Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தலைவர்கள் கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட முன்வர வேண்டும்- எச்.எம்.எம்.ஹரீஸ்

Featured Replies

கல்முனை தமிழ் மக்களை சொந்த மக்கள் போன்று செயற்பட்டுவந்த மர்ஹூம் மன்சூருக்கு கெளரவம் செய்ய விரும்பினால் தமிழ் தலைவர்கள் கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சேனராஜா சமரநாயக்க, ஏ.ஆர்.மன்சூர் மற்றும் வீ.கே. இந்திக்க ஆகியோர் மீதான அனுதாப பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மர்ஹூம் மன்சூர் கல்முனையில் தமிழ் பிரதேசங்களும் தங்கள் பிரதேசம் என நினைத்து அவிருத்திசெய்து வந்தார். ஆனால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கல்முனையில் தமிழ், பிரதேசம் என்றும் முஸ்லிம் பிரதேசம் என்றும் பிரியவேண்டும் என்று பிரசாரம் செய்வது மிகவும் கவலைக்குரிய விடயம். இந்த விடயத்தை கல்முனை அல்லாமல் வேறு பிரதேசமொன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் பேசியிருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள என்றும் இதன்போது கூறினார்.

https://www.virakesari.lk/article/61737

  • தொடங்கியவர்

 

கல்முனை , சாய்ந்தமருது செயலக விவகாரம்: காலம் தாழ்த்தாது நிறைவுக்கு வரவேண்டும்

கல்முனை தமிழ்ச் செயலகம் மற்றும் சாய்ந்தமருது நகர சபை என்பவற்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அடுத்த ஒரு சில தினங்களில் நிறைவேற்ற முடியாது போனால், இனியொருபோதும் அதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போய்விடலாமென தெரிவித்த  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், எதிர்வரும் 10 ஆம் திகதியளவில் இவற்றை நிறைவு செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டுமென   கேட்டுக்கொண்டாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்முனை செயலக பிரிப்பு மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஸ்தாபிப்பு விவகாரங்கள் குறித்து ஆராயும் முக்கிய கலந்துரையாடலொன்று நேற்றுமுன்தினம்  புதன்கிழமை   மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நாடாளுமன்ற குழு அறையில் நடைபெற்றபோதே அவர் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், அலிஸாஹிர் மௌலானா, ஏ.எல்.எம்.நசீர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் அப்துல் மஜீத், செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர், கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப்,  மாநகர சபை உறுப்பினர்கள், சாய்ந்தமருது சுயேட்சைக் குழு உறுப்பினர்கள், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா, கட்சியின் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை பிரதிநிதிகளும் ஊர் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது நீண்ட காலமாக இழுபறி நிலையிலுள்ள இவ்விவகாரங்களினால் சமூக, பிரதேச மட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதகமான சூழ்நிலைகள் தொடர்பிலும், அரசியல் குழப்ப நிலை குறித்தும் சுட்டிக்காட்டிய  அமைச்சர் ரவூப் ஹக்கீம், கல்முனை தமிழ் செயலகத்திற்கான எல்லையை நிர்ணயித்துக் கொள்கின்ற இழுபறியினாலேயே சாய்ந்தமருது நகர சபை உருவாக்கம் தாமதமடைந்திருக்கிறது. இப்பிரச்சினைகளை பிச்சைக்காரனின் புண்போன்று வைத்துக் கொண்டு, இவற்றுக்குத் தீர்வு காணாமல் இன்னுமின்னும் இழுத்துக் கொண்டு செல்ல முடியாதென்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/அம்பாறை/கல்முனை-சாய்ந்தமருது-செயலக-விவகாரம்-காலம்-தாழ்த்தாது-நிறைவுக்கு-வரவேண்டும்/74-236187

 

ஓர் இனத்தை புறந்தள்ளிவிட்டு எதனையும் சாதிக்க முடியாது - புதிய உறுப்பினர் ஏ.நெய்னா மொஹம்மத்

ஏட்டிக்கு போட்டியாக விதண்டம் செய்து கொண்டு நேரத்தை வீணடிப்பது கவலையளிக்கிறதென தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புதிய உறுப்பினர் ஏ.நெய்னா மொஹம்மத், ஒர் இனம் இன்னுமோர்  இனத்தை புறந்தள்ளிவிட்டு எதனையும் சாதிக்க முடியாதென அவர்  தனது கன்னி உரையில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்முனை மாநகர சபையின் 16வது  மாதாந்த அமர்வு (30) பிற்பகல்வேளை, சபை முதல்வர்   ஏ.எம். ரகீப்  தலைமையில் நடைபெற்றபோது புதிய உறுப்பினர் நெய்னா மொஹம்மத் உரையாற்றுகையில்,

