Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தனை தெரியும்... புத்தன் பொண்டாட்டியை எத்தனை பேருக்கு தெரியும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை புத்தனையும் துல்பனையும் கானவில்லை

  • Replies 62
  • Views 7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Kapithan said:

ஞானம் என்பது அறிவின் மேம்பட்ட, மிக உயர்ந்த நிலை.

அறிவுள்ளோர் எல்லாம் ஞானிகளல்ல. ஆனால் ஞானிகள் எல்லோரும் அறிவார்ந்தவர்கள் என்கிறேன்.


 

அறிவின் மேம்பட்ட மிக உயர்ந்த நிலை ஞானம் என்றால், அந்த ஞானத்தைப் பெறுவதற்கும் அறிவின் உச்ச நிலையை நாட வேண்டும் என்று சொல்கிறீர்கள்.

எந்த ஒரு மனிதனும் அறிவின் உச்ச எல்லையைத் தொட முடியாது.  அப்படித் தொட்டவர்கள் யாரும் இல்லை இந்த வையகத்தில்.

அரச மரத்தடியிலோ, காட்டிலோ அல்லது வீட்டிலோ யாரும் தவத்தினால் ஞானத்தைப் பெற முடியாது.  

புத்தர் அறிவாளி அல்ல.

புத்தர் அறிவின் உச்ச எல்லையைத் தொட்டவரும் இல்லை.

புத்தருக்கு ஞானம், அதாவது அறிவு, கிடைத்திருந்தால், பிறரின் மூலம் அவர் அடைந்திருக்க வேண்டும். 

அல்லது இறைவன் புறத்தில் இருந்து கிடைத்திருக்க வேண்டும்.

இயேசு என்பவர் ஞானியா?  ஒருபோதும் இல்லை.

முகம்மது நபி ஞானியா? அப்படியும் இல்லை.

ஞானி, ஞானம், ஞானம் அடைதல், அறிவின் உச்ச நிலை போன்ற சொல்லாடல்கள் - இந்து, புத்த மதங்களைத் தழுவியவை.   

 

 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மாங்குயில் said:

மிகவும் எளிதில் சொல்வதானால் - ஞானம் என்றால், அறிவு.

அறிவும் ஞானமும் ஒன்றல்ல, அவை வேறானது. ஊர்வன, பறப்பன, நடப்பன இவை அனைத்துக்கும் அறிவுண்டு, இந்த அறிவு இயற்கையால் வழங்கப்பட்டது. மனிதன் மட்டுமே தனக்குத் தரப்பட்ட அறிவை பல பிரிவுகளாக வகுத்துக்கொண்டான்.

ஞானம், இது மனிதர்களால் மட்டுமே பெறக்கூடியது. தற்கு வைராக்கியம், விவேகம், மனவடக்கம், புலனடக்கம், தியாகம், அமைதி, சமாதானம், பொறுமை,அகிம்சை, போன்ற குணங்கள் தேவை. இவற்றைக் கொண்டவர்களே ஞானத்தை அடையவும் ஏனையவர்களுக்கு வழிகாட்டவும் இயலும். 

On 2/4/2020 at 2:21 AM, மாங்குயில் said:

புத்தர் உண்மையிலேயே, ஞானோதயம்  அடைந்தாரா?

இப்படி, சில சிங்கள சகோதரர்களிடம் நான் விவாதித்தபோது, அவர்கள் எனக்கு அடிக்க வந்து விட்டார்கள்.

இங்கு நாங்கள் யாழ்கள உறவுகளாக இணைந்து இருந்தாலும் எங்கள்  ஒவ்வொருவருடைய அறிவும் சிந்தனையும் செயற்பாடும் வேறுவேறானவை என்பதனை, வெளிவரும் கருத்துக்கள் எடுத்தியம்புகின்றன. இதுபோலவே உலகமக்களும், புத்தர் பெருமானின் போதனைகளையும், உபதேசங்களையும் எடுத்துக் கொள்ளுவதைப் பொறுத்தே அவரும் விமர்ச்சிக்கப் படுகிறார். அவரை முகமூடியாக அணிந்து பிற இனத்தவரை அழிவுக்கு உள்ளாக்கும் சிங்கள இனத்தின் மூலமாகவே நாங்கள் புத்தர்பெருமானையும் அறிந்துகொள்ளும் நிலமை உள்ளதால், எங்களில் பலருக்கு அந்தப் பெருமானின் மேல் வெறுப்பேற்படுகிறது.

