Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் – உலக சுகாதார ஸ்தாபனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

china-2-2.jpg

கொரோனா கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் – உலக சுகாதார ஸ்தாபனம்!

கொரோனா வைரஸ் கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஜிப்ரியிஸஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா கிருமித்தொற்று நாட்டைப் பாதிக்காது என எந்த நாடும் தவறாக எண்ணக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சீனாவுக்கு வெளியே இத்தாலியில் மேலும் 650 பேர் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உலக நாடுகள் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினை எதிர்கொள்ளத் தயாராக இல்லை என உலக சுகாதார நிறுவன அவசரகாலச் சேவையின் இயக்குநர் ரிக் பிரென்னன் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-கொள்ளை-நோயா/

கொள்ளைநோய் (Epidemic) என்பது கொடுக்கப்பட்ட இடத்தில், கொடுக்கப்பட்ட மனித சனத்தொகையில், குறிப்பிட்ட ஒரு நோயானது புதிதாகப் பரவ ஆரம்பிக்கையில், அண்மைய அனுபவங்களின்படி எதிர்பார்க்கும் அளவைவிட எல்லைமீறிப் போவதாகும். நோயானது இப்படி திடீரெனப் பரவ ஆரம்பித்து, விரைவாக சனத்தொகையில் பரவும்.

கொள்ளை நோயானது கட்டாயமாக தொற்றுநோயாக இருக்க வேண்டிய அவசியமில்லை.]உடற் பருமன்[இவ்வாறு கொள்ளைநோய் என அறிமுகப்பட்டது.

https://ta.wikipedia.org/wiki/கொள்ளைநோய்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் விக்கிப்பீடியாவில் யாரும் சென்று கருத்து எழுதலாம். அத்துறை சார்ந்தவர்தான் எழுதுவார் என்றில்லை.

18 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தமிழ் விக்கிப்பீடியாவில் யாரும் சென்று கருத்து எழுதலாம். அத்துறை சார்ந்தவர்தான் எழுதுவார் என்றில்லை.

உண்மை. ஆனால், தொழில்சார் வல்லுனர்கள் இல்லை தெரிந்தவர்கள், நல்லவர்கள், வல்லவர்கள் என யார் விரும்பினாலும் திருத்தலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ampanai said:

உண்மை. ஆனால், தொழில்சார் வல்லுனர்கள் இல்லை தெரிந்தவர்கள், நல்லவர்கள், வல்லவர்கள் என யார் விரும்பினாலும் திருத்தலாம்.  

பல தகவல்கள் தவறாகவும் பதியப்பட்டிருக்கின்றன. அதைச் சொன்னேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ampanai said:

உண்மை. ஆனால், தொழில்சார் வல்லுனர்கள் இல்லை தெரிந்தவர்கள், நல்லவர்கள், வல்லவர்கள் என யார் விரும்பினாலும் திருத்தலாம்.  

 

6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பல தகவல்கள் தவறாகவும் பதியப்பட்டிருக்கின்றன. அதைச் சொன்னேன்.

அப்படி... உங்களுக்கு,  தெரிந்து இருந்தால்...
நீங்களும், திருத்தி எழுதியிருக்கலாம் தானே...
நீங்கள்....  ஏன், அதனை   செய்யவில்லை?

அதை... விட்டுட்டு, குறை காண்பது... சரியல்ல. :)

  • கருத்துக்கள உறவுகள்

சீனா,தென் கொரியா, ஈரான் போன்ற அமெரிக்க விரோத நாடுகளில் கொரோனா கொடி கட்டு பறக்குது...பின்னால் யார் இருக்கிறாக்கள் என்று தெரியுது 

 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ரதி said:

சீனா,தென் கொரியா, ஈரான் போன்ற அமெரிக்க விரோத நாடுகளில் கொரோனா கொடி கட்டு பறக்குது...பின்னால் யார் இருக்கிறாக்கள் என்று தெரியுது 

 

தென் கொரியாவா அல்லது வட கொரியாவா.....தென்கொரியா அமெரிக்க ஆதரவு நாடு என்று நினைக்கிறேன்.....!

11 minutes ago, suvy said:

தென் கொரியாவா அல்லது வட கொரியாவா.....தென்கொரியா அமெரிக்க ஆதரவு நாடு என்று நினைக்கிறேன்.....!

இருவரையும் பிரித்து ஆளுவதில் தனி சுகம். 

ஜெர்மனியிலும் இதைத்தான்  செய்தார்கள். 

விட்டால் இரண்டு கொரியாவும் சேர்ந்து விடலாம். விடமாட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இன்டைக்கு மட்டும் 12க்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகளாம்...எங்க போய் முடிய போகுதோ 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Coronavirus-Twelve-more-cases-confirmed-in-England.jpg

இங்கிலாந்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

இங்கிலாந்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் மூன்று நோயாளிகள் இங்கிலாந்தில் ஏற்கனவே வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்களாக அறியப்படுவதாக தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விற்றி (Chris Whitty) கூறியுள்ளார்.

இதனிடையே, எசெக்ஸைச் சேர்ந்த ஒருவர் எவ்வாறு வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டார் என்பது கண்டறியப்படவில்லை. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதித்துள்ள ஏனைய எட்டுப் பேரில் ஆறு பேர் இத்தாலியில் இருந்து திரும்பியவர்கள் எனவும், இருவர் ஈரானில் இருந்து வந்தவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோயாளிகள் லண்டன், வெஸ்ற் யோர்க்ஷயர் (West Yorkshire), கிரேற்றர் மன்செஸ்ரர் Greater Manchester, ஹெர்ட்ஃபோர்ட்ஷைர் Hertfordshire மற்றும் க்ளோசெஸ்ரர்ஷைர்  (Gloucestershire) ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பேராசிரியர் விற்றி கூறியுள்ளார்.

இதேவேளை, உலகம் முழுவதும் 50இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை சுமார் 86,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன்  உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 900ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இங்கிலாந்தில்-மேலும்-12-பே/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.