கல்முனை மாநகர சபை என்பது தமிழ்-முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் வாழுகின்ற ஒரு நகரமாகும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுப்போடு செயற்பட வேண்டும். மாநகர சபை என்பது பொது மக்களுக்கு சேவைசெய்கின்ற ஒரு இடமாகும்.   பொதுமக்கள் எதிர்நோக்குகின்ற  வீதி அபிவிருத்தி, பொதுச் சுகாதாரம், மின்சார வசதிகள், முன்பள்ளி அபிவிருத்தி என்று ஆரம்ப மட்ட அபிவிருத்திக்கு வசதிகளை செய்து கொடுப்பது மாநகர சபையின் வேலைத்திட்டங்களாக இருக்கின்றதென கூறிய அவர் ,இந்த சபைக்கு வந்தவுடன் தான் விளங்குகிறது. இங்கு எத்தனையோ பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுகிறது என்றவிடயம் எனவும் தெரித்தார்.

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் வை.கே. ரஹ்மானின் இடத்திற்கு அலியார் நெய்னா மொஹம்மதும், தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் உறுப்பினராக இருந்த சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸின் இடத்திக்கு மொகம்மட் மன்சூர் சப்ராஸ் மன்சூரும் தமது உறுதி மொழியை வழங்கி  கன்னி அமர்வில் கலந்து கொண்டனர்.

http://www.tamilmirror.lk/அம்பாறை/ஓர்-இனத்தை-புறந்தள்ளிவிட்டு-எதனையும்-சாதிக்க-முடியாது/74-236126

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்

செய்வது எல்லாவற்றையும் செய்து விட்டு அறிக்கை மட்டும் விடுறானுகள் 

 

ஏப்ரல் குண்டு வெடிப்பில் இறந்த மக்களுக்கு ஓர் அனுதாபமாவது தெரிவிச்சானுகளா  இல்லை ஆனால் எங்கே சில விடயங்கள் தமிழனுக்கு சாதமாக அமைந்து விடுமோ என நினைத்து அறிக்கை மட்டும் விடுறானுகள் 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தலைவர்கள் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து கொண்டே தான் இருக்கிறார்கள்...இனி மேல் விடுவதற்கு என்ன இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

தமிழ் தலைவர்கள் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து கொண்டே தான் இருக்கிறார்கள்...இனி மேல் விடுவதற்கு என்ன இருக்கிறது 

ஒட்டகத்துக்கு... இடம் கொடுத்த கதை தான் நினைவு வருகின்றது. ☹️

--------

//முல்லா தனது ஒட்டகத்தின் மீதேறி தூரதேச பயணம் மேற்கொண்டார். சூரியன் மறைந்து இருட்ட ஆரம்பித்ததால், ஓரிடத்தில் இறங்கி தங்கி காலையில் பயணத்தை தொடர்வது என முடிவு செய்தார்.

இரவில் கடுமையான குளிர் இருக்கும் என்பதனால் சிறிய கூடாரம் அடித்து அதனுள் படுத்துக் கொண்டார். ஒட்டகத்தை கூடாரத்துக்கு அருகில் கட்டி வைத்தார்.

சிறிது நேரம் கழித்து யாரோ அழுவது போல் சத்தம் கேட்டது. முல்லா வெளியே எட்டி பார்த்தார். ஒட்டகம் தான் அழுது கொண்டிருந்தது.

ஒட்டகத்தை பார்த்து ஏன் அழுகிறாய்? என்று கேட்டார். அதற்கு ஒட்டகம், வெளியே கடுமையாக குளிர்கின்றது. நீங்கள் மட்டும் கூடாரத்துக்குள் படுத்துக் கொண்டீர்களே. என்னை நினைத்து பார்ரத்தீர்களா? என்று பரிதாபமாக கேட்டது.

அதன் பரிதாப நிலையை பார்த்த முல்லா, சரி சரி உன் தலையை மட்டும் கூடாரத்துக்குள் வைத்துக் கொள் என்று அனுமதித்தார். மகிழ்ச்சியடைந்த ஒட்டகம் உடனே தன் தலையை கூடாரத்துக்குள் நீட்டிக் கொண்டது. முல்லாவுக்கோ தான் ஒட்டகத்திற்கு உதவி செய்து விட்டோம் என்று பெருமை. கண்ணை மூடி தூங்க முயன்றார்.

