Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு தமிழ் மக்களுக்கு, மல்வத்து பீடாதிபதி கடும் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முல்லைத்தீவு நீராவியடி ஆலய விவகாரத்தில் பௌத்த பிக்குமார்கள் செய்ததை நியாயப்படுத்தியிருக்கும் பௌத்த மக்களின் பெருந்தலைமைத்துவங்களில் ஒன்றான மல்வத்துப்பீடம், தெற்கு சிங்கள பௌத்த மக்களை மீண்டும் கலவரத் திசைக்கு திருப்புகின்ற முயற்சியிலிருந்து வடக்கு மக்கள் விலகிக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
ஆட்சியாளர்கள் இந்த விவகாரத்தில் தலையீடு செய்து நிலைமையை தணிக்க முயற்சிக்காவிட்டால் மீண்டும் ஸ்ரீலங்கா நாட்டில் இரத்தம் சிந்தப்படுவதையோ, மக்கள் சட்டத்தைக் கையில் எடுப்பதையோ தடுக்க முடியாது என்றும் மல்வத்துப்பீடம் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கின்றது. முல்லைத்தீவு நீராவியடி ஆலய விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவையும் மீறிச் செயற்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள், தலைமை விகாரையின் பிக்கு ஒருவரது உடலை தகனம் செய்ய நடவடிக்கை எடுத்திருந்தனர்.
 
இதனால் அங்கு பெரும் பதற்றநிலை ஏற்பட்டதோடு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும் நீதிமன்ற தடையுத்தரவை மீறிச் செயற்படும் பிக்குமார்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கத் தவறினர். பிக்குமார்களின் இந்த செயற்பாட்டைக் கண்டித்து முல்லைத்தீவு மற்றும் ஏனைய தாயகப் பகுதிகளில் வேலை நிறுத்தமும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக வவுனியா மனித உரிமைகள் ஆணைக் குழுவிலும் நேற்றைய தினம் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் முல்லைத்தீவு நாயாறு பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவங்கள் குறித்து இன்றைய தினம் மல்வத்துப்பீட துணைநாயக்கர் திம்புல்கும்புரே ஸ்ரீ சரணங்கர விமலதம்மாபிதான தேரர் கருத்து வெளியிட்டிருக்கின்றார். தமிழ் மக்களின் இந்த செயற்பாடுகளை வன்மையாகக் கண்டித்து அவர் கடுமையான எச்சரிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
 
அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,
 
‘புத்தசாசனத்தில் பிக்குமார்கள் என்பவர்கள் மிகவும் கருணையாகவும், அன்பாகவும் பொறுமையாகவும் செயற்படுகின்ற பிரிவினர்களாவர். கருணையின் சாசனம் என்றே இதனை புத்தசாசனம் கூறுகிறது. இப்படிப்பட்டவர்கள் தடிகளில், பொல்லுகளிலும், கத்திகளிலும் தாக்கக்கூடியவர்கள் அல்லர். இவர்கள் மிகவும் சமாதானமாக சட்டத்தை மதித்து செயற்படுபவர்களாகிய இவர்களில் யாராவது ஒருவர் மரணமடைந்தால் அவரது புகழுடல் தகனம் செய்யப்படும்.
 
யாழ்ப்பாணம் குருநகர் விகாரையில் இது இடம்பெற்றது. 2000 ஆண்டுகளுக்கு முன் இந்த விகாரை ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்தப் பகுதியை சிலர் கபளீகரம் செய்து கோவில்களை அமைத்து புராதன இடமாக அந்த தலத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுகின்றனர். அப்படி செய்து தான் சட்டத்தை எடுத்துக்கொண்டு வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
 
அப்படியொரு சட்டம் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. வடக்கில் சட்டத்தரணிகள் வீதியில் போராட்டம், சட்டத்தை மீறிய பிக்குகளை கைது செய்ய வலியுறுத்து, தமிழரின் நிலத்தில் சிங்களக் குடியிருப்பு, விகாரைகளுக்கு அனுமதியில்லை, விகாரையானது கோவில் சம்பிரதாயங்களுக்கு பாதிப்பு என்று வடக்கிலுள்ள தமிழ் மக்கள் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றனர்.
 
