Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் கைது!

Featured Replies

ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு வெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

white_van.jpg

கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவால் ஏற்பாடுசெய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெள்ளை வேன் சாரதி என தன்னை அடையாளம் படுத்திக் கொண்டு ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்த  இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/71023

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கடத்தப்பட்டவர்கள் முதலைக்கு உணவாக போடப்பட்டார்களா? - விசாரணைகளுக்காக இருவர் கைது

  •  
இலங்கையில் கடத்தப்பட்டவர்கள் முதலைக்கு உணவாக போடப்பட்டார்களா?படத்தின் காப்புரிமை Getty Images

மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வெள்ளை வேன் கடத்தல் சம்பவம் தொடர்பில் தகவல்களை வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இந்த இரண்டு சந்தேக நபர்களும் மஹர பகுதியில் வைத்து வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 10ஆம் தேதி நடைபெற்ற ஊடக சந்திப்பில், ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற காலப் பகுதியில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை வேனின் ஓட்டுநர்கள் என்ற வகையில் இந்த இரண்டு பேரும் இருந்தனர்.

ஒரு வாகனத்தில் நபர்களை கடத்தி, பின்னர் வேறொரு வாகனத்தில் அவர்களை மாற்றி கொண்டு செல்வதாக அந்த ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட ஒருவர் கூறியிருந்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ வெள்ளை வேன் தொடர்பில் அறியவில்லை என கூறியுள்ளதாகவும், ஆனால் வெள்ளை வேன் விவகாரத்திற்கு கோட்டாபய ராஜபக்ஷவே தலைமை வகித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ரஞ்சித் பிரசாத்படத்தின் காப்புரிமை AZZAM AMEEN/ twitter Image caption ரஞ்சித் செய்தியாளர் சந்திப்பு

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, அவரின் கீழ் கடமையாற்றிய அதிகாரிகள் பல செயற்பாடுகளை முன்னெடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரத்தின் பின்னணியில் பிரிகேடியர் ஒருவரும், மேஜர் ஒருவரும் இருந்ததாக கூறிய அவர், குறித்த இராணுவ அதிகாரிகளின் கீழேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மொனராகலை பகுதியிலுள்ள இடமொன்றிற்கு கடத்தப்படுபவர்கள் கொண்டு செல்லப்பட்டு, பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில். துன்புறுத்தல்களின் பின்னர் கடத்தப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு, உடலை வெட்டி, முதலைகளுக்கு உணவாக வீசியதாகவும் அன்றைய ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட சாரதி என தன்னை கூறி கொண்டவர் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் கடத்தப்பட்டவர்கள் இவ்வாறே காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தான் இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்த போதிலும், போலீஸார் விசாரணைகளை நடத்த முயற்சித்தபோது அதனை விசாரணை செய்ய வேண்டாம் என உயர்மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

CID

இந்த ஆட்கடத்தல் விவகாரத்திற்கு போலீஸார் மற்றும் இராணுவம் இரண்டு தரப்பினரும் தொடர்புப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், அதற்கான பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அவர் கூறியிருந்தார்.

அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கங்கள், வெளிநாட்டு நாணயங்களை கொண்டு வரும் செயற்பாடுகளில் தான் ஈடுபட்டதாக அந்த ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட மற்றொருவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமீபத்தில் அறிவித்திருந்தது.

அதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த இரண்டு சந்தேக நபர்களையும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் பலர் வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டு, காணாமல் செய்யப்பட்டதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையிலேயே இந்த இரண்டு பேரும் ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து, வெள்ளை வேன் கடத்தல் விவகாரத்தில் சாரதிகளாக பணியாற்றியிருந்ததாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-50794679

  • தொடங்கியவர்
9 hours ago, பிழம்பு said:

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இந்த இரண்டு சந்தேக நபர்களும் மஹர பகுதியில் வைத்து வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுவிஸ் தூதுவராலய கைது, நாட்டை விட்டு சுவிஸிற்கு ஓடிய புலனாய்வு அதிகாரி, அதன் தொடராக இந்த கைதுகள் - இவை இதுவரை கொத்தாவிற்கு பெரும்பான்மை ஆதரவு வழங்கிய சிங்கள மக்களையும் பாதிக்கும் என்பதை சிங்கள மக்களுக்கு கூறுகின்றது. 

