Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனின் காலத்திலேயே தமிழ் சமூகத்திற்கு விடிவு – அமீர் அலி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தனின் காலத்திலேயே தமிழ் சமூகத்திற்கு விடிவு – அமீர் அலி

In இலங்கை     August 1, 2019 10:27 am GMT     0 Comments     1121     by : Benitlas

IMG_7455.jpg

தமிழ் சமூகத்திற்கு ஏதாவது ஒரு விடிவு கிடைக்குமாகவிருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் காலத்திலேயே அது முடியும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி விவசாய நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 203 பட்டதாரிகளுக்கு இன்று(வியாழக்கிழமை) நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் கட்சிகளும் இணைந்து முன்கொண்டுவரும் தலைமைக்கு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘எதிர்வரும் 2020ஆம் ஆண்டு மூன்று தேர்தலுக்கு இந்த நாடு முகம்கொடுக்க வேண்டியுள்ளது.

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்பேசும் சமூகம் ஒன்றிணைந்து கடந்த காலத்தில் எவ்வாறு செயற்பட்டீர்களோ அந்த பணியை நீங்கள் செய்யவேண்டும்.

கடநத காலத்தில் பட்டதாரிகள் போராட்டங்களை நடாத்தியபோது பல அரசியல்வாதிகள் வந்து பல படங்களை காட்டினார்கள். ஆனால் அந்த படங்களை இன்றைய நாளில் அவர்களுக்கு காட்டமுடியாமல்போனது.

எதனைச் செய்தாலும் இந்த அரசியல் தலைமைகள்தான் ஏதாவது உங்களுக்கு பெற்றுத்தரமுடியும். ஆகவே இந்த அரசியல் தலைமைகள் எடுக்கும் எதிர்கால முடிவுகளுக்கு சிறுபான்மை சமூகத்திற்கு எது நல்லது என எடுக்கும் முடிவுகளுக்கு நிங்கள் அனைவரும் ஒன்றுதிரண்;டு வாக்களிக்கும் மக்களாக இருக்கவேண்டும்.

கடந்த தேர்தல்களை விட அதிகளவில் வாக்களிக்கவேண்டிய இக்கட்டான நிலையில் நாங்கள் இருந்துகொண்டிருக்கின்றோம்’ என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/சம்பந்தனின்-காலத்திலேயே/

"தமிழ் சமூகத்திற்கு ஏதாவது ஒரு விடிவு கிடைக்குமாகவிருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் காலத்திலேயே அது முடியும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி விவசாய நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார். "

"எதனைச் செய்தாலும் இந்த அரசியல் தலைமைகள்தான் ஏதாவது உங்களுக்கு பெற்றுத்தரமுடியும். ஆகவே இந்த அரசியல் தலைமைகள் எடுக்கும் எதிர்கால முடிவுகளுக்கு சிறுபான்மை சமூகத்திற்கு எது நல்லது என எடுக்கும் முடிவுகளுக்கு நிங்கள் அனைவரும் ஒன்றுதிரண்;டு வாக்களிக்கும் மக்களாக இருக்கவேண்டும்."

என்ன தீர்வு? எவ்வாறு தரப்படும்? அளிக்கப்பட்ட உறுதி மொழிகளுக்கு என்னவாயிற்று?


ஆக, மக்களை  மீண்டும் மீண்டும் ஏமாற்றலாம் 😞 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனின் காலத்திலேயே தமிழ் சமூகத்திற்க முடிவு

என வரணும்😥😥😥😥

  • கருத்துக்கள உறவுகள்

roflphotos-dot-com-photo-comments-201707

 

  • கருத்துக்கள உறவுகள்

இணக்க அரசியல்  செய்து இத்துப்போகாமல்  இருந்தால் சரி 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இணக்க அரசியல்  செய்து இத்துப்போகாமல்  இருந்தால் சரி 

இனத்தை இத்துப்போக  வைக்காமல் அவர்  போகமாட்டார்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

இனத்தை இத்துப்போக  வைக்காமல் அவர்  போகமாட்டார்

இப்ப இறந்து போயிட்டு கன சனம் தனது சொந்த நிலத்தில் குடியிருக்காமல் அடுத்த தேர்தலில் வியூகம் அமைத்து எந்த கட்சிக்காவது முட்டுக்கொடுத்து வாழும் வீரர் வாழ்வார் மக்களும் , தேடுதல்களும் , ஆக்கிரமிப்புக்களும் , அவதிகளும் தொடரும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.