Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கம் அறிவித்தபடி 1000 ரூபாய் நாளாந்த வேதனம் வழங்குவது உறுதி – பிரதமர் மஹிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் அறிவித்தபடி 1000 ரூபாய் நாளாந்த வேதனம் வழங்குவது உறுதி – பிரதமர் மஹிந்த

mahinda-720x450.jpg

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் என்ற நாளாந்த வேதனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வின்போது, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க இந்த விடயம் தொடர்பாக கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த, கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது, தோட்டத்தொழிலார்களுக்கு சம்பள அதிகரிப்பினை வழங்க அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

அத்தோடு இதற்கு தொழிற்சங்களும் இணக்கம் தெரிவித்துள்ளன என்றும் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் வேதனத்தை வழங்குவதே இந்த அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்தவகையில் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அவர்களுக்கான வேதனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மஹிந்த குறிப்பிட்டார்.

இருப்பினும் இதற்கு பல தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை என செய்திகள் வெளியாகின என அனுரகுமார திஸாநாயக்க மீண்டும் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், சம்பள அதிகரிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அதாவது 3 கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன எனத் தெரிவித்தார்.

இதேவேளை அவர்கள் இதனை மறுத்தால் அவற்றினை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி அனுர குமார திஸாநாயக்க மீண்டும் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த, அதற்கான அவசியம் தற்போது இல்லை என்றும் தோட்டத்தொழிலார்களுக்கான நாளாந்தம் 1000 ரூபாய் வேதனத்தை அரசாங்கம் வழங்கும் என கூறினார்.

http://athavannews.com/அரசாங்கம்-அறிவித்தபடி-1000-ர/

"இதற்கு பதிலளித்த அமைச்சர், சம்பள அதிகரிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அதாவது 3 கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன எனத் தெரிவித்தார்."

மக்களை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் மக்களை ஏமாற்றாமல் இந்த சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

மலையக மக்களின் வாக்குகளின் பலத்தால், அந்த வாக்குகளை குறிவைக்கும் கொடுங்கோல் ஆட்சியாளர்களால் இந்த நன்மை அவர்களுக்கு கிடைக்கவுள்ளது.

தேர்தல் விரைவில் வர இருப்பதால் அநேகமாக இதில் ஏமாற்றுதல்களுக்கு இடமிருக்காது எனக் கருதலாம்.

21 hours ago, ampanai said:

"இதற்கு பதிலளித்த அமைச்சர், சம்பள அதிகரிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அதாவது 3 கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன எனத் தெரிவித்தார்."

மக்களை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் மக்களை ஏமாற்றாமல் இந்த சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இன்னும் சம்பள உயர்வு அமைச்சரினால் உறுதிப்படுத்தப்படவில்லை। இது இலகுவான காரியமாக தெரியவில்லை। இருந்தாலும் மக்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளமாக கிடைத்தால் நல்லதுதான்। 

மலையக அரசியல்வாதிகள் எப்பிடியாவது குட்டையை குழப்பிப் போடுவான்கள் என்ற நம்பிக்கைல மகிந்த உறுதியளித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.