Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினிகாந்த்: “காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது”

Featured Replies

அமித் ஷாவும் நரேந்திர மோதியும், கிருஷ்ணன் அர்ஜுனனை போன்றவர்கள். இதில் யார் கிருஷ்ணன் யார் அர்ஜுனன் என்பது நமக்குத் தெரியாது. இது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். காஷ்மீர் விவகாரத்திற்காக அமித்ஷாவுக்கு வாழ்த்துகள் காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது என்று ரஜினி வெங்கையா நாயுடு புத்தக வெளியீட்டு விழாவில் பேசினார்.

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

நாடு முழுவதும் குடியரசுத் துணைத் தலைவர் கலந்துகொண்ட 330 பொது நிகழ்ச்சிகளின் விவரங்களை 'லிசனிங், லேர்னிங் அண்ட் லீடிங்' எனும் அந்த நூல் விவரிக்கிறது.

வெங்கையா நாயுடு 19 நாடுகளில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களின்போது நடந்த ராஜீய நிகழ்வுகள் குறித்த விவரங்களையும் அந்த நூல் கொண்டுள்ளது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு சென்னை வந்தார்.

இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வரிலால் புரோகித், நடிகர் ரஜினிகாந்த், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மகிழ்ச்சி

இந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், "வெங்கையா நாயுடுவை எனக்கு 25 ஆண்டுகளாக தெரியும். ஹைதராபாத் நகரில் ஒரு நண்பர் மூலமாக முதன்முதலில் அவரைச் சந்தித்து பேசினேன். அதன் பின்னர் ஒருமுறை பெங்களூரில் 2 மணி நேரம் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்து. அப்போதுதான் எனக்கு ஒன்று புரிந்தது. அவர் தப்பித் தவறி அரசியல்வாதி ஆகிவிட்டார். அவர் ஓர் ஆன்மீகவாதி," என்றார்.

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த், "நாடாளுமன்றத்தில் நீங்கள் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆற்றிய உரை, அற்புதம். இப்போது அனைவருக்கும் அமித் ஷா யாரென்று தெரிந்திருக்கும். அதில் எனக்கு மகிழ்ச்சியே," என்றார்.

 

தமிழில் பேசுவேன்

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா விரைவில் தமிழில் பேசுவதாக கூறினார்.

அவர், "வெங்கைய நாயுடுவிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். சிறப்புச் சட்டம் 370-ஐ நீக்க, போராடியவர்களில் மிக முக்கியமானவர் வெங்கையா நாயுடு. நான் இங்கு அமைச்சராகவோ, பாஜக தலைவராகவோ வரவில்லை. நான் வெங்கைய நாயுடுவின் மாணவனாக இங்கு வந்துள்ளேன். இந்த விழாவில் தமிழில் பேச நினைத்தேன். ஆனால் என்னால் இயலவில்லை. ஆனால் சென்னையில் அவர் ஒரு நாளாவது தமிழில் நிச்சயமாக பேசுவேன்," என்றார்.

https://www.bbc.com/tamil/india-49309603

 

  • தொடங்கியவர்

இந்த அர்ஜுனரும் கிருஷ்ணரும் ஈழ மக்கள் விடயத்திலும் உதவி செய்ய ஐயா இராஜனிகாந்த் உதவ வேண்டும். 

18 minutes ago, ampanai said:

அமித் ஷாவும் நரேந்திர மோதியும், கிருஷ்ணன் அர்ஜுனனை போன்றவர்கள். இதில் யார் கிருஷ்ணன் யார் அர்ஜுனன் என்பது நமக்குத் தெரியாது. இது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேங்கை மவன் சனாதிபதி கதிரையிலை ஏறுறதுக்கு இப்பவே பாலம் ,றோட்டு போடுறான்....

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

வேங்கை மவன் சனாதிபதி கதிரையிலை ஏறுறதுக்கு இப்பவே பாலம் ,றோட்டு போடுறான்....

