Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துணிவிருந்தால் வெளியே வந்து வாழ்த்தட்டும் பார்க்கலாம்: பிக்கு சவால்!

Featured Replies

துணிவிருந்தால் வெளியே வந்து வாழ்த்தட்டும் பார்க்கலாம்: பிக்கு சவால்!

கொழும்பு, மே 10

புலிகளின் வான்படைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் நாடாளுமன்றில் வாழ்த்துக் கூறியமைக்காக அவரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் வண. எல்லாவெல மேதானந்த தேரர் நேற்று நாடாளுமன்றில் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

முடிந்தால் இதே வார்த்தையை நாடாளுமன்றத்திற்கு வெளியே வந்து சொல்லட்டும் பார்க்கலாம் என்றும் அவர் கஜேந்திரனுக்கு சவால் விட்டார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தேரர் மேலும் கூறியதாவது:

பயங்கரவாதியான தமிழ்ச்செல்வனை பிரிட்டனுக்கு அழைத்துப் பேச்சு நடத்த பிரிட்டன் தீர்மானம் எடுத்ததை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். அல் குவைதா மற்றும் ஹிஸ்புல்லா போன்றவை டொனி பிளேயருக்குப் பயங்கரவாத அமைப்புகளாக தீவிரவாத அமைப்புகளாக தெரிகின்றபோது, ஏன் புலிகளின் அமைப்பு மட்டும் பயங்கரவாத அமைப்பென அவருக்குத் தெரியவில்லை. எமது நாட்டைப்பற்றி ஆராய்கின்ற தகுதி பிரிட்டனுக்கு இல்லை. எமது நாடு நல்ல நாகரீகத்தைக் கொண்டது. அதை பிரிட்டன் விமர்சிக்க முடியாது.

எமது நாட்டைப்பற்றி எம்மவர்களே வெளிநாடுகளிலும் மோசமாகப் பேசி வருகின்றனர். அவர்கள் வெட்கமில்லாமல் இவ்வாறு செயற்படுகின்றனர்.

எமது உள்வீட்டுப் பிரச்சினையை அடுத்த வீட்டுக்குப் போய்ச் சொல்வது சரியா? நாட்டின் மீது பற்று இல்லாதவர்களே இவ்வாறு செயற்படுவர். இந்த மாதிரியான நிலைமையை இல்லாதொழிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். முதுகெலும்புள்ள ஒரு நாடாக நாம் மாறவேண்டும். தலை நிமிர்ந்து நிற்கவேண்டும்.

புலிகளுக்கு ஆதரவாகச் சிலர் வெளி நாடுகளிலும் உள்நாட்டிலும் செயற்படுகின்றனர். தற்போது கஜேந்திரன் புலிகளுக்கு ஆதரவாக நாடாளுமன்றில் உரையாற்றுகிறார். இந்தச் சபையில் புலிகள் மேற்கொள்ளும் வான் தாக்குதல்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றார். இவரை அரசு உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதே வாழ்த்தை அவர் முடிந்தால் சபைக்கு வெளியே வந்து சொல்லட்டும் பார்க்கலாம் என்றார். (அசி)

உதயன்

உங்கட நாட்டில நல்ல நாகரிகம் இருக்குதோ இதுதான் இந்த நூற்றான்டின் மிகப்பெரிய நகைச்சுவை.அல்குவைதாவுக்கும் புலிகளுக்கும் உள்ள வேறுபாடு உலகுக்கு நன்கு தெரியும் அல்குவைதாகவாக புலிகள் இருந்திருந்தால் இலங்கையில் சிங்களம் என்ற இனம் இலாமல் போயிருக்கும் இன்றைக்கு.பிச்சை எடுத்து வயிற்றை கழுவும் இந்த மொட்டைக்கு இவ்வளவு வாய் என்றால் உயிர் அச்சுறுத்தலுக்குள் வாழ்கைநடத்தும் கஜேந்திரன் எம்பிக்கு எவ்வளவு இருக்கும்

இந்த நேரத்தில் அவருக்கு வாழ்த்துக்கள்

வெட்கத்தைப் பற்றி பிக்கு பேசுகின்றது...

:lol: :lol: :rolleyes:

ஐயோ எனக்கு சரியான வெக்கமாய் இருக்கு....

யாராவது என்னை பிளீஸ் மற்றாக்கள் பார்க்காத வகையில் மறையுங்கோ...

jgshygirl6lghh8.jpg

சேம் சேம் பப்பி சேம்

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதியான தமிழ்ச்செல்வனை பிரிட்டனுக்கு அழைத்துப் பேச்சு நடத்த பிரிட்டன் தீர்மானம் எடுத்ததை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.

