Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது உறுதி – கருணா

Featured Replies

Karuna-Amman.jpg

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது உறுதி என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

குறித்த கட்சியின் கலாசார பிரிவின் ஏற்பாட்டில் பொங்கல் விழா மட்டக்களப்பு களுதாவளை ஈஸ்வரன் ஆலய முன்றலில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

இதையடுத்து, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்துவது குறித்து நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அனைத்துக் கட்சிக் கூட்டங்களின் போது கலந்துரையாடியதாக தெரிவித்தமை தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் பல விடயங்கள் உரையாடப்பட்டன. அதிலே கல்முனை விடயம் தொடர்பாக நான் அவரிடம் எடுத்துக் கூறியிருந்தேன்.

அதனைத் தரமுயர்த்தித் தருவதாக மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதி அளித்திருந்தார். அவர் அளித்த வாக்குறுதிகளை அனைத்துக் கட்சிகள் மத்தியில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார் .

இந்த விடயம் தொடர்பாக இன்று காலை பொதுநிர்வாக உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் பிரதமரின் தகவலைக் கொடுத்து அதற்கான வேலைத் திட்டங்களை ஆரம்பிக்குமாறு கேட்டுள்ளேன். எனவே இந்த வேலைத் திட்டங்கள் அனைத்தும் விரைவாக நடைபெறும் என்பதை தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/கல்முனை-வடக்கு-தமிழ்-பிர-2/

  • தொடங்கியவர்
14 hours ago, Rajesh said:

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது உறுதி என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்த நல்ல விஷயத்தையாவது கருணா சாதித்து காட்டட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே ஆகட்டும் அம்மான் 

ரஜனி அரசியலுக்கு வந்து தமிழ் நாட்டின் முதலமைச்சரானாலும் ... இந்த் கல்முனை தொகுதி தரமுயர்த்தல் மட்டும் நடவாது.....சும்மா ஓரமாயிருந்து கத்தி விட்டு போக வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் வெல்ல வேண்டும் கட்டாய தேவை. சாவா வாழ்வா? போராட்டம் இவருக்கும் சிங்களவனுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கின் உதயம் மூலம் கிழக்கை சிங்கப்பூராக்கிட்டு.. இப்ப கல்முனைக்கு திரும்பி விட்டார்.. சிங்களத்திகள் கட்டிப்பிடி கிரான் குத்தியன் முரளிதரன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.