Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிவாஜிலிங்கம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு

Dec 26, 20190

 

சிவாஜிலிங்கம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு

தமிழினப் படுகொலை வாரமாக முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை வருடாவருடம் முன்னெடுத்து வந்தமை தொடர்பில் நாளை பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணைப் பரிவினரால் கொழும்பு நன்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்படுவதாக விடுக்கப்பட்ட அழைப்புக் கடிதம் இன்று சிவாஜிலிங்கத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணைப் பரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

 

http://www.samakalam.com/செய்திகள்/சிவாஜிலிங்கம்-தமிழினப்-ப/

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணைப் பரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

வாய் இருந்தால் வங்காளம் போகலாம் என்பார்கள். நான்காம் மாடிக்கும் போகலாம் என்பது இப்போதான் தெரிகிறது. எம்ஜிஆர் நினைவு தினத்தில் இவர் பேசியதுக்கு என்ன விளைவு வரப் போகுதோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

TID அழைப்பு; சிவாஜிலிங்கம் மறுப்பு

image_7f22d3ba1f.jpg

பயங்கரவாத விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (27) காலை குறித்த பிரிவில் முன்னிலையாகுமாறு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த மே மாதம் முன்னெடுக்கப்பட்ட நினைவஞ்சலி தொடர்பில் அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலனுக்காக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனப்படுகொலை வாரமாக பெயரிட்டு நினைவு நிகழ்வுகளை கடந்த மே மாதம் 12ஆம் திகதி முதல் ஒரு வாரம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நடத்தப்பட்டதன் ஊடாக, இனவாதத்தை தூண்டும் வகையில் சிவாஜிலிங்கம் செயற்பட்டதாக தெற்கு அரசியல்வாதிகள் மற்றும் மதத்தலைவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள சிவாஜிலிங்கம், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலன்களுக்காகவே அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஊடகங்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், உடல்நலக்குறைவு காரணமாக நாளைய தினம் பயங்கரவாத விசாரணை பிரிவில் முன்னிலையாக முடியாது என, அறிவித்துள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/TID-அழபப-சவஜலஙகம-மறபப/175-243009

  • கருத்துக்கள உறவுகள்

M.K.Sivajilingam-1.jpg

பயங்கரவாத தடுப்பு பிரிவில் நாளை ஆஜராகப்போவதில்லை – சிவாஜிலிங்கம்

பயங்கரவாத தடுப்பு பிரிவில் ஆஜராகப்போகும் திகதியை மாற்றிக்கொள்வதாக தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அத்திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

மே மாதம் நடத்தப்பட்ட “இனப்படுகொலை நினைவு” நிகழ்வு குறித்து சாட்சியம் வழங்குவதற்காக அவரை நாளை (வெள்ளிக்கிழமை) முன்னிலையாகுமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

இருப்பினும், அவர் நாளை மருத்துவ நடவடிக்கைக்கு செல்லவுள்ளமையினால் ஆஜராக முடியாது என்பதனால் நாளை மறுதினம் சனிக்கிழமை ஆஜராவதாக அறிவித்துள்ளார்.

தமிழினப் படுகொலை வாரமாக முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை வருடாவருடம் முன்னெடுத்து வந்தமை தொடர்பாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

http://athavannews.com/sivajilingam-tells-tid-will-appear-on-saturday-to-record-statement/

  • கருத்துக்கள உறவுகள்

M.K.Sivajilingam.jpg

இறந்தவர்களை நினைவுக் கூர்ந்தமைக்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தேன் – சிவாஜி

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் தமது ஒரே நிலைப்பாடாகும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் 12ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொண்டமைக்காக, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அதற்கிணங்க, இன்று (சனிக்கிழமை) காலை  9.30 மணிக்கு வாக்குமூலம் வழங்க அவர் சென்றிருந்தார். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “முள்ளிவாய்க்கால் மண்ணில் இறந்தவர்களை, கடந்த மே 12ஆம் திகதி நினைவு கூர்ந்தமைக்காக என்னை இன்று விசாரணைக்கு அழைத்திருந்தார்கள்.

இறந்தவர்களை நினைவுக்கூர்ந்தமைக்குத்தான் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தோம்.

அத்தோடு, விக்னேஸ்வரன் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தென்னிலங்கையில் முன்வைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ஆனால், அவர் தேவையில்லாத எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பதுதான் உண்மையாகும். இங்கிருந்து வரும் கருத்துக்களுக்குத்தான் அவர் பதில் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் எனில், இனங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்படவேண்டும்.

தமிழ்- முஸ்லிம்- சிங்கள மக்கள் என அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழவே விரும்புகிறார்கள்.