அட... வேங்கை மகனுக்கு....  ஜனாதிபதி ஆசையும், இருக்கோ.... 😲

  • தொடங்கியவர்

பா.ஜ.கவில் சங்கமம் ஆவாரா, இன்றேல் கட்சி தொடங்குவாரா?

Fea05.jpg?itok=eqFa2ow4

'மோடியும் அமித்ஷாவும் அருச்சுனன் - கிருஷ்ணன் தோழமைக்கு ஒப்பானவர்கள்'

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் முன்பே மொத்தமாக பா.ஜ.கவிற்கு ஆதரவளிக்கத் தொடங்கி விட்டார்.நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் பாராட்டிப் பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து இதோடு இரண்டு வருடம் ஆகப் போகிறது. ஆனால் இன்னும் அவர் நடிகர் ரஜினிகாந்தாக மட்டும்தான் இருக்கிறார். அரசியல்வாதி ரஜினியாக மாற அவர் ஏனோ தொடர்ந்து யோசித்து வருகிறார். 'சிஸ்டம் சரியில்லை' என்று கூறிவிட்டு கட்சி அறிவிப்பை வெளியிட்ட ரஜினி, தற்போது அதே 'சிஸ்டத்தை' கடைப்பிடித்துக் கொண்டு இருக்கும் அ.தி.மு.க தலைவர்களுடனும், பா.ஜ.க தலைவர்களுடனும்தான் நெருக்கமாக இருக்கிறார். அதிலும் நேற்று அவர் சென்னையில் காஷ்மீர் பற்றி பேசியது எல்லாம் பா.ஜ.க நிலைப்பாடு என்றுதான் கூற வேண்டும்.

ரஜினிகாந்த் இதற்கு முன்பே அ.தி.மு.க, பா.ஜ.க இரண்டிற்கும் ஆதரவாகப் பேசி இருக்கிறார். "பத்து பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி? மோடிதான் பலசாலி" என்று பேட்டி அளித்துள்ளார்.

பொலிஸ் மீது கை வைத்தது தவறு, தூத்துக்குடி போராட்டக்காரர்கள் எல்லாம் சமூக விரோதிகள்" என்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போது அ.தி.மு.கவிற்கு ஆதரவாகப் பேசி இருக்கிறார்.

ஆனாலும் அவ்வப்போதும் கல்விக் கொள்கை போன்ற விஷயங்களில் அரசுக்கு எதிராகப் பேசி, நடுநிலையாக தன்னை காட்டிக் கொண்டார்.

ஆனால் நேற்று சென்னையில் அமித் ஷா முன்பு ரஜினி சாந்தமாக சொன்ன கருத்துக்கள், அவர் இனியும் நடுநிலையாக இருப்பாரா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. அவர் கட்சி தொடங்குவாரா அல்லது பா.ஜ.க, அ.தி.மு.கவில் போய் ஐக்கியம் ஆக போகிறாரா என்ற கேள்வியை கூட இது உருவாக்கி உள்ளது.

நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், "காஷ்மீர் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். மிக முக்கியமாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.அமித் ஷாவும் மோடியும், கிருஷ்ணனும் அர்ஜுனனும் போன்றவர்கள்.காஷ்மீரை இரண்டாகப் பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது. அவரது பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. இப்போது அமித் ஷா யார் என்று அனைத்து மக்களுக்கும் தெரிந்து இருக்கும். இந்த நாட்டிற்காக நான் அவரிடம் நன்றி சொல்லிக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

இவ்வைபத்தில் ரஜினிகாந்த், அமித் ஷாவை தொடர்ந்து புகழ்ந்து பேசினார். ரஜினிகாந்த் தனது பேச்சில் சில முக்கியமான விஷயங்களைக் குறிப்பிட்டார்.

