Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சன் ராமநாயக்க கைது

Featured Replies

  • தொடங்கியவர்

ரஞ்சனின் ஒரு இலட்சத்து 21 ஆயிரம் குரல் பதிவுகள் தம்வசம் உள்ளதாக மஹிந்தானந்த தெரிவிப்பு!

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

கடந்த ஆட்சியில் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்தமை, அதிகாரிகளை மிரட்டி அரசியல் -பழிவாங்கல் செயற்பாடுகளில் ஈடுபட்ட குரல் பதிவுகளில் 5  குரல்பதிவுகள் மட்டுமே வெளியில் வந்துள்ளது. இன்னும் ஒரு இலட்சத்து 21 ஆயிரம் குரல்பதிவுகள் உள்ளது என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சபையில் தெரிவித்தார். 

அத்துடன் அதனை வெளியிட்டால் நல்லாட்சி அரசாங்கத்தின் சகல குற்றங்களும் வெளியில் வரும். எமது ஆட்சியாளர்களை விமர்சித்து நீதிமன்ற அவமதிப்பு, சட்ட மீறல்கள் முன்னெடுத்ததாக மக்கள் மத்தியில் கூறியவர்களின் உண்மை முகம் இப்போது வெளியில் வந்துள்ளது. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயகவும் சேர்ந்து செய்த சதிகள் வெளியில் வந்துள்ளது. இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் பாலித ரங்கே பண்டார :- குற்றப்புலனாய்வு பிரிவிடம் இருந்த குரல் பதிவுகள் எவ்வாறு உங்களில் கைகளுக்கு வந்தது? நீங்கள் இவற்றை எவ்வாறு எடுத்தீர்கள். அப்படியென்றால் இது சட்டத்தை கையில் எடுத்த செயற்பாடு இல்லையா என கேள்வி எழுப்பினார். 

எனினும் இந்த கேள்விக்கு எந்தவித பதிலும் கூறாது இராஜாங்க  அமைச்சர் உரையை முடித்தார். 

https://www.virakesari.lk/article/72750

  • தொடங்கியவர்

"ரஞ்சனிடமிந்து கைப்பற்றப்பட்ட இருவட்டுகளில் உள்ள விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவருவது எவ்வாறு?"

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ரஞ்சன் ராமநாக்காவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட இறுவட்டுக்கள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் எவ்வாறு வெளி வருகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.

முதலில் இந்த இறுவட்டுக்களை பொலிசார் வசப்படுத்தி முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை பிரச்சினை எழுப்பிய இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தன்னை கொலைசெய்ய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவும் சதி செய்கின்றனர் என்ற குற்றத்தைச் சுமத்தினார். 

இந்த கருத்தினை முன்வைத்த நேரம் ரணில் விக்கிரமசிங்க சபையில் இருக்கவில்லை. எனினும் பிற்பகல் 5 மணியளவில் சபைக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க இக் குற்றச்சாட்டு குறித்து தனது பதிலை முன்வைத்தார். இதன்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

https://www.virakesari.lk/article/72752

  • தொடங்கியவர்

துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பை வழங்க தீவிர முயற்சி - ஹிருணிகா 

(நா.தனுஜா)

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சில குரல் பதிவுகள் வெளியாகியிருப்பதுடன், அந்தக் குரல் பதிவுகளின் மூலம் எனது தேவைக்காகவோ அல்லது ரஞ்சன் ராமநாயக்கவின் தேவைக்காகவோ துமிந்த சில்வாவிற்கு தண்டனை வழங்கப்பட்டது போன்றும், உண்மையில் அவர் மிகவும் அப்பாவி போன்றதுமான தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவையனைத்தும் துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பை வழங்குவதற்கான ஆரம்பகட்டமாக நடவடிக்கைகளாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர சந்தேகம் வெளியிட்டார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சில குரல் பதிவுகள் வெளியாகி, அவை தற்போது பேசுபொருளாகியுள்ளன. எனது தந்தையாரின் கொலையாளியான துமிந்த சில்வா உள்ளிட்ட மூவருக்கு ஏற்கனவே மரணதண்டனை வழங்கப்பட்டு, அது உயர்நீதிமன்றத்தினால் உறுதி செய்யப்பட்டுவிட்டது. அவ்வாறிருக்க தற்போது வெளியான குரல் பதிவுகளின் தொடர்ச்சியாக துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவது குறித்தும் பேசப்பட்டு வருகிறது.

