Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

இந்தத் திரிக்குத் தொடர்பில்லாமல் இருக்கிறது, ஆனாலும் உங்கள் மேதாவித் தனம் பற்றிய கேள்வியை, வரைவிலக்கணத்தை இங்கே இணைத்துப் பதில் தருகிறேன், அதனால் இது அகற்றப் படாமல் இருக்கும் என நம்புகிறேன்:

ஒரு பெண்ணை முன்னாள் கணவர் கொடூரமாகக் கொலை செய்து விட்டார். இப்போது கொலைக்கு அந்தப் பெண்ணின் நடவடிக்கைகளும் காரணமாக இருக்கலாம் என்ற தொனியில் செய்திகளும் பதிவுகளும் வருகின்றன. இது அப்பட்டமான பெண்ணடிமை வாதம் என ஒரு தரப்புச் சொல்கிறது. அப்படியில்லை என இன்னொரு தரப்புச் சொல்கிறது. இந்த வாதத்தில் சட்ட நுணுக்கங்களைத் தாண்டி வந்தாயிற்று. இப்ப இது ஒரு தார்மிக விடயமாகத் தான் விவாதிக்கப் படுகிறது.

இங்கே யார் மேதாவித் தனம் காட்டினார்கள்? தனி மனித சுதந்திரத்தை மதிக்கும் ஒருவர் மேதாவியா அல்லது கலாச்சாரப் பொலிஸ் வேலை பார்த்து நபர்களின் நடவடிக்கைக்கு விளைவுகள் உகந்தவையா எனத் தீர்மானிப்பவர் மேதாவியா? என்னைப் பொறுத்தவரை இதில் மேதாவித் தனம் எவரிடமும் இல்லை! நீங்கள் திரி மாறி வந்து விட்டீர்கள் என நினைக்கிறேன்!

நான் குறித்த வீடியோ பற்றியும் 
அது பற்றி மேலே எழுதப்பட்டிருக்கும் கருத்துக்கள் பற்றியும்தான் எழுதுகிறேன்.
வீடியோ ஏன் வெளியானது? என்ற நிலைப்பாடு பற்றியதுதான் எனது கருத்துக்கள் 
நீங்கள்தான் இப்போ கலாச்சார போலீசை இங்கே கூட்டி வருகிறீர்கள் 

நான் வாசித்த அளவில் யாரும் கொலையை நிஜாய படுத்தவில்லை எல்லோரும் இது கொடூரம் என்று கோடிட்டு  மேலே எழுதி இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்டவர்கள் திரும்ப திரும்ப தேவை அற்ற குற்றச்சாட்டுக்களை வைக்கிறார்கள் .... உதாரணத்துக்கு இப்போ நீங்கள் இந்த பெண்ணடிமைத்தனம்   .. கலாச்சார போலீசு  போன்றவற்றை கொண்டுவருவதுபோல். 

  • Replies 81
  • Views 11.1k
  • Created
  • Last Reply

தனிப்பட்ட உரையாடல்களைத் தவிர்த்து தலைப்புடன் கருத்துப் பகிருங்கள். நன்றி.

On 23 septembre 2019 at 4:37 AM, valavan said:

தாயகத்திலிருந்து திருமணம் முடித்து கனடா வந்த முழுசாக இரண்டு வருஷங்கள் முடியாத காலத்தினுள் , கனடாவில் பிறந்து வளர்ந்தவர்கள் அளவிற்கு  வாழ்க்கையின் முறைமையை சடுதியாக மாற்றியிருக்கிறார்,

தாயகத்தில் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்து கனேடிய குடிமகனை திருமணம் செய்து கனடா வந்தவர் குறுகிய காலத்துள் இப்படி மாறுவது  நமது சமூகத்துக்கு ஆச்சரியமும், அவரை கட்டிகிட்டவருக்கு மனநோயும் வரபண்ணும் ஒன்றே.

