Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பலாலி விமான நிலையத்திற்காக காணிகளை சுவீகரிப்பதை அனுமதிக்க முடியாது - மாவை

Featured Replies

Published by Daya on 2019-08-16 14:45:25

பலாலி விமான நிலையத்தின் ஓடுதள விஸ்தரிப்பின் போது  மேலதிக காணிகளை சுவீகரிக்க அனுமதிக்க முடியாது.மாறாக தேவைப்படின் கடற்கரை பக்கமாக அதனை நிரவி ஓடுதளத்தை அமையுங்கள் அதற்கான வழிவகையை சம்பந்தப்படட அதிகாரிகள ஆராயுங்கள் என பாராளுமன்ற  உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க ஊடாக அதிகாரி களுக்கு தெரிவித்தார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி தற்போது நடைபெற்று வருகின்றது. விமான நிலையத்துக்கான ஓடுதளம் விஸ்தரிக்கப் படுமாயின் மக்களின் காணிகள் சிலவற்றை சுவீகரிக்க ஆலோசித்து வருவதாக அறிகின்றேன். அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஓடுதளம் விஸ்தரிக்க வேண்டுமாயின் விமான நிலையத்தின் வடக்கு பக்கமாக உள்ள கடல் பகுதியை நிரவி அதன் ஊடாக ஊடுதளத்தை  அமைக்க முடியும் என்றார்.

இதன் போது கருத்து தெரிவித்த பாதுகாப்பு தரப்பினர், விமான நிலைய அபிவிருத்தியின் போது காணிகள் சுவீகரிப்பது தொடர்பில் இப்போது எந்த முயற்சியும் நடைபெறவில்லை. நீங்கள் சொல்வது போல கடலை நிரவி ஓடுதளம் அமைப்பது தொடர்பாக நாமும் சிவில் விமான போக்குவரத்து துறையினர் போன்ற பல தரப்புக்களுடனும் பேசி ஓர் முடிவுக்கு வரமுடியும் என்றனர்.

யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலிலேயே பாராளுமனற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/62790

 

15 hours ago, ampanai said:

நீங்கள் சொல்வது போல கடலை நிரவி ஓடுதளம் அமைப்பது தொடர்பாக நாமும் சிவில் விமான போக்குவரத்து துறையினர் போன்ற பல தரப்புக்களுடனும் பேசி ஓர் முடிவுக்கு வரமுடியும் என்றனர்.

ஏதோ அமெரிக்காட அப்போல்லோ விண்வெளி ஓடத்தை இங்க தரையிறக்கிற மாதிரி கதைவிடீனம்!

  • தொடங்கியவர்

காங்கேசன்துறை சீமெந்து ஆலையை இயங்க வைப்போம்

900 ஏக்கர் காணியே யாழில் விடுவிக்க வேண்டும்

கூட்டமைப்பு எம்.பிக்கள் முன்னிலையில் யாழில் பிரதமர் ரணில் தெரிவிப்பு

 

யாழில் இன்னமும் 900 ஏக்கர் காணியே விடுவிக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

மேலும் காங்கேசன்துறை சீமெந்து ஆலையை இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள வலி.வடக்கு தெல்லிப்பளைப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள மயிலிட்டி மீனவத்துறை அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை மீண்டும் கட்டியெழுப்ப பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன் அதில் ஓர் அங்கமாக மயிலிட்டி மீனவத் துறைமுகத்தின் முதலாம் கட்டப்பணிகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது.

150 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட மயிலிட்டித் துறைமுகத்தின் முதலாம் கட்டப்பணிகளுக்கு 37 மில்லியன் ரூபாய் பணத்தை நோர்வே அரசாங்கம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அடிக்கல் நாட்டப்பட்ட குறித்த  மீனவத் துறைமுகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் 200 வீடுகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள தோடு மீதமுள்ள 900 ஏக்கர் காணிகளையும் விடுவிக்கவுள்ளோம்.

வடக்குக் கிழக்கில் 2009-2015 வரை இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 35 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவித்ததோடு 2015-2019 வரை ஏறக்குறைய 45 ஆயிரத்து ஐநூற்று எண்பது ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளோம்.

மேலும் உயர் பாதுகாப்பு வலயம் மெல்ல மெல்லச் சுருங்கிக் கொண்டு செல்லும் நிலையில் மீள்குடியேற்றப்படவுள்ள மக்களுக்குத் தேவையான நிதியை வழங்குவதில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 10 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தில் வட மாகாணத்தில் ஆயிரத்து ஐநூறு வீடுகள் அமைக்கப்பட் டுள்ளது. மூவாயிரம் ஆசிரியர்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிக்காக சிறிய நிலப்பரப்புக் காணி தேவைப்படுகின்றது. அதேபோல்  30 வருட காலமாக இயங்காமல் இருக்கின்ற சீமெந்து ஆலையை மீண்டும் இயங்க வைக்க துறைசார் அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் கலந்துரையாடி வருவதாக பிரதமர் ரணில் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, தர்மலிங்கம சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், விவசாய, கிராம பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் பீ.ஹரிசன், மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் எஸ்.சிவ ஞானசோதி மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

http://valampurii.lk/valampurii/content.php?id=19256&ctype=news

10 minutes ago, ampanai said:

மாவை சேனாதிராசா, ஈஸ்வரபாதம் சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன்,

இந்த கள்ளவோட்டு வெற்றியாளர்களோட ஸ்ரீதரனை காணேல?

