Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இத்தால் சகலரும் அறிவது

Featured Replies

  • தொடங்கியவர்

அறிவித்தல்

யாழ் இணைய கருத்துக்களத்தின் மட்டுறுத்தினர்களாக பணியாற்றிய இராவணன், மதன் ஆகியோர் நேரமின்மை போன்ற காரணங்களால் தொடர்ந்து கருத்துக்களத்துக்கு வருகை தருவதில்லை - மட்டுறுத்தல் பணிகளில் தொடர்ந்து செயலாற்ற முடியவில்லை. இதன் காரணமாக மேலும் அவர்களுக்கு சுமையைக் கூட்டாமல், மட்டுறுத்தல் பணிகளில் இருந்து விடுவிக்கிறோம்.

கருத்துக்கள நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்றி, பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட மட்டுறுத்தினர்கள்:

யாழ் (சுரதா)

இளைஞன்

இராவணன்

மதன்

இளங்கோ

கரவை பரணி

கபிலன்

கவிதன்

யாழரசி

யாழினி

இதுவரை காலமும் கருத்துக்கள நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்றியதற்கும், பல்லாயிரக் கணக்கானோர் பார்வையிடும் இக் கருத்துக்களத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல உதவியமைக்கும் கருத்துக்கள நிர்வாகம் இவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. கருத்துக்களத்தில் அவர்களின் பணியும், தமது பெறுமதிமிக்க நேரத்தை ஒதுக்கி வழங்கிய ஒத்துழைப்பும் என்றும் நினைவிலும், குறிப்பிலும் இருக்கும்.

கருத்துக்களத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டும், ஒவ்வொருநாளும் எழுதப்படும் கருத்துக்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டும் புதிய மட்டுறுத்துனர் ஒருவரை இன்று இணைத்துக் கொள்கிறோம். இவரது நிர்வாகப் பெயர்: எழுவான்.

இதனடிப்படையில் இப்போது கருத்துக்கள நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்றும் மட்டுறுத்தினர்கள்:

யாழ்பிரியா

யாழ்பாடி

இணையவன்

எழுவான்

கருத்துக்கள உறவுகள் அனைவரும் கருத்துக்கள விதிமுறைகளை மதித்து செயற்படுவதோடு, கருத்துக்கள மட்டுறுத்துனர்களின் மட்டுறுத்தல் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் நட்புடன் கேட்டுக்கொள்கின்றோம். :huh:

  • 1 month later...
  • Replies 75
  • Views 31k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அறிவித்தல்

யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம்,

நாளுக்கு நாள் யாழ் இணையத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தனியே கருத்துக்களம் பகுதி மட்டுமல்லாது, யாழ் இணையத்தின் ஒளித்தடம் பகுதியும் பலராலும் தொடர்ந்து பார்க்கப்படுகிற ஒரு பகுதியாக இருக்கிறது. ஒருநாளைக்கு ஒருவராலேயே பல தடவைகள் பல பக்கங்கள் பார்க்கப்படுகின்றன. அந்தவகையில் யாழ் இணையத் தளத்தின் பாவனையின் அளவு அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக இது மேலும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக நேற்றும் இன்றும் தகவல் வங்கியின் செயற்பாட்டில் இடையிடையே தடங்கல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தத் தடங்கல்களை களைந்து யாழ் இணையத்தின் இயக்கத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். தகவல் வங்கி, தள வழங்கி ஆகியவற்றின் செயற்திறனை அதிகரித்து வேகமாகவும், தடங்கல் இன்றியும் யாழ் இணையப் பக்கங்களைப் பார்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். எனவே, அதுவரை ஏற்படும் தடங்கல்களுக்கு வருந்துகிறோம். தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

நன்றி

நட்புடன்,

யாழ் இணைய நிர்வாகம்

  • தொடங்கியவர்

திருத்தம் செய்தல்

கருத்துக்கள உறவுகளே,

கருத்துக்களத்தில் அனுமதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் புதிய பதிவைத் தொடங்குவதற்கும், தொடங்கிய தலைப்புக்கு பதிலளிப்பதற்கும், உங்கள் பதிவுகளில் உள்ள (எழுத்துப்)பிழைகளைத் திருத்துவதற்கும் உங்களுக்கு அனுமதியுள்ளது. இதனை, குறிப்பாக திருத்தம் செய்வதற்கான அனுமதியை, நீங்கள் தவறாகப் பயன்படுத்தமாட்டீர்கள் என்ற நம்பிக்கை கொண்டிருந்தோம்.