உண்மையில் எனது தந்தையாரான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா உள்ளிட்ட மூவர் மீதும் அச்சுறுத்துதல், கொலைக்கான முயற்சி, கொலை உள்ளடங்கலாக 17 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. 

அதேபோன்று மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன போன்றவர்கள் கடந்த காலத்தில் துமிந்த சில்வாவை போதைப்பெருள் விற்பனைக்காரன் என்று மிகமோசமாக விமர்சித்ததுடன் மாத்திரமல்லாமல், கொழும்பில் மஹிந்த ராஜபக்ஷவின் நீலக்கொடியை ஏற்றுவதற்கு எனது தந்தை மாத்திரமே இருந்தார் என்றும் பாராட்டியிருக்கிறார்கள். ஆனால் தற்போது அவர்களே துமிந்த சில்வா நல்லவர் என்றும், எனது கோரிக்கைகளுக்கு அமைவாகவே அவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்றார்.

https://www.virakesari.lk/article/72753

  • தொடங்கியவர்

 

image_9149cda128.jpg

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Vankalayan said:

சனத்தைப்பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும்போல இருக்குது. நீங்கள் சொன்னது சரி. இருந்தாலும் அந்த டிவி சொந்தக்காரர் ஏன் அதிர்ச்சியடையவேண்டும். இந்த இடத்தில எழுதுவது சரியாக இருக்காதென்பதால் அதை தவிர்த்திருக்கிறேன். அங்கு சனத்தினதும் பாலியல் சம்பந்தமான வீடியோ பிடிபட்டுள்ளது. அதில் உள்ள பெண்---------

இப்ப கொஞ்சம் விளங்குது ...அந்த வீடியோவில் சனத்தோடு உள்ள பெண் அந்த டீவிக்காரக்கு சொந்தமான பெண்ணாக இருக்க வேண்டும் ...இந்த ரீவிக்காரர் ,ரஞ்சனுக்கு நன்றிக்கடன் பட்டு உள்ளார்..அவர் ,இவருக்கு எதிராய் பிரசாரம் செய்தும் இந்த வீடியோவை அவர் வெளியில் விடவில்லை...அது சரி யார் அந்த டீவிக்காரர் ஒரு குளு தாறது😀 

9 hours ago, ரதி said:

இப்ப கொஞ்சம் விளங்குது ...அந்த வீடியோவில் சனத்தோடு உள்ள பெண் அந்த டீவிக்காரக்கு சொந்தமான பெண்ணாக இருக்க வேண்டும் ...இந்த ரீவிக்காரர் ,ரஞ்சனுக்கு நன்றிக்கடன் பட்டு உள்ளார்..அவர் ,இவருக்கு எதிராய் பிரசாரம் செய்தும் இந்த வீடியோவை அவர் வெளியில் விடவில்லை...அது சரி யார் அந்த டீவிக்காரர் ஒரு குளு தாறது😀 

கண்டுபிடித்துவிடீர்கள். சொந்தகார பெண்ணைவிட  மிகவும் நெருங்கிய பெண் அவர். அந்த டிவி இரெண்டெழுத்தில் உள்ள ஒரு சிங்கள மொழி மூல தொலைக்காட்சி. கண்டுபிடித்திருப்பீர்கள் எண்டு நினைக்கிறன். இந்த காணொளி மூன்று வருடங்களுக்கு முன்னர் பரவலாக எல்லா இடங்களிலும் பகிரப்பட்டிருந்தது. 

14 hours ago, குமாரசாமி said:

 எனக்கு ஏன் என்று விளங்கவில்லை. கொஞ்சம் விளங்கப்படுத்தி சொல்லமுடியுமா?

 உங்களுக்கு விளங்கியிருமெண்டு நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

கண்டுபிடித்துவிடீர்கள். சொந்தகார பெண்ணைவிட  மிகவும் நெருங்கிய பெண் அவர். அந்த டிவி இரெண்டெழுத்தில் உள்ள ஒரு சிங்கள மொழி மூல தொலைக்காட்சி. கண்டுபிடித்திருப்பீர்கள் எண்டு நினைக்கிறன். இந்த காணொளி மூன்று வருடங்களுக்கு முன்னர் பரவலாக எல்லா இடங்களிலும் பகிரப்பட்டிருந்தது. 

