Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Featured Replies

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கையில் தற்போது இரு கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று காலை பரவிய வதந்திகளால் சில பாடசாலைகளில் பதற்ற நிலை ஏற்பட்டது.

இதனால் பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு அழைத்து சென்ற சம்பவங்கள், பாடசாலைக்கு சென்று அதிபர் ஆசிரியர்களுடன் முரண்பட்ட சம்பவங்கள் கொழும்பு ஆனந்தா கல்லூரி, திக்வெல்லை மற்றும் தம்புள்ளை ஆகிய பகுதி பாடசாலைகளில் பதிவாகியுள்ளன.

இத்தகைய வதந்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந் நிலையிலேயே பாடசாலைகளில் பரவிய வதந்திகளால் பெற்றோர் மத்தியில் வீண் அச்சம் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சு நாளை முதல் எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதிவரை விடுமுறை அறிவித்துள்ளது.

இன்று கொழும்பு ஆனந்தா கல்லூரி, கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போது அங்கு சென்ற பெற்றோர்கள் தமது பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து செல்ல முயன்றதால் பதற்ற நிலை ஏற்பட்டது.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கை பிரஜையான மத்தேகொடையைச் சேர்ந்த நபரின் பிள்ளைகள் இருவர் ஆனந்தா கல்லூரியில் கற்பதாகவும், அவர்களுக்கும் அத் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின.

எனினும் முதலில், குறித்த கொரோன நோயாளரின் மகன்மார் அங்கு கல்வி கற்கின்றனரா என ஆனந்தா கல்லூரியின் அதிபரிடம் வினவியது. இதற்கு பதிலளித்த ஆனந்தா கல்லூரியின் அதிபர் இரு மகன்மார் அக் கல்லூரியில் கல்வி பயில்வதாக பரவிய தகவல் பொய்யானது எனவும், ஒரு மகன் மட்டும் 12 ஆம் தரத்தில் கல்வி பயில்வதாக கூறினார்.

குறித்த 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் கடந்த செவ்வாயன்றே இறுதியாக வருகை தந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த பின்னனியிலேயே குறித்த மாணவனுக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளதாக கூறி, வதந்திகள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நோயாளியின் மகனுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பரப்பப்படும் தகவல்களின் எவ்வித உண்மையும் கிடையாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நோயாளியின் குடும்பத்தினரால் பாரிய ஒத்துழைப்பு வழங்கப்படுவதாகவும் அதனால் அவர்கள் வீட்டிற்குள்ளேயே கண்காணிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

குடும்பத்தினருக்கு தொற்றுக்கான எவ்வித அறிகுறியும் இல்லை எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இந் நிலையிலேயே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் முதல் நோயாளியின் மகன், கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி பயில்வதால், அது சார்ந்து பரவிய வதந்திகளையடுத்தும் இன்று காலை காலை தொற்றுநோயியல் தடுப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர்கள் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்கள் பாடசாலைக்கு சென்று விடயங்களை உரிய முறையில் அங்கிருந்த பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினர்.

எவ்வாறாயினும் ஆனந்தா கல்லூரியில் கொரோனா வதந்திகளால் சில சம்பவங்கள் இடம்பெற்ற போதும் பாரிய பதற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என அக் கல்லூரி அதிபர் கூறினார்.

எனினும் சில பெற்றோர் பிள்ளைகளை அச்சம் காரணமாக பாடசாலைக்கு அனுப்பாத சம்பவங்கள் பதிவானதாகவும், சிலர் மாணவர்களை மீள அழைத்துச் சென்றதாகவும் கூரிய அவர், விடயங்களை சுகாதார, கல்வி அமைச்சுக்களுக்கு அறிவித்ததாக சுட்டிக்காட்டினார்.

இதனிடையே கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர் சுற்றுலா சென்று தங்கியிருந்த இடங்களில் ஒன்றான திக்வெல்லை சுற்றுலா விடுதி ஒன்றில் சேவையாற்றுவோரின் பிள்ளைகள் குறித்த பகுதி பாடசாலைகளில் கற்பதை மையப்படுத்தி திக்வெல்லையிலும், அதனை ஒத்த சம்பவங்கள் தம்புள்ளையிலும் பாதிவாகியிருந்த.a

இந் நிலையிலேயே கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் இன்று அறிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/77684

Edited by ampanai

  • Replies 1.1k
  • Views 268.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கொரோனா வைரஸ் பரவல் அடைவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

 

(ஆர்.விதுஷா)

