Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பளை வைத்தியர் வழங்கிய முக்கிய தகவல் – பெருமளவான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பளை வைத்தியர் வழங்கிய முக்கிய தகவல் – பெருமளவான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் மீட்பு

ak.jpg

பளை வைத்தியசாலையின் அத்தியட்சகர் மருத்துவர் சின்னையா சிவரூபன் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஏ.கே.47 ரக தூப்பாக்கி , அதற்குப் பயன்படுத்தப்படும் மகசின்கள் இரண்டு, 120 துப்பாக்கி ரவைகள், 11 கைக்குண்டுகள், 10 கிலோ கிராம் சக்திவாய்ந்த வெடிமருந்து என்பன கரந்தனில் இன்று (திங்கட்கிழமை)  மீட்கப்பட்டுள்ளன.

பளை வைத்தியசாலை அத்தியட்சகரும் சட்ட மருத்துவ அதிகாரியுமான சின்னையா சிவரூபன், பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

ட‌க்கிள‌ஸ்சின்ட‌ ஆட்க‌ள் வ‌வுனியாவில் வீட்டுக்கை பெரிய‌ துப்பாக்கியே வைச்சு இருக்கின‌ம் , அவையை எந்த‌ விசார‌னையின் கீழ் விசாரிப்பின‌ம் / 

கைதான‌ ந‌ப‌ரின் ப‌ட‌ம் வெளியிட்டா இந்த‌ செய்தியை  கொஞ்ச‌ம் த‌ன்னும் ந‌ம்ப‌லாம் / 

இல்லாட்டி இதுவும் திட்ட‌ம் போட்ட‌ நாட‌க‌ம் தான் /  

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பளையில் மீட்க்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை தீவிரம்!

(எம்.எப்.எம்.பஸீர்)

பளை, கராண்டிய பகுதியில் நேற்றைய தினம் மீட்க்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் உயர்மட்ட தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.

palai.jpg

குறித்த அயுதங்கள் எங்கிருந்து எவ்வாறு கொண்டுவரப்பட்டன, அவற்றை மறைத்து வைத்ததன் நோக்கம், அதற்கு உதவியவர்கள் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் இந்த தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதிகளுக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, தற்போது பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரின் தடுப்பில், யாழ். பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் பளை சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனின் வாக்கு மூலத்துக்கு அமைய நேற்றைய தினம் இந்த ஆயுதங்கள் மீட்க்கட்டுள்ளன. 

ஏ.கே.47 துப்பாக்கி ஒன்று,  அந்த துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் இரு மெகசின்கள், அத்துப்பககிக்கு பயன்படுத்தப்படும் 120 தோட்டாக்கள், 11 கைக்குண்டுகள்,  பீ.ஈ.10 ரக வெடிபொருள் என சந்தேகிக்கபப்டும் வெடிபொருள் 10 கிலோ, தொலைநோக்கி உள்ளிட்ட பல ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் இவ்வாறு மீட்க்கப்பட்டிருந்தன.

palai2.jpg

palai3.jpg

இதவேளை முக்கியஸ்தர்கள் மூவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், புலிகள் அமைப்பை மீள ஏற்படுத்த இரகசிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படும் இரு விடயங்கள் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனிடம் தீவிர விசாரணைகள் தற்போதும் இடம்பெற்றுவருவதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் உயர்மட்ட தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/63519

  • கருத்துக்கள உறவுகள்
On ‎8‎/‎27‎/‎2019 at 7:10 AM, பையன்26 said:

ட‌க்கிள‌ஸ்சின்ட‌ ஆட்க‌ள் வ‌வுனியாவில் வீட்டுக்கை பெரிய‌ துப்பாக்கியே வைச்சு இருக்கின‌ம் , அவையை எந்த‌ விசார‌னையின் கீழ் விசாரிப்பின‌ம் / 

கைதான‌ ந‌ப‌ரின் ப‌ட‌ம் வெளியிட்டா இந்த‌ செய்தியை  கொஞ்ச‌ம் த‌ன்னும் ந‌ம்ப‌லாம் / 

இல்லாட்டி இதுவும் திட்ட‌ம் போட்ட‌ நாட‌க‌ம் தான் /  

சகோ ,
 ஊடாக  பார்ப்பதற்கு வைத்திருக்கும் அந்த புகையூட்டிய கண்ணாடியை சற்றே தள்ளி வைத்து விட்டு புலத்தை பாருங்கள் , நீங்கள் தவற விட்ட சில பல விபரங்கள் தெரிய வரக் கூடும்।
 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சாமானியன் said:

