Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மை பாதுகாக்கப்படும் - பிரதமர் உறுதி

Featured Replies

வடக்கில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி வடக்கின் இன ரீதியிலான விகிதாசாரத்தை மாற்றியமைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வடக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மை காக்கப்படும் என்றும் கூறினார்.

ranil.jpg

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நஞ்சுண்டான் குலத்தை புனரமைக்க கோரிய அனுமதியை நான் வழங்கியுள்ளேன். ஏப்ரல் மாதமே அதற்கான அனுமதி வழக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு அபிவிருத்து குறித்த ஜனாதிபதியின் கூட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நான் புறம்பாக நாற்பது மில்லியன் ரூபாய் வழங்கியுள்ளேன். மேலதிமாக  தேவைப்படும்  நிதியும் வழங்க முடியும். 

அதேபோல் வவுனியாவில் சிங்கள மக்களை குடியேற்றும் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. கச்சல் சமணலகுலத்தை புனரமைக்கும் நடவடிக்கை மட்டுமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவை வனப்பாதுகாப்பு பகுதி இதில் மக்களை குடியேற்ற முடியாது. எந்த மாவட்டத்திலும் இன ரீதியிலான விகிதாசாரத்தை  மாற்றியமைக்க நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என்றும் அவர் இதன்போது கூறினார்.

https://www.virakesari.lk/article/62158

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மட்டுமல்ல காலாகாலமாக நன்கு திட்டமிட்டு சிங்கள குடியேற்றம் நடக்கும் போது வெட்கமில்லாமல் இந்தாள் எப்படித் தான் உறிதிமொழிகள் வழங்குகின்றாரோ?

இதைக் கேட்கினறவர்களும் ஆமா பிரதமரே உறுதிமொழி வழங்கிவிட்டாரே என்று அடித்து சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இன்று மட்டுமல்ல காலாகாலமாக நன்கு திட்டமிட்டு சிங்கள குடியேற்றம் நடக்கும் போது வெட்கமில்லாமல் இந்தாள் எப்படித் தான் உறிதிமொழிகள் வழங்குகின்றாரோ?

இதைக் கேட்கினறவர்களும் ஆமா பிரதமரே உறுதிமொழி வழங்கிவிட்டாரே என்று அடித்து சொல்வார்கள்.

அவர் இன்னொன்றையும் சொல்கிறார்

கிழக்கில்  அதை  இல்லாமல் முடிச்சிட்டம்  என்று...

4 hours ago, ஈழப்பிரியன் said:

இன்று மட்டுமல்ல காலாகாலமாக நன்கு திட்டமிட்டு சிங்கள குடியேற்றம் நடக்கும் போது வெட்கமில்லாமல் இந்தாள் எப்படித் தான் உறிதிமொழிகள் வழங்குகின்றாரோ?

இதைக் கேட்கினறவர்களும் ஆமா பிரதமரே உறுதிமொழி வழங்கிவிட்டாரே என்று அடித்து சொல்வார்கள்.

விரைவில் வடக்கு சிங்கள பெரும்பான்மையுள்ள பிரதேசமாக மாறிவிடும் என்பதை தான் மாத்தி சொல்லுறார். :grin:

1 hour ago, விசுகு said:

அவர் இன்னொன்றையும் சொல்கிறார்

கிழக்கில்  அதை  இல்லாமல் முடிச்சிட்டம்  என்று...

வடக்கில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் போட்டி இருக்கும் யார் பெரும்பான்மையாவது என்று. 😀

ஒரு பக்கம் சிங்கள குடியேற்றங்கள், இன்னொரு பக்கம் முஸ்லிம்கள் தமிழர் பகுதிகளை ஆக்கிரமிக்கிறார்கள், தமிழர்களை மதம் மாற்றுகிறார்கள், இனம்பெருக்குகிறார்கள். தமிழர்கள் இவர்களிடையே சிக்கி இன விகிதாசாரத்தில் பின் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

ranil.jpg

15 hours ago, ஈழப்பிரியன் said:

இன்று மட்டுமல்ல காலாகாலமாக நன்கு திட்டமிட்டு சிங்கள குடியேற்றம் நடக்கும் போது வெட்கமில்லாமல் இந்தாள் எப்படித் தான் உறிதிமொழிகள் வழங்குகின்றாரோ?

இதைக் கேட்கினறவர்களும் ஆமா பிரதமரே உறுதிமொழி வழங்கிவிட்டாரே என்று அடித்து சொல்வார்கள்.

 

11 hours ago, விசுகு said:

அவர் இன்னொன்றையும் சொல்கிறார்

கிழக்கில்  அதை  இல்லாமல் முடிச்சிட்டம்  என்று...

 

11 hours ago, Lara said:

விரைவில் வடக்கு சிங்கள பெரும்பான்மையுள்ள பிரதேசமாக மாறிவிடும் என்பதை தான் மாத்தி சொல்லுறார். :grin:

எவ்வளவு ஒரு பெரிய பொய்யை...  கோட்டும், சூட்டும், ரையும்.... கட்டிக் கொண்டு,
காலுக்கு மேலை காலும் போட்டுக் கொண்டு.... சொல்ல ஒரு அசட்டு தைரியம் வேணும். 😎

நிச்சயம் இதை... சம்பந்தன், சுமந்திரன், மாவை கோஸ்டிகள்... உண்மை என்று நம்பி இருப்பார்கள்.  :grin:

  • தொடங்கியவர்

ஐ.தே.க.வுக்கு ஆதரவு வழங்கியும் த.தே. கூ.வினால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை - கோத்தா

போர் முடிந்த பின்னர் 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் த.சித்தார்த்தனைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

"யாரும் கூறாமலேயே 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் எந்தவொரு அரசியல் கைதியையும் விடுவிக்க முடியவில்லைய" என்று கோத்தாபய ராஜபக்ஷ சித்தார்த்தனிடம் கூறியுள்ளார். 

https://www.virakesari.lk/article/62209

 

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த தனது ஆட்சிக் காலத்தில் தமிழ் அரசியல் கைதிகளை பயங்கரவாதிகள் என்ற அந்தஸ்துடனேயே தடுத்து வைத்திருந்தார் இப்போது அவரது ஆட்சி இல்லாதபோது தமிழ் கைதிகளை அரசியல் கைதிகாளாக அங்கீகரித்து அழைக்கிறார். அது மட்டுமின்றி தமிழ் அரசியல் கைதிககளை சிங்கள அரசாங்கங்கள் அரசியல் பணயக் கைதிகளாகவே தடுத்து வைத்து தமிழ் கட்சிகளை தமது கைக்குள் போட்டுவைக்க பயன்படுத்திக்கொண்டுள்ளன. அரசாங்கத்துக்கு இவர்களை தடுத்து வைத்தால்தான் விடுதலை வழங்குவதிலும் பார்க்க அதிக அரசியல் இலாபம் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.