Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1000 ரூபா சம்பள அதிகரிப்பை தோட்ட நிர்வாகம் வழங்காவிட்டால் நடப்பது இதுதான்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1000 ரூபா சம்பள அதிகரிப்பை தோட்ட நிர்வாகம் வழங்காவிட்டால் நடப்பது இதுதான்!

1000 ரூபா சம்பள அதிகரிப்பை தோட்ட நிர்வாகம் வழங்காவிட்டால் நடப்பது இதுதான்!

 
 

 

தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் 1000 ரூபா சம்பளத்தை கொடுக்க தவறினால் தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்று உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (30) காலை தெரிவித்தார்.

13 பில்லியன் ரூபா அப்போதைய காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் சேவைகளுக்காக நிலுவையாக ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது.

கடந்த அரசாங்க காலப்பகுதியில் முறையற்ற நிதி முகாமைத்துவத்தின் காரணமாக இந்த நிலுவை ஏற்பட்டது என்று தெரிவித்த அமைச்சர் இதற்காக குறை நிரப்பு பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இன்று காலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் சுட்டிக்காட்டியிருந்தார்.

தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பிற்கான கொடுப்பனவு தொகை இந்த குறை நிரப்பு பிரேரணையில் உள்ளடங்கியுள்ளதா? என்று அமைச்சரிடம் கேட்ட போதே அவர் தோட்டங்களைப் பொறுப்பேற்பது குறித்து கருத்து தெரிவித்தார்.

தோட்டங்கள் அரசாங்கத்துக்கே சொந்தமானவை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதனை தோட்ட நிர்வாகங்கள் நிறைவேற்ற தவறினால் தோட்டங்களை பொறுப்பேற்று அவை இளைஞர்களுக்கு பிரித்து கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார். தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வேதன அதிகரிப்பில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)
 
2 hours ago, nunavilan said:

தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வேதன அதிகரிப்பில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

நீநீநீநீநீண்ட காலமா அந்த மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஒரு சிறு தீர்வா இந்த 1000 ரூபா சம்பளம் நாளாந்தம் கிடைத்தாக வேணும்.

3 hours ago, Gowin said:

நீநீநீநீநீண்ட காலமா அந்த மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஒரு சிறு தீர்வா இந்த 1000 ரூபா சம்பளம் நாளாந்தம் கிடைத்தாக வேணும்.

நிச்சயமாக. நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக இவர்கள் உள்ளார்கள்.  ஆனால், நீண்ட காலமாக உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் மறுக்கப்பட்டு வருகின்றது.

அரசு பொறுப்பு ஏற்றால், பல நிர்வாக சீர்கேடுகள் நடக்கலாம், பல அரச நிறுவனங்கள் போன்று இதுவும் நட்டத்தில் இயங்கி, இறுதியில் வேலைகளை இழக்கும் நிலை வருமோ என்ற பயமும் உள்ளது.

மலையக மக்களுக்கு இவர்கள் சரியான கொடுப்பனவு வழங்கவிடால் இந்த தொழில் இயற்கயாகவே மரணமடைந்து விடும்। இப்போதைய சந்ததி அந்த வேலை செய்வதில்லை। மலையக இளைஞர் , யுவதிகள் பெரும்பாலானோர் கொழும்பிலும் , மற்றும் நகர்ப்புற கடைகள் தொழிடசாலைகளில்தான் வேலை செய்கிறார்கள்। அரசாங்கம் இந்த தேயிலை உட்பத்தியை தொடர்ந்து நடத்தவேண்டுமாக இருந்தால் உரிய சம்பளம் வழங்கப்பட வேண்டும் அல்லது காணிகளை பிரித்து அவர்களுக்கே கொடுக்க வேண்டும்। அரசாங்கம் பொறுப்பேற்றால் நிச்சயமாக நிலைமை இன்னும் மோசமாகும்।

தோட்டக் கம்பனிகளை அரசுடமையாக்கும் அரசாங்கத்தின் முயற்சி நகைப்புக்குரியது - விஜயபால  ஹெட்டியராச்சி

தோட்ட கம்பனிகள் ஜனாதிபதி குறிப்பிட்டதை போன்று மார்ச் முதலாம் திகதி தொடக்கம் மலையக தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை வழங்காவிடின் தோட்டங்கள் அரசுடமையாக்கப்படும் என்று அரசாங்கம் குறிப்பிடுவது நகைப்பிற்குரிய கருத்தாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியராச்சி தெரிவித்தார்.