இந்த நாடு, ஸ்ரீலங்கா, வடக்கு என்று புறம்பான நாடு இங்கு இல்லை. சட்டம் அனைவருக்கும் சமமானது. அப்படியிருந்தால் தான் நாடு சட்டரீதியான சிறந்த ஆட்சியை செய்ய முடியும். இந்த சட்டத்தை மாற்றியமைத்து அவர்களுக்கு தேவையான வகையில் சட்டத்தை கையிலெடுத்து செயற்படுகின்றனர். திருகோணமலையில் பிக்கு சொரூபமொன்று சேதமாக்கப்பட்டு, கீழே தள்ளிவிடப்பட்டு அழிக்கப்பட்டிருப்பதை பத்திரிகையில் கண்டேன். இப்படி சம்பவங்கள் இடம்பெறுகையில் எமது ஆட்சியாளர்கள் பதிலளிக்காமல் மௌனம் காத்துவருகின்றனர்.
 
இதனை எமக்கு பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது. முன்னரும் இதுபோன்ற சம்பவங்கள் அண்மையில் இடம்பெற்றன. ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் இவ்வாறு மௌனம் காத்து வந்தால் சட்டத்தை மக்களே கையிலெடுப்பார்கள். இதுதான் நடக்கும். ஆகவே ஆளுங்கட்சி, முப்படையினர், பொலிஸார் என்ற வகையில் சரியான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். பௌத்த தேரர்களுக்கு தாக்குதல், இடையூறுகளை ஏற்படுத்தும் போது திருப்பியடிக்க மாட்டார்கள்.
 
ஆனாலும் அமைதிகாக்கும் பௌத்த மக்கள் பொறுமையாக இருக்கமாட்டார்கள். அதனால் இது மிகப்பெரிய அழிவாகவும் கலவரமாகவும் ஆகிவிடும். இந்த நிலைமையை கருத்திற்கொண்டு ஆட்சியாளர்கள் செயற்பட வேண்டும். நான் ஒட்டுமொத்த பிக்குமார்களுக்காகவும் பேசுகின்றேன். மீண்டும் ஒருமுறை இந்த நாட்டை இரத்த ஆறாக மாற்றிவிட வேண்டாம்.
 
கட்டியிருக்கும் நாய்களை அவிழ்த்துவிட்டு ஐயோ கடிக்கிறதே என்று அலறுவதில் அர்த்தமில்லை. ஆகவே புத்திமிக்க யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மக்கள் சிந்தித்துப் பாருங்கள். அகிம்சையாக மக்களை குழப்பிவிட்டு மனங்களில் கோபத்தை ஏற்படுத்தி இந்த நாட்டை இரத்தம் சிந்துகின்ற நாடாக மாற்றவா முயற்சிக்கின்றீர்கள்? ஆட்சியாளர்கள் அச்சமின்றி சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்த நாட்டு மக்கள் மறுமடியும் சட்டத்தைக் கையிலெடுத்துவிடுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்கா சிங்கள ஆமுத்துறுவினால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதற்கு முதல் பிரதமராக இருந்தவர் சேர் ஜோன் கொத்தலாவலை, கொத்தலாவலைய அரசியலிலிருந்து அகற்றவேண்டுமென்பதற்காக பண்டா சிங்கள ஆமுத்துறுமாருடன் கைகோர்த்து அவர்களை அரசியலுக்கு நேரடியாகவே அழைத்துவந்தார் அதற்கு முன்பு பாங்ஸ்சாலைகளில் மாத்திரமே இருந்துகொண்டு உள்ளூரில் அரசியல்செய்துகொண்டிருந்த ஆமுத்துறுமார் தெருவில் இறங்கி அரசியல்செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். 

கடைசியில் ஆமுத்துறு ஒருவராலேயே பண்டா கொல்லப்பட்டார்.

அப்போது ஜோன் கொத்தலாவலை சொன்ன வார்த்தை என்னவெனில்

"நான் கட்டி வைத்திருந்த நாய்களை அவிள்த்துவிட்டதன் விளைவை இப்போ அவர்கள் அனுபவிக்கிறார்கள்" என்பதாகும்

இன்று இச்சொற்பதம் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பப்பட்டு சாதாரண உரிமைக்காகவும் வாழ்வாதரத்துக்காகவும் போராடும் தமிழர்கள் அனைவரும் நாய்கள் என இந்த ஆமுத்துறு கூறுகிறார்.

இது சுமந்திரன் சம்பந்தன் வகையறாக்கள் தூக்கிப்பிடிக்கும் நல்லிணக்க அரசாங்கத்தில் நடக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  பௌத்த  துறவி  பேசுகின்ற பேச்சா  இது??

