Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Nallur-Kovil.jpg

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நாளை மறுதினம் தாக்குதல் நடத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்ட அநாமதேய கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

”நல்லூர் ஆலயத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி எனது கணவரும் வேறு சிலரும் குண்டுத் தாக்குதல் நடத்த உள்ளனர்” என்று பேனாவால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்துக்கு இன்று (வியாழக்கிழமை) கிடைத்தது.

அதனைப் பார்வையிட்ட ஆளுநரின் பிரத்தியேக அலுவலகர், ஆளுநரின் கலாநிதி சுரேன் ராகவனின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

கடிதம் குறித்து வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய ஆளுநர், அதனை வரைந்தவர், எங்கிருந்து அனுப்பப்பட்டது போன்ற விடயங்கள் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்க அறிவுறுத்தினார்.

இதனையடுத்து அநாமதேயக் கடிதம் குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், இன்று மாலை தொடக்கம் நல்லூர் ஆலய சூழலின் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். இராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், நல்லூர் சூழலில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், நல்லூர் பிரதேசத்தில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் வெளிமாவட்டத்தவர்கள் குறித்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூரில் நாளை மறுதினம் வைகாசி விசாக உற்சவம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இறுதிப்போரில் கொல்லப்பட்ட உறவுகளுக்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நாளை மறுதினம் தமிழ் மக்கள் முன்னெடுக்கவுள்ள நிலையில் இந்த அநாமதேயக் கடிதம்  கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/நல்லூர்-கந்தசுவாமி-கோயில/

 

  • கருத்துக்கள உறவுகள்

Nallur-Kovil.jpg

நல்லூர் கந்தசுவாமி கோவிலைத் தாக்குவோம் என அநாமதேயக் கடிதம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நாளை மறுதினம் தாக்குதல் நடத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்ட அநாமதேயக் கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

”நல்லூர் ஆலயத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி எனது கணவரும் வேறு சிலரும் குண்டுத் தாக்குதல் நடத்த உள்ளனர்” என்று பேனாவால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்துக்கு இன்று (வியாழக்கிழமை) கிடைத்தது.

அதனைப் பார்வையிட்ட ஆளுநரின் பிரத்தியேக அலுவலகர், ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

கடிதம் குறித்து வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய ஆளுநர், அதனை வரைந்தவர், எங்கிருந்து அனுப்பப்பட்டது போன்ற விடயங்கள் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்க அறிவுறுத்தினார்.

இதனையடுத்து அநாமதேய கடிதம் குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், இன்று மாலை தொடக்கம் நல்லூர் ஆலய சூழலின் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். இராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், நல்லூர் சூழலில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், வெளி மாவட்டத்தவர்கள் குறித்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூரில் நாளை மறுதினம் வைகாசி விசாக உற்சவம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இறுதிப்போரில் கொல்லப்பட்ட உறவுகளுக்காக முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை நாளை மறுதினம் தமிழ் மக்கள் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த அநாமதேயக் கடிதம்  கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நல்லூர்-கந்தசுவாமி-கோயில/

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் முருகனுக்கு, பலத்த பாதுகாப்பு

May 17, 2019

IMG_7894.jpg?zoom=1.2100000262260437&res

நல்லூர் ஆலயத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நல்லூர் ஆலய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆலய சூழலில் உள்ள வீதிகள் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு இராணுவத்தினர்,  விசேட அதிரடி படையினர், காவற்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் ஆலய சூழலுக்கு கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் உடற் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டே ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

எனது கணவரும் , வேறு சிலரும் இணைந்து நல்லூர் ஆலயத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த உள்ளதாக வடமாகாண ஆளூநருக்கு அநாமதய கடிதம் ஒன்று அனுப்பட்டதை அடுத்தே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #nallurtemplesecurity

IMG_7881.jpg?zoom=1.2100000262260437&resIMG_7884.jpg?zoom=1.2100000262260437&resIMG_7885.jpg?zoom=1.2100000262260437&resIMG_7886.jpg?zoom=1.2100000262260437&resIMG_7891.jpg?zoom=1.2100000262260437&resIMG_7893.jpg?zoom=1.2100000262260437&res

 

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

முருகா உனக்கு வந்த சோதனை.....சகல ஆக்கிர்மிப்பாளர்களும் உன்னை விட்டு வைக்கவில்லை ...ஆனால் நீயும் அவர்களை சுழிச்சு கொண்டு நல்லூரில் நிலைத்து நிற்கின்றாய்....

அது சரி நீ இருப்பதும் எதோ முஸ்லீம் துறவியின் சமாதியின் மேல் என்று அரசல் புரசலாக கதை அடிபடுகுது ,  ....சிலர் கதையும் எழுதுறாங்கள் உண்மையா முருகா,

  • கருத்துக்கள உறவுகள்

கோயிலுக்கு போய் மக்கள் ஆத்மா சாந்தி பூசை செய்யப் போறார்கள் என்பதற்காக இப்படி ஒரு வெடி குண்டுப் புரளியை கிளப்பி விட்டு இருக்கிறார்கள் 

 அனைவரையும் காத்து அருள்பாலிக்கும் எல்லாம் வல்ல முருகப்பெருமானால் தன்னை பாதுகாக்கும் வல்லமை நிறையவே உண்டு. 

இராணுவமே வெளியேறு.................

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கையின் விகாரைகளுக்கும்  பள்ளிவாசல்களுக்கும் கொடுத்த பாதுகாப்பை இப்படி பரபரப்பாய் காண்பித்தார்களோ தெரியவில்லை.

95ல் யாழை கைப்பற்றியபோது ஓடி ஓடி வீடியோ பண்ணி தென்னிலாங்கைக்கு காட்டிய காட்சியை மறுபடியும், தமிழர்களுக்கு காட்டுகிறார்கள்.

இனத்தையும் இனத்தையும் மோதவிட்டு , நாங்கள் உங்கள் பாகமே/உங்கள் பக்கமே  என்று காட்டி பிரித்தாளுவது சிங்களவர்களுக்கு கைவந்த கலை.

பிரபாகரன் என்ற மானஸ்தன் இல்லாம போனதால இனி தமிழர்கள் பாதுகாப்பு சிங்களவரிடம்தான்.

முஸ்லீமை நம்புவதைவிட சிங்களவனை நம்பலாம் , சிங்களவன் நேரு நேர் நிற்கும் எதிரி.

கண்மூடி தேவாலயங்களில் பிரார்தனை செய்யும்போது பின்னால் வந்து நின்று குண்டுகள் இருக்கும் பை  பெல்ட்டை இழுத்து வெடிக்க பண்ணுறவன் அல்ல.

அவனும் எங்களுக்கு அப்படி பண்ணவில்லை.

நாங்களும் அவனுக்கு அப்படி பண்ணவில்லை என்று ஜனாதிபதி , ராணுவம் உட்பட அனைவருமே எம் போராட்ட சக்திபற்றி பெருமை பேசுகிறார்கள்..

அந்த அளவிற்கு இஸ்லாமியர்கள் ,  ஐந்து குண்டிலேயே இது பெளத்த தேசம் என்ற அவர்களின் திமிரை உடைத்துவிட்டார்கள்.

அதில்கூட பாதிக்கப்பட்டது நாங்களே என்பதுதான் வரலாற்று சோகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.