Jump to content

’சுமந்திரனின் முடிவுகளால் கூட்டமைப்புக்கு சரிவு’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

’சுமந்திரனின் முடிவுகளால் கூட்டமைப்புக்கு சரிவு’

“போர்முடிவடைந்த பின்னர் ‘ஒற்றுமை’ என்பதே தமிழர்களுக்கு எஞ்சியிருக்கும் பலம் பொருந்திய ஆயுதமாகும். அதனை சிதைப்பதற்கு பேரினவாதிகள் வழிமீது விழிவைத்து காத்திருக்கின்றனர். எனவே பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் சிக்கும் வகையில் தமிழ்க்கட்சிகள் தீர்மானங்களை எடுக்ககூடாது” என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

2020 ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் கொழும்பு, கம்பஹா மற்றும் மலையகத்தில் போட்டியிடுவது தொடர்பில் பரீசிலிக்கப்பட்டுவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளமை தொடர்பில் இன்று (02) கருத்து வெளியிடுகையிலேயே வேலுகுமார் எம்.பி.மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும், எல்லா தொகுதிகளிலும் போட்டியிடக்கூடிய ஜனநாயக உரிமை இருக்கின்றது.அந்தவகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டால்கூட அதனை நாம் எதிர்க்கப்போவதில்லை.

எனினும், நடைமுறை அரசியலை புரிந்துகொண்டு - களநிலைவரம் குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பதே சாலச்சிறந்ததாகும். குறிப்பாக தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணம், நுவரெலியா போன்ற பகுதிகளில் தமிழக் கட்சிகளுக்கிடையில் பலமுனைப்போட்டி நிலவினால்கூட தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கும், அரசியல் இருப்புக்கும் சிக்கல் வரப்போவதில்லை.

ஆனால் கண்டி, பதுளை, அம்பாறை, திருகோணமலை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தமிழர் தரப்பு பல அணிகளாக பிரிந்துநின்று போட்டியிட்டால் அது ஆங்காங்கே உள்ள தமிழ் வாக்குகளை சிதறடித்து, தமிழ்ப் பிரதிநிதித்துவத்தையும் இல்லாமல்செய்து, எதிரிகளுக்கு களம் அமைத்துக்கொடுத்துவிடும்.

ஆகவே, இம்மாவட்டங்களில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை ஒரு தரப்பு பெற்றால் மட்டுமே பிரதிநிதித்துவம் உறுதியாகும் என்ற யதார்த்த நிலைமையை சுமந்திரன் போன்றோர் புரிந்துகொள்ள வேண்டும். 

தமிழ் முற்போக்கு கூட்டணியானது தனது அரசியல் தளத்தில் பலமாகவே இருக்கின்றது.மக்களும் கூட்டணியின் தேவையை உணர்ந்துவிட்டதால், எந்த கட்சி, எந்த வடிவில் போட்டியிட்டாலும் இம்முறை எமது வெற்றியை தடுக்கமுடியாது என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம்.

ஆனால், கடந்த காலங்களில் புரிந்துணர்வுடனும், விட்டுக்கொடுப்புகளுடனும் செயற்பட்ட - தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட முக்கியமான தமிழக்கட்சிகள் பிரிந்துநின்று மோதிக்கொண்டால் அது பேரினவாதிகளுக்கு வலிந்துசென்று தீணிபோடுவதாக அமைந்துவிடும்.

போர் முடிவடைந்த பின்னர் ‘ஒற்றுமை’ மூலமே தமிழ் மக்கள் தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளனர்.நெருக்கடியான சூழ்நிலைகளில் ஓரணியில் திரண்டு குரல் எழுப்புவருகின்றன. 

இந்நிலையைில் ஒற்றுமையை சிதைத்து, தமிழர்களை அரசியல் ரீதியில் அநாதைகளாக்குவதற்கு சில தரப்புகள் காத்திருக்கின்றன. அத்தகையசூழ்நிலைஉருவாக இடமளிக்ககூடாது என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,  நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சிப் பதவியை வகித்தபோதுகூட தெற்கில் உரிய வகையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்காத சுமந்திரன், யதார்த்தம் புரியாமல் தேர்தல்கள் பற்றி அறிவிப்பு விடுத்துவருகிறார்.

உண்மையில், வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தாம் சந்திக்கின்ற பலத்த எதிர்ப்புகளாலும், மக்கள் மத்தியிலான செல்வாக்கு சரிவுகளாலும் தாம் எதிர்கொள்ள கூடிய வாக்கு சரிவுகளை சரி செய்யவே தெற்கில் போட்டியிடும் எண்ணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். 

கடந்த முறை கூட்டமைப்பு பெற்ற இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்கள் இம்முறை கிடைக்காது என சுமந்திரன் நன்கறிவார்.  ஆகவே தமது தேசிய பட்டியலுக்கான வாக்குகளை அதிகரிக்கும் ஒரே உத்தேசம் மட்டுமே அவருக்கு இருக்கின்றது. 

தமது இந்த வாக்கு வேட்டையால், தமிழ் வாக்குகள் சிதறி அதன் மூலம்   தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் வாழும் தமிழ் மக்கள் தங்கள் அரசியல் பிரதிநிதித்துவங்களை இழந்தாலும் அதுபற்றிய எந்த சமூக பொறுப்பும் அற்ற அரசியல்வாதியாக சுமந்திரன் மாறியுள்ளார் என்பதை தமிழ் வரலாறு பதிவு செய்கிறது. 

இதைத்தவிர தெற்கில் நிலவும் அரசியல், சமூக கள நிலவர பின்னணியில் தெற்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆற்றக்கூடிய  எந்த ஒரு  பணியும் கிடையாது என்பதை சிறு குழந்தையும் அறியும். 

சுமந்திரன் தனது அரசியல் முதிர்ச்சியற்ற முடிவுகளால் கூட்டமைப்புக்கு ஏற்கெனவே பாரிய சரிவுகளை ஏற்படுத்தி உள்ளார்.  அந்த வரிசையில் அவரது அடுத்த மிக மோசமான முடிவுதான் இந்த முடிவாகும். 

இதனால் ஏற்படும் அரசியல் விபரீதங்களுக்கு சுமந்திரனே பொறுப்பேற்க வேண்டும் என்பதை கூறி வைக்கிறேன்.” என, வேலுகுமார் எம்.பி மேலும் கூறியுள்ளார்.


http://www.tamilmirror.lk/செய்திகள்/சுமந்திரனின்-முடிவுகளால்-கூட்டமைப்புக்கு-சரிவு/175-243365

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

80-FAE059-4738-47-C7-860-D-930-E9-AA8-EB

யானையின்... (சுமந்திரனின்)   முகமும், அந்த கள்ளப்  பார்வையும், ஓவியத்தில் நன்றாக வந்துள்ளது. :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.