திடீரென ஒட்டகம் பெருங்குரலில் கனைத்தது. கண்விழித்த முல்லா என்னவென்று கேட்டார். தலையை மட்டும் உள்ளே வைத்தால் போதவில்லை. கழுத்தையும் உள்ளே வைத்து கொள்ளட்டுமா? என்று பரிதாபமாக கேட்டது. கழுத்து தானே.. சரி வைத்துக் கொள் என்றார் முல்லா. தனது முழு கழுத்தையும் கூடாரத்துக்குள் கொண்டு வந்த ஒட்டகம்..

முல்லாவை பார்த்து.. என் முன்னங்கால்களையும் உள்ளே வைத்துக் கொள்ளட்டுமா? என்று கேட்டது. இரண்டு கால்கள் தானே.. சரி என்று பெருந்தன்மையாக சொன்னார் முல்லா.

மறுபடியும் கண் மூடி தூங்க ஆரம்பிக்க.. ஒட்டகம் மறுபடியும் கனைத்தது. கண்ணைத் திறந்த முல்லா இப்போது என்ன பிரச்சினை? என்று சற்று கோபத்துடன் ஒட்டகத்தை கேட்க, ஒட்டகம் என் காலும் தலையும் உள்ளே இருந்தாலும் உடல் வெளியே இருப்பதால் குளிரை தாங்க முடியவில்லை. உடலையும் கூடாரத்துக்குள் வைத்துக் கொள்ளவா என்று கேட்டது.

என் கூடாரம் மிக சிறியது. ஒருவருக்கு மட்டுமே இடம் இருக்கிறது. அதிலே உனக்கும் கொஞ்சம் இடம் கொடுத்து விட்டு நான் ஓரமாக தூங்குகிறேன். இப்போது உன் முழு உடலையும் உள்ளே எப்படி கொண்டு வருவாய்? என்று அப்பாவியாய் கேட்டார் முல்லா.

அதற்கு ஒட்டகம் சொன்னதாம்.. நீ ஆறடி கூட இல்லாத சிறிய மனிதன். என் உருவமோ மிகப் பெரியது. அதனால் நீ போர்வையுடன் வெளியே படுத்துக் கொள் என்று திமிராக பதில் சொன்னதுடன் முல்லாவை இழுத்து கூடாரத்துக்கு வெளியே போட்டதாம். பிறகு முழு கூடாரத்தையும் தானே ஆக்கிரமித்துக் கொண்டதாம்.//

  • தொடங்கியவர்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக உருவாக்கம் தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. 

முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை சகல அதிகாரங்களும் கொண்டதாக உருவாக்குவதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், இந்த விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். இதுதொடர்பாக கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம், இந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.hirunews.lk/tamil/221353/ஸ்ரீ-லங்கா-முஸ்லிம்-காங்கிரஸ்-தமிழ்-தேசிய-கூட்டமைப்புடன்-பேச்சுவார்த்தை-நடத்த-தீர்மானம்

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

ஒட்டகத்துக்கு... இடம் கொடுத்த கதை தான் நினைவு வருகின்றது. ☹️

--------

//முல்லா தனது ஒட்டகத்தின் மீதேறி தூரதேச பயணம் மேற்கொண்டார். சூரியன் மறைந்து இருட்ட ஆரம்பித்ததால், ஓரிடத்தில் இறங்கி தங்கி காலையில் பயணத்தை தொடர்வது என முடிவு செய்தார்.

இரவில் கடுமையான குளிர் இருக்கும் என்பதனால் சிறிய கூடாரம் அடித்து அதனுள் படுத்துக் கொண்டார். ஒட்டகத்தை கூடாரத்துக்கு அருகில் கட்டி வைத்தார்.

சிறிது நேரம் கழித்து யாரோ அழுவது போல் சத்தம் கேட்டது. முல்லா வெளியே எட்டி பார்த்தார். ஒட்டகம் தான் அழுது கொண்டிருந்தது.

ஒட்டகத்தை பார்த்து ஏன் அழுகிறாய்? என்று கேட்டார். அதற்கு ஒட்டகம், வெளியே கடுமையாக குளிர்கின்றது. நீங்கள் மட்டும் கூடாரத்துக்குள் படுத்துக் கொண்டீர்களே. என்னை நினைத்து பார்ரத்தீர்களா? என்று பரிதாபமாக கேட்டது.

அதன் பரிதாப நிலையை பார்த்த முல்லா, சரி சரி உன் தலையை மட்டும் கூடாரத்துக்குள் வைத்துக் கொள் என்று அனுமதித்தார். மகிழ்ச்சியடைந்த ஒட்டகம் உடனே தன் தலையை கூடாரத்துக்குள் நீட்டிக் கொண்டது. முல்லாவுக்கோ தான் ஒட்டகத்திற்கு உதவி செய்து விட்டோம் என்று பெருமை. கண்ணை மூடி தூங்க முயன்றார்.