இலங்கை பிரஜையொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,இந்த வைரஸ் தொற்று பரவலடைவதற்கானசாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுவதாக அரசாங்க மருத்துவஅதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

gmoa.jpg

 

ஆகவே ,அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளவேண்டும் எனவும் அந்த சங்கம்கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரிதஅளுத்கேயின் கையொப்பத்துடன் இன்று வெளியிடப்பட்டிருந்தஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,

உலகசுகாதரஸ்தாபனம் கொரோனா (கொவிட்-19 )வைரசினைஉலகளாவிய ரீதியில் பரவலடையும் வைரஸ்என்றுஅறிவித்துள்ளது.. இதுவரையில், 114நாடுகளைசேர்ந்தஒரு இலட்சத்திற்கும்அதிகமானோர்இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகஅடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், நான்காயிரம்பேர் மரணித்துள்ளதுடன்,மரணிப்பவர்களின் வீதம் நாளாந்தம்அதிகரித்தவண்ணமே உள்ளது.

இந்த கொரோனா வைரஸ் முதலில்பரவலடைந்த சீனாவின் வூஹான் மாநிலம்தொடக்கம் ஏனையமாகாணங்களிலும் , தற்போது வைரஸ் பரவல்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.இருப்பினும் , இத்தாலி மற்றும் ஈரான், தென்கொரியா , ஆகியநாடுகளில்கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியுள்ளது.

இதற்கமைய இலங்கை தொடர்பிலும் அதிக அவதானம் செலுத்த வேண்டும். இலங்கையில் கொரோனா வைரஸ்தொற்றுக்குள்ளாகியஇலங்கை பிரஜையொருவர் அடையாளம்காணப்பட்டுள்ளார்.இந்நிலையில் , நோய்த்தொற்றுபரவலடைவதற்கானசாத்தியக்கூறுகள் அதிகம்காணப்படுகின்றன.

இவ்விடயம்தொடர்பில் , அரச வைத்திய அதகாரிகள் சங்கம்தொடர்புடைய அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த செவ்வாக்கிழமை இவ்விடயம்தொடர்பிலான விசேட கலந்துரையாடலை ஜனாதிபதியுடன் முன்னெடுத்திருந்தோம் .

அந்த சந்திப்பின் போதுஜனாதிபதியிடம்தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகளுக்குஉட்படுத்தப்பட்டவர்களுக்கு அதிககவனம் செலுத்தி தொடர்ந்து கண்காணிப்பு நவடிக்கைளைமுன்னெடுத்து செல்ல வேண்டும். நோய்த்தொற்றுக்குள்ளானவர்களைதனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வசதிகளைஅனைத்து வைத்தியசாலைகளுக்கும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான செய்திகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவேண்டும். ஊடக நிறுவனபிரதானிகளுடனானவிசேட சந்திப்பினைஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.

அதற்கு மேலதிகமாக ஒருவேளை அவசரகால நிலைமை அறிவிக்கப்படுமாயின் அக்காலகட்டத்திற்கு தேவையான மருந்து மற்றும் சுகாதார வசதிகளை , களஞ்சியப்படுத்தி வைப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும் எனவும்வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் வருபவர்கள் தொடர்பில் அதீத கவனம் செலுத்தல் மற்றும் நோய்க்காரணிகளை கண்டுபிடிக்கும் இயந்திர வசதிகளை பொதுமக்கள்இலகுவில் பயன்படுத்தும் வகையில் செயற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தொம்.

நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவால் இருப்பதற்கும் , மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைளை முன்னெடுத்து செல்வதற்கு அரசாங்கம் செயற்படுத்தும் திட்டங்களுக்கு , அரசாங்கமருத்துவசங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளது.

https://www.virakesari.lk/article/77685

  • தொடங்கியவர்

image_ad12b1fd00.jpg

  • தொடங்கியவர்

வைரஸ் தாக்கிய இருவருடன் இருந்த 65 பேர் கண்டுபிடிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு இலக்காகியுள்ள இருவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 65 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இவர்களில் 13பேர், ஏற்கெனவே வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

கொரோனா தாக்கத்துக்கு இலக்காகியிருந்த முதலாவது நபர் (சுற்றுலா வழிகாட்டி) நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களைக் கொண்டவர் என்பதோடு, நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும், ஜாசிங்க தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/வரஸ-தககய-இரவரடன-இரநத-65-பர-கணடபடபப/175-246835

