Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைப்பு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முயற்சியில் முன்னேற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைப்பு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முயற்சியில் முன்னேற்றம்

தமிழ் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைப்பு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முயற்சியில் முன்னேற்றம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை ஒரே குரலில் வெளிப்படுத்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட முயற்சியில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.அதற்கமைய யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் இந்த முயற்சியின் மூன்றாவது சந்திப்பு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பொது அறையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.இந்நிலையில் பொது இணக்கப்பாட்டில் ஒப்பமிடும் வகையில் அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்கள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் கூடி உடன்படிக்கையில் ஒப்பமிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் வலி வடக்கு பிரதேச சபையின் தலைவர் சோ.சுகிர்தன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் சட்டத்தரணி சுகாஸ் கனகரட்ணம், தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் க.அருந்தவபாலன், புளொட் சார்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ இயக்கத்தின் சார்பில் அதன் செயலாளர் நாயகமும் மூத்த சட்டத்தரணியுமான என்.சிறிகாந்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனியினர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கும் நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தமிழர் தரப்பு கோரிக்கைகளுக்கு பிரதான வேட்பாளர்கள் இணங்கிவருவார்கள் என்ற நிலை தோன்றினாலொழிய தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனி சார்பில் சந்திப்பில் கலந்துகொண்ட சட்டத்தரணி சுகாஸ் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியப் பாதையில் பயணிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஓரணியில் திரட்டி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவான நிலைப்பாடொன்றை மெற்கொள்ளும் நோக்கில் கடந்த வாரம் முதல் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சந்திப்புகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் பங்குபற்றிய 6 கட்சிகளும் பொது இணக்கப்பாடொன்றுக்கு வரும் ஏது நிலைகள் தோன்றியிருப்பதாக கட்சிப்பிரமுகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.பொது இணக்கப்பாட்டு ஒப்பந்தத்துக்கு அமைவாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமும் அவர்களின் பின்புலத்தில் இயங்கும் வல்லரசுகளிடமும் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளதாக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.(15)

 

 

http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்-அரசியல்-கட்சிகள்-ஒ/

தமிழ்த் தேசியப் பாதையில் பயணிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஓரணியில் திரட்டி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவான நிலைப்பாடொன்றை மெற்கொள்ளும் நோக்கில் கடந்த வாரம் முதல் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சந்திப்புகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் முயற்சிக்கு நன்றிகள். காலத்தின் தேவை. இந்த தமிழ் அரசியல் பூனைகளை இணைத்து கூட்டம் கூட்டியதே வெற்றி தான். 

கிழக்கு பல்கலை மாணவர்களையும் இணைத்து பயணித்தால் நன்று. 

5 hours ago, கிருபன் said:

இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனியினர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கும் நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தமிழர் தரப்பு கோரிக்கைகளுக்கு பிரதான வேட்பாளர்கள் இணங்கிவருவார்கள் என்ற நிலை தோன்றினாலொழிய தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனி சார்பில் சந்திப்பில் கலந்துகொண்ட சட்டத்தரணி சுகாஸ் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வழமை போல் புறக்கணிப்பு பற்றி கதைக்கிறது.

4 hours ago, Lara said:

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வழமை போல் புறக்கணிப்பு பற்றி கதைக்கிறது.

மாணவர்கள் முயற்சி வெற்றியடைந்தால், தமிழர்களின் அரசியல் பலம் கணிசமாக அதிகரிக்கும் என்பதை  பாமரர்களும் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.

இந்த சந்திப்புகளில் கலந்துகொண்டபடியே தான்தோன்றித்தனமான அறிக்கைகளை விடும் கயவர்கள் கும்பலாக கஜேந்திரகுமார் கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால் கஜேந்திரகுமார் கும்பல் எட்டப்பர்களைவிட மோசமானவர்களாக கணிக்கப்படும் நிலை வெகுதூரத்தில் இல்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

33 minutes ago, போல் said:

மாணவர்கள் முயற்சி வெற்றியடைந்தால், தமிழர்களின் அரசியல் பலம் கணிசமாக அதிகரிக்கும் என்பதை  பாமரர்களும் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.

இந்த சந்திப்புகளில் கலந்துகொண்டபடியே தான்தோன்றித்தனமான அறிக்கைகளை விடும் கயவர்கள் கும்பலாக கஜேந்திரகுமார் கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால் கஜேந்திரகுமார் கும்பல் எட்டப்பர்களைவிட மோசமானவர்களாக கணிக்கப்படும் நிலை வெகுதூரத்தில் இல்லை.