17 hours ago, Maruthankerny said:

அதைத்தான் புத்தன் செய்தான் ....
எங்கிருந்து வந்தோம் .. எங்கு போகப்போகிறோம்?
என்று தெரியாமல் இருந்த மனிதர்கள் நூறு புனைகதைகளை 
வடித்து வந்தார்கள் சொர்க்கம் நரகம் என்று நம்பி வந்தார்கள் 
எதுவுமே வெளியில் இல்லை  எல்லாமே உனக்குள்ளேயே இருக்கிறது 
என்று உலகுக்கு சொன்னான் ..

இவ்வுலகத்தில் தோன்றிய உயிர்கள் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை. உலகிலுள்ள நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து மூலப்பொருட்களிலிருந்தே உயிர்கள் உருவாகின்றன. இந்த மூலங்களால் இணைந்து உருவாக்கிய உயிர்கள் திரும்பவும் அந்தந்த மூலங்களாகப் பிரிந்து செல்வதையே நாங்கள் இறப்பு என்கிறோம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Paanch said:

அறிவும் ஞானமும் ஒன்றல்ல, அவை வேறானது. ஊர்வன, பறப்பன, நடப்பன இவை அனைத்துக்கும் அறிவுண்டு, இந்த அறிவு இயற்கையால் வழங்கப்பட்டது. மனிதன் மட்டுமே தனக்குத் தரப்பட்ட அறிவை பல பிரிவுகளாக வகுத்துக்கொண்டான்

 

 

 

 

இறைவனின் படைப்புக்களில், உயிர் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அறிவு/ஞானம் உண்டு.  

மனிதன் மாத்திரம், அறிவு விடயத்தில் வித்தியாசமாகப் படைக்கப்பட்டிருக்கிறான்.

ஒரு விடயத்தைப் பற்றிய ஞானத்தை, கல்வியினால் அல்லது அனுபவத்தினால் மனிதன் பெற்றுக்கொள்ள முடியும்.

பிற ஜீவராசிகளுக்கு மேலதிக கல்வி, ஞானம் இல்லை.

அவைகளுக்கு கொடுக்கப்பட்ட அறிவு மட்டுந்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மாங்குயில் said:


 

அறிவின் மேம்பட்ட மிக உயர்ந்த நிலை ஞானம் என்றால், அந்த ஞானத்தைப் பெறுவதற்கும் அறிவின் உச்ச நிலையை நாட வேண்டும் என்று சொல்கிறீர்கள்.

எந்த ஒரு மனிதனும் அறிவின் உச்ச எல்லையைத் தொட முடியாது.  அப்படித் தொட்டவர்கள் யாரும் இல்லை இந்த வையகத்தில்.

அரச மரத்தடியிலோ, காட்டிலோ அல்லது வீட்டிலோ யாரும் தவத்தினால் ஞானத்தைப் பெற முடியாது.  

புத்தர் அறிவாளி அல்ல.

புத்தர் அறிவின் உச்ச எல்லையைத் தொட்டவரும் இல்லை.

புத்தருக்கு ஞானம், அதாவது அறிவு, கிடைத்திருந்தால், பிறரின் மூலம் அவர் அடைந்திருக்க வேண்டும். 

அல்லது இறைவன் புறத்தில் இருந்து கிடைத்திருக்க வேண்டும்.

இயேசு என்பவர் ஞானியா?  ஒருபோதும் இல்லை.

முகம்மது நபி ஞானியா? அப்படியும் இல்லை.

ஞானி, ஞானம், ஞானம் அடைதல், அறிவின் உச்ச நிலை போன்ற சொல்லாடல்கள் - இந்து, புத்த மதங்களைத் தழுவியவை.   