 உங்களுக்கு விளங்கியிருமெண்டு நினைக்கிறேன்.

ஹிரு டீவியா? .. அவரின் மனைவியா?, தங்கச்சியா? ....{துமிந்த சில்வாவின் சகோதரர்}
 

1 hour ago, ரதி said:

ஹிரு டீவியா? .. அவரின் மனைவியா?, தங்கச்சியா? ....{துமிந்த சில்வாவின் சகோதரர்}
 

அவருக்கு சகோதரி இருக்கிறவா எண்டு எனக்கு தெரியாது.

  • தொடங்கியவர்

ரஞ்சன் விவகாரத்தில் நீதிமன்றம் தொடர்பாக மக்களுக்கு எழுந்துள்ள நம்பிக்கையீனத்தை இல்லாமல் செய்ய உரிய நடவடிக்கை அவசியம்: விமல்

ரஞ்சன் ராமநாயக்கவின் ஒலிப்பதிவுகள் தொடர்பாக முறையான விசாரணை நடத்தி இதனுடன் தொடர்புட்ட நீதிபதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்துடன் நீதிமன்றம் தொடர்பாக மக்களுக்கு இருந்துவரும் நம்பிக்கையீனத்தை இல்லாமலாக்கவேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன் கிழமை எதிர்க்கட்சியினால் கொண்டுவந்த ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் இரண்டாம்நாள் விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் நீதிமன்ற சுயாதீனத்தன்மை எவ்வாறு பாதுகாக்கப்பட்டு வந்தது என்பது தற்போது வெளிவந்துகொண்டிருக்கின்றது. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிபதிகளுடன் தொலைபேசியில் உரையாடிய ஒலிப்பதிவுகள் நாட்டுக்குள் நீதிபதிகளின் தீர்ப்புக்கள் தொடர்பாக சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அதனால் ரஞ்சன் ராமநாயக்கவின் ஒலிப்பதிவுகள் தொடர்பாக முறையான விசாரணை மேற்கொள்ளவேண்டும். அதன் மூலம் அதில் தொடர்புபட்டிருக்கும் நீதிபதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் இன்று நீதிமன்ற தீர்ப்புக்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. அந்த நிலையை போக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்துடன் ரஞ்சன் ராமநாயக்க தனது ஒலிப்பதவுகளை சமூகவலைத்தலங்களில் பதிவிடுவதற்கு இடைக்கால தடை உத்தரவொன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கின்றார். நீதிமன்றம் இதற்கு எவ்வாறான தீர்ப்பு வழங்கும் என்று எமக்கு தெரியாது. ஆனால் கடந்த அரசாங்க காலத்தில் இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்றார். 

மேலும், அவரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட இறுவட்டுக்கள் எவ்வாறு வெளியில் சென்றது என்று கேள்வி கேட்கின்றனர். இந்த ஒலிப்பதிவுகள் பொலிஸாரின் மூலம் வெளிவந்தவையல்ல. மாறாக பொலிஸாரினால் இறுவட்டுக்கள் கைப்பற்றப்படுவதற்கு முன்னர் வேறு நபர்களிடமிருந்த ஒலிப்பதிவுகளே சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றன. இதனை அடிப்படையாகக்கொண்டே பொலிஸாரும் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டை சோதனை செய்து இறுவட்டுக்களை கைப்பற்றி இருக்கின்றனர் என்றார். 

 

https://www.virakesari.lk/article/72825

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Vankalayan said:

அவருக்கு சகோதரி இருக்கிறவா எண்டு எனக்கு தெரியாது.

அட சீ 😊மனிசியா ...இதை முந்தி நானும் கேள்விப் பட்ட மாதிரி இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

கலகம் பிறந்தாற்தான் நிஞாயம் பிறக்கும். நடப்பதை மட்டும் அவதானிப்போம். 

இந்த மனுஷன் A/L பரீட்சைல பெயில் ஆனபடியாத்தான் கைது செய்ததாக சொல்லிமுடிப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.