அமரர் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க பெருந்தோட்டங்களை அரசுடமையாக்கினார். ஆனால் அவர் எதிர்பார்த்ததை போன்று நிர்வாகத்தை அப்போது முன்னெடுக்கவில்லை. அதன் பிறகு முன்னாள் ஜனாதிபதிசந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கள மீண்டும் தோட்டங்களை கம்பனிகளுக்கு 55 வருட கால ஒப்பந்தத்தின் பிரகாரம் வழங்கினார்.

இன்றும் அரசுடமையாக்கப்பட்டுள்ள தோட்டங்களில் எதிர்பார்க்கப்பட்ட அளவு இலாபம் கிடைக்கப்பெறவில்லை. தனியார் கம்பனிகளின் ஊடாக மலையக மக்கள் பெறும் மாத கொடுப்பனவுகளை காட்டிலும் குறைவான வருமானத்தையே அரசுடமையாக்கப்பட்ட தோட்ட மக்கள் பெறுகின்றார்கள்.</p>
மார்ச் முதலாம் திகதி தொடக்கம் 1000 வழங்கப்படும் என்று அரசாஙகம் குறிப்பிட்டது ஆனால் அதற்கான திட்டங்கள் ஏதும் வகுக்கப்படவில்லை.

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தோட்ட கம்பனிகள் மீது அழுத்தம் பிரயோகிக் முடியாது. குறிப்பிட்டதை போன்று பெருந்தோட்ட மக்களுக்கு ஆயரம் ரூபாவை அரசாங்கம் நிச்சயம் வழங்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/74599

 

  • கருத்துக்கள உறவுகள்

இது அந்த மக்களை ஏமாற்றி வாக்கு பெறுவதற்கான ஆராவாரமே தவிர வேறொன்றுமில்லை.  பதினெட்டாம் ஆண்டு இறுதி வாக்கில் மஹிந்தா இவர்களுக்கு சம்பள அதிகரிப்பு செய்வதாக ஒரு உரையாடலில் தெரிவித்திருந்தார். பின் அதிலிருந்து பின் வாங்கி மறுப்பு கூறினார். எதிலும் ஏமாற்றுவதற்காக, தப்புவதற்காக  சும்மா வார்த்தை ஜாலம். அதோடு மக்கள்  நிம்மதி அடைந்து விட வேண்டும். செயற்படுத்தத் சொல்லி கேட்க கூடாது   என்பது அவர்களது வாதம். அவர்களது இரத்தத்திலும், வியர்வையிலும் சுகம் அனுபவித்துக்கொண்டு அவர்களது தேவைகளை கண்டும் காணாமலும் இருந்து கொண்டு வெள்ளைக் கதை. அவர்கள் நோயுற்றுப் படுத்தால் அவர்களை கவனிக்கிறதுக்கு ஆளில்லை, அடிமைகளாக உழைக்கிறார்கள். அடியும் வாங்குகிறார்கள்.  பெரும் வள்ளல் இந்தியாவும்  இவர்களை கவனிப்பதில்லை. சிங்களவனுக்கு கேட்டது கேட்காதது  அள்ளி கொடுப்பதிலும் அவனை மனம் குளிரவைத்து மகிழ்வதிலும் பேரின்பம் அடைகிறார்கள். 

4 hours ago, satan said:

இந்தியாவும்  இவர்களை கவனிப்பதில்லை.

ஏனில்லை.

அவர்களை படுகுழியில் தள்ள ஹிண்டியா படாதபாடுபடுதே. அவர்களை இலங்கைத் தமிழர் என்டு சொல்லாமல் இந்திய தமிழர் என்டு லேபல் குத்தி, பிரிவினையை உருவாக்கி அவர்களை படுகுழியில் தள்ளினது ஹிண்டியா தானே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.