"அமித் ஷா காஷ்மீர் பிரச்ிசனையில் மிக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவருக்கு என்னுடைய சிறப்பான வாழ்த்துக்களை மனதார தெரிவித்துக் கொள்கிறேன்.அவரின் மிக கடினமான உழைப்பு வென்று விட்டது.நீங்கள் போட்ட திட்டம் சரியாக செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. உங்களுக்கும் மேலும் வெற்றிகள் கிடைக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

ரஜினிகாந்த் இப்படி புகழ்ந்து பேசும் போது, உள்துறை அமைச்சர் அமித் ஷா அதை ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தார். ரஜினியின் முகத்தையே பார்த்து சந்தோசத்தில் சிரித்துக் கொண்டு இருந்தார். அதேபோல் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரும் இதை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு இருந்தனர். காஷ்மீர் விவகாரத்தில் ரஜினி எடுத்துள்ள நிலைப்பாடு அமித் ஷாவிற்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இத்தனை நாட்கள் விமர்சனத்திற்கு அஞ்சி, பா.ஜ.கவை மறைமுகமாக ஆதரித்து வந்த ரஜினிகாந்த் இப்போது அப்படியே களமிறங்கி வெளிப்படையாக பா.ஜ.கவை ஆதரிக்கத் தொடங்கி உள்ளார். அதுவும் அமித் ஷாவை அவர் புகழ்ந்த விதம் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

'அப்படி என்றால் ரஜினி சொன்ன ஆன்மீக அரசியல் என்பது பா.ஜ.க ஆதரவு ஆன்மீகம் தானா? கட்சி தொடங்கி ரஜினி பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க போகிறாரா?' என்றெல்லாம் அவரின் தொண்டர்களும், நலம்விரும்பிகளும் இப்போதே இணையத்தில் கேட்க தொடங்கி விட்டனர்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஏற்புரை வழங்கினார். அவர் கூறுகையில் "இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு ரஜினிகாந்தை அழைத்தோம். அப்போது தனக்கு படப்பிடிப்பு இருக்கும் என நினைப்பதாக தெரிவித்தார்.

ஆனால் அவரிடம் கடவுள் சொல்லி விட்டார். நீங்கள் சென்னையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளுங்கள். நான் மழையாக பெய்ய போகிறேன் என கூறி விட்டார். அதனால்தான் ரஜினி இங்கு வந்துள்ளார்" என வெங்கையா கூறியவுடன் அவையில் சிரிப்பலை எழுந்தது.

https://www.thinakaran.lk/2019/08/12/கட்டுரைகள்/38581/பாஜகவில்-சங்கமம்-ஆவாரா-இன்றேல்-கட்சி-தொடங்குவாரா

  • கருத்துக்கள உறவுகள்

சரிந்த முஸ்லிம் சமூக செல்வாக்கை நிலைநிறுத்த..👍

maxresdefault.jpg

  • தொடங்கியவர்

`நீட், நெக்ஸ்ட், இலங்கை பிரச்னைகளிலும் ரஜினி கருத்து தெரிவிக்க வேண்டும்!' - கார்த்தி சிதம்பரம்

அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள ரஜினி, சமுதாயத்தில் நிலவும் மற்ற பிரச்னைகள் குறித்தும் கருத்தை தெரிவிக்க வேண்டும் என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியிருக்கிறார்.

சிவகங்கை எம்.பி-யும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் தனது கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

தற்போது விவாதம் செய்யப்படும் காஷ்மீர் விவகாரம் குறித்து நடிகர் ரஜினி கருத்து கூறியுள்ளார். அதேபோல் மாணவர்களுக்கு பெரும் இடியாக இருக்கும் நெக்ஸ்ட், நீட் தேர்வு, இலங்கை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் சமுதாயப் பிரச்னைகள் குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்க வேண்டும்.
அரசியலில் இறங்க உள்ளதாக தெரிவித்துவரும் ரஜினி, குறிப்பிட்ட சிலவற்றிற்கு மட்டும் கருத்து சொல்லக் கூடாது. எல்லா விவகாரங்களிலும் கருத்து சொல்ல வேண்டும். தற்போது ஆளும் மத்திய அரசு அதிகாரப்போக்குடன் செயல்படுகிறது.

பெரும்பான்மை கொண்டு எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்றும் நிலைக்கு பி.ஜே.பி அரசு வந்துவிட்டது. நாடாளுமன்றக் குழுவை அமைக்காமல் பி.ஜே.பி அரசு அவசர கதியில் மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.