 

அப்ப அடுத்த சிறிலங்கா அதிபர் தமிழரா? 😂

4 minutes ago, Justin said:

அப்ப அடுத்த சிறிலங்கா அதிபர் தமிழரா? 😂

உங்கள் அரசியல் அறிவை மிகத் தெளிவாக உணர்த்தும் கேள்வி!

அதனால் தான் பலர் இதுபோன்ற உப்புச்சப்பற்ற வெங்காயக் கேள்விகளுக்கு பதில் அளிப்பதில்லை!  

 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

அப்ப அடுத்த சிறிலங்கா அதிபர் தமிழரா? 😂

தமிழரின் ஒற்றுமையையும், பலத்தையும்....காட்டத்தான்  இந்த ஒருங்கிணைப்பு முயற்சியில்,
யாழ். பல்கலைக்கழக  மாணவர்கள் ஈடு படுகின்றார்களே தவிர, 
ஸ்ரீலங்காவின்.... ஜனாதிபதியாக தமிழர் வரப்  போகின்றார் என்று,
ஒருவருமே... கனவு காணவில்லை.  :grin:

அப்படியான... பதவியும், தமிழருக்கு தேவையில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

 

16 minutes ago, போல் said:

உங்கள் அரசியல் அறிவை மிகத் தெளிவாக உணர்த்தும் கேள்வி!

அதனால் தான் பலர் இதுபோன்ற உப்புச்சப்பற்ற வெங்காயக் கேள்விகளுக்கு பதில் அளிப்பதில்லை!  

 

போலர், சிங்கள பௌத்தரல்லாதவர் அதிபராக முடியாத நாடு பற்றி இலங்கையில் ஒன்பதாம் ஆண்டு படித்த யாருக்கும் தெரியும்!

ஆனால், என் கேள்விகள் வெங்காயக் கேள்விகள் என்பதால் தான் நீங்கள் பதில் சொல்லாமல் ஒளித்துக் கொள்கிறீர்கள் என்பதை யாழ் வாசிகள் நம்புகின்றனர்!😎  கவலை வேண்டாம்!

3 minutes ago, Justin said:

போலர், சிங்கள பௌத்தரல்லாதவர் அதிபராக முடியாத நாடு பற்றி இலங்கையில் ஒன்பதாம் ஆண்டு படித்த யாருக்கும் தெரியும்!

நீங்கள் ஒன்பதாம் ஆண்டு கூட தாண்டவில்லை என்று அந்தக் கேள்வி மூலம் உணர்த்தியதை யாரும் இனி மறக்கவே மாட்டார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

 

45 minutes ago, போல் said:

நீங்கள் ஒன்பதாம் ஆண்டு கூட தாண்டவில்லை என்று அந்தக் கேள்வி மூலம் உணர்த்தியதை யாரும் இனி மறக்கவே மாட்டார்கள்!

நான் ஒன்பதாம் ஆண்டு தாண்டவில்லை என்பது உங்களை அறிவாளியாக உணரவைக்கிறதெனில் நான் மகிழ்ச்சியோடு ஒன்பது தாண்டவில்லை என்றே ஏற்றுக் கொள்கிறேன்! சந்தோசமா? 😎

1 minute ago, Justin said:

நான் ஒன்பதாம் ஆண்டு தாண்டவில்லை என்பது உங்களை அறிவாளியாக உணரவைக்கிறதெனில் நான் மகிழ்ச்சியோடு ஒன்பது தாண்டவில்லை என்றே ஏற்றுக் கொள்கிறேன்! சந்தோசமா? 😎

மற்றவர்களை சந்தோசப்படுத்த எழுதும் உங்கள் இயல்பை மாற்றி நீங்கள் நீங்களாகவே இருக்க முயற்சி செய்யுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

 

Just now, போல் said:

மற்றவர்களை சந்தோசப்படுத்த எழுதும் உங்கள் இயல்பை மாற்றி நீங்கள் நீங்களாகவே இருக்க முயற்சி செய்யுங்கள்!

போலர், நான் நானாகத் தான் இருக்கிறேன்! ஆனால், வேறெந்த வழியில் உங்கள் போன்றோரின் அறிவைப் பிரகாசமாகக் காட்ட இயலும்? அது தான் altruistic இந்த செயல்! கூச்சப் படாமல் எடுத்துக் கொண்டு நகருங்கள்🤗

  • கருத்துக்கள உறவுகள்

09cp_thiruvilayadal.jpg

13 minutes ago, Justin said:

போலர், நான் நானாகத் தான் இருக்கிறேன்!