ஆனால், புதிதாக களத்தில் இணைந்துகொண்ட உறுப்பினர் கரிகாலன் நேற்று இரவு தான் தொடங்கிய தலைப்பில் தனது கருத்துக்களையெல்லாம் நீக்கியிருக்கிறார். இது அவருக்கு பதிலெழுதிய அனைத்து கருத்துக்கள உறவுகளையும் அவமதிக்கிற அதேவேளை, கருத்துக்கள நிர்வாகத்தினரை மேலும் மேலும் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் இறுக்கமாக்கச் செய்கிறது.

ஒரு புதிய தலைப்பை தொடங்குவதற்கு முதல் அல்லது ஒரு கருத்தை எழுதுவதற்கு முதல் பொறுமையுடன் யோசிக்கவேண்டும். கருத்தை எழுதியதன் பின்னும் - மற்றவர்கள் உங்கள் கருத்துக்களுக்கு பதிலளிக்காத வரை - உங்கள் கருத்தில் திருத்தம் செய்வதற்கான அனுமதி உள்ளது. ஆனால், உங்கள் கருத்துக்கு ஏனையவர்கள் பதிலெழுதிய பின்னர் உங்கள் கருத்தை முற்றாக நீக்குவதோ, உங்கள் கருத்தின் உள்ளடக்கப் பொருளை மாற்றுவதோ தவறானது. ஒரு கருத்தை எழுதுவதற்கு முதல் பலதடவை யோசியுங்கள். எழுதியதன் பின் அதற்கான விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள்.

இனி வரும் காலங்களில் இதுபோன்ற விடயங்கள் நடைபெறாது என நம்புகிறோம். கருத்துக்கள உறவு கரிகாலன் அவர்களுக்கு இன்றிலிருந்து தனது ஆக்கங்களைத் திருத்துவதற்கு அனுமதி இல்லை. அத்துடன் எச்சரிக்கை ஒன்றும் வழங்கப்படுகிறது.

  • 6 months later...
  • தொடங்கியவர்

அறிவித்தல்

இனிவரும் காலங்களில் நிர்வாகம் தொடர்பான கருத்துக்களை நேரடியாக எமக்கு (தனிமடலூடாக) அறியத்தரலாம். பொதுவான கருத்துக்களம் தொடர்பான அல்லது கருத்தாடல்கள் தொடர்பான கருத்துக்களை யாழ் உறவோசை பகுதியில் முன்வைக்கலாம். ஆலோசனைகளையும் அங்கே பதியலாம். இது கருத்தியல் அடக்குமுறையாகப் படலாம். ஆனால், இப்படியான ஒரு முடிவை மேற்கொள்வதற்கு இன்றைய கருத்துக்கள சூழலே காரணம்.

இதுவரைகாலமும் மென்போக்கை நாம் கடைப்பிடித்து வந்தோம். ஆனால், கருத்துக்களம் குப்பைக்கூடமாகவும் - மனவக்கிரங்களையும், மனோவிகாரங்களையும் கொட்டும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதால் - இனிவரும் காலங்களில் இறுக்கமான போக்கையே கடைப்பிடிக்க இருக்கிறோம். ஈவிரக்கம் இன்றி கருத்துக்கள விதிமுறைகள் அமுல்படுத்தப்படும். கருத்துக்கள விதிமுறைகளுக்கு உட்பட்டு சுதந்திரமான கருத்தாடலை செய்ய இங்கு அனுமதியுண்டு. கருத்துக்கள விதிமுறைகளை இதுவரை வாசிக்காதவர்கள் மீண்டும் ஒருமுறை வாசியுங்கள். கருத்துக்கள விதிமுறைகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லையெனின் கருத்துக்களத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம் அல்லது கருத்துக்களை எழுதாமல் தவிர்த்துக்கொள்ளலாம்.

அதிகம் கோபப்படுபவர்கள், அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள், உளநலப் பிரச்சனைகள் இருப்பவர்கள் கருத்துக்களத்தில் எழுதுவதையோ அல்லது கருத்துக்களத்தில் கருது்துக்களை வாசிப்பதையோ தவிர்த்துக்கொள்வது நல்லது. கருத்துக்களத்துக்கு வருகை தருவதால் உங்களுக்கு ஏற்படும் மன உளைச்சலுக்கோ அல்லது உளவியல் தாக்கங்களுக்கோ நாம் பொறுப்பாளியாக முடியாது.