அறிவு, ஞானம் இரண்டும் ஒன்றல்ல என்கின்ற அறிவு எனக்கு உள்ளபோதும் அதனை தெளிவுற உரைக்கக்கூடிய ஞானம் எனக்கு இல்லாத காரணத்தால் இந்த ஞானம்-அறிவு தொடர்பான கருத்தாடலில்(மட்டும்) இருந்து விலகுகிறேன்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, சுவைப்பிரியன் said:

எங்கடை புத்தனையும் துல்பனையும் கானவில்லை

இன்னும் அவை இரண்டுபேரும் மழை வேண்டித் தவமிருக்கினமோ தெரியாது அங்கே

  • கருத்துக்கள உறவுகள்

5 நிமிஷம் மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில், 
அட.... 3 நிமிஷம் நாம் சுவாசிக்கும் சுவாசத்தை உற்றுநோக்க திரணியற்ற சராசரி மனிதன் 
புத்தனை கோழை , அறிவற்றவன் என்று பேசுவது வெறும் பேச்சு.
இப்படியான வரிகள் நீங்கள் சிங்களவரை எதிரிகளாக பார்ப்பதால் தான் வருகிறது என்பது என்னுடைய கணிப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kapithan said:

அறிவு, ஞானம் இரண்டும் ஒன்றல்ல என்கின்ற அறிவு எனக்கு உள்ளபோதும் அதனை தெளிவுற உரைக்கக்கூடிய ஞானம் எனக்கு இல்லாத காரணத்தால் இந்த ஞானம்-அறிவு தொடர்பான கருத்தாடலில்(மட்டும்) இருந்து விலகுகிறேன்.

நன்றி.



 

அறிவு, ஞானம் இரண்டும் ஒன்றல்ல என்கின்ற அறிவு உங்களுக்கு இருக்கிறது என்று ஒத்துக் கொள்கிறீர்கள்தானே!

உங்களுக்கு இருக்கும் அறிவைக்கொண்டுதானே,  அறிவு, ஞானம் இரண்டும் ஒன்றல்ல என்ற தீர்மானத்திற்கு வருகிறீர்கள்.

உங்களுக்கு இருக்கும் அறிவைக்கொண்டு,  'ஞானம்' என்பதை விபரிக்கலாமே!

அண்ணே,   உலகில் ஞானிகள் என்று சொல்பவர்கள் யாரும் கிடையாது.

உங்களுக்கு முடிந்தால், 'ஞானி' என்று சொல்லக் கூடியவர்கள் இப்போது உலகில் யாரும் இருந்தால் காட்டுங்கள்.

அவர் எந்த மதத்தவராயிருந்தாலும் பரவாயில்லை.

அப்படி யாரையும் உங்களுக்கு காட்ட முடியாது.  

இறந்துபோனவர்களைத்தான் காட்டலாம்.

இறந்தவர்களிடம் போய், அவர் 'ஞானியா' இல்லையா என்று பரிசோதிக்க முடியாதுதானே!

  • கருத்துக்கள உறவுகள்

யார் என்ன சொன்னாலும் ஒரு பெண்ணை நேருக்கு நேர் பார்த்து நான் துறவறம் போகப் போறேன் என்று சொல்ல முடியாத ஆம்பிளை நிட் சயமாய் கோழை தான் .

 

On ‎2‎/‎3‎/‎2020 at 9:39 PM, nedukkalapoovan said:

Image may contain: 1 person

புத்தனாவது சுலபம், ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது?🌺🌸

புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார்.

மனைவி கேட்கிறாள்: “என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே! நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது. ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்?”

புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை அல்ல தன்னைத் தான் என்கிறார்.

மனைவி மகனின், முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார்.
அடுத்து அவர் மனைவி மிகச்செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள்.

அது இது தான்: “நீங்கள் இந்த அரண்மனையை விட்டு போகாமல் இங்கேயே தங்கி இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா?”