அல் குவைதா மற்றும் ஹிஸ்புல்லா போன்றவை டொனி பிளேயருக்குப் பயங்கரவாத அமைப்புகளாக தீவிர வாத அமைப்புகளாக தெரிகின்றபோது, ஏன் புலிகளின் அமைப்பு மட்டும் பயங் கரவாத அமைப்பென அவருக்குத் தெரியவில்லை.

தமிழர் ஏன் போராட வெளிக்கிட்டோம். அல்லது தமிழனுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் குறித்து எந்த விவாத்துக்கும் வரத் துப்புக் கெட்ட சிங்கள அரசு, வெறுமனே ஒரு விடுதலைப் போராட்டத்தை பயங்கவாதம் என்று காட்டுவதன் மூலம், அத்தனை மக்களின் உரிமைகளையும் பறிப்பதை நியாயப்படுத்திவடலாம் என்று சிந்திக்கின்றது.

அல்குவேதாவுடன் ஒப்பீடு செய்வதன் மூலம் எம் பிரச்சனை தீரப் போவதில்லை. காலத்துக்குக் காலம், தொடரத்தான் போகின்றது. இத்தனை காலமாகத் தமிழனைக் கொல்ல, செலவளித்த பணத்தில் நிச்சயம் தமிழனுக்குத் தேவையானதைப் பூர்த்தி செய்திருக்கலாம். ஆனால் ஏன் செய்யவில்லை?? இலங்கை என்ற மண் சிங்களவர்களுக்கு உரியது என்ற மகாவம்ச சிந்தனை ஒவ்வொரு வழியைத் தேடித் தமிழனை அழிப்பதிலும், அழிப்பதை நியாயப்படுத்துவதற்கும் செலவளிக்கின்றது.

இப்படியான கொடூரச் சிந்தனைகள் உங்களிடம் இருந்து மாறாதவரைக்கும் போராட்டம் ஓயப் போவதில்லை

  • தொடங்கியவர்

இந்த மொட்டைக்கு பாராளுமன்றம் ஏதோ நல்லவர்கள் இருக்குமிடம் என்று நினைப்பு, இலங்கையில இருக்க காடையன், பொம்புள பொறுக்கி, றவுடி, கேடி கேணை எல்லாம்தான் பாராளுமன்றத்தில அரசாங்கதரப்பிலும் எதிர்கட்சியிலும் இருக்குதுகள், உள்ளே சொல்லத்தான் துணிவிருக்கணும், மண்டைக்கு வெளியிலையும் ஒன்ன்மில்லை வெளியேயும் ஒன்னுமில்லை,

பிரிட்டனுக்கு அல்குவைதாவுக்கும் புலிகளுக்கும் உள்ளவித்தியாசம் 100% தெரியுமுங்கோ ஆமத்துரு, உலகமகா பயங்கரவாதி கொலைகாரன் மகிந்தன் பாப்பரசரப்பாக்க போகும் போது, தமிழருக்காக போராடுற தமிழ்செல்வன் பிரிட்டனுக்கு போன என்னங்கோ ஆகப்போது..........? மிஸ்டர் மொட்டை

உங்களுக்கு நாகரிகம் எங்கே இருந்து வந்தது..........? காட்டுக்குள்ள இலை குலையோட அலைஞ்ச கூட்டம் தானே நீங்கள். பிரிட்டன் காரன் தான் 150வருடம் உங்ககூட சேந்து நாகரிகத்தை கற்றுக் கொடுத்தானப்பு அதெல்லாம் மறந்து போச்சா............?

கஜேந்திரன் வீரத்தமிழன் உங்கட கோட்டைக்குள்ள வந்து தமிழீழ வான்படைக்கு வாழ்த்து சொல்லுறார், உங்களில ஒருத்தன் போய் புலிகள்ட எல்லையில நிண்டு சொல்லுங்கள் பாக்கலாம்..............?

இரவில வானத்தில ஏதாவது சத்தம் கேட்டாலே பங்கருக்குள்ள ஓடி ஒலியிற பய்னதாங் கொல்லிகள் எல்லாம் ஊளையிடத்தொடங்கிட்டுதுகள்

முதுகெலும்புள்ள ஒரு நாடாக நாம் மாறவேண்டும். தலை நிமிர்ந்து நிற்கவேண்டும்.

இதே வாழ்த்தை அவர் முடிந்தால் சபைக்கு வெளியே வந்து சொல்லட்டும் பார்க்கலாம் என்றார்.