இதற்கு ஒரு தரப்பு மட்டும் ஒத்துழைத்துப் போதாது என்பதுதான் எமது நிலைப்பாடாக இருக்கிறது” என மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/இறந்தவர்களை-நினைவுக்-கூர/

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் போர்வெற்றி கொண்டாடலாம்,  தமிழர் பிரதேசங்களில் விகாரை கட்டலாம், இனவாதம் பேசலாம், மதங்களையும் மதத்தலைவர்களையும் அவமதிக்கலாம். ஆனால் நாங்கள் எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு இருக்கவேண்டும். பதில் சொன்னால் இனவாதம், நல்லிணக்கம்   பாதிப்பு என்று கோசம். எல்லாம் குடு கூட்டங்கள். சர்வதேசமும் வாயை மூடிக்கொண்டு ஆமா போட்டுக்கொண்டு இருக்கும். எங்கட ராஜதந்திரியள் தேசிய கீதம் பாடியே தீருவோம் என்கின்ற  போட்டி. இறைவா எவ்வளவு காலந்தான் இது நீடிக்கும்? நீரும் எங்களை கைவிட்டு ஓடி ஒளிந்து கொண்டீரோ? இல்லையேல் அவர்கள் வைத்த பொறியில் அவர்களே அழியுமட்டும் காத்திருக்கிறீரோ?  

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

அவர்கள் போர்வெற்றி கொண்டாடலாம்,  தமிழர் பிரதேசங்களில் விகாரை கட்டலாம், இனவாதம் பேசலாம், மதங்களையும் மதத்தலைவர்களையும் அவமதிக்கலாம். ஆனால் நாங்கள் எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு இருக்கவேண்டும். பதில் சொன்னால் இனவாதம், நல்லிணக்கம்   பாதிப்பு என்று கோசம். எல்லாம் குடு கூட்டங்கள். சர்வதேசமும் வாயை மூடிக்கொண்டு ஆமா போட்டுக்கொண்டு இருக்கும். எங்கட ராஜதந்திரியள் தேசிய கீதம் பாடியே தீருவோம் என்கின்ற  போட்டி. இறைவா எவ்வளவு காலந்தான் இது நீடிக்கும்? நீரும் எங்களை கைவிட்டு ஓடி ஒளிந்து கொண்டீரோ? இல்லையேல் அவர்கள் வைத்த பொறியில் அவர்களே அழியுமட்டும் காத்திருக்கிறீரோ?  

  1. தக்கன பிழைக்கும் என்பது உயிரினம் தோன்றியது முதல் இன்றுவரை தவறாத தத்துவம்.  ஈழத்தமிழினம் பிழைக்கத் தக்க இனமாக கூர்ப்படைவது இன்றைய காலத்தின் கட்டாய தேவை.
  2. நாம் நம்மைத்தான் மாற்றிக் கொள்ள முடியும் - மற்றவர்களை நாம் மாற்ற முடியாது, அவர்கள் விரும்பினாலே அவர்களால் மாற முடியும். இதை இலங்கை பிரச்சினை சார்பாக பார்ப்பவர்கள், சிங்கள பௌத்தர்கள் விரும்பாததை தமிழர்களுக்கு தீர்வாக வழங்குவது சாத்தியமில்லை என்கிறார்கள். சிங்கள பௌத்தர்களை தமிழர்கள் மாற்ற முடியாது - சாம, பேத, தான, தண்டம் வரை முயற்சித்து இது சாத்தியம் இல்லை என்பது நிரூபணமாயிற்று. காலம் கடக்க முன்னர் ஈழத்தமிழர் தம்மை தாமே மாற்றிக்கொள்ள முடியும் - பிழைக்கத்தக்க இனமாக இருந்தால்.
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

காலம் கடக்க முன்னர் ஈழத்தமிழர் தம்மை தாமே மாற்றிக்கொள்ள முடியும் - பிழைக்கத்தக்க இனமாக இருந்தால்.