பி.ஜே.பி அரசு காகத்தின் நிறம் வெள்ளை என்ற சட்டம் கொண்டுவந்தாலும் அதில் ஆச்சர்யம் கொள்ள ஒன்றும் இல்லை. ஆர்.டி.ஐ மூலமாக மத்திய அரசுக்கு சங்கடமான கேள்விகள் கேட்டால் பதில் கிடைக்காது. இது ஒரு ஜனநாயகத்துக்கு பின்னடைவு. மருத்துவத்துறையில் முன்னோடி மாநிலம் தமிழகம். மத்திய அரசின் மருத்துவக் கவுன்சில் மசோதாவால் இந்தியாவில் உள்ள 12% தமிழக மருத்துவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாநில உரிமை உள்ளிட்ட தனிநபர் உரிமைகளை மிதிக்கும் அரசு பி.ஜே.பி அரசு. முதல்முறையாக ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியுள்ளனர்" என்றார்.

https://www.vikatan.com/government-and-politics/politics/karti-chidambaram-speaks-about-rajinis-speech-over-kashmir-issue

  • கருத்துக்கள உறவுகள்

பா.ஜ.கவை நெருங்கும் ரஜினிகாந்த்: அரசியல் ரீதியாக பலனளிக்குமா?

முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ்
ரஜினிகாந்த்படத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில், பா.ஜ.க. தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை புகழ்ந்து பேசிய ரஜினி, காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவையும் வெகுவாக ஆதரித்துள்ளார். சட்டமன்ற தேர்தலின்போது நேரடி அரசியலில் ஈடுபடப்போவதாக சொல்லியுள்ள ரஜினிகாந்த், பா.ஜ.கவை வெகுவாக ஆதரிப்பது ஏன்?

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் கடந்த இரண்டாண்டு கால அனுபவங்கள் அடங்கிய `கவனித்தல் கற்றல் வழிநடத்துதல்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு இதில் வெகுவாகக் கவனிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக காஷ்மீர் குறித்து சமீபத்தில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை வரவேற்றுப் பேசினார் ரஜினிகாந்த். "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மிஷன் காஷ்மீர் நடவடிக்கையை நான் மனதார வரவேற்கிறேன். இதனை நீங்கள் கையாண்ட விதத்திற்கு தலைவணங்குகிறேன். குறிப்பாக, மக்களவையில் உங்களுடைய பேச்சு அருமையாக இருந்தது. இப்போது மக்களுக்கு அமித் ஷா யார் என்று தெரிகிறது. அதனை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

மோதியும் அமித் ஷாவும் கிருஷ்ணன் - அர்ஜுனன் போன்று இருக்கிறார்கள். யார் கிருஷ்ணன், யார் அர்ஜுனன் என்று எங்களுக்கு தெரியாது. அவர்களுக்குத்தான் தெரியும்" என்று குறிப்பிட்டார். ரஜினிகாந்தின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்திற்குள்ளானது.

"எதற்கெடுத்தாலும் போராடினால், தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்"

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், அரசியலில் ஈடுபடப்போவதாக நீண்டகாலமாகவே சொல்லி வருகிறார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் அடுத்தடுத்து மறைந்துவிட்ட நிலையில், விரைவில் அரசியலில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார். அதற்காக ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் அமைப்பு ஒன்றும் துவங்கப்பட்டது.

தமிழக அரசியலில் தற்போது வெற்றிடம் இருப்பதாகவும் வரும் சட்டமன்றத் தேர்தலின்போது நேரடியாக அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதற்குப் பிறகு சில பொது விவகாரங்களில் கருத்துக்களைத் தெரிவித்தும் வந்தார். ஸ்டெர்லைட் விவகாரத்தின்போது, "எதற்கெடுத்தாலும் போராடினால், தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்" என அவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளானது.