கருத்துக்கள நிர்வாகம் தொடர்பாக குறைகள் இருப்பின், அவற்றை பட்டியலிட்டு கருத்துக்கள நிரந்தரப் பொறுப்பாளர் மோகனுக்கு தனிமடலில் அனுப்பி வைக்கலாம். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது பதிலளிக்கப்படும். உங்கள் ஆலோசனைகளையும் எமக்கு தனிமடலில் அனுப்பி வைக்கலாம். பரிசீலிக்கப்படும்.

  • தொடங்கியவர்

அறிவுறுத்தல்

யாழ் இணைய கருத்துக்களம் ஒரு தமிழ்க் கருத்துக்களம். தமிழில் கருத்துக்களைப் பதிவதற்கான களம். இங்கே ஆங்கிலத்தில் கருத்துக்கள் எழுதப்படுவது தவிர்க்கப்படவேண்டும். கருத்தாடலின் தேவை கருதி ஆங்கில மொழியிலான ஆவணங்களை இணைக்கலாம். ஆனால், கருத்துக்கள் தமிழிலே அமையவேண்டும். முக்கிய செய்திகளை ஆங்கில மொழியில் வருகிறபோது அவற்றின் சுருக்கத்தை தமிழில் எழுதி அதன்கீழே ஆங்கிலச் செய்தியை இணைக்கலாம்.

அதேபோல், கருத்துக்களில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவதும் தவிர்க்கப்படவேண்டும். தமிழ் தெரியாத ஆங்கிலச் சொற்களென்றால் அவற்றை ஆங்கிலத்திலேயே எழுதலாம். ஆனால், தமிழ் தெரிந்தும் - கோமாளித்தனத்துக்காக ஆங்கிலச் சொற்களை ஆங்கில உச்சரிப்பில் (பட், டியர், ஹல்லோ போன்றன:lol: தமிழில் எழுதுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். இனிவரும் காலங்களில் இவற்றை உறுப்பினர்கள் கவனத்தில் எடுப்பீர்கள் என நம்புகிறேன். தொடர்ந்தும் இதுபோன்ற கோமாளித்தனமான - தமிழ் மொழியைச் சிதைக்கும் வகையிலான கருத்துக்கள் இடம்பெறின் நடவடிக்கை எடுக்கப்படும். கருத்துக்களில் இடம்பெறும் குறிப்பிட்ட தமிழில் எழுதப்படும் ஆங்கிலச் சொற்களை (பட், டியர், ஹல்லோ போன்றன) மட்டுறுத்துனர்கள் தமிழில் மாத்துவார்கள் என்றோ அல்லது குறிப்பிட்ட அந்த சொற்களை மட்டும் நீக்கிவிட்டு முழுக் கருத்தையும் அனுமதிப்பார்கள் என்றோ எதிர்பார்க்கவேண்டாம். அப்படியான சொற்கள் இடம்பெறும் கருத்துக்கள் முற்று முழுதாக நீக்கப்படும். எனவே, இனிமேல் கருத்துக்கள் எழுதும்போது இதனைக் கவனத்தில் கொள்ளுங்கள். எழுதிய பின்னரும் ஒருமுறை படித்துப் பார்த்து அப்படிச் சொற்கள் இடம்பெற்றிருந்தால் திருத்திக் கொள்ளுங்கள்.

நன்றி

  • 1 year later...

kumuthan என்கிற உறுப்பினர் யாழ் இணைய கருத்துக்களத்தில் தடைசெய்யப்பட்டுள்ளார்.

பின்வரும் காரணங்களால் கருத்துக்களத்தில் எழுதுவதற்கான அனுமதி மீளப்பெறப்பட்டுள்ளது:

1. பிற இணையத்தள செய்திகளை தனது வலைப்பதிவில் இணைத்துவிட்டு, அதனை பின்பு யாழ் கருத்துக்களத்தில் தனது செய்தியாக இணைத்தமை.

2. ஆக்கங்களின் உண்மையான மூலத்தை குறிப்பிடாமல், யாழ் கருத்துக்களத்தில் அவற்றை இணைத்தமை.

3. யாழ் கருத்துக்களத்தை கருத்தாடலுக்கான களமாகப் பயன்படுத்தாமல், தனது வலைப்பதிவுக்கான விளம்பரத்தளமாக பயன்படுத்தியமை.

