Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களுக்கு அதிகார பகிர்வு சாத்தியமற்றது: கோட்டாபய ராஜபக்ஷ

Featured Replies

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது நடைமுறை சாத்தியமற்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

70 வருடங்களாக அதிகார பகிர்வு தொடர்பில் அரசியல்வாதிகள் கருத்துக்களை மாத்திரமே வெளியிட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பில் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்களும் சமவுரிமையுடன் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தான் உள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அதிகார பகிர்வு என்பது ஒரு அரசியல் மயப்பட்ட விடயம் மாத்திரமே எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் அபிவிருத்திகளை மேற்கொள்வதன் ஊடாகவே, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முடியும் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு கௌரவமாக வாழ முடியாது என தமிழ் அரசியல்வாதிகள் கூறுவதாக குறிப்பிட்ட கோட்டாபய ராஜபக்ஷ, தமிழ் மக்களுக்கு ஏன் கௌரவமாக வாழ முடியாது என்ற கேள்வியையும் இதன்போது எழுப்பினார்.

பெரும்பான்மை சிங்கள மக்களினால் நிராகரிக்கப்படும் அதிகார பகிர்வு, சமஷ்டி (கூட்டாட்சி) போன்ற விடயங்களை, அவர்களின் அனுமதியின்றி எவ்வாறு வழங்குவது என கோட்டாபய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நாட்டில் ஆட்சியிலிருந்த அனைத்து அரசியல்வாதிகளும் அதிகார பகிர்வு தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டார்களே தவிர, மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு மக்களின் பிரச்சினைகளை முதலில் தீர்க்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அதிகார பகிர்வு என்ற விடயமானது முற்றிலும் பொய்யான ஒன்று என கூறியுள்ள அவர், பெரும்பான்மை சிங்கள மக்கள் இருக்கின்ற நாட்டை பிரித்து அதிகார பகிர்வை வழங்குவதென்பது சாத்தியமற்ற ஒன்று எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் வாக்குகள் இன்றி தான் ஜனாதிபதியாகியுள்ள போதிலும், தான் அனைவருக்கும் இந்த நாட்டின் ஜனாதிபதி எனவும் கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கு சிறந்த சேவையாற்றக்கூடிய அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவை தான் நியமித்துள்ளதாகவும், அவர் தமிழ் மக்களுக்கான அனைத்து சேவைகளையும் உரிய முறையில் முன்னெடுப்பார் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50810206

 

காணாமல் போனோர் விவகாரம்

யுத்தக் காலத்தில் காணாமல் போயுள்ளதாக கூறப்படுவோருக்கு காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழ் வழங்குவதே சிறந்ததொரு தீர்வாக இருக்கும் என தான் நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ

வடக்கில் மாத்திரமன்றி, தென் பகுதியிலுள்ள பலர் காணாமல் போயிருந்ததை அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தில் காணாமலானோர் உயிரிழந்திருக்கலாம் என கூறிய அவர், அதனை அவர்களின் பெற்றோரினால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதையும் உணர முடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனாலேயே காணாமல் போனோர் உறவினர்கள் போராட்டங்களை நடத்தி வருவதாக கூறிய அவர், காணாமல் போனோருக்கான சான்றிதழை வழங்குவதே சிறந்ததாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

சுவிஸர்லாந்து தூதரக விவகாரம்

சுவிட்சர்லாந்து தூதரகத்திலுள்ள பெண் அதிகாரியொருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷபடத்தின் காப்புரிமை MINISTRY OF FOREIGN AFFAIRS SRILANKA

குறித்த பெண் அதிகாரியின் வாக்குமூலத்தில் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றமையினால் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சுவிஸர்லாந்து தூதரகத்துக்கும், தமக்கு எந்தவித முரண்பாடுகளும் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

 

19ஆவது திருத்தம் ரத்து

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தமானது, பல குறைபாடுகளுடனான திருத்தம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த திருத்தச் சட்டத்தை விரைவில் ரத்துசெய்து, புதியதொரு அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வர விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

 

மலையக மக்களுக்கான சம்பள பிரச்சினை

பெருந்தோட்ட மலையக மக்கள் எதிர்நோக்கும் சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

தாம் தற்போதே ஆட்சிக்கு வந்துள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து விரைவில் ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், மலையக மக்களுக்கு மானிய உதவிகளை வழங்கவும் தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இன்றைய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவை நானும் ஏதோ பெரிய ஆள் எண்டுதான் நினைச்சிருந்தன். ஆனா, இவ** சரிவரா** போல கிடக்கு .

