Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு- கிழக்கில் வணக்கத்திற்காகவே பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன : சிவமோகன்

Featured Replies

தென்பகுதி எங்கும் பரவலாக இந்து கோவில்கள் இருக்கின்றன: வடக்கு- கிழக்கில் வணக்கத்திற்காகவே பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு சஜித் பிரேமதாச காரணமல்ல என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

DSC_0701_1.JPG

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகிறது என்பது மத ரீதியாக அரசியலுக்காக பாவிக்கப்படும் விடயம் எனத் தான் நான் பார்க்கின்றேன். வெளிப்படையாக தமிழ் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பௌத்த விகாரை பொது மக்களின் இடங்களில் கட்டப்பட்டிருக்கின்றதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். மாங்குளத்தில் ஒன்று உண்டு. அதுவும் முகாம்களின் உள்ளே தான் உள்ளது. ஏனைய இடங்களில் கட்டப்பட்ட விகாரைகள் அனைத்தும் முழுமையாக முகாம்களின் உள்ளே தான் உள்ளது. அவை வணக்கத்திற்காகவே கட்டப்பட்டது. 

அவை மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் கட்டப்பட்டவை. அவர்கள் தங்களுடைய வணக்கத்திற்காக அவற்றை கட்டியுள்ளார்கள் என்பது உண்மை தான். அதேநேரம் இன்று அனுராதபுரத்தை எடுத்தால் எமக்கு அங்கு சைவக் கோவில் இருக்கிறது. தென்பகுதியை எடுத்தால் எங்கு போனாலும் அங்கு கோவில் இருக்கிறது. பதுளையில் உள்ள மலை ஒன்றில் எங்களுக்கான வணக்க கோவில் இருக்கிறது. பரந்துபட்டு சைவ மக்களுக்கான கோவில்களும் கொழும்பில் இருக்கிறது. எனவே, எல்லா இடமும் எங்களுக்கான கோவில்களும் இருக்கின்றன. பௌத்த பிக்குகள் ஆன்மீகத்தை போதித்தால் பிரச்சனை இல்லை. ஆனால் இன்று அரசியலில் இறங்கியுள்ளமையால் தான் பிரச்சனை. 

தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனவளப் பிரிவு, மகாவலி அபிவிருத்தி, இராணுவம் இந்த 5 பிரிவுகளும் தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் திணைக்களங்கள் என்பது உண்மை. இங்கு இருக்கும் அதிகாரிகள் அனைவரும் சிங்களவர்களாவே இருக்கிறார்கள். நீராவியடி விவகாரம் மஹிந்த ராஜபக்சவின் 52 நாள் காலத்தில் இடம்பெற்றது. 

சஜித் பிரேமதாச காரணமல்ல. தற்போது ஓமந்தை மாளிகைப் பகுதியில் தொல்பொருள் திணைக்களம் பிரச்சனை எடுக்கும் போது சஜித் பிரேமதாச ஒரு வேட்பாளர். அவர் தலையிடவில்லை. வெடுக்குநாறி ஆலய பிரச்சனைக்கு காரணம் பொலிசாரே. சஜித் பிரேமதாச அல்ல. சஜித் பிரேமதாச வட்டுவாகல் வந்த போது ஒரு கோரிக்யை முன்வைத்தோம். 

நந்திகடலை ஆழப்படுத்த நிதி வந்துள்ள போதும் வனஜீவராசிகள் திணைக்களம் அனுமதி தரவில்லை. இதை தீர்த்து வைக்குமதாறு கோரினேன். அதற்கு அவர் தற்போது சொன்னால் அவர்கள் செய்கிறார்களோ தொயாது. ஆனால் நான் ஜனாதிபதி தேர்தலில் இறங்கி வெல்வேன். நவம்பர் மாதம் வென்ற பின் ஆழப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சொன்னார். ஆகவே டிசம்பர் மாதமே சஜித் பிரேமதாச தொடர்பில் என்னால் கூற முடியும் எனத்தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/68472

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கிற்கு வெளியில் கட்டப்பட்டுள்ள கோவில்கள் எதுவும் ஆக்கிரமிப்பு செய்து கட்டவில்லை. ஆனால் விகாரைகள் ஆக்கிரமிப்புக்காக திட்டமிட்டு கட்டப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கிரமிப்பிட்கும் தேவைக்கும் வேறுபாடு தெரியாதவர்களை தெரிவுசெய்தது யாருடைய பிழை  ? 

(காட்டிக்கொடுத்தல் என்பது எங்கள் இரத்தத்தில் (மரபில் )உள்ளதோ  ? என பலவேளைகளில் எண்ணத்தோன்றும்  )

Edited by Maharajah
சொற்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அனுராதபுரத்தை எடுத்தால் எமக்கு அங்கு சைவக் கோவில் இருக்கிறது.

தமிழர்கள் இருந்த இடம். அங்கு சைவ கோவில்கள் இருந்தன. பின்பு தமிழர்கள் அடித்து  விரட்டப்பட்டார்கள். வரலாறும் தெரியாது. அரசியலும் தெரியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு பல தமிழர்கள் பழம் நழுவி பாலில் விழுவது போல் விழுந்து கொண்டிருக்கின்றார்கள்.

Bildergebnis für பழம் நழுவி பாலில் விழுவது"

19 hours ago, ampanai said:

தென்பகுதி எங்கும் பரவலாக இந்து கோவில்கள் இருக்கின்றன: வடக்கு- கிழக்கில் வணக்கத்திற்காகவே பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு சஜித் பிரேமதாச காரணமல்ல என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

அப்ப யார் அமைக்கிறது?

சிவமோகன் நீங்க சொல்ற உண்மை ஏண்டா இந்துக்களின்  வணக்கத்திற்காக அநுராபுரம் வெள்ளரசு மரத்துக்கு கீழ ஒரு சிவன் கோவிலும், கிறிஸ்தவர்ளின் வணக்கத்திற்காக கண்டி புத்தர் பல்லுக் கோவிலுக்கு பக்கத்துல ஒரு சேர்ச் உம், முஸ்லிம்களின்  வணக்கத்திற்காக களனி விகாரைக்கு பக்கத்துல ஒரு மசூதியும் கட்டிவிடுங்கோ. சரி தானே.

இன நல்லிணக்கம் கொடிகட்டி பறக்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.