4. பலமுறை அறிவுறுத்தியும், அதனைப் புறந்தள்ளி, கருத்துக்கள விதிமுறைகளை மீறியமை.

  • தொடங்கியவர்

archunan என்னும் பெயரில் கருத்தெழுதும் உறுப்பினர் கருத்துக்களத்தில் தடைசெய்யப்பட்டுள்ளார்

தடை செய்யப்பட்டமைக்கான காரணங்கள் பின்வருமாறு:

1. பல தடவைகள் தலைப்புக்கு பொருத்தமில்லாமல் வேறு ஒரு விடயத்தை திணிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டமை.

2. ஆக்கபூர்வமான விமர்சனங்களாக இல்லாமல் வெறுமனே தனிநபர் தாக்குதலாக கருத்துகளை எழுதியமை.

3. கருத்துக்களத்தை ஆக்கபூர்வமான கருத்தாடற் களமாக பயன்படுத்தாமல் தமது தனிப்பட்ட விரோதங்களை வெளிப்படுத்தும் களமாக பயன்படுத்தியமை.

4. அதை மட்டுமே முதன்மை நோக்காக கொண்டு கருத்துக்களத்தில் எழுதியமை.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

paranthan என்னும் பெயரில் கருத்தெழுதும் உறுப்பினர் கருத்துக்களத்தில் தடைசெய்யப்பட்டுள்ளார்

தடை செய்யப்பட்டமைக்கான காரணங்கள் பின்வருமாறு:

1. செய்திகளின் நேரடி மூலத்தினை குறிப்பிடாமை

2. பலமுறை அறிவுறுத்தப்பட்டும், கருத்துக்கள விதிமுறையை பின்பற்றாமை

  • 4 weeks later...

நம்பி என்கிற உறுப்பினர் யாழ் இணைய கருத்துக்களத்தில் தடைசெய்யப்பட்டுள்ளார்.

பின்வரும் காரணங்களால் கருத்துக்களத்தில் எழுதுவதற்கான அனுமதி மீளப்பெறப்பட்டுள்ளது:

- செய்திகளை முழுமையாக இணைக்காமை

- செய்திகளின் மூலத்தை நேரடியாக எழுதாமை

  • 2 years later...

விருப்பு வழங்கும் (like) முறைமை

நேற்றில் இருந்து (08-ஏப்ரல்-2012) பச்சை / சிவப்பு புள்ளிகள் வழங்கும் முறைமை மாற்றப்பட்டு விருப்பு வழங்கும் (like) முறைமை அறிமுகப்படுத்தப்படுகின்றது. இந்த முறை மாற்றம் தொழில்நுட்ப ரீதியான மாற்றம் என்பதால் கள உறுப்பினர்கள் ஏற்கனவே பெற்றிருந்த பச்சை மற்றும் சிவப்பு புள்ளிகளின் எண்ணிக்கை அனைத்தும் பூச்சியத்துக்கு வந்துள்ளது (reset ஆகியுள்ளது).

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களத்தின் உறுப்பினர்கள் மற்றும் கருத்துக்களின் எண்ணிக்கையையும் கணக்கில் கொண்டு நிழலி, இணையவனுக்கு உதவியாக புதிய மட்டுறுத்துனர்களாக நுணாவிலான் மற்றும் நியானி ஆகியோரை இன்று முதல் யாழ் கருத்துக்களத்தில் இணைத்துக் கொள்கிறோம். கருத்துக்கள உறவுகள் அனைவரும் உங்கள் ஒத்துழைப்பை நுணாவிலான் மற்றும் நியானி ஆகியோருக்கு வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

  • 4 months later...

எச்சரிக்கை

 

கள உறவுகள் மட்டுமே பார்க்கக்கூடிய நாற்சந்தியில் உள்ள விடயத்தை உறவோசைப் பகுதிக்கு காவி வந்ததாலும், பூட்டப்பட்ட திரியின் கருத்தாடலை வேறு திரியில் தொடர முனைந்ததாலும் துளசிக்கு ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகின்றது.

எச்சரிக்கை


நாற்சந்தியில் பூட்டப்பட்ட திரியின் கருத்தாடலை மீண்டும் உறவோசை பகுதியில் தொடர முனைந்ததால் ரதி, விசுகு ஆகியோருக்கு தலா ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகின்றது.


 

எச்சரிக்கை


தொடர்ந்தும் கள உறவுகள் சிலரைச் சீண்டும் கருத்துக்களைப் பதிந்ததால் வண்டுமுருகனுக்கு ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகின்றது.