நிமிடத்துக்கு நிமிடம் பல்டி அடிப்பதுவும் திரும்பத் திரும்ப பொய் சொல்லுவதும் உங்கள் இயல்புகளில் அடக்கம் என்கிறீர்கள்! அதனால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை!

 கூச்சப்படாமல் உங்கள் இயல்புகளுடன் நகருங்கள்!

பின்னர், " உப்புத்தின்றவர் தண்ணி குடித்தாக வேண்டும்"  என முடித்துவிடுவார்கள் 😎

நில், கவனி, விலத்தி போ  !

தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து எடுத்துள்ள அதிரடி முடிவு!

ஸ்ரீலங்காவில் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் கூட்டாக இணைந்து முன்வைப்பதற்கான இணக்கப்பாடு எட்டப்படும் என்ற நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் (ஒக்டோபர் 10 ) மூன்றாவது தடவையாக தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது 6 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்த நிலையில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கின்றது.

இதற்கமைய ஒக்டோபர் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பொது இணக்கப்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் இந்த கட்சிகள் கைச்சாத்திட உள்ளதுடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களிடமும், வெளிநாட்டு துாதரகங்களிடமும் தமிழர் தரப்பின் கோரிக்கைகளை கூட்டாக முன்வைத்து பேரம் பேசுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியத்திற்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்துவரும் தமிழ் அரசியல் கட்சிகளை ஓரணியில் திரட்டி ஸ்ரீலங்காவில் இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுவான நிலைப்பாடொன்றுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியிருக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், அதற்காக ஏற்பாடுசெய்துள்ள கலந்துரையாடல்களின் 3 ஆவது சந்திப்பு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பொது அறையில் நேற்று மாலை இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் வலி வடக்கு பிரதேச சபையின் தலைவர் சோ. சுகிர்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் சட்டத்தரணி சுகாஸ் கனகரட்ணம், தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் க. அருந்தவபாலன், புளொட் சார்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், ஈ.பி.ஆர்.எல்.எஃவ் சார்பில் அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ சார்பில் அதன் செயலாளர் நாயகம் சட்டத்தரணிஎன். சிறீகாந்தா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

சந்திப்பை முடித்து வெளியேறிய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்ட ஆறு கட்சிகளும் பொது இணக்கப்பாடொன்றுக்கு வரும் ஏது நிலைகள் தோன்றியிருப்பதாக தெரிவித்தனர்.

தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அமைய தமிழர் தரப்பின் பொதுவான கோரிக்கைகளை உள்ளடக்கிய இறுதி ஆவணம் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய எதிர்வரும் 13 ஆம் திகதி கட்சி தலைவர்கள் குறித்த ஆவணத்தில் கையொப்பம் இடுவார்கள் என்றும் சந்திப்பில் கலந்து கொண்ட கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

https://www.ibctamil.com/srilanka/80/129362?ref=rightsidebar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் இன்று பொது இணக்கப்பாடு எட்டப்படும் சாத்தியம்

Oct 13, 20190

 
 

தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் இன்று பொது இணக்கப்பாடு எட்டப்படும் சாத்தியம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நேற்று மூன்றாவது தடவையாக இடம்பெற்ற சந்திப்பின் போது 6 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் கூட்டாக இணைந்து முன்வைப்பதற்கான இணக்கப்பாடு எட்டப்படும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அமைய தமிழர் தரப்பின் பொதுவான கோரிக்கைகளை உள்ளடக்கிய இறுதி ஆவணம் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய இன்று கட்சி தலைவர்கள் குறித்த ஆவணத்தில் கையொப்பம் இடுவார்கள் என்றும் சந்திப்பில் கலந்து கொண்ட கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் வலி வடக்கு பிரதேச சபையின் தலைவர் சோ. சுகிர்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் சட்டத்தரணி சுகாஸ் கனகரட்ணம், தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் க. அருந்தவபாலன், புளொட் சார்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், ஈ.பி.ஆர்.எல்.எஃவ் சார்பில் அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ சார்பில் அதன் செயலாளர் நாயகம் சட்டத்தரணிஎன். சிறீகாந்தா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதற்கமைய இன்று பொது இணக்கப்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் இந்த கட்சிகள் கைச்சாத்திட உள்ளதுடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களிடமும், வெளிநாட்டு துாதரகங்களிடமும் தமிழர் தரப்பின் கோரிக்கைகளை கூட்டாக முன்வைத்து பேரம் பேசுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்-அரசியல்-கட்சிகளுக்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.