அப்ப உங்களுக்கு முதுகெலும்பே இல்லையா? நான் ஏதோ இருக்கு என்றல்லவோ நினைச்சிட்டன் :P :P :P

ஐயா தேரை அவர் ஏன்ன வெளியே வந்து சொல்லுறது. அது தனே கொட்டியே வந்து குண்டு போடுது முடிஞ்சால் அவர்களை எதிர்த்து தாக்குங்கள் பார்க்கலாம்

பிக்குகள் தாங்கள் ரௌடிகள் என்பதனை பெருமையுடன் ஒத்துக்கொள்கின்றனர்.

peace7mj6.jpg

  • தொடங்கியவர்

பிக்குகள் தாங்கள் ரௌடிகள் என்பதனை பெருமையுடன் ஒத்துக்கொள்கின்றனர்.

peace7mj6.jpg

இவர்கள்தான புத்தரின் நற்போதனையை மக்களுக்கு போதிக்கப் போகிறவர்கள்..........?

:rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குவுக்கு ஊர் சோறை சாப்பிட்டுப்போட்டு சண்டித்தனம் வேறை? கொட்டியா வருது என்றால் கக்***************குள் ஒழியும் மொட்டை கூட்டம் நியாயம் நீதி பற்றி கதைக்குதுகள்.மக்களுக்கு நற்போதனை செய்ய வேண்டியதுகள் அரசியல் றவுடிகளாக பாராளுமன்றம் வந்து இனவாதம் கக்கி நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

துணிவிருந்தால் வெளியே வந்து வாழ்த்தட்டும் பார்க்கலாம்: பிக்கு சவால்!

நாங்கள் துணிவிருந்தபடியினால் தான் உங்களுடைய பாராளுமன்றத்திலேயே வந்து சவால் விடுகின்றோம்.

இருந்தாலும் நாங்கள் பொதுமக்களைத் தாக்கமாட்டோம் என்ற

ஒரு(துணிவு) நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது, அதையும் வீணடித்து விடாதையுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த வரையில் இதுகளைச் சிங்களவரே கணக்கெடுக்கிறதில்லை. நாம் ஏன் நேரத்தை வீணாக்குவான்? கஜேந்திரன் பா.உ க்கு வாழ்த்துகளைப் பதியுங்கள்.அது தான் பிரயோசனமான வேலை இப்பொழுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவங்கட பாஷையில்:

உன்வகன்சே தீபு காம உஸ்ஸகென பாடுவே யனவத? தவ டிக வெலா கிடியொத் குடி கண்ட வெனவா.

தமிழ் மொழிபெயர்ப்பு: குரு குடுத்த சாப்பாட்டையும் தூக்கிக்கொண்டு உங்கட பாட்டில போறீங்களா. இன்னும் கொஞ்சனேரம் இருந்‌தால் அடிவாங்க வேண்டி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிக்குமார்களுக்கு வேறு வேலையே இல்லை

மொட்டைக்கு மண்டையில் மயிர் இல்லாததால் நிறையவே குழம்பிப்போய் இருக்கின்றான் போல அதுதான் வெளியில் வந்து துணிவிருந்தாள் சொல்லட்டும் பார்ப்போம் என்று வாய் வாதம் போட்டு இருக்கின்றான்

ஆனால் அவனுக்கு தெரியவில்லை இலங்கை அரசின் ஆட்சி மன்று அதுதான் என்று அதனால் தான் வெளியில் நின்று தெருநாய் போல் தாங்கள் குரைப்பது போல் எமது தேசிய மன்று உறுப்பினர்களை இப்படி சொல்லி கூக்கிரல் இடுகின்றான்!

தலைவன் வழியில் செல்லும் பாராளுமன்ற உறுப்பினர்களை நாம் ஆதரிக்கின்றோம்!!!!!!!!!

ஆமா மொட்டை உங்களுக்கு அல்லது உங்கள் வாய்ச்சவாடலுகளுக்கு துணிவிருந்தாள் எமது கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்து இப்படி பொதுமக்களிடம் சொல்லிப்பார் அப்ப தெரியும் மக்கள் யார் என்று!!!!!!!!!

நாதன் தோமஸ்

Edited by Inathant

நாட்டின் ஆட்சத் தலைவர்கள் ஒரு கட்டத்தில் பிக்கமாரை வைத்துத்தான் அரசியல் நடத்துவார்கள். தங்களால் வெளிப்படுத்த வேண்டிய சில கருத்துக்களை இவர்களைக் கொண்டு வெளிப்படுத்துகிறார்கள். இப்போது வெளியே வா பார்க்கலாம் என்று தெருச் சண்டித்தனத்திற்கும் புறப்பட்டு விட்டார்கள். இனி எப்படி உருப்படும் ஸ்ரீலங்கா அரசியல்.