எப்படி? சிங்கள பவுத்தமாக? அடிமையாக? அது தமிழினமாகாதே. வேறொரு இனமாகவல்லவா மாற்றம்பெறும்.  அதற்கு ஏன் இவ்வளவு உயிரை காவு கொடுத்து இருக்க வேண்டும்?  இவர்களின் அடாவடியில் நான் தெரிந்து கொண்டது,  இவர்கள் தமிழரைப் பார்த்து பயப்படுகிறார்கள்.  தங்கள் மதத்தின் மீது இவர்களுக்கே நம்பிக்கையில்லை. சொல்லப்போனால் தங்களிலேயே தங்களுக்கு நம்பிக்கையில்லை. அதனாலேயே மற்றவரை கொடுமைப்படுத்தி அவர்களில் வாழ ஆசைப்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கற்பகதரு said:
  1. தக்கன பிழைக்கும் என்பது உயிரினம் தோன்றியது முதல் இன்றுவரை தவறாத தத்துவம்.  ஈழத்தமிழினம் பிழைக்கத் தக்க இனமாக கூர்ப்படைவது இன்றைய காலத்தின் கட்டாய தேவை.
  2. நாம் நம்மைத்தான் மாற்றிக் கொள்ள முடியும் - மற்றவர்களை நாம் மாற்ற முடியாது, அவர்கள் விரும்பினாலே அவர்களால் மாற முடியும். இதை இலங்கை பிரச்சினை சார்பாக பார்ப்பவர்கள், சிங்கள பௌத்தர்கள் விரும்பாததை தமிழர்களுக்கு தீர்வாக வழங்குவது சாத்தியமில்லை என்கிறார்கள். சிங்கள பௌத்தர்களை தமிழர்கள் மாற்ற முடியாது - சாம, பேத, தான, தண்டம் வரை முயற்சித்து இது சாத்தியம் இல்லை என்பது நிரூபணமாயிற்று. காலம் கடக்க முன்னர் ஈழத்தமிழர் தம்மை தாமே மாற்றிக்கொள்ள முடியும் - பிழைக்கத்தக்க இனமாக இருந்தால்.

 

3 hours ago, satan said:

எப்படி? சிங்கள பவுத்தமாக? அடிமையாக? அது தமிழினமாகாதே. வேறொரு இனமாகவல்லவா மாற்றம்பெறும்.  அதற்கு ஏன் இவ்வளவு உயிரை காவு கொடுத்து இருக்க வேண்டும்?  இவர்களின் அடாவடியில் நான் தெரிந்து கொண்டது,  இவர்கள் தமிழரைப் பார்த்து பயப்படுகிறார்கள்.  தங்கள் மதத்தின் மீது இவர்களுக்கே நம்பிக்கையில்லை. சொல்லப்போனால் தங்களிலேயே தங்களுக்கு நம்பிக்கையில்லை. அதனாலேயே மற்றவரை கொடுமைப்படுத்தி அவர்களில் வாழ ஆசைப்படுகிறார்கள்.

ஈழத்தமிழர்கள் சிங்கள பௌத்தர்களாக மாறும் போது ஈழத்தமிழினம் மறைந்து போகிறது. டார்வினின் “தக்கன பிழைக்கும்” என்ற உயிரியல் தத்துவத்தை மீண்டும் ஒரு முறை உறுதி செய்வதாக, பிழைக்க தக்கதல்லாத இனமாக ஈழத்தமிழ் இனம் வரலாற்றில் தன்னை பதிவு செய்து கொண்டு மறைந்து போகும். 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கற்பகதரு said:

 

ஈழத்தமிழர்கள் சிங்கள பௌத்தர்களாக மாறும் போது ஈழத்தமிழினம் மறைந்து போகிறது. டார்வினின் “தக்கன பிழைக்கும்” என்ற உயிரியல் தத்துவத்தை மீண்டும் ஒரு முறை உறுதி செய்வதாக, பிழைக்க தக்கதல்லாத இனமாக ஈழத்தமிழ் இனம் வரலாற்றில் தன்னை பதிவு செய்து கொண்டு மறைந்து போகும். 

  என்ன செய்வது? ஆபத்து வந்தபோதும் துணிந்து போராடி அழிந்த  இனம் தமிழினம். அதிலிருந்து ஒரு தளிர் நம்பிக்கைதுளியோடு வெளிவந்துகொண்டே இருக்கும் என்பதை காணாமற்போனோர் உறவுகள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். காலந்தான் பதில் சொல்லும்.        ஆமா பெயர் கற்பகத்தரு. சொல்லாடல் ஜூட் என்கிற பெயரில் வந்தது போல் இருக்கிறது. ஒருவேளை வேறு யாரோ பதிந்து இருக்கலாம்.

சிவாஜிலிங்கம் ஒரு ஈழ தமிழ் அரசியல் கோமாளியாக பாலாராலும் கருதப்பட்டாலும் அவர்களும் தேவை இந்த சிங்கள மற்றும் தமிழ் கோமாளி அரசியல்வாதிகள் மத்தியில். சிவாஜிலிங்கம் அவர்களும் ஒரு வட்டத்திற்குள் நின்று அரசியல் செய்கிறார். அது அவரின் பார்வையில் சரியாக இருக்கும். 

பி.கு. சனநாயக நாடுகள் பலவற்றிலும் சிவாஜிலிங்கம் போன்றவர்கள் உள்ளார்கள்.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.