுங்கோ..

பெரும் எடுப்பு எல்லோ எடுத்தவயள்..... அநுராதபுரத்தில இந்து பாடசாலை ஒன்றை, தாங்கள் கூடவாம் என்று, இஸ்லாமிய பெயருக்கு மாத்த கேட்டவயள்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பெரும் எடுப்பு எல்லோ எடுத்தவயள்..... அநுராதபுரத்தில இந்து பாடசாலை ஒன்றை, தாங்கள் கூடவாம் என்று, இஸ்லாமிய பெயருக்கு மாத்த கேட்டவயள்...

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

 

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே. நான் நிலவு போல தேய்ந்து வந்தேன், நீ வளர்ந்ததாலே

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் புர்கா உடைக்கு தடை! நாளை முதல் நடைமுறை! ஜனாதிபதி அறிவிப்பு

Report us Vethu 5 hours ago

நாட்டு மக்களின் நன்மை கருதி இலங்கையில் புர்கா தடை செய்யப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களின்படி,

தேசிய மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் நாட்டினுள் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாகவும் அமையக்கூடிய அனைத்து வகையான முகத்திரைகளையும் பயன்படுத்துவதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடைசெய்யப்படுகிறது.

நாளை முதல் அவசரகால கட்டளையின் கீழ் தடைசெய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் அடிப்படை அளவீடாக உள்ள நபரொருவரின் முகத்தை தெளிவாக காணக்கூடியதாயிருப்பது அவசியமாகும் என்பது இந்த உத்தரவின் மூலம் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு, எந்தவொரு சமூகப் பிரிவையும் அசௌகரியத்திற்குள்ளாக்காத வகையில் அமைதியும் நல்லிணக்கமுமிக்க சமூகமொன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.tamilwin.com/community/01/213409?ref=rightsidebar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.