ரஜினிகாந்த்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதற்குப் பிறகு, மக்களவைத் தேர்தலில் அவர் யாரையும் ஆதரித்து பிரசாரமோ, அறிக்கையோ வெளியிடவில்லையென்றாலும் "நதி நீர் பிரச்சனையைத் தீர்க்கும் கட்சிக்கு வாக்களியுங்கள்" என்று மட்டும் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் காஷ்மீர் நடவடிக்கையை ஆதரித்தும் அமித் ஷாவைப் புகழ்ந்தும் பேசியிருக்கிறார் ரஜினிகாந்த்.

ஆனாலும்கூட, ரஜினிகாந்த் மத்திய பா.ஜ.க. அரசை ஆதரித்து கருத்துத் தெரிவிப்பது இது முதல்முறையல்ல. சர்ச்சைக்குரிய பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது அதனையும் ஆதரித்தார் ரஜினி.

இதனையெல்லாம் வைத்து, வரவிருக்கும் நாட்களில் ரஜினி என்ன செய்வார் என்ற முடிவுக்கு ஒருவர் எளிதில் வந்துவிட முடியாது. ஒன்று, இதுபோல தொடர்ந்து பா.ஜ.கவின் நடவடிக்கைகளை ஆதரிக்கலாம். அல்லது பா.ஜ.கவிலேயே இணையலாம் அல்லது தனியாக கட்சி துவங்கி பா.ஜ.கவுடன் இணைந்து போட்டியிடலாம்.

ஆனால், பா.ஜ.கவில் இணைவது, தனிக் கட்சி துவங்குவது ஆகிய நடவடிக்கைகளில் ரஜினி உடனடியாக செய்வதற்கான எந்த சமிக்ஞையும் இப்போது இல்லை. தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்துவரும் ரஜினி, எப்போதாவது ஏதாவது ஒரு விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவிப்பது என்ற அளவுக்கு மட்டுமே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்.

ஆக ரஜினியின் எதிர்காலத் திட்டம்தான் என்ன?

"ரஜினியின் அரசியல் என்பது தோல்விகரமான ஒன்றாகத்தான் இருக்குமென துவக்கத்திலிருந்தே சொல்லி வருகிறேன். ரஜினிகாந்த்தை பொறுத்தவரை தொண்டர் மட்டத்திலிருந்து கட்சியை கட்டி எழுப்புவதில் அவருக்கு விருப்பமோ, ஆர்வமோ இருப்பதாக தெரியவில்லை. வேறு ஏதாவது ஒரு கட்சி, வெற்றிபெற்று தன்னை அமரவைத்தால் வரலாம் என்ற எண்ணத்தில் இருப்பவரைப் போலவே தென்படுகிறார் ரஜினி" என்கிறார் தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளரும் அரசியல் செயல்பாட்டாளருமான ஆழி. செந்தில்நாதன்.

ரஜினிகாந்த்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

உண்மையிலேயே பா.ஜ.கவுக்கு ரஜினி மீது ஆர்வம் இருந்திருந்தால் தமிழக பா.ஜ.கவுக்கு அவரைத் தலைவராக கொண்டுவந்திருக்க முடியும். அப்படி அவர்கள் செய்யவில்லை. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ரஜினி ஒரு கட்சியை உருவாக்கி, அ.தி.மு.க., பா.ஜ.க., ரஜினியின் கட்சி எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டணியை உருவாக்க முடியுமா என்பதெல்லாம் கேள்விகுரியது என்கிறார் ஆழி செந்தில்நாதன்.

ஆனால், ரஜினி மீது பா.ஜ.கவுக்கு ஆர்வமிருக்கிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர். மணி. "இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடத்தப்பட்டதே ரஜினிக்காகத்தான் எனத் தோன்றுகிறது. இத்தனைக்கும் அழைப்பிதழில் அவரது பெயர்கூட இல்லை. இருந்தபோதும் அவர் பேச அழைக்கப்பட்டார். இதெல்லாம் ரஜினியை தம்பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான்" என்கிறார் மணி.