இந்த அணுகுமுறையால், மற்றும் பொருளாதாரம் சரியும் என்றால், ஜே.வி.பி.ற்கு வரும் காலங்களில் ஆதரவு அதிகாரிக்கலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதான் கதை  ஆரம்பித்திருக்கு.  எத்தனை நாளைக்கு சொறிந்த கையை மறைத்து வள்ளலாய், யோகியாய், எளிமையாய் நடிக்க முடியும்? எப்பவும் உண்மையான மனிதன்  புதுசாய் நடித்து  பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து  மக்களிடம் பெயர் எடுக்க தேவையில்லை. பாராளுமன்ற தேர்தல் முடிய பழைய நாடகங்களை  தாராளமாய் பார்க்கலாம். என்ன வாகனத்தின் நிறம் மாறலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ampanai said:

சுவிஸ் தூதுவராலய கைது, நாட்டை விட்டு சுவிஸிற்கு ஓடிய புலனாய்வு அதிகாரி, அதன் தொடராக இந்த கைதுகள் - இவை இதுவரை கொத்தாவிற்கு பெரும்பான்மை ஆதரவு வழங்கிய சிங்கள மக்களையும் பாதிக்கும் என்பதை சிங்கள மக்களுக்கு கூறுகின்றது. 

எந்தப் பாதிப்புகளையும் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு சிங்கள மக்கள் வந்துவிட்டனர். இன்றுவரை இலங்கையை ஆண்ட, ஆண்டுகொண்டிருக்கும் சிங்களத் தலைமைகள், 'சிங்களத்துக்கு ஒருகண் போனாலும்  கவலையில்லை தமிழுக்கு இரண்டு கண்களும் போகவேண்டும்' என்ற ஒரு வெறியை சிங்கள மக்களுக்கு ஊட்டி அதனை நன்றாக வளர்த்தும் வந்துள்ளனர். இதிலிருந்து சிங்கள மக்கள் மாறுவதென்றால் பெரும் அழுத்தம் அவர்களுக்கு ஏற்படவேண்டும். அப்படி அழுத்தம் ஏற்பட நாங்களும் விடமாட்டோம். ஏனெனில் நாங்கள் ஆரியத்துக்கு அடிமையானவர்கள். ஆரிய ஆளுமையிலிருந்து விடுபடும்வரையில் எங்களுக்குள் ஒற்றுமை ஏற்பட ஆரியம் விடாது.  

  • தொடங்கியவர்

வெள்­ளைவேன் கடத்­தல்கள் குறித்து பக்­கச்­சார்­பற்று விசா­ரணை செய்­யுங்கள்: ராஜித

வெள்­ளைவேன் கடத்­தல்கள் குறித்து தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­ய­வர்­க­ளி­டத்தில் பக்­கச்­சார்­பான விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு முழு­மை­யான விட­யங்கள் வெளிக்­கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

புதிய ஆட்­சி­யா­ளர்கள் வெள்­ளைவேன் விவ­காரம் தொடர்பில் முன்­னெ­டுக்கும் விசா­ர­ணைகள் உள்­ளிட்ட செயற்­பா­டு­க­ளுக்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்­புக்­க­ளையும் வழங்­கு­வ­தற்கு தயா­ராக உள்­ள­தா­கவும் அவர் அறி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதித் தேர்தல் இடம்­பெ­று­வ­தற்கு சொற்ப நாட்­க­ளுக்கு முன்­ன­தாக  ராஜித சேனா­ரத்ன நடத்­திய  ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றில் வெள்­ளைவேன்  கடத்­தல்கள் மற்றும் மனி­தப்­ப­டு­கொ­லைகள் இடம்­பெற்று முத­லை­க­ளுக்கு போடப்­பட்­டமை தொடர்பில் தக­வல்­களை வெள்­ளை­வேனில் சார­தி­யாக பணி­யாற்­றி­ய­தாக கூறி தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­திய இருவர் வெளி­யிட்­டி­ருந்­தனர்.  இந்­நி­லையில் குறித்த இரு­வ­ரையும் கைது செய்து குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரி­வினர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்தி வரு­கின்­றனர். 

இந்­நி­லையில் அவர்­களின் கைது தொடர்பில் கருத்து வெளி­யிட்ட ராஜித சேனா­ரத்ன மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார். 

