Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஷி ஜின்பிங்கை மாமல்லபுரத்தில் வரவேற்றார் மோதி - தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் பிரதமர்

Featured Replies

மோதி - ஷி

படத்தின் காப்புரிமை ANI

 

மாலை 5 மணி அளவில், மாமல்லபுரத்தை சென்றடைந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வரவேற்றார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையை அணிந்திருந்தார் பிரதமர் மோதி.

இந்தியப் பிரதமருடன் இணைந்து அங்குள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிடவிருக்கிறார் சீன அதிபர். இந்தத் தருணத்தில் இரு தலைவர்களுடனும் வரும் தூதுக் குழுவினர் சற்றுத் தூரத்திலேயே இருப்பார்கள்.

இது இந்தாண்டில் பிரதமர் மோதியும், சீன அதிபர் ஜின்பிங்கும் இரண்டாவது முறையாக சந்தித்து கொள்கிறார்கள்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் பக்கத்தில், "கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்."

மேலும் பிரதமர் நரேந்திர மோதியின் ட்விட்டர் பக்கத்தில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-50016032

  • தொடங்கியவர்

மாமல்லபுரம் புராதான சிற்பங்கள் குறித்து சீன அதிபருக்கு ஜி ஜின்பிங்கிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி

சென்னை: மாமல்லபுரம் சிற்பங்களின் பெருமையை சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைக்கிறார். பிரதமர் மோடி, சீன  அதிபர் ஜின்பிங் ஆகியோர் இன்றும், நாளையும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பின்போது,  பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்  ஆகியோர் இந்திய - சீன எல்லை பிரச்னை, இரு நாட்டு வர்த்தம், தீவிரவாதம் ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கிறார்கள்.  இதையொட்டி சென்னை, மாமல்லபுரம் பகுதிகள் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரு தலைவர்கள்:

இந்நிலையில், இன்று மதியம் 12.30 மணி அளவில் பிரதமர் நரேந்திரமோடி சென்னை விமான நிலையம் வருகை தந்தார். அவரை தமிழக முதல்வர்   எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் உள்பட முக்கிய பிரமுகர்கள் நேரில் வரவேற்றனர். இதையடுத்து பிரதமர் மோடி   ஹெலிகாப்டர் மூலம் கோவளம் புறப்பட்டு சென்றார். இதன்பின்னர், மதியம் 1.30 மணிஅளவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தனி விமானத்தில் சென்னை   வந்திறங்கினார். அவருக்கு தமிழக பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சீனாவில் இருந்து பிரத்யேகமாக   வரவழைக்கப்பட்ட காரில் கிண்டியில் உள்ள ஐடிசி ஓட்டலுக்கு அதிபர் ஜி ஜின்பிங் புறப்பட்டு சென்றார்.

புராதான சிறபங்களை பார்வையிட்ட இரு தலைவர்கள்:

கிண்டி ஐடிசி ஓட்டலில் இருந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் மாலை 4 மணியளவில் புறப்பட்டு சென்றார். தொடர்ந்து பிரதமர் மோடியும் கோவளத்தில்   இருந்து மாமல்லபுரத்திற்கு சென்றார். மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி தமிழக பாரம்பரிய உடையான வேட்டி,  சட்டை, தோளில் துண்டு அணிந்து வரவேற்றார். தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்களும் சுற்றி பார்த்தபடி சந்தித்து பேசினர். முதலில் அர்ஜூனன் தபசு  என்ற இடத்தில் பார்வையிட்டனர். அர்ஜூனன் தபசு பெருமைகள் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.  மேலும், இருவரும் அர்ஜூனன் தபசு முன்புறம் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

தொடர்ச்சியாக, வெண்ணெய் உருண்டை கல்லிலை பார்வையிட்டனர். அப்போது, வெண்ணெய் உருண்டை கல்லின் தனித்துவத்தை பிரதமர் மோடி சீன  அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எடுத்துரைத்தார். மேலும், வெண்ணெய் உருண்டை கல் முன்புறம் இருவரும் கை உயர்த்தி புகைப்படம் எடுத்தனர். தொடர்ந்து, ஐந்து ரதங்களின் சிற்பங்களை கண்டு களித்து வருகின்றனர். கடற்கரை கோவிலுக்கு சென்றும் பார்வையிட உள்ளனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=532666

 

 
 
EGmLJv2UEAE03Ke.jpg:large
Previous
 

View image on Twitter

  • தொடங்கியவர்

அடுத்த தேர்தல்களில் தமிழகத்தில் வாக்குப்பெற மோடி வேட்டி சால்வை அணிந்தாரா? இல்லை உண்மையிலேயே தமிழக மக்களுக்கு மரியாதை கொடுத்தாரா? இதை நெட்டிசன்கள் வறுத்து எடுப்பர்.