 

  • கருத்துக்கள உறவுகள்
easyjobs  க்கு ஒரு எச்சரிக்கை புள்ளி வழங்கப்பட்டுள்ளது. காரணங்கள்:
 
முழு இணைப்பையும் கொடுக்காமை.இரு முறை சொல்லியும் மீண்டும் முழு இணைப்பையும் கொடுக்காமல் வாசர்கர்களை தனது தளத்துக்கு இழுக்கும் தந்திரம்.அதற்காக யாழ்களத்தை பயன்படுத்துதல்.    
  • 2 weeks later...

எச்சரிக்கை


கள விதிகளை முற்றாக புறக்கணித்து மிக அநாகரீகமான சொற்பதங்களைப் பல கருத்துக்களில் பாவித்தமை காரணமாக தமிழ் சிறிக்கு ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகின்றது.

  • 2 weeks later...

பல தடவைகள் அறிவுறுத்தப்பட்டும் எச்சரிக்கை செய்யப்பட்டும் அவற்றை அலட்சியம் செய்து ஒரே விதமான செய்திகளைத் தனித் தலைப்புகளில் ஆரம்பிப்பதால் chinnavan னுக்கு 3 எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

 

யாழில் பதியப்படும் செய்திகளுக்கு வெளியே இணைப்புக் கொடுக்கப்படுவதால் முன்பு போன்று ஒரே மாதிரியான செய்திகளை ஒரே தலைப்பில் ஒன்றிணைப்பதில் சிரமங்களை மட்டுறுத்தினர்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஒரே விடயத்தை இரு தலைப்புகளில் கருத்தாடல் செய்வதும் சாத்தியமற்றது. ஆகவே செய்திகளை இணைக்கும்போது அது ஏற்கனவே உள்ளதா எனக் கவனிக்குமாறு தயவுடன் வேண்டுகிறோம்.

எச்சரிக்கை



மட்டுறுத்தப்பட்ட கருத்தை திரும்பவும் இரு தடவைகள் பதிந்தமைக்காக யாழ்அன்புக்கு இரு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

களவிதி: மட்டுறுத்தப்பட்ட கருத்துகளை மீண்டும் பதிவதும் வேறு தலைப்புகளில் கொண்டுவந்து பிரசுரிப்பதும் கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்

திரிக்கு சம்பந்தமில்லாமல் வெறுமனே ஆத்திரமூட்டுவதற்காக பதில்களை வழங்கியமைக்காக அர்ஜுனுக்கு எச்சரிக்கைப் புள்ளி 1 வழங்கப்படுகின்றது.

  • 2 weeks later...

எச்சரிக்கை

 

யாழின் கறுப்புப்பட்டியலில் உள்ள தளத்தில் இருந்து மூலம் குறிப்பிடாமல் செய்தி ஒன்றை இணைத்தமைக்காக துன்னையூரானுக்கு இரு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றது.
 

 

எச்சரிக்கை

 

--நிர்வாகத்தினர் தனிமடல்களில் வேண்டுகோள்கள் விடுத்தும், தொடர்ந்தும் கள விதிகளை கருத்தில் எடுக்காது தொடர்ச்சியாக கண்ணியமற்ற சொற்களை பயன்படுத்தியமையால் ஆசான் இற்கு 2 எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

அநாகரீகமான முறையில் கருத்துக்கள் எழுதியதனால் துன்னையூரான் 7 நாட்கள் கருத்துக் களத்தில் தடை செய்யப்பட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
 
யாழ்கள உறவுகளுக்கு, புங்கையூரானுக்கு வாழ்த்து தெரிவித்து (பச்சை புள்ளிகளுக்கு) திறக்கப்பட்ட திரி சில கோப்புக்களை  ஒருங்கிணைக்க முற்பட்ட போது தவறுதலாக அழிக்கப்பட்டு விட்டது என்பதை மிக்க மன வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

Edited by nunavilan

  • 2 weeks later...

எச்சரிக்கை


திரி ஒன்றில் சக கள உறவு ஒருவரை அநாகரீகமான முறையில் நையாண்டி செய்ததற்காக சுண்டலுக்கு ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்குகின்றேன். பாலியல் ரீதியான வசைகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ அனுமதிக்கப்படமாட்டாது.

நிர்வாகத்தினரை விமர்சித்துத் திண்ணையில் எழுதியமைக்காக துளசிக்கு 1 எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகிறது.

Edited by இணையவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.