ஆனால், ரஜினி கூறும் கருத்துகளை அப்படியே எடுத்துக்கொள்ள முடியுமா என்பதில் சந்தேகமிருக்கிறது என்கிறார் அவர். "இதற்கு முன்பு பல தருணங்களில் தமிழக நலன்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்திருக்கிறார் ரஜினி. ஒரு முறை தமிழகத்திற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துவிட்டு, பிறகு கர்நாடகத்தில் மன்னிப்புக் கேட்டார். இப்போதும்கூட காஷ்மீரில் அவருடைய படங்களுக்கு பெரிய சந்தை இருந்திருந்தால் அவர் இந்த நடவடிக்கையை ஆதரித்து கருத்துத் தெரிவித்திருக்க மாட்டார். எப்போதுமே அவருடைய திரைப்படங்களே அவருக்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது" என்கிறார் மணி.

திரையுலகில் ரஜினிகாந்தின் போட்டியாளராகக் கருதப்பட்ட கமல்ஹாசன் இந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி ஒன்றைத் துவக்கினார். நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனால், ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை என்பதோடு 3.63 சதவீதம் வாக்குகளையே பெற்றார்.

இதுபோன்ற சூழலில் புதிதாக ஒரு கட்சியைத் துவங்கி அரசியலில் இறங்க ரஜினி விரும்புவாரா என்பது கேள்விக்குறிதான். "ரஜினியை இப்போதும்கூட பா.ஜ.கவின் மாநிலத் தலைவராக ஆக்கலாம். அவருக்கு உள்ள ரஜினி ரசிகர் மன்ற கட்டமைப்பு பா.ஜ.கவுக்கும் உதவும். ஆனால், நீண்டகால நோக்கில் அது ரஜினியை பலவீனமாக்கிவிடும். ரஜினிக்கு தன் அரசியல் குறித்து ஒரு எதிர்காலம் சார்ந்த நுணுக்கமான பார்வை இருக்க வேண்டும். ஆனால், அப்படி இருப்பதாகத் தெரியவில்லை" என்கிறார் செந்தில்நாதன்.

1990களின் துவக்கத்திலிருந்தே ரஜினிகாந்த் அரசியலில் இறங்குவாரா என்பது குறித்த கேள்வி நீடித்து வருகிறது. 1996ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தார். பிறகு, அ.தி.மு.கவுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தார். ரஜினிக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் மோதல் வெடித்தபோது, நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு வாக்களிக்க வேண்டாமென வெளிப்படையாகக் கூறினார் ரஜினி.

https://www.bbc.com/tamil/india-49320301

On 8/12/2019 at 10:52 PM, ampanai said:

`நீட், நெக்ஸ்ட், இலங்கை பிரச்னைகளிலும் ரஜினி கருத்து தெரிவிக்க வேண்டும்!' - கார்த்தி சிதம்பரம்

ஆதரிச்சா ரஜனிகாந்திட பிழைப்பு என்னாகிறது?

மனுஷன் தமிழன் உரிமைகளை வித்து பெரும் கொள்ளையடிக்க திட்டம் போடுறார், நீங்க என்னன்டா ஏற்கனவே கொள்ளையடிச்சு பதுக்கிப்பிட்டு அந்தாளின்ட பிழைப்புல மண்ணை போடப்பாக்கிறீங்களே. 

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினிகாந்த்: "பயங்கரவாதிகள், தீவிரவாதிகளின் தாய்வீடாக காஷ்மீர் இருக்கிறது"

ரஜினிபடத்தின் காப்புரிமைARUN SANKAR

காஷ்மீர் பயங்கரவாதிகள், தீவிரவாதிகளின் தாய்வீடாக இருப்பதாகவும் அவர்கள் இந்தியாவில் ஊடுருவ நுழைவாயில்போல இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். அரசியல்வாதிகள் இதனை அரசியலாக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

சென்னை போயஸ் கார்டனில் அவரது வீட்டிற்கு வெளியில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தமிழ் திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்காதது ஏமாற்றமளிப்பதாகக் கூறினார்.