சகோ ,
 ஊடாக  பார்ப்பதற்கு வைத்திருக்கும் அந்த புகையூட்டிய கண்ணாடியை சற்றே தள்ளி வைத்து விட்டு புலத்தை பாருங்கள் , நீங்கள் தவற விட்ட சில பல விபரங்கள் தெரிய வரக் கூடும்।
 

வ‌ண‌க்க‌ம் அண்ணா ,

வ‌வுனியாவில் ட‌க்கிளஸ்க்கு தேர்த‌ல் நேர‌ம் கொடி பிடிக்கும் கூட்ட‌ம் அவ‌ர்க‌ளை சொன்னேன் /

2009ம் ஆண்டுகு பிற‌க்கு நிறைய‌
ச‌ம்ப‌வ‌ங்க‌ள் , வெறுக்க‌ கூடிய‌ அள‌வுக்கு போய் விட்ட‌து ,  புல‌ம் பெய‌ர் தேச‌த்திலும் ச‌ரி த‌மிழீழ‌த்திலும் ச‌ரி 😉 /

தமிழின அழிப்பின் இன்னொரு பாகத்தை அரங்கேற்ற மிலேச்ச சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் போடும் இன்னொரு நாடகம்.

இலங்கையில் சிங்கள-பௌத்த பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்படும் வரை இதுபோன்ற கேலிக்கூத்துகள் அரங்கேறிக்கொண்டே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றவாளிகளும்.. இனப்படுகொலையாளர்களும் சர்வதேசத்தால் தண்டிக்கப்படாவிட்டால்.. அவர்கள் தம்மை வலுப்படுத்த.. இவ்வாறான சதிகளை அரங்கேற்ற.. எப்போதும் பின்நிற்க மாட்டார்கள்.

மைத்திரிபால சிறிசேன.. ஒரு போர்க்குற்றவாளி.. இனப்படுகொலையாளன்.. என்பதை மறைத்து மறந்து... அவருக்கு நல்லவர்.. நல்லாட்சி சனாதிபதி என்று போர்வை போர்த்தி.. இன்று எல்லா போர்க்குற்றவாளிகளும்.. இனப்படுகொலையாளர்களும்.. ஈசல் போல்.. சுதந்திரமாக.. உயர் பதவிகளை நோக்கி பறக்க வசதி செய்து கொடுத்த சம் சும் மாவை கும்பல் உட்பட.. எல்லோருமே.. இந்த பயங்கரச் சூழல்.. மீள சூல்கொள்ள முக்கிய காரணம். 

இவர்களின் நியமனங்கள் தொடர்பில்.. புலம்பெயர் சமூகமும் மெளனம் காப்பது இன்னும் வேடிக்கையானது. ஒருவேளை அவர்களுக்கு கொலிடே போவது முக்கியமாகி இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

போர்க்குற்றவாளிகளும்.. இனப்படுகொலையாளர்களும் சர்வதேசத்தால் தண்டிக்கப்படாவிட்டால்.. 

 சர்வதேசத்தால்” என்று எழுதி இருக்கிறீர்கள். 

சர்வதேச பொலிசான இன்ரபோல் இலங்கை ஜனாதிபதி, கோத்தபாய ஆகியோரை கைது செய்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவாளிகளுக்கான சிறையில் அடைக்க வேண்டும் என்பதா உங்கள் எதிர்பார்ப்பு?

இலங்கை இராணுவத்தை மீறி இதை எப்படி சர்வதேச பொலிசான இன்ரபோல் செய்யமுடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

தங்களின் உள்ளக உளவுத்தகவல்களை வைச்சுக் கொண்டு.. பிடிவிராந்து விட்ட நாடுகளுக்காக போராளிகளை தேடுவோர் பட்டியலில் போட்டவையும்.. தங்கள் நாடுகளுக்கு வர பிரயாணத்தடை போட்டவர்களும்.. ஏன் சீமானுக்கு கூட தடை போட்டவர்களுக்கு.. ஐநா அறிக்கையில் போர்க்குற்றவாளிகளாக இனங்காட்டப்பட்ட.. பகிரங்க போர்க்குற்றச்சாட்டுக்களை.. சித்திரவதை தொடர்பான வழக்குகளை எதிர்கொள்பவர்கள்.. மீது.. பயணத்தடை... பிடிவிராந்து பிறப்பிக்க சர்வதேசம் தயங்குவது ஏன்..?!

