Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் ஜனாதிபதித்தேர்தலை புறக்கணிக்கக்கூடாது! பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிப்பு!!

Featured Replies

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஒரே நிலைப்பாட்டில் ஒன்றிணைந்து செயற்படும் நோக்கில் தமிழ் தேசிய பரப்பிலுள்ள ஐந்து கட்சிகளும் இன்று கூடி கலந்துரையாடினோம்.

எனினும் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவராத நிலையில் நாளைய தினம் ஆரம்பமாகும் தபால்மூல வாக்களிப்பில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு தாம் தமிழ் மக்களை கோர முடியாதுள்ளதாக மாணவர் ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது.

எனினும் தமிழ் மக்கள் தமது வாக்குரிமையை தவறாது பிரயோகிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.

யாழ் மற்றும் கிழக்கு பல்கலை மாணவர்களின் தொடர் முயற்சியால் கொள்கையில் ஒன்றாக பயணிக்கும் ஐந்து தமிழ்கட்சிகள் இன்று 30.10.2019 புதன்கிழமை மாலை 4.00மணிக்கு யாழ்பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள "ப்றைட் இன் "விடுதியில் கலந்துரையாடலை நடத்தினர்.

இக்கலந்துரையாடலில் தமிழ்மக்கள் கூட்டணி சார்பில் கொள்கை பரப்புரை செயலாளர் க.அருந்தவபாலன் , ரெலோ சார்பில் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்மற்றும் சிறிகாந்தா, EPRLF கட்சியின் தலைவர் சுரேஸ்பிறேமச்சந்திரன், அவரோடு சிவசக்தி ஆனந்தன் ,தமிழரசு கட்சியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா , நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் செயலாளர் தி. துரைராஜசிங்கம் வடமாகாணசபை அவைத் தலைவரும் தமிழரசு கட்சி உறுப்பினருமான சிவஞானம் ,புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் , ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

https://www.ibctamil.com/srilanka/80/130357?ref=imp-news

எனினும் தமிழ் மக்கள் தமது வாக்குரிமையை தவறாது பிரயோகிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.

 

யாருக்கு என்று சொல்லாவிட்டாலும், நிச்சயம் தபால் மூலம் வாக்களிக்கும் மக்களுக்கு மாணவர்கள் கூறி உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. 

தமிழர் அரசியல் தலைமைகள் இவர்களிடம் இருந்து பாடம் கற்பாளர்களாக !

இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் மாணவர்களின் முயற்சி மற்றும் வழிகாட்டல் இதுவரை மிகவும் விவேகமானதாக இருந்துள்ளது.

காலத்துக்கு காலம் சூழ்நிலைகள்,தேவைகள் வேறுபடுவதுண்டு!

தமிழ் கட்சிகள் 5 ஒன்றிணைந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. சிங்கள-பௌத்த கொலைகாரக் கட்சிகள் இன்றுவரை நியாயமான அந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே 5 கட்சிகள் பகிஷ்கரிப்பு / புறக்கணிப்பு பயனற்றது என ஒருமித்து கருதுகின்றன.  

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நிலையில் சில பிற்போக்கு / மோட்டு / அடிமை மனோநிலையில் உள்ள சிலரால் மட்டுமே  திட்டமிட்ட தமிழினவழிப்பை கடந்த 70 வருடங்களாக செய்துவரும் பேரினவாதிகளில் ஒருவற்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்  அல்லது பகிஷ்கரிக்க வேண்டும் என்று புலம்பி வருகின்றனர்.

அதிலும் கையாலாகாத சம்மந்தன், சுமந்திரன், மாவை வகையறாக்களும் இவர்களின் விசிறிகளும் சிங்கள-பௌத்த கொலைகாரக் கட்சிகளில் ஒன்றான ஐ.தே. கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நப்பாசையில் காலத்தைக் கடத்துகின்றனர்.

இந்தப் பின்னணியில் ஜனநாயக உரிமையான வாக்களிப்பை இம்முறை தமிழ் மக்கள் முடிந்தளவு பயன்படுத்துவதும் தமிழ் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்பதுவும் அவசியமானதாக கருதப்படுகிறது.

9 hours ago, Rajesh said:

எனினும் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவராத நிலையில் நாளைய தினம் ஆரம்பமாகும் தபால்மூல வாக்களிப்பில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு தாம் தமிழ் மக்களை கோர முடியாதுள்ளதாக மாணவர் ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது.

எனினும் தமிழ் மக்கள் தமது வாக்குரிமையை தவறாது பிரயோகிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மக்களே சஜித்துக்கு வாக்களியுங்கள்.

மக்களே சிவாஜிலிங்கத்துக்கு வாக்களியுங்கள்.

இன்றைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர் கோரிக்கைகளை ஏற்காத சஜித்துக்கு தப்பித் தவறியும் வாக்களித்து விடாதேங்கோ

3 hours ago, Gowin said:

மக்களே சிவாஜிலிங்கத்துக்கு வாக்களியுங்கள்.

 

இதன் மூலம் கோத்தா + மகிந்த + சவீந்திர சில்வா கூட்டினை வெற்றியடையச் செய்யுங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.