கனநாளைக்கு பிறகு மக்கள் முன்னால நிற்கும் மிஸ்டர் சரவணபவன்! உங்கட வீட்டில பேர்த்டே ஒன்டும் இல்லையோ?

 

On 8/16/2019 at 1:21 PM, ampanai said:

பலாலி விமான நிலைய அபிவிருத்தி தற்போது நடைபெற்று வருகின்றது. விமான நிலையத்துக்கான ஓடுதளம் விஸ்தரிக்கப் படுமாயின் மக்களின் காணிகள் சிலவற்றை சுவீகரிக்க ஆலோசித்து வருவதாக அறிகின்றேன். அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஓடுதளம் விஸ்தரிக்க வேண்டுமாயின் விமான நிலையத்தின் வடக்கு பக்கமாக உள்ள கடல் பகுதியை நிரவி அதன் ஊடாக ஊடுதளத்தை  அமைக்க முடியும் என்றார்.

ஏற்கனவே காணி சுவீகரிப்பதற்கெதிராக மக்கள் போராட்டங்களை நடத்தி வந்து இறுதியில் மேலதிக காணி சுவீகரிக்கப்படாது என கூறி தானே அபிவிருத்தி ஆரம்பித்தார்கள். மீண்டும் சுவீகரிப்பு பற்றி ஆலோசிக்கினமோ.

  • கருத்துக்கள உறவுகள்

ஓடுபாதையை வடக்கு புறமாக விஸ்தரிப்பதாயின் ஏன் கடல் வரை போக வேண்டும். தற்போது இருக்கும் ஓடுபாதையின் 3/2 பங்கு நீளாமன நிலப்பரப்பு கடற்கரைக்கு போகமும்னமே வருகிறதே?

இது போதாதா? கடலை நிரவுவது அதிக செலவான வேலை. 

  • தொடங்கியவர்
’மக்களுடைய நிலம் தொடர்ந்தும் படையினருடைய கட்டுப்பாட்டில் உள்ளது’
 
Editorial / 2019 ஓகஸ்ட் 17 சனிக்கிழமை, பி.ப. 01:39

-எஸ்.நிதர்ஷன்

தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகளை 2018ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்துக்குள் மக்களிடம் மீள வழங்குவேன் என ஜனாதிபதி கூறி 9 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான மக்களுடைய நிலம் தொடர்ந்தும் படையினருடைய கட்டுப்பாட்டில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்றய தினம் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது மீள்குடியேற்ற நிலமைகள் குறித்து ஆராயப்படுகையில் கருத்து கூறும் போதே, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

2018ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்துக்கு முன்னர் தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகள் அனைத்தும் மக்களிடமே மீள வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா காலக்கெடு வழங்கினார். அந்த காலக்கெடு நிறைவடைந்து 9 மாதங்கள் கடந்து கொண்டிருக்கும் நிலையிலும் படையினரின் கட்டுப்பாட்டில் சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலம் இருந்து கொண்டிருக்கின்றது.

மேலும், குறிப்பாக பலாலி வீதியின் கிழக்குப் புறமாக பெருமளவு நிலம் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டிருக்கின்றது. அந்த நிலம் பொதுமக்களுக்குச் சொந்தமான மிக பெறுமதியான விவசாய நிலம் என, அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்விடயம் தொடர்பில், அங்கு தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறுகையில், பலாலி வீதியின் கிழக்கு புறமாக உள்ள வீதி என்பது மிக பெறுமதியான விவசாய நிலம். அதனை மக்களுக்கு விடுவிக்காமல் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் மக்களுடைய நிலத்தில் விவசாயம் செய்கின்றார்கள்.

இது எங்களுடைய பொருளாதார விருத்திக்கு முரணான ஒரு செயலாக அமைகின்றது. அது மட்டுமல்லாமல் மயிலிட்டி பகுதியில் 3 கிராமசேவகர் பிரிவுகளும், வல்லை அராலி வீதியும் விடுவிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து கருத்து கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண ஆளுநர் ஜனாதிபதியின் வடமாகாணத்துக்கான பிரதிநிதி என்ற அடிப்படையில் ஜனாதிபதியிடம் இந்த விடயங்களை கூறி மக்களுடைய காணிகளை மக்களிடம் மீள வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். அதற்கு பதிலளித்த ஆளுநர் தாம் ஜனாதிபதிக்கு இந்த விடயத்தை நினைவுபடுத்துவதாக கூறினார்.