சென்னையில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய ரஜினிகாந்த், பிரதமர் மோதியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கிருஷ்ணர் - அர்ஜுனர் எனக் குறிப்பிட்டது விவாதமாகியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "காஷ்மீர் விவகாரத்தை அவர்கள் ராஜதந்திரத்தோடு கையாண்டிருக்கிறார்கள். கிருஷ்ணர் - அர்ஜுனர் என்று ஏன் சொன்னேன் என்றால், ஒருத்தர் திட்டத்தைக் கொடுப்பவர், மற்றொருவர் அதை செயல்படுத்துபவர்" என்று பதிலளித்தார்.

ரஜினி மற்றும் மோதிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

மேலும், "காஷ்மீர் விஷயம் எவ்வளவு பெரிய விஷயம்? அது இந்த நாட்டோட பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. அந்த காஷ்மீர், பயங்கரவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் தாய் வீடாக இருக்கிறது. அவர்கள் ஊடுருவ 'கேட் - வே ஆப் இந்தியா' மாதிரி இருக்கிறது. அதை முடிவுக்குக் கொண்டுவர ஒரு ராஜதந்திரமாக, முதல்ல 144 கொண்டுவந்துவிட்டு, வீட்டுக்காவலில் வைத்துவிட்டு, என்ன செய்கிறார்கள் எனத் தெரியாமல், முதலில் பெரும்பான்மை இல்லாத மாநிலங்களவையில் நிறைவேற்றிவிட்டு, பிறகு மக்களவையில் செய்திருக்கிறார்கள். இது அருமையான ராஜதந்திரம். இதை விவாதிச்சு, எல்லா விஷயமும் தெரிந்து, அவங்க வந்து முழுச்சுக்கிட்டா விடமாட்டாங்க" என்று தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் இந்த விஷயத்தை அரசியலாக்குகிறார்கள் அவர் குற்றம்சாட்டினார். "தயவுசெய்து நம்ம அரசியல்வாதிகள் எதை அரசியலாக்குவது எனத்தெரிந்துகொள்ள வேண்டும். இது நம்ம நாட்டோட பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை. எதை அரசியலாக்குவது எதை அரசியல் ஆக்கக்கூடாது என்பதை மதிப்பிற்குரிய அரசியல்வாதிகள் தெரிந்துகொள்ள வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

அமித் ஷாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

சித்திரை ஒன்றாம் தேதி ரஜினி துவங்கவிருக்கும் புதிய கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகுமென சொல்லப்படுவது குறித்து கேட்டபோது, அதைப் பற்றி விரைவில் தெரிவிப்பதாகக் கூறினார். தமிழக அரசியலின் மையமாக போயஸ் கார்டன் மீண்டும் மாறுமா என்ற கேள்விக்கு, "பொறுத்திருந்து பாருங்கள்" என்று மட்டும் பதிலளித்தார்.

கடந்த வார இறுதியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்றுப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை பாராட்டினார். மேலும், பிரதமர் மோதியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கிருஷ்ணர் - அர்ஜுனர் போல செயல்படுவதாகவும் யார் கிருஷ்ணர், யார் அர்ஜுனர் என்பது அவர்களுக்குத்தான் தெரியுமென்றும் கூறினார்.

https://www.bbc.com/tamil/india-49347548

  • கருத்துக்கள உறவுகள்

வேங்கை ம‌க‌னுக்கு , ம‌ண்டையில் முடி தான் இல்லை என்று பார்த்தா மூளையும் இல்லை /

தின்னையில் ப‌டுத்து தூங்க‌ வேண்டிய‌வ‌னை த‌மிழ் நாட்டுக்கு ந‌டிக்க‌ கூட்டி வ‌ந்த‌து ம‌கா த‌ப்பு /

வாக்கு சீட்டு முறையில் தேர்த‌ல் வைச்சு இந்த‌ வேங்கை ம‌க‌னை தேர்லில் போட்டியிட‌ வைக்க‌னும் / அந்த‌ தேர்த‌ல் ஓட‌ ம‌ராட்டிய‌னின் க‌தை முடிஞ்சு போயிடும்  😉 /

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.