  • கருத்துக்கள உறவுகள்

துணிவிருந்தால் வெளியே வந்து வாழ்த்தட்டும் பார்க்கலாம்: பிக்கு சவால்!

ஆத்திரக்காறனுக்கு புத்தி மத்திமம்

என்பது எவ்வளவு உண்மை

புலிகள் மேல் எவ்வளவு கோபம்

ஏன் நான் தெரியாமல் கேட்கின்றேன்

புலிகள் இருக்குமிடம் உங்களுக்கு தெரியாதா???

துணிவிருந்தால் எல்லையைக்கடந்து போங்கள் பார்க்கலாம்: இது எனது சவால்!

வெட்கமாக இல்லை

உள்ளேயிருந்து கொக்கரிக்க???

கnஐந்திரன் உங்கள் குகையிலிருந்து கரச்சிக்கிறார்

அவரைப்பார்த்து கையெடுத்துக்கும்பிடுங்கள்

இந்த வீரம் எங்கிருந்து வந்தது என்று கேளுங்கள்

கைகூப்புவார் வன்னியைப்பார்த்து....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தர் அரசியலே வேண்டாம் என்று துறவறம் பூண்டார் அகிம்சாவாதியானார் ஆனால் இவர்கள் துறவறம் பூண்ட பின்னர் அரசியலுக்கு வந்து மக்களை இம்சிக்கிறார்கள் :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

பணக்கார பிக்குகள் தங்களுக்கு பிறகு தங்களது வாரிசுகளில் ஒருவரை அந்த இடத்துக்கு நியமிக்கிறார்கள். சில பணக்காரப்பிக்குகள் பல விகாரைகளுக்கு காணிகள் கொடுத்து உதவி செய்துள்ளார்கள். அந்த நிலத்திற்கு சொந்தக்காரர்களான அவர்கள், தமக்குப் பிறகு அந்த காணிகளை வேறு ஒருவரின் கண்காணிப்பில் இருக்கவிரும்பாமல் தங்களின் வாரிசுகள் ஒருவரை அல்லது மிக நெருங்கிய உறவுகளை பிக்குகளாக நியமித்து அக்காணிகளை பாதுகாக்கிறார்கள்.

இன்னும் சில சிங்கள மக்களின் பிள்ளைகள் 5, 6 வயதில் திருந்த முடியாத குழப்படிகள் செய்வதினால், விகாரைகளுக்கு அனுப்பி பிக்குகள் ஆக்குவதினால், அச்சிறுவர்கள் திருந்துவார்கள் என அனுப்புவதுண்டு. இவர்கள் பிக்குகள் ஆனாலும் பிறவிக்குணம் மாறாதவர்கள்.

மிகவும் கடினப்பட்ட 5, 6 பிள்ளைகளை உடைய எழைச்சிங்களவர்கள், பிள்ளைகளை வளர்க்க முடியாமல் ஒரு பிள்ளையை விகாரைக்கு அனுப்பி பிக்குகள் ஆக்குவதுண்டு. இதனால் வளர்ப்புச் செலவு குறைவதுடன், பிக்குகள் என்பதினால், அச்சமுகத்தில் அவர்களின் குடும்பத்துக்கு நல்ல பெயர் ஏற்பட வாய்ப்பும் இருக்கிறது.

இப்படி பல வழிகளில் இணையும் பிக்குகளுக்கு(இவர்கள் புத்தபெருமானின் நெறிகளைப் பின்பற்ற பிக்குகளாகச் சேருவதில்லை) புத்தரின் நெறிகள் பற்றிக் கவலைப்படுவதில்லை . பிக்குகளாக இருக்கும் போது மறைவில் இவர்கள் கொலைகள், கொள்ளைகள், பாலியல் என செய்வதுண்டு.

மிகவும் குறைவான எண்ணிக்கையிலானவர்களே புத்தபெருமானின் நெறிகளைப் பின்பற்ற பிக்குகளாகச் சேருகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துணிவிருந்தால் வெளியே வந்து வாழ்த்தட்டும் பார்க்கலாம்: பிக்கு சவால்!

கொழும்பு, மே 10

இதே வாழ்த்தை அவர் முடிந்தால் சபைக்கு வெளியே வந்து சொல்லட்டும் பார்க்கலாம் என்றார். (அசி)

உதயன்

பிக்கு பாவம்....உள்ள போயி பாக்கமுடியாததுனாலதானே ஆசையா கேக்குறாரு.. :icon_idea::lol:

கஜேந்திரன் ஒரு தடவை வெளியே போய் சொன்னால்தான் என்ன?? :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.