Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Death-720x450.jpg

யாழ். பல்கலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையிலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பீட 4ஆம் வருட மாணவனான மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மாணவன் தூக்கிட்டு இரண்டு நாட்கள் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தற்கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

http://athavannews.com/யாழ்-பல்கலை-மாணவன்-தூக்க/

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மருத்துவ பீட மாணவனே தூக்கிட்டு தற்கொலை செய்யும் அளவு உந்தப் பல்கலைக்கழகம் மாணவர்களின் உடல்.. மன.. சமூக நலன் குறித்த எந்த அக்கறையும் இன்றி செயற்படுகிறது என்பதையே இது காட்டி நிற்கிறது.

காலத்துக்கு காலம் இப்படியான நிகழ்வுகள் நடக்கின்ற போதும்.. கடந்த காலப்படிப்பினைகளைக் கொண்டு இவற்றை தடுக்க ஒரு பல்கலைக்கழக சமூகத்தால் கூட முடியவில்லை எனும் போது இவர்களின் கல்வியின் தரம் எவ்வளவுக்கு சமூகப் பயனுள்ளதாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது..??! 

இம்மாணவன் மன்னார் மாவட்டத்தில் முதலாவதாக வந்த மாணவனாம்.

இவருக்கு மனநல பிரச்சினைகள் இருந்ததாகவும் அதற்கான treatment இல் இருந்ததாகவும் அதை முறையாக பின்பற்றவில்லை எனவும் கூறுகிறார்கள்.

மருத்துவ பீட நிர்வாகம் போதிய attendance இல்லாததால் semester exams இற்கு அனுமதிக்காததை அடுத்து ஏற்பட்ட மன அழுத்தத்தில் தற்கொலை செய்துள்ளாராம்.

Edited by Lara

5 hours ago, Lara said:

இவருக்கு மனநல பிரச்சினைகள் இருந்ததாகவும் அதற்கான treatment இல் இருந்ததாகவும் அதை முறையாக பின்பற்றவில்லை எனவும் கூறுகிறார்கள்.

அமரிக்கா பிரிட்டன் வெள்ளையள் மூன்றாம் உலக நாடுகளில் குற்றங்களில் ஈடுபட்டு அந்த நாடுகளில் கைதுசெய்யப்பட்டால்  அந்த நாட்டு அதிகாரங்கள் முதலில் சொல்வது அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதுதான். அதேபோல் தான் உள்ளது நீங்கள் மேலே கூறுவது. 

போராட்ட காலத்துக்கு முன்னரும் சரி போரின் முடிவுக்கு பின்னரும் சரி தற்கொலை செய்தவர்களின் பட்டியல் மிக நீளமானது. யாழ் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் மட்டும் தான் இந்த ஈனத்தனங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. 

சாதிய பிரதேசவாத வர்க்க ஏற்றதாழ்வுகளின் சமநிலை நோக்கிய ஓட்டப்பந்தயம் நடக்கும் இறுதி குத்துச் சண்டை மைதானங்கள் இரண்டு. ஒன்று பல்கலைக்கழகம் மற்றயது நல்லுர்.  நிலுவையில் இருககும் இவ்வாறான  எற்றதாழ்வுகளை கல்வியில் மேம்பட்ட ஒரு அடயளத்தால் சரிசெய்ய முனைவதும் மதம் காலாச்சாரம் புனிதம் என்று நல்லூரை சுற்றி புரண்டு உருண்டு சரிசெய்ய முனைவதும் தொன்று தொட்டு நடக்கும் நிகழ்வுகள். இந்த இரண்டு குத்துச் சண்டை மைதானங்களும் எப்போதும் பேரினவாதத்துடடன் நட்புடனே இருக்கும். அரசியல் அரச உத்தியோகம் ஆழுவோருடனான உறவு எப்போதும் வலுவாக இருக்கும். அதே நேரம் முள்ளிவாய்க்காலில் விளக்கேத்தவும் முனைவார்கள். இவர்களும் சட்டையை கழட்டி நல்லூரை சுற்றி புரளுவார்கள் ரணிலும் பொன்சேகாவும் சட்டையை கழட்டிப்போட்டு வருவார்கள்.கெலியிலும் மலர்கள் தூவுவார்கள்.  தமிழரின் இருப்பையும் வரலாற்றையும் நிறுவிநிற்கும் கேதீஸ்வரம் கோணேஸ்வரம் முன்னேஸ்வரம் நகுலேஸ்வரம் எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பம் விட்ட நிலையில் நல்லுர் தன்னினத்துக்குள் மறைமுகமாக குத்துச் சண்டை நடத்திக்கொண்டே இருக்கும். இந்த இனத்தின் அழிவை கொடி அசைத்து ஆரம்பித்து வைக்கும் இரண்டு மைதானங்கள் இவை. எல்லா பகுதியும் அழிந்து கடசியில் அழியும் இடங்களாக இவைகள் இருக்கும்.  தன்னினத்துக்கள் இரைதேடும் சூட்சுமங்கள் இங்கேதான் சிம்மாசனம் போட்டு இருக்கின்றது.  