திடீரென ஒட்டகம் பெருங்குரலில் கனைத்தது. கண்விழித்த முல்லா என்னவென்று கேட்டார். தலையை மட்டும் உள்ளே வைத்தால் போதவில்லை. கழுத்தையும் உள்ளே வைத்து கொள்ளட்டுமா? என்று பரிதாபமாக கேட்டது. கழுத்து தானே.. சரி வைத்துக் கொள் என்றார் முல்லா. தனது முழு கழுத்தையும் கூடாரத்துக்குள் கொண்டு வந்த ஒட்டகம்..

முல்லாவை பார்த்து.. என் முன்னங்கால்களையும் உள்ளே வைத்துக் கொள்ளட்டுமா? என்று கேட்டது. இரண்டு கால்கள் தானே.. சரி என்று பெருந்தன்மையாக சொன்னார் முல்லா.

மறுபடியும் கண் மூடி தூங்க ஆரம்பிக்க.. ஒட்டகம் மறுபடியும் கனைத்தது. கண்ணைத் திறந்த முல்லா இப்போது என்ன பிரச்சினை? என்று சற்று கோபத்துடன் ஒட்டகத்தை கேட்க, ஒட்டகம் என் காலும் தலையும் உள்ளே இருந்தாலும் உடல் வெளியே இருப்பதால் குளிரை தாங்க முடியவில்லை. உடலையும் கூடாரத்துக்குள் வைத்துக் கொள்ளவா என்று கேட்டது.

என் கூடாரம் மிக சிறியது. ஒருவருக்கு மட்டுமே இடம் இருக்கிறது. அதிலே உனக்கும் கொஞ்சம் இடம் கொடுத்து விட்டு நான் ஓரமாக தூங்குகிறேன். இப்போது உன் முழு உடலையும் உள்ளே எப்படி கொண்டு வருவாய்? என்று அப்பாவியாய் கேட்டார் முல்லா.

அதற்கு ஒட்டகம் சொன்னதாம்.. நீ ஆறடி கூட இல்லாத சிறிய மனிதன். என் உருவமோ மிகப் பெரியது. அதனால் நீ போர்வையுடன் வெளியே படுத்துக் கொள் என்று திமிராக பதில் சொன்னதுடன் முல்லாவை இழுத்து கூடாரத்துக்கு வெளியே போட்டதாம். பிறகு முழு கூடாரத்தையும் தானே ஆக்கிரமித்துக் கொண்டதாம்.//

முல்லாவாக... சம்பந்தனும்,  
ஓட்டகமாக....   ஹரீஸ்"சும்"  இருக்கிறார்கள். 😲
அடுத்த தேர்தலில்... இந்த  இரண்டு பேருக்கும்... 
"கிறீஸ்"  பூசி.... சொந்த வீட்டுக்கு, அனுப்ப வேண்டும்.  💥

அதனைத்தான்... இந்தக் கதை சொல்கின்றது. செய்வீர்களா.....  :grin:

Edited by தமிழ் சிறி

On 8/1/2019 at 9:55 PM, தனிக்காட்டு ராஜா said:

செய்வது எல்லாவற்றையும் செய்து விட்டு அறிக்கை மட்டும் விடுறானுகள்

கிழக்கின் சிங்கம் சம்மந்தனும் தமிழரசுக்கட்சியினரும் கிழக்கு தமிழர்களுக்கு ஏற்படுத்திய அவல நிலை இது.

On 8/1/2019 at 8:30 PM, ரதி said:

தமிழ் தலைவர்கள் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து கொண்டே தான் இருக்கிறார்கள்...இனி மேல் விடுவதற்கு என்ன இருக்கிறது 

கிழக்கின் முதல்வர் பதவியை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தது போல் முட்டாள் தனம் எதுவுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Lara said:

கிழக்கின் முதல்வர் பதவியை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தது போல் முட்டாள் தனம் எதுவுமில்லை.

அதை அவர்கள் சாதகமாக என்பதை அதிக சாதகமாக பயன்படுத்தினார்கள் அதாவது சகல அரச வேலை ஸ்தாபனங்கள் முழுவதிலிலும் அவர்கள் சார்ந்தவர்களை அமர்த்தி தங்களுக்கு தேவையானதை பூர்த்தி செய்து கொண்டார்கள் ஆனால் பிள்ளையான் காலத்தில் அது கைகூட வில்லை அதனால் பிள்ளையானுக்கும் அவர்களுக்கும் முறுகல் நிலை இருந்தது அந்தக்காலம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.