  • தொடங்கியவர்

11 நாடுகளுக்கு தடை விதித்தது இலங்கை

கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதன் காரணமாக, 11 நாடுகளைச் சேர்ந்த சுற்லுலாப் பயணிகள்  இலங்கை வருவதற்கு,  அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இதற்கமைய,  இந்த தடை உத்தரவு நாளை (14) நள்ளிரவு முதல் அமுலாகுமென, விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தென்கொரியா, இத்தாலி,  ஈரான், பிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன், ஓஸ்ரியா  உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

http://www.tamilmirror.lk/செய்திகள்/11-நடகளகக-தட-வதததத-இலஙக/175-246841

  • தொடங்கியவர்

வதந்தியை நம்ப வேண்டாம் ! நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

( ஆர்.யசி )

நாட்டின் ஏற்றிபொருள் தட்டுப்பாடு நிலவவில்லை எனவும் மிகத் தாராளமாக எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதன் காரணத்தினால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.

நாட்டில் கடந்த இரண்டு தினங்களாக சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக நிரம்பி வழிவதன் காரணத்தையும் மக்கள் மத்தியில் அனாவசிய அச்சம் ஏற்பட்டுள்ள காரணியையும் கருத்தில் கொண்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரின் கையொப்பத்துடன் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டது.


Petrol.jpg"

இதில் குறிப்பிடப்பட்டுள்ளதானது, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஒன்று நிலவவில்லை. போதுமான அளவு எரிபொருள் சகல பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. எதிர்வரும் காலத்தில் தட்டுப்பாடு நிலவாத வகையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள காரணத்தினால் மக்கள் அனாவசிய அச்சம் கொள்ளத் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.

புரளிகளை பரப்பும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அவதானம் செலுத்தி எவரேனும் பொய்யான செய்திகளை பரப்பி மக்களை குழப்பமடைய செய்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் தீர்மானம் எடுக்கப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/77735

  • தொடங்கியவர்

மேலும் மூவருக்கு கொரோனா

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்துள்ள இலங்கையர்களில் மூவருக்குக் கொரோனா தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளதென, சுகாதாரச் சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவர்களில் ஒருவருக்கு 41 வயதென்றும் இவர், அண்மையில் ஜேர்மன் நாட்டுக்குச் சென்று திரும்பியவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இவர் தற்போது, கொழும்பு - ஐடீஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றாரென, சுகாதாரச் சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, 37 வயதுடைய இன்னொருவருக்கும் கொரோனா தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளது. இவர், இத்தாலியிலிருந்து வந்தவர் என்றும் மட்டக்களப்பு - கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தப்படும் மய்யத்துக்கு அனுப்பப்பட்டவர்களில் ஒருவர் என்றும், ஜாசிங்க தெரிவித்தார்.

இவர் தற்போது, பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், பணிப்பாளர் நாயகம் கூறினார்.

43 வயதுடைய மற்றைய கொரோனா நோயாளியும், கந்தக்காடு மய்யத்திலிருந்தவர் என்றும் அவர் தற்போது, கொழும்பு - ஐடீஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்த ஜாசிங்க, இதுவரையில் இலங்கையில், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, ஐந்தாக அதிகரித்துள்ளதென்றார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மலம-மவரகக-கரன/150-246847

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

11 நாடுகளுக்கு தடை விதித்தது இலங்கை

 

7 hours ago, ampanai said:

தென்கொரியா, இத்தாலி,  ஈரான், பிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன், ஓஸ்ரியா  உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

http://www.tamilmirror.lk/செய்திகள்/11-நடகளகக-தட-வதததத-இலஙக/175-246841

9 நாடுகள் தானே ?

+Germany, Switzerland

  • தொடங்கியவர்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

 

9 நாடுகள் தானே ?

+Germany, Switzerland

Earlier the Civil Aviation Authority (CAA) said that passengers from France, Germany, Spain, Sweden, Switzerland, Denmark, Netherlands and Austria have been banned from visiting Sri Lanka.

The Civil Aviation Authority also imposed a travel ban for passengers flying from Iran, Italy and South Korea.

https://colombogazette.com/2020/03/13/sri-lanka-bans-passengers-from-multiple-countries/

கொரோனா வைரஸ்: இராணுவச்சிப்பாய் ஒருவர் உட்பட இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி

coronna-1.jpg

கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி காரணமாக இராணுவச்சிப்பாய் ஒருவர் உட்பட இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு, மன்னார் இராணுவ முகாமில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அதேபோன்று மற்றொருவரும் நேற்றிரவு வவுனியாவிலிருந்து அழைத்துவரப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இருவருக்கும் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப மருத்துவ சோதனைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனினும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.https://athavannews.com/கொரோனா-வைரஸ்-இராணுவச்சி/

  • தