Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள் ; தாயும் சேய்களும் நலம் – வைத்தியசாலை மருத்துவ நிபுணர்

Featured Replies

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த 2ஆம் திகதி தாயார் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளும் நலமாக உள்ளனர் என்று வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி. ஜமுனானந்தா தெரிவித்தார்.

தெல்லிப்பளை கட்டுவன் பகுதியைச் கிருஷ்ணபவன் கீர்த்திகா தம்பதிகளுக்கு நான்கு குழந்தைகள் கிடைக்கப்பெற்றனர். இரண்டு வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர்.கடந்த வருடம் கருவுற்றிருந்த கீர்த்திகா, கடந்த 2 ஆம் திகதி பிரசவ வலி காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அவருக்கு அன்றைய தினம் இரவு சுகப்பிரசவம் மூலம் நான்கு குழந்தைகள் கிடைக்கப்பெற்றனர். அதில் மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் அடங்குகின்றனர்.

தற்போது குழந்தைகள் வைத்தியசாலையின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தாயும் சேயும் நலமாக உள்ளனர்  என்று போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ நிபுணர் சிவலிங்கம் ஜெயபாலன் தெரிவித்தார்.

குழந்தைகள் தொடர்ந்தும் வைத்தியசாலை மருத்துவ நிபுணரின் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் வெகு விரைவில் வீடு செல்லக்கூடிய நிலமை ஏற்படும். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 4 குழந்தைகள் ஒரு பிரசவத்தின் மூலம் பெறப்பட்ட இதுவே முதல் தடவையாகும் என்று மருத்துவ நிபுணர் ஜெயபாலன் மகிழ்ச்சி வெளியிட்டார்.

https://www.virakesari.lk/article/77365

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தம்பதிகளுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் 
 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தம்பதிகளுக்கும்,பிள்ளைகளுக்கும்......!   💐

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

யாழில் ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகள் பிறப்பு : மீண்டும் அதிசயம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரு பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த 2வது சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.

யாழ்.உடுவில் பகுதியை சேர்ந்த 30 வயதான ஆசிரியை ஒருவரே ஒரு பிரசவத்தில் 4 பெண் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

சத்திர சிகிச்சை மூலம் மகப்பேற்று நிபுணர் வைத்திய கலாநிதி சுரேஸ்குமார் குழந்தைகளையும், தாயையும் நலமாக மீட்டார்.

இதேபோல் இம்மாதம் 2ம் திகதியும் யாழ்.கட்டுவன் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

https://www.thaarakam.com/news/117462

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்திகள். Fertility treatment தான் காரணம். மரபு வழியாக வந்தாலே ஒழிய (இரட்டையர்) இப்படி வருவது செயற்கை மருந்துகள் தான் காரணம் 

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பிரசவத்திலும்.... ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும்....
மற்றவருக்கு... நான்கு பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன. 

குந்தைகள்... நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தம்பதிகளுக்கு.எல்லாம் அந்த ஆன்டவன் செயல்;

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, nilmini said:

மகிழ்ச்சியான செய்திகள். Fertility treatment தான் காரணம். மரபு வழியாக வந்தாலே ஒழிய (இரட்டையர்) இப்படி வருவது செயற்கை மருந்துகள் தான் காரணம் 

ஓ....அதுதான் இப்ப கிழட்டு பிரபலங்களுக்கு எல்லாம் இரட்டை குழந்தையாய் பிறக்குதோ!!😁

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக. முன்பெல்லாம் இரட்டையர்கள் பிறப்பது தான் வழக்கம் . எப்போதாவது Triplets , quadruplets  என்று பிறப்பார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.