Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் உறுப்பினருக்கு 2 ஆம் மாடிக்கு அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் உறுப்பினருக்கு 2 ஆம் மாடிக்கு அழைப்பு

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ரெலோவின் இளைஞரணி செயலாளருமான ச.குகதாஸ், கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவின் 2 ஆம் மாடிக்கு நாளை(13) விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

 யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் உள்ள  ச.குகதாஸின் வீட்டுக்கு, கடந்த 9ஆம் திகதி சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர், விசாரணைக்கான அழைப்பாணையை அவரிடம் கையளித்துள்ளனர்.

அந்த அழைப்பாணையில், கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரினால் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதால் விசாரணைக்கு சமூகமளிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதினம்,தியாகதீபம் திலீபனின் நினைவுதினம் ஆகியவற்றில் கலந்துகொண்டமை தொடர்பாகவே விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கலாம் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குகதாஸ் தெரிவித்தார்.

-நிதர்ஷன்

 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/முன்னாள்-உறுப்பினருக்கு-2-ஆம்-மாடிக்கு-அழைப்பு/71-240945

1 hour ago, கிருபன் said:

கடந்த காலங்களில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதினம்,தியாகதீபம் திலீபனின் நினைவுதினம் ஆகியவற்றில் கலந்துகொண்டமை தொடர்பாகவே விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கலாம் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குகதாஸ் தெரிவித்தார்.

இப்பவும் ஐ.தே.க. ஆட்சி தானே!

இந்த நிலைல இந்த ஐ.தே.க. தமிழின விரோத கும்பல்களுக்கு வாக்களிக்க வேண்டும், வாக்களிச்சால் தமிழர் அந்தமாதிரி சுதந்திரமா இருக்கலாம் என்டு பல கட்டுக்கதைகளை பலர் அவிழ்த்துவிடீனம்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள்.. ஒட்டுக்குழு ஆக்களையும் விசாரணைக்கு அழைக்கினமா..??! 

ஆக எந்த ஆட்சி வந்தாலும் சிங்கள அரச பயங்கரவாதம் தமிழர்களை கணக்குப் பண்ணிக்கிட்டு தான் இருக்கும்.

நல்லாட்சி மைத்திரி போய்.. எனி நல்லவர் சஜித் ஆக்கும். 

 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Rajesh said:

இப்பவும் ஐ.தே.க. ஆட்சி தானே!

இந்த நிலைல இந்த ஐ.தே.க. தமிழின விரோத கும்பல்களுக்கு வாக்களிக்க வேண்டும், வாக்களிச்சால் தமிழர் அந்தமாதிரி சுதந்திரமா இருக்கலாம் என்டு பல கட்டுக்கதைகளை பலர் அவிழ்த்துவிடீனம்.

 

22 minutes ago, nedukkalapoovan said:

முன்னாள்.. ஒட்டுக்குழு ஆக்களையும் விசாரணைக்கு அழைக்கினமா..??! 

ஆக எந்த ஆட்சி வந்தாலும் சிங்கள அரச பயங்கரவாதம் தமிழர்களை கணக்குப் பண்ணிக்கிட்டு தான் இருக்கும்.

நல்லாட்சி மைத்திரி போய்.. எனி நல்லவர் சஜித் ஆக்கும். 

 

கோத்தபாயவே எனது தெரிவு - எல்லா பிரச்சினைக்கும் முடிவு வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Jude said:

கோத்தபாயவே எனது தெரிவு - எல்லா பிரச்சினைக்கும் முடிவு வரும்.

கோத்தா.. ஒரு கொடும் போர்க்குற்றவாளி.. இனப்படுகொலையாளி. அவர் எந்தத் தேர்தலிலும் நிற்கத் தகுதியற்றவர்.

எந்த நாகரிகமுள்ள மனித சமத்துவத்தை மதிக்கும் சமூகமும் கோத்தாவை ஆட்சிப் பீடத்தில் அமர வைக்காது. 

கோத்தாவின் தெரிவு என்பது.... அடிப்படையில்.. ஒரு கொலைக்காரனை..ஆட்சி அதிகாரத்தின் உச்சியில் தூக்கி வைப்பது போன்றது.

ஆனாலும் கோத்தாவின் தெரிவால்.. தமிழர்களை.. எனியும் சிங்களவர்கள் கொடுப்பார்கள்.. என்று கூறி.. ஏமாற்று அரசியல் செய்பவர்களை வேண்டும் என்றால் நல்லா வெளிச்சம் போட்டுக்காட்டலாம். அதற்காக கோத்தா தண்டனைகளில் இருந்து தப்ப வைக்கப்பட முடியாத ஒரு கொடிய மிருகம்... என்பது மாறாது. 

Edited by nedukkalapoovan

"வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ரெலோவின் இளைஞரணி செயலாளருமான ச.குகதாஸ், கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவின் 2 ஆம் மாடிக்கு நாளை(13) விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்." 

கோத்தா ஆட்சிக்கு வந்தால், இவர்கள் போன்ற இன  உணர்வாளர்களை, 'வெள்ளைவான் கடத்தல் ' மற்றும் 'காணாமல் ஆக்கப்படுவார்கள்' என்று கூறுகிறார்கள். 

இன்று போர் சூழல் இல்லை. ஆனால், நாட்டில் அமைதி காக்க இவ்வாறான கைதுகளை சிங்களம் செய்தவண்ணமே இருக்கும். அது சஜித் என்றாலும் இல்லை கோத்தா என்றாலும் சரி. காரணம், தமிழர்களை ஒரு உளவியல் மனப்பான்மைக்குள் வைத்திருக்க எண்ணும் சிங்களம். 

சரி, இதற்கு என்ன தீர்வு? அதைத்தான் எமது சமூகம் சிந்திக்கவேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.