தமிழரிட்ட அதிகாரத்த குடுத்தா அவங்** தங்களுக்குள்ளேயே சாதி, மதம், பிரதேசம் என அடிபட்டு கடைசீல உ** காலில தானா வந்து விளுவா** எண்டு தெரியாத ****

தமிழீழமாவது *****

Edited by நிழலி
ஒருமையில் எழுதப்பட்ட வார்த்தைகள் நீக்கப்பட்டன

  • தொடங்கியவர்
29 minutes ago, Kapithan said:

கோத்தாவை நானும் ஏதோ பெரிய ஆள் எண்டுதான் நினைச்சிருந்தன். ஆனா, இவ** சரிவரா** போல கிடக்கு .

தமிழரிட்ட அதிகாரத்த குடுத்தா அவங்** தங்களுக்குள்ளேயே சாதி, மதம், பிரதேசம் என அடிபட்டு கடைசீல உ** காலில தானா வந்து விளுவா** எண்டு தெரியாத ****

தமிழீழமாவது *****

அதைத்தான் செய்வேன் என சஜித் கூறி இருப்பார், வென்றிருந்தால் 😶

Edited by நிழலி
Quote பண்ணி எழுதப்பட்ட கருத்தில் ஒருமையில் எழுதப்பட்ட வார்த்தைகளை நீக்கப்பட்டன

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ampanai said:

அதைத்தான் செய்வேன் என சஜித் கூறி இருப்பார், வென்றிருந்தால் 😶

ஒர் நாணயத்தின் இரு பக்கங்கள்.

ஒருவர் நேரே கழுத்தில் கத்தியை சொருகுவார் மற்ரவர் முதுகின் பின்னே நின்று வாளை சொருகுவார்.

ஒருவரிடம் நாங்கள் அழிகின்றோம் என தெரிந்துகொண்டே அழிவோம். மற்ரவரிடம் நாங்கள் அழிவது தெரியாமால் அழிந்து போம்.

நாங்கள் நாங்களாக இல்லாவிட்டால் இதுதான் முடிவு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கோத்தாவை நானும் ஏதோ பெரிய ஆள் எண்டுதான் நினைச்சிருந்தன். ஆனா, இவ** சரிவரா** போல கிடக்கு .

தமிழரிட்ட அதிகாரத்த குடுத்தா அவங்** தங்களுக்குள்ளேயே சாதி, மதம், பிரதேசம் என அடிபட்டு கடைசீல உ** காலில தானா வந்து விளுவா** எண்டு தெரியாத ****

தமிழீழமாவது *****

மன்னிக்கவும் கள நிர்வாகம்.

 நமது பேச்சு வழக்கில் எழுதப்பட்ட வசனங்களில் மரியாதைக் குறைபாடு இருப்பதாக கருதுகிரீர்களா ?

நான் எழுதியதுவ் முதியோரின் பேச்சு வழக்கு . குறை இருப்பின் சுட்டிக் காட்டுக .

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப சுமந்திரன் அழுது புலம்பிக்கொன்று இருக்கிறாராம்; “ இந்த கொத்தபயா ஏன் public ஆ அறிக்கை விட்டவர், எனி நான் அதிகாரப்பரவல் திட்்டதுக்கு அரசு ஆதரவு எடுத்துத்தாரன் அது இது என்று காலத்தை இழுத்தடித்து காலத்தைப் போக்காட்டி காசுழைக்கேலாது, அரசாங்கத்தில சேரவுமேலாது”

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

மன்னிக்கவும் கள நிர்வாகம்.

 நமது பேச்சு வழக்கில் எழுதப்பட்ட வசனங்களில் மரியாதைக் குறைபாடு இருப்பதாக கருதுகிரீர்களா ?

நான் எழுதியதுவ் முதியோரின் பேச்சு வழக்கு . குறை இருப்பின் சுட்டிக் காட்டுக .

புதுசுதானே போக போக பழகிடும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

புதுசுதானே போக போக பழகிடும் 

யார் இவரா புதியவர் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

யார் இவரா புதியவர் 

😀 இரதி அடையாளம் கண்டுவிட்டார் . 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

யார் இவரா புதியவர் 

அக்காச்சி,

பேசாம வேலையை விட்டுட்டு, மை போட்டு பிடிக்கும் கடை ஒண்டை ஈஸ்ட்ஹாமில தொடங்கலாம்😂

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

அக்காச்சி,

பேசாம வேலையை விட்டுட்டு, மை போட்டு பிடிக்கும் கடை ஒண்டை ஈஸ்ட்ஹாமில தொடங்கலாம்😂

நான் கடைக்கு வெத்திலை போடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

யார் இவரா புதியவர் 

இல்லை பழையவர் புதிய ஐடியில் 🤣🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.