எனது கருத்து வாக்கு வங்கியே இதன் குறி. காரணம், தமிழகம் தமிழ் வளர உடுப்பு இல்லை தேவை, செயல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

என்னடா பாதுகாப்பு குடுக்குறிங்க நாய்யெல்லாம் குறுக்கால ஓடுது....:cool:

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் வேட்டிய மடிச்சு கட்ட சொல்லி தாங்கப்பா..☺️

Dhoni_Prabhudeva_veshti-screenshot-300x2

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

Bild

என்னடா பாதுகாப்பு குடுக்குறிங்க நாய்யெல்லாம் குறுக்கால ஓடுது....:cool:

உஸ்ஸ் இது மோப்ப நாயுங்கோ.

EGmGg4KUcAEFblV?format=jpg&name=small

இரண்டு பேரும் நிற்கிற கம்பளத்தைப் பார்த்தா யாருடைய வீட்டு வாசலில் போடப்பட்டிருந்தது போல இருக்கு.

சரி விரலுக்கேற்ற வீக்கம்.

EGmLJv2UEAE03Ke.jpg:large

தமிழ்நாட்டில் செவ்விளநீர் இல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

Bild

என்னடா பாதுகாப்பு குடுக்குறிங்க நாய்யெல்லாம் குறுக்கால ஓடுது....:cool:

என்னதான் இருந்தாலும் அவர் பாரதப் பிரதமர் 😂

  • தொடங்கியவர்

மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு: இளநீர் பருகியது முதல் கலை நிகழ்ச்சிகள் வரை - புகைப்படத் தொகுப்பு

சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் இறங்கிய சீன அதிபர் ஷி ஜின்பிங்படத்தின் காப்புரிமை NARENDRA MODI / TWITTER Image caption சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று மதியம் சென்னை விமான நிலையம் வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழக ஆளுநர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.படத்தின் காப்புரிமை Twitter Image caption இன்று மதியம் சென்னை விமான நிலையம் வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழக ஆளுநர் உள்ளிட்டோர் வரவேற்றனர். விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த சீன அதிபர்படத்தின் காப்புரிமை RAVEESH KUMAR / TWITTER Image caption விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த சீன அதிபர் விமான நிலையத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிபடத்தின் காப்புரிமை RAVEESH KUMAR / TWITTER Image caption விமான நிலையத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் சீன அதிபரை வரவேற்ற பிரதமர் மோதிபடத்தின் காப்புரிமை ANI Image caption மாமல்லபுரத்தில் சீன அதிபரை வரவேற்ற பிரதமர் மோதி சிற்பங்கள் குறித்து சீன அதிபருக்கு விளக்குகிறார் இந்திய பிரதமர்படத்தின் காப்புரிமை RAVEESH KUMAR / TWITTER Image caption சிற்பங்கள் குறித்து சீன அதிபருக்கு விளக்குகிறார் இந்திய பிரதமர் இருநாட்டுத் தலைவர்களும் இளநீர் பருகுகிறார்கள்படத்தின் காப்புரிமை RAVEESH KUMAR / TWITTER Image caption இருநாட்டுத் தலைவர்களும் இளநீர் பருகுகிறார்கள் இன்று மாலை மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் குறித்து அவருக்கு விளக்கினார்.படத்தின் காப்புரிமை Twitter Image caption இன்று மாலை மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் குறித்து அவருக்கு விளக்கினார். கடற்கரை கோயிலில் மோதி - ஜின்பிங்படத்தின் காப்புரிமை RAVEESH KUMAR / TWITTER Image caption கடற்கரை கோயிலில் மோதி - ஜின்பிங் மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே நடந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை இருநாட்டு தலைவர்களும் கண்டு களித்தனர்.படத்தின் காப்புரிமை ANI Image caption மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே நடந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை இருநாட்டு தலைவர்களும் கண்டு களித்தனர். மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு: இன்று நடந்தது என்ன?படத்தின் காப்புரிமை ANI மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு: இன்று நடந்தது என்ன?படத்தின்

https://www.bbc.com/tamil/india-50018951

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாலை மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் குறித்து அவருக்கு விளக்கினார்.

அரசியலுக்கு அப்பால்... உலகின் முக்கிய தலைவரான,  சீனப் பிரதமரை...
இந்தியப்  பிரதமர் நரேந்திர மோடி, வேட்டி  சால்வையுடன்... 
தமிழ் நாட்டில்  வரவேற்கும்  படங்கள் அழகாக இருந்தன. :)

1956´ம் ஆண்டு..சீனப்  பிரதமாராக இருந்த....
சூ  என்லாயும், நேருவும்... தமிழ் நாட்டில்தான்...
சந்தித்தவர்கள் என்று,  ஒரு காணொளியில் பார்த்தேன். 