புத்தர் சொல்கிறார்: “தாராளமாக. அதற்கு நான் மலை, காடு, ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை தான். ஆனால் இங்கிருந்து ஓடிப் போகும் போது நான் அதை அறிந்திருக்கவில்லை. உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும். இடம் பொருட்டே அல்ல”

புத்தனின் வாழ்க்கையை போற்றும் யாரும் அவர் மனைவி யசோதராவைப் பற்றிப் பேசுவது இல்லை.

புத்தர் போனது போல் யசோதரா ஒரு நள்ளிரவில் வெளியேறி இருந்தால் இந்த உலகம் ஒப்புக் கொண்டிருக்குமா... ஓடுகாலி என்றிருக்கும்.
சரி, புத்தர் போன பின்பும்தான் என்ன செய்தது... அவளை வாழாவெட்டி என்றது.

அப்படி ஒன்றும் வயதாகிவிடாத அழகு மங்கை. ஒற்றைக் குழந்தை ராகுலன். விடுமா ஆண்வர்க்கம்.?

சாதாரணமாய் இருந்தாலே விடாது. உரிமையாய் ஒரு ராஜ்ஜியம் வேறு.

எவ்வளவு போராடியிருப்பாள்.?புத்தர் போனதும் தன் தலையை மழித்துக் கொண்டாள். தன் ஆடை அலங்கோலமாக்கிக் கொண்டாள். ஒற்றைப் பிள்ளையின் "அப்பா எங்கே" எனும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமலேயே பதின்வயது வரை வளர்க்கப் போராடினாள்.

எல்லாவற்றையும் துறந்து எத்தொல்லையும் இல்லாமல் துறவியானான் புத்தன்.
எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, எல்லாத் துயரையும் அனுபவித்தபடி துறவியாய் வாழ்ந்தாள் யசோதரா.

எது கடினம் .? சொல்லுங்கள் யார் துறவி இப்போது.!!!

(முகநூல் வழி)

எனக்கு இந்த பதிவை  நெடுக்கர் கொண்டு வந்து இணைத்தது  ஆச்சரியம் அழிக்கிறது ... கல்யாணம் கட்டின பிறகு எப்படி எல்லாம் மாறுகிறார்கள் 
 

On ‎2‎/‎4‎/‎2020 at 1:31 AM, மாங்குயில் said:


யசோதரா துறவியாய் வாழ்ந்தாள் என்று யார்  உங்களுக்குத் சொன்னது?

 

அவவும் யாருடன் படுத்தா என்று கதை கட்டப் போறீங்களா?

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரதி said:


 

அவவும் யாருடன் படுத்தா என்று கதை கட்டப் போறீங்களா?

 


 

யசோதரா மட்டுமல்ல, புத்தர் கூட துறவியாக வாழ்ந்தார் என்று நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறது.

எல்லாவற்றையும் விட்டு விட்டு, காட்டில் போய் மரத்தினடியில் குந்தியிருந்து தவம் செய்வதால், ஒருவரின் ஆசாபாசங்கள் அகன்று போவதில்லை.

உடல் ஆசை, உள்ளத்தில் ஏற்படும் வருடல்கள் போன்றவற்றில் இருந்து விடுபட்டு, எந்த மனிதனாலும் வாழ முடியாது.

மனிதன் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறான்.  தனது மனித இயல்பிலிருந்து  ஒருபோதும் அவன் மாற முடியாது.

 

  • கருத்துக்கள உறவுகள்

மாங்குயில்,  ரதி, 
நமக்கு தெரியாத அல்லது புரியாத விடயங்களை எல்லாம் அப்படி ஒன்றுமே இல்லை, இருக்க முடியாது  என்று நினைப்பது அறியாமை. 
தெரியாததை தெரியாது என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்தால் தான் உண்மையை தேடும் ஆர்வமும், அந்த தேடலும் நமக்குள் நிகழும்.
இதை தான் நம் முன்னோர்கள் அழகாக "கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு" என்று கூறியுள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Sasi_varnam said:

மாங்குயில்,  ரதி, 
நமக்கு தெரியாத அல்லது புரியாத விடயங்களை எல்லாம் அப்படி ஒன்றுமே இல்லை, இருக்க முடியாது  என்று நினைப்பது அறியாமை. 
தெரியாததை தெரியாது என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்தால் தான் உண்மையை தேடும் ஆர்வமும், அந்த தேடலும் நமக்குள் நிகழும்.
இதை தான் நம் முன்னோர்கள் அழகாக "கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு" என்று கூறியுள்ளார்கள். 