நீ  உண்மையான  பௌத்தனாக  இருந்தால் நான்  துவக்கெடுத்திருக்கவே தேவையல்லை-தலைவர்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

ஒரு  பௌத்த  துறவி  பேசுகின்ற பேச்சா  இது??

நீ  உண்மையான  பௌத்தனாக  இருந்தால் நான்  துவக்கெடுத்திருக்கவே தேவையல்லை-தலைவர்

"ஜே ஆர் ஜெயவர்த்தனா ஒரு உண்மையான பெளத்தனாக இருந்திருந்தால் நான் துப்பாக்கியைத் தூக்கியிருக்கவேண்டியிருந்திருக்காது"

தமிழீழத் தேசியத்தலைவர் 
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்.

மதமும் மத குருமாரும்  அரசியலில் எங்கெல்லாம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ அந்த நாடுகளில் மக்கள் அமைதியான வாழ்வை இழப்பர். ஶ்ரீலங்காவில் பௌத்த தீவிரவாதம் , இந்தியாவில் இந்து தீவிரவாதம், அரபுநாடுகளில் முஸ்லீம் தீவிரவாதம் அந்த நாடுகளில் உள்ள மக்களின் அமைதியான வாழ்வை அலங்கோலப்படுத்துகிறது. கிறிஸ்தவ மத மேலாண்மை இருந்த காலங்களில் மேற்கு நாடுகளிலும் இதே நிலைமையே இருந்தது. வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட ஐரோப்பியநாடுகள் மதத்தை அரசியலில் மேலாண்மை செய்வதை அகற்றிய பின்பே அந்நாடுகள் முன்னேறறம் அடைந்தன. 

6 hours ago, tulpen said:

மதமும் மத குருமாரும்  அரசியலில் எங்கெல்லாம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ அந்த நாடுகளில் மக்கள் அமைதியான வாழ்வை இழப்பர்

முற்றிலும் உண்மை . இன்னொருவிடயம். ஐரோப்பியர்  மறுமலர்ச்சி காலத்தை அவர்கள் கடந்து வந்தவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பிக்குகளையும்,  சிங்கள அரசியல் வாதிகளையும்...  
இப்போ... குறை சொல்லி, ஒரு பிரயோசனமும் இல்லை.

புத்த  பிக்குவால்.... கொல்லப் பட்டவர்,  பண்டார நாயக்கா  எனும் பிரதமர்.
அதன், இரத்தம் காய முதல்... உலகின்  முதல் பெண் பிரதராமராக, 
குசினிக்குள் நின்ற,   அவரின்  மனைவி,  சிறீமாவோ  வருகின்றார்.
அதற்குப் பிறகு... 50 ஆண்டுகளாக  தமிழனுக்கு,  போராட்டம் தான்.

இதை... தட்டிக் கேட்ட,  புலிகளையும்.... காட்டிக் கொடுத்து,
இன்பம் காணும், இனம் எம் இனம்.

சம்பந்தன், சுமந்திரன்.... போன்ற  கீழ்த்தரமான அரசியல் வாதிகளை, 
தமிழ் மக்கள், தேர்ந்தெடுத்ததால்....  எமது வாழ்வு,
உய்ய.. முடியாத நிலைமைக்கு போய் விட்டது. 😥

ஸ்ரீலங்காவில் உள்ள சிங்கள-பௌத்த பிக்குகளில் 90% க்கு அதிகமானவர்கள் காடையர்களும் கயவர்களும் தான். அதனால் தான் அவர்களால் இனமதவெறி கொண்ட சிங்கள-பௌத்த பயங்கரவாதத்தை முன்னெடுப்பதைத் தவிர வேறொன்றையும் செய்ய வக்கில்லாமல் உள்ளார்கள்.

ஸ்ரீலங்காவில் உள்ள சிங்கள-பௌத்த இனமதவெறிப் பயங்கரவாதங்களின் தலைமைப் பீடங்களில் தற்போதுள்ள மலவத்தை பீட பிக்குகள் மிகமிக மோசமான பயங்கரவாதிகளாக உள்ளதை அவர்களின் கடந்த 2 வருட அறிக்கைகள் தெளிவாக காட்டுகின்றன.

ஸ்ரீலங்காவில் உள்ள இந்த சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பல்கள் முற்றுமுழுதாக இல்லாதொழிக்கப்படும் வரை இங்கு அமைதி, நீதி, தர்மம் நிலைக்க எள்ளளவும் சந்தர்ப்பம் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.