அத்­துடன்,  அவ்­வி­டயம் தொடர்பில் மேலும் தெரி­விக்­கையில், 2015ஆம் ஆண்­டுக்கு முன்­ன­ரான காலத்தில் ஜன­நா­யகம் மறு­த­லிக்­கப்­பட்ட ஆட்­சிக்­கா­லத்தில் வெள்­ளைவேன் கலா­சாரம் அறி­மு­க­மா­னது. 

இந்­தக்­க­லா­சாரம் நடை­மு­றையில் இருந்த காலத்தில் பலர் கடத்­தப்­பட்டு காணா­ம­லாக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் முறைப்­பா­டுகள் உள்­ளன. அவை தொடர்பில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­போதும் அவை முற்­றுப்­பெற்­றி­ருக்­க­வில்லை. மேலும் பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் பலரும் என்­னி­டத்தில் நேர­டி­யா­கவும் முறைப்­பா­டு­களை தெரி­வித்­தி­ருந்­தனர். 

இந்­நி­லையில் தான் குறித்த இரு­ந­பர்­களும் வெள்­ளைவேன்  கடத்­தல்கள் தொடர்­பி­லான விட­யங்­களை பகி­ரங்­கப்­ப­டுத்­து­வ­தற்கு முன்­வந்­தி­ருந்­தனர். குறித்த நபர்­க­ளி­டத்தில் நான் அதற்­கான சாட்­சிகள் இருக்­கின்­றவா என்­பது உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து கேட்­டி­ருந்தேன். 

அந்த இரண்டு நபர்­களும் நேர­டி­யாக சட்­சி­யத்­தினைக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் மற்றும் சில  ஆவ­ணங்­க­ளையும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். இந்­நி­லையில் தான் வெள்­ளைவேன் கடத்­தல்கள் குறித்த தக­வல்­களை அவர்கள் மூல­மாக நான் பங்­கேற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் ஊடாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தேன். 

மேலும் அவர்கள் தமக்­கான பாது­காப்­பினை வழங்­கு­மாறும் கோரி­யி­ருந்­தார்கள். இந்­நி­லையில் குறித்த விடயம் சம்­பந்­த­மான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறு பொலி­ஸா­ரி­டத்தில் நானே கோரி­ய­தோடு உரி­ய­வர்­க­ளுக்கு பாது­காப்­பினை வழங்­கு­மாறும் கோரி­யி­ருந்தேன். 

தற்­போது அவர்கள் இரு­வ­ரையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். அவர்களிடத்தில் உரிய விசாரணைகள் பக்கச்சார்பின்றி முன்னெடுக்க வேண்டும். அவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அனைத்து விடயங்களும் பகிரங்கப்படுத்தப்படுவது அவசியம் என்பதோடு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நான் தயாராகவும் இருக்கின்றேன் என்றார். 

https://www.virakesari.lk/article/71067

 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தது ராஜீத என்று கதைக்கினம் 
 

  • கருத்துக்கள உறவுகள்

 தகவல்களை வெளியிட்ட  இவர்களின் கதை இன்றோ? என்றோ முடிவடைந்து காணாமல் போனோர், வெளிநாட்டுக்குத் தப்பியோர் என்று மறந்து, மறைந்து போய்விடும். மற்றயோர் வாயை மூடிக்கொண்டு அமைதி ஆக்கப்பட்டுவிடுவர். இவ்வளவுதான் இந்த நாட்டின் நீதி நிலவரம். அதனாற்தான் குற்றவாளிகள் இன்னும்  வாழுகிறார்கள்.  அவர்களின்  ஆதரவாளர்களும் பெருகுகிறார்கள். உ+ம் டக்ளஸ்  

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை வான் கதையை சொல்லியவர்களே கோத்தாவின் ஆட்க்கள் கோத்தாவின் ஆசியுடன் நடைபெற்ற கூத்து கோத்தாவின் தமிழர்களுக்கு எதிரான விம்பத்தை அடித்தட்டு சிங்களமக்களுக்கு பெரிதாக காட்டுவதுக்கு நடைபெற்ற நாடகம் .

இனி அந்த கதையை சொல்லியவர் இவர்கள்தான் என்று பலி ஆடுகள் ஆகுதியாக்கப்படும் . 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.