சசி நான் என்ன எழுதி இருக்கிறேன் என்று வாசித்து விட்டா பதில் எழுதி உள்ளீர்கள்?... நான் புத்தர் காட்டில் போய் துறவறம் பூண்டார் என்பதை நம்புகிறேன்... ஆனால், அதை அவர் தைரியமாய் அவருடைய மனைவிக்கு சொல்லிப் போட்டு போயிருக்க வேண்டும்....மனைவியின் முகத்தை பார்த்து சொல்ல முடியாமல் ஒழித்து ஓடியவர் என்னைப் பொறுத்த வரை கோழை....புத்தரையும் பார்க்க யசோதரை எவ்வளவோ மேல் ....கும்பிடுவது என்றால் அவவை தான் கும்பிட வேண்டும் 
 

10 hours ago, மாங்குயில் said:


 

யசோதரா மட்டுமல்ல, புத்தர் கூட துறவியாக வாழ்ந்தார் என்று நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறது.

எல்லாவற்றையும் விட்டு விட்டு, காட்டில் போய் மரத்தினடியில் குந்தியிருந்து தவம் செய்வதால், ஒருவரின் ஆசாபாசங்கள் அகன்று போவதில்லை.

உடல் ஆசை, உள்ளத்தில் ஏற்படும் வருடல்கள் போன்றவற்றில் இருந்து விடுபட்டு, எந்த மனிதனாலும் வாழ முடியாது.

மனிதன் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறான்.  தனது மனித இயல்பிலிருந்து  ஒருபோதும் அவன் மாற முடியாது.

 

உங்கட கருத்தை பார்க்க உங்களுக்கே சிரிப்பாய் தெரியவில்லை....எத்தனையோ பெண்கள் கன்னியாஸ்திரிகளாய் போய் மத சேவை செய்யவில்லை ...எல்லாம் மனத்தை கட்டுப்படுத்துவதில் தான் இருக்கு...புத்தர் மனதை கட்டுப்படுத்த காட்டுக்கு போனார்...யசோதரை வீட்டில் இருந்தே மனதை கட்டுப்படுத்தினார்
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, ரதி said:


 

உங்கட கருத்தை பார்க்க உங்களுக்கே சிரிப்பாய் தெரியவில்லை....எத்தனையோ பெண்கள் கன்னியாஸ்திரிகளாய் போய் மத சேவை செய்யவில்லை ...எல்லாம் மனத்தை கட்டுப்படுத்துவதில் தான் இருக்கு...புத்தர் மனதை கட்டுப்படுத்த காட்டுக்கு போனார்...யசோதரை வீட்டில் இருந்தே மனதை கட்டுப்படுத்தினார்
 


 

எல்லா ஆசைகளும் சேர்த்துத்தான், இறைவன் மனிதனைப் படைத்திருக்கிறான்.  

மனிதனின் மனதை ஓரளவுக்குத்தான் கட்டுப்படுத்த முடியும்.

கன்னியாஸ்திரிகள் தங்களது மனங்களை கட்டுப்படுத்திக்கொண்டு, தங்களது ஆசைகளை நிராசை ஆக்கிக் கொள்வதில்லை.

அவர்களுக்கு ஏற்படும் நெருடல்கள், உடல் இச்சைகளினால் எந்தளவு தூரம் அவஸ்தைப்படுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

நெருடல்கள், உடல் இச்சைகளை ஏதோ ஒருவகையில் அவர்களும் ஏதோ ஒருவிதத்தில் அடைந்து கொள்கிறார்கள்.

புத்த பிக்குகளும் அவ்வாறே.

துறவறம் என்பது, மனிதனாகவே ஏற்படுத்திக்கொண்ட ஒரு சாபக் கேடு.


 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.