அது அவர் சுதந்திரம்,, ஆனாலும்  சும்மா கதைச்சாலே ‘அவ என்ர ஆள்’’ என்று சொல்லிகொண்டு நாக்கை தொங்கவிட்டு கொண்டு அலையும் நமது சமூகத்தில் இவற்றையெல்லாம் சகித்திக்கொள்ள நூற்றில் 50% பேர்கூட நம்மில் தயாரில்லை,

தாயகத்தில் வறுமைக் கோட்டில் இருக்கும் பெண்கள் பாட்டுக்கு நடனமாடியது இல்லையா அல்லது நடனமாடக் கூடாதா ? 

இன்னொரு ஆணிடம் கதைப்பதையே சகித்துக் கொள்ளாதவர்கள் திருமணம் செய்து பெண்ணுடன் வாழ அருகதை அற்றவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Maruthankerny said:

நான் குறித்த வீடியோ பற்றியும் 
அது பற்றி மேலே எழுதப்பட்டிருக்கும் கருத்துக்கள் பற்றியும்தான் எழுதுகிறேன்.
வீடியோ ஏன் வெளியானது? என்ற நிலைப்பாடு பற்றியதுதான் எனது கருத்துக்கள் 
நீங்கள்தான் இப்போ கலாச்சார போலீசை இங்கே கூட்டி வருகிறீர்கள் 

நான் வாசித்த அளவில் யாரும் கொலையை நிஜாய படுத்தவில்லை எல்லோரும் இது கொடூரம் என்று கோடிட்டு  மேலே எழுதி இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்டவர்கள் திரும்ப திரும்ப தேவை அற்ற குற்றச்சாட்டுக்களை வைக்கிறார்கள் .... உதாரணத்துக்கு இப்போ நீங்கள் இந்த பெண்ணடிமைத்தனம்   .. கலாச்சார போலீசு  போன்றவற்றை கொண்டுவருவதுபோல். 

மருதர்,
கொலையை நியாயப் படுத்தவில்லையானால் வீடியோ உலவ விடப் பட வேண்டியதன் அவசியம் என்ன? வளவன் எழுதிய துலங்கலை  இணையவனில் பதிவில் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த வீடியோ இணைப்பின் நோக்கம் உங்களுக்கு விளங்கவில்லையா? இதனால் தான் இது பெண்ணடிமைத் தனத்தின் வடிவம் என்றும், ஒருவரின் சொந்த மகிழ்ச்சி சார்ந்த நடவடிக்கைக்கு அளவுகோல் வைத்து "இது அனுமதிக்கலாம், இது ரூ மச்" என்று வியாக்கியானம் செய்யும் கலாச்சாரப் பொலிஸ் வேலை என்றும் சொன்னேன்! இது உங்களுக்கு இந்த இடத்தில் பொருத்தமாகத் தெரியவில்லை, ஆனால் வேறு யாருக்கும் கன்ணில் படாத மேதாவித் தனம் உங்களுக்குத் தெரிகிறதே? எப்படி?

இந்த விளக்கக் குழப்பங்களுக்கு பதில் சொல்லி நான் நேர விரயம் செய்யாமல், இங்கே சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லி விட்டதால் அமைதியாகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இணையவன் said:

தாயகத்தில் வறுமைக் கோட்டில் இருக்கும் பெண்கள் பாட்டுக்கு நடனமாடியது இல்லையா அல்லது நடனமாடக் கூடாதா ? 

இன்னொரு ஆணிடம் கதைப்பதையே சகித்துக் கொள்ளாதவர்கள் திருமணம் செய்து பெண்ணுடன் வாழ அருகதை அற்றவர்கள்.

இல்லை என்றுதான் எண்ணுகிறேன் 
200 300 வருடங்கள் முன்பு ஆடினார்களோ தெரியவில்லை 
நான் வாழ்ந்த காலத்தில் இப்படி பெண்கள் பாட்டுப்போட்டு ஊருக்கு நடுவில் 
நின்று ஆடியதில்லை.
முன்பு ஆட்டம் என்றால் சின்ன மேளம்தான் 

அதற்காக ஆடுவது பிழை இல்லை 
பாடுவதும் ஆடுவதும் தமிழோடு ... எம்மொழியோடு சேர்ந்தது 
இதை ஏன் இடையில் நிறுத்தினார்கள் என்று புரியவில்லை .
போராட்ட காலத்தில் பிரச்சார ரீதியாக சில நடனங்கள் நடந்து இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/24/2019 at 4:03 PM, இணையவன் said:

தாயகத்தில் வறுமைக் கோட்டில் இருக்கும் பெண்கள் பாட்டுக்கு நடனமாடியது இல்லையா அல்லது நடனமாடக் கூடாதா ? 