பிற் குறிப்பு:  பிரதமர்  மோடி.. காவி சால்வை போடாமல், 
கறுப்பு  சால்வை போட்டுக் கொண்டு வந்ததிலும்...  😎
நிறைய காரணங்கள் உண்டு என்பதை... மறுப்பதற்கில்லை. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு போய் இமாச்சல எல்லையோரம் உங்களுக்கு ரத்த பொரியல் செய்து தருவார்..☺️

71937694_2985126268216228_30948947127047

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

குவார்ட்டர் பாட்டிலை கையில் எடுத்த பிரதமர்.. அதிர்ந்த அதிகாரிகள்.. கோவளம் பீச்சா இது.. ரொம்ப கேவலம்!

modi935657-1570862415.jpg

சென்னை: கையில் குவார்ட்டர் பாட்டிலை, மோடி கையில் எடுத்ததுமே கோவளம் பீச்சில் இருந்த அதிகாரிகளுக்கு அள்ளு கிளம்பிவிட்டது!நம்ம இடத்தை நாம தான் சுத்தமா வெச்சிக்கணும் என்பது இயல்பான, அவசியமான விஷயம். ஆனால் இதற்குகூட மத்திய அரசு தூய்மை இந்தியா என்ற திட்டத்தை கொண்டு வந்ததே மக்களுக்கு ஒருவகையில் அசிங்கம்தான். ஆனால், அதையும் கடைப்பிடிக்காதது அதைவிட அசிங்கமாக உள்ளது.

அப்படித்தான் இன்றைக்கு கோவளம் பீச்சில் அசிங்கப்பட்டு நிற்கிறோம். கோவளத்தில் பிரதமர் மோடி தங்கியுள்ளதால், இங்குள்ள பீச்சில் இன்று காலை வாக்கிங் சென்றார்.கையில் கிளவுஸ் இல்லை..

லட்சணம்

பீச் தானே.. எப்படியும் சுத்தமான மணலில் காலாற நடக்கலாம் என்று நினைத்திருப்பார் போலும். அதனால்தான் கையில் கிளவுஸ், காலில் செருப்புகூட இல்லாமல் நம்பி காலை வைத்திருக்கிறார். ஆனால், சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தபோதுதான், நம்ம ஆட்கள் செய்து வைத்த லட்சணம் அங்கே தெரிந்தது. மணல் முழுக்க பரவி கிடந்த குப்பைகளை அள்ள ஆரம்பித்தார். முக்கால்பாகம் பிளாஸ்டிக் குப்பைகள்தான்.. அங்கங்கே மது பாட்டில்களும் விழுந்து கிடந்தன.

குவார்ட்டர் பாட்டில்

நம் ஆட்கள் பீச்சில் கும்மாளமிடுவது, அங்கேயே உட்கார்ந்து குடித்துவிட்டு, குப்பைகளையும் போட்டுவிட்டு, வெட்கமே இல்லாமல் சென்றிருப்பதுதான், காலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த பாட்டிலையும் பிரதமர் கையிலேயே எடுத்து கவருக்குள் போடுகிறார். கையில் குவார்ட்டர் பாட்டிலை கூச்சமே இல்லாமல் ஒரு பிரதமர் எடுப்பதை பார்த்துமே அங்கிருந்த அதிகாரிகளுக்கு தூக்கி வாரிப்போட்டது.

இதற்கு என்ன பதிலும் சொல்ல முடியாமல் விழித்து கொண்டு அதிர்ந்து நின்றனர். ஐநாவில் முழக்கம் ஐநாவில் முழக்கம் ஐநாவில் முழக்கம் ஆனால், பிரதமர் எதையுமே முகத்தில் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்பது மோடியின் முக்கிய பிரச்சாரங்களில் ஒன்று.

அது மட்டுமில்லை.. இந்த பிரச்சாரத்தை ஐநா பொதுக்குழு கூட்டத்திலும் மோடி முன் வைத்திருந்தார். மதிப்பீடுகள் மதிப்பீடுகள் ஆனால் காலையில் 30 நிமிடத்துக்கு இந்த பிளாஸ்டிக்கை அள்ளியபோது நம்மை பற்றி என்ன நினைத்திருப்பாரோ தெரியவில்லை. குவார்ட்டர் பாட்டிலை கையில் எடுக்கும்போதும் நம் மீதான மதிப்பீடுகள் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்தாலே மகா வெட்கமாகவும், கேவலமாகவும் இருக்கிறது.

முன்வருவார்களா?

இனியாவது கடற்கரையை நம் குடிமகன்கள் திறந்த வெளி பாராக பயன்படுத்தாமல் தடுப்பார்களா? கொஞ்சமாவது தூய்மையை கடைப்பிடிக்க முன்வருவார்களா? பிளாஸ்டிக் உபயோகிப்பதை தவிர்க்க மக்கள் மனசார நினைப்பார்களா?

https://tamil.oneindia.com/news/chennai/pm-modi-removes-debris-from-kovalam-beach-today-365407.html

டிஸ்கி:

டாஸ்மார்க்குக்கு ஆப்பு வைப்பாரா..?  பிரதமர் 👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.