இதனை தொடர்ந்து யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி கருத்து கூறுகையில், பலாலி வீதியின் கிழக்கு பகுதியில் உள்ள காணிகளை விடுவிக்க 1,200 மில்லியன் பணம் தேவை என கூறியதுடன் அந்த பணம் கிடைக்கவில்லை எனவும் கூறினார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மக்களுடைய-நிலம்-தொடர்ந்தும்-படையினருடைய-கட்டுப்பாட்டில்-உள்ளது/71-236881

1 hour ago, ampanai said:

தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகளை 2018ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்துக்குள் மக்களிடம் மீள வழங்குவேன் என ஜனாதிபதி கூறி 9 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான மக்களுடைய நிலம் தொடர்ந்தும் படையினருடைய கட்டுப்பாட்டில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுமந்திரன் ஏன் காணிகளை விடுவிக்குமாறு ரணிலிடம் கேட்கவில்லை?
சுமந்திரன் எதற்காக மைத்திரி மேல் மட்டும் பழியைப் போட்டு ரணிலை காப்பாற்ற நினைக்கிறார்?
இதற்கான பதில்கள் சுமந்திரனின் அடிமைத்தன மனநிலையை, ரணிலின் சேவகனாக செயலாற்றுவதை வெளிப்படுத்துகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது பலாலி பகுதியில் எந்தளவு நிலம் இராணுவ வசம் உள்ளது என்பதை காட்டும் வரைபடம் ஏதேனும் உள்ளதா? 

  • தொடங்கியவர்
50 minutes ago, goshan_che said:

தற்போது பலாலி பகுதியில் எந்தளவு நிலம் இராணுவ வசம் உள்ளது என்பதை காட்டும் வரைபடம் ஏதேனும் உள்ளதா? 

https://satellites.pro/Palali_map.Sri_Lanka#

PalaliGraphic.jpg

  • தொடங்கியவர்

 

 

 

 

'வயாவிளான் மக்கள் போராட்டத்தில் குதிப்பர்’

Editorial / 2019 ஓகஸ்ட் 19 திங்கட்கிழமை, பி.ப. 05:12   

-செந்தூரன் பிரதீபன்

 

பலாலி விமான நிலையத்தின் நுழைவாயில் இருந்த இடத்திலே மீளவும் அமைக்கப்படவேண்டுமெனத் தெரிவித்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முண்ணணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், இல்லையேல் வயாவிளான் மக்கள் போராட்டத்தில் குதிப்பரெனவும் எச்சரிக்கை விடுத்தார்.

அவரது கட்சி அலுவலகத்தில், நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், நல்லாட்சி அரசாங்கத்தால் காணி விடுவிப்பை மேற்கொள்வோமெனச் சூளுரைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மயிலிட்டி பகுதியில் விமான நிலைய விஸ்தரிப்புக்கென காணி சுவீகரிக்கும் நடவடிக்கையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டா இருக்கின்றார்களெனவும் கேள்வியெழுப்பினார்.

பலாலி விமான நிலையத்தை மீளவும் சிவில் மக்களுக்காக திறக்க முயல்வதும் அதனை பிராந்திய விமான நிலையமாக உருவாக்குவதும் வரவேற்கபட வேண்டிய விடயமெனத் தெரிவித்த அவர், ஆனால் இதுவரை காலமும் விமான நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், கிழக்கு பக்கமாகத்தான் அதனுடைய வாசல் இருந்தது என்பதும் போக்குவரத்துக்கான வழி இருந்தது என்பதும் வெளிப்படையான விடயமெனவும் கூறினார்.

தற்போது மேற்கு பக்கத்தில் நுழைவாயில் அமைக்கும் பணியில், இராணுவத்தினரும் விமானப்படையினரும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், கிழக்கு பக்கம் இருந்த நுழைவாயிலை மாற்றி, அதை மேற்கு பக்கமாக தெல்லிப்பளை வைத்தியசாலை வீதி வழியாக சென்று மேற்கு பக்கம் உள்ள நுழை வாயிலலை அடையவேண்டும் என்ற நோக்கத்தோடு அமைக்கப்படுகிறதெனவும் கூறினார்.

நிச்சியமாக அதனுடாக மக்களுக்குச் சொந்தமான பல நூற்றுக்கணக்காக காணிகள், அநியாயமாக சுவீகரிக்கப்படுமெனத் தெரிவித்த அவர், இது திட்டமிட்ட செயல் என்றே எண்ண தோன்றுகிறதெனவும் கூறினார்.

ஆகவே, விமான நிலையம் செயற்பட தொடங்குவதற்கு முன்னாக, நுழைவாயிலை மாற்ற வேண்டுமெனவும், அவர் மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/வன்னி/வயாவிளான்-மக்கள்-போராட்டத்தில்-குதிப்பர்/72-236990

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ampanai said:

நன்றி அம்பனை. 

இதில் கடும் மஞ்சளாய் இருக்கும் இடம் மட்டும்தானா இப்போ ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கிறது?

நீங்கள் தந்த இணைப்பு தனியே சட்டிலைட் மேப்பையே காட்டுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.