சொறீலங்கா சிங்கள அரச பயங்கரவாதிகளை சர்வதேசம் பாதுகாப்பது ஏன். குறிப்பாக அமெரிக்கா.. என்ற தேசம் செய்வது ஏன். 

ஹிந்தியாவை விடுவோம்.. அது சுத்தப் பயங்கரவாத நாடு. காஷ்மீரில் அதன் அரச பயங்கரவாதத்தை இப்போ உலகம் கண்கூடாகக் காண்கிறது. ஆனால் அமெரிக்கா..???! தன்னை மனித உரிமைக் காவலனாகக் காட்டிக்கொள்ளும் அமெரிக்கா.. போர்க்குற்றவாளிகள் எப்படி சுதந்திரமாக உலவவிட்டுள்ளது..??! அதன் வால்பிடி இன்டபோல்.. இவற்றை கண்டும் காணாததும் போல் இருப்பது ஏன்..???! 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nedukkalapoovan said:

சொறீலங்கா சிங்கள அரச பயங்கரவாதிகளை சர்வதேசம் பாதுகாப்பது ஏன். குறிப்பாக அமெரிக்கா.. என்ற தேசம் செய்வது ஏன். 

ஹிந்தியாவை விடுவோம்.. அது சுத்தப் பயங்கரவாத நாடு. காஷ்மீரில் அதன் அரச பயங்கரவாதத்தை இப்போ உலகம் கண்கூடாகக் காண்கிறது. ஆனால் அமெரிக்கா..???! தன்னை மனித உரிமைக் காவலனாகக் காட்டிக்கொள்ளும் அமெரிக்கா.. போர்க்குற்றவாளிகள் எப்படி சுதந்திரமாக உலவவிட்டுள்ளது..??! அதன் வால்பிடி இன்டபோல்.. இவற்றை கண்டும் காணாததும் போல் இருப்பது ஏன்..???! 

நீங்கள் "சர்வதேசம்" என்று குறிப்பிடுவது அமெரிக்காவை என்றா சொல்கிறீர்கள்?

அமேரிக்கா என்றே எழுதலாமே? நான் இந்த சர்வதேசத்தில் சீனாவும், வடகொரியாவும் வெனிசுலாவும் கியூபாவும் அடங்கி இருப்பதாகவும் அந்த நாடுகளும் உங்கள் கருத்துகளில் உள்ளடக்கம் என்று இதுவரை நினைத்து இருந்தேன். அமேரிக்கா என்றே எழுதுங்கள் - தெளிவாக இருக்கும்.

 

23 hours ago, nedukkalapoovan said:

சொறீலங்கா சிங்கள அரச பயங்கரவாதிகளை சர்வதேசம் பாதுகாப்பது ஏன். குறிப்பாக அமெரிக்கா.. என்ற தேசம் செய்வது ஏன். 

யாரிடம் இருந்து சிறிலங்காவை அமெரிக்கா பாதுகாக்கிறது? 

  1. சீனாவிடம் இருந்தா?
  2. இந்தியாவிடம் இருந்தா?
  3. விடுதலை புலிகளிடம் இருந்தா?

கொஞ்சம் தெளிவாக எழுதினால் பதில் எழுத கூடியதாக இருக்கும்.

23 hours ago, nedukkalapoovan said:

ஹிந்தியாவை விடுவோம்.. அது சுத்தப் பயங்கரவாத நாடு. காஷ்மீரில் அதன் அரச பயங்கரவாதத்தை இப்போ உலகம் கண்கூடாகக் காண்கிறது. ஆனால் அமெரிக்கா..???! தன்னை மனித உரிமைக் காவலனாகக் காட்டிக்கொள்ளும் அமெரிக்கா..

அமெரிக்கா சிரியாவிலும், ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் செய்யாததையா இந்தியா  காஷ்மீரில் செய்கிறது? அமெரிக்கா மனித உரிமைகள் பற்றி அக்கறை கொள்வது அரசியல் இராணுவ பொருளாதார காரணங்களுக்காக என்பதை அமெரிக்க ஆய்வாளர்களே தெரிவிக்கும் போது நீங்கள் ஏன் அதனை ஏற்று கொள்ளவில்லை?

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.