 

தாயகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பாட்டுக்கு நடனமாடியிருக்கிறார்கள், பார்ட்டிக்கு போய் நடனமாடுவதைதான் நமது சமூகத்தில் பலர் ஏற்றுக்கொள்வதில்லை என்று சொல்லியிருந்தேன்.

கொலையாளி ஒரு கைதொலைபேசியையே மனைவி பாவிக்ககூடாது என்று தடை விதிக்குமளவிலும், பெண்ணின் பெற்றோர்களுடனேயே அவர் பேசகூடாது என்று  தடைகள் விதிக்கும் அளவிற்கும் பிற்போக்குதனமாகவும்,சுதந்திரத்தை மறுப்பவராகவும் இருந்திருக்கிறார் ,அவர் பார்வையில் மனைவி செய்தது மனநோய் அவரபண்ணூமா இல்லையா?

நான் கொலையாளியின் மனநிலைபற்றிதான் பேசினேன்

அதற்காக அவரை உத்தமன் என்று சான்றிதழ் தரவில்லை.

On 9/24/2019 at 4:03 PM, இணையவன் said:

இன்னொரு ஆணிடம் கதைப்பதையே சகித்துக் கொள்ளாதவர்கள் திருமணம் செய்து பெண்ணுடன் வாழ அருகதை அற்றவர்கள்.

இதை நீங்கள் கொலையாளி  பத்து பதினைந்து வருடங்களின் பின்னர் சிறையிலிருந்து வந்த பின்னர் அவரிடம்தான் தெரிவிக்கவேண்டும்.

நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஏற்றாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், என்னதான் மேற்குலகத்தில் ஆண்டுக்கணக்கில் வாழ்ந்தாலும் ஒட்டுமொத்த புலம்பெயர் சமூகத்தில் பாதிக்குமேல்,  வெளியே வெள்ளைக்காரனைவிட உயர்ந்த விலை ஆடைகள் அணிந்து டிப்டாப் ஆசாமிகளாக வலம் வந்தாலும் பெண்கள் சுதந்திர விஷயத்தில்   பல தலைமுறைக்கு  முன்னர் ஊர்ல் வாழ்ந்த அவர்களின் மூதாதையரின் கோவணம் கட்டிய கொள்கைகளையே உள்ளே சுமந்து கொண்டு திரிகிறார்கள்.

அடுத்தவன் மனைவி  பார்ட்டிகளில் பலர் நடுவில் நின்று தனியே  நடனமாடினால் ஆஹா ஓஹோ என்று விசிலடித்து  ரசிப்பார்கள்.

அடுத்தநாளே யூடியூப்பில் தரவேற்றுவார்கள், நண்பர்களுடன் அந்த காணொளியை பகிர்ந்து சிறு இன்பம் அடைவார்கள். 

அதையே தன்னோட மனைவி நடனமாடினால் வீட்டுக்குப்போய்  விடிய விடிய சண்டை இருக்கும்,மூன்றுநாள் பேச்சு வார்த்தை இருக்காது.

நமது சமூகத்தில் பலர் மனநிலை அதுதான் அதையே சொன்னேன்,

அப்படி நமது சமூகம் இல்லவேயில்லை என்று  நீங்கள் அடித்து சொன்னால் நீங்கள் பாதியளவு உண்மையைதான் பேசுவீர்கள் என்று அர்த்தம்.

அதைவிடுத்து அந்த பெண் பார்ட்டியில் ஆடினால்தான் எனக்கு என்ன ,இங்கே சிலர்  அவர் வேறு ஒருவருடன் ஓட தயாராயிருந்தார் என்கிறார்கள்.அப்படி அவர் ஓடிபோனால்தான்  எனக்கு என்ன ,அது அவர் சுதந்திரம்.

அதனால் என்னோட சொந்த வாழ்க்கைக்கு  எந்த ஒரு நஷ்டமும் வந்துவிடபோவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.