தற்கொலைகள் ஏன் நடக்கினறது எப்படி நடக்கின்றது என்பதற்கான பின்புலங்கள் மிக ஆழமானது. தற்கொலை செய்பவரும் சரி அதை தூண்டுபவர்களும் சரி தாம் ஏன் இதை செய்கின்றோம் என்பதை முழுதாக உணர வாய்ப்பில்லை. 

https://www.virakesari.lk/article/607

http://www.hirunews.lk/tamil/184658/பல்கலை-மாணவர்-தூக்கிட்டு-தற்கொலை

 

Quote

 

உள்ளாடையை வாய்க்குள் வைத்து பகிடிவதை!! யாழ் பல்கலை மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

 

.

 

 

 

2 hours ago, சண்டமாருதன் said:

அமரிக்கா பிரிட்டன் வெள்ளையள் மூன்றாம் உலக நாடுகளில் குற்றங்களில் ஈடுபட்டு அந்த நாடுகளில் கைதுசெய்யப்பட்டால்  அந்த நாட்டு அதிகாரங்கள் முதலில் சொல்வது அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதுதான். அதேபோல் தான் உள்ளது நீங்கள் மேலே கூறுவது.

மன்னிக்கவும், மேலே நான் எழுதிய கருத்துகள் சம்பவ இடத்திலிருந்து பெற்ற தகவல்கள் என Twitter இல் பகிரப்பட்டவை. எனது சொந்த கருத்து அல்ல.

அமெரிக்கா பிரிட்டன் நாட்டவர்கள் குற்றம் செய்து விட்டு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என கூறுவதற்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது.

தவிர தற்கொலை செய்ததன் காரணம் semester exams இற்கு அனுமதி கொடுக்காமை. அது பற்றி அவரது நண்பர்களிடமிருந்து பெற்ற தகவல்களை அடிப்படையாக வைத்தே கருத்து பகிர்ந்தார்கள்.

நீங்கள் முழுமையாக உள்வாங்காமல் ஒரு வரியை quote பண்ணி ஒரு கட்டுரையே வரைந்துள்ளீர்கள்.

இந்த print shot உம் நேற்று Twitter இல் பகிரப்பட்டது. நான் இங்கு இணைத்திருக்கவில்லை.

EIiETLaUEAA5v77?format=jpg&name=medium

Edited by Lara

On 11/4/2019 at 3:26 PM, nedukkalapoovan said:

ஒரு மருத்துவ பீட மாணவனே தூக்கிட்டு தற்கொலை செய்யும் அளவு உந்தப் பல்கலைக்கழகம் மாணவர்களின் உடல்.. மன.. சமூக நலன் குறித்த எந்த அக்கறையும் இன்றி செயற்படுகிறது என்பதையே இது காட்டி நிற்கிறது.

காலத்துக்கு காலம் இப்படியான நிகழ்வுகள் நடக்கின்ற போதும்.. கடந்த காலப்படிப்பினைகளைக் கொண்டு இவற்றை தடுக்க ஒரு பல்கலைக்கழக சமூகத்தால் கூட முடியவில்லை எனும் போது இவர்களின் கல்வியின் தரம் எவ்வளவுக்கு சமூகப் பயனுள்ளதாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது..??! 

இதுல பெற்றோர்களின் பங்கு தான் அதிகம்!

பாடசாலைப் பருவத்தில பிள்ளையை விரட்டி விரட்டி 16 மணித்தியாலமும் படி படி என படிக்கவைச்சா இப்பிடித்தான் கோழைகளாக பிள்ளைகள் வளர்வார்கள்!

சில படிப்புகளுக்கு வரவு முக்கியம்! Practical / Hospital Trainings முக்கியம்! வெறுமனே ஹொஸ்டெல்ல இருந்து லப்டொப்ல மூழ்கி படிக்க முடியாது.

இவர்கள் இப்பவே ஓபி அடிச்சா பிறகு தொழில்ல சொல்லத் தேவையில்லை!

பல்கலைக்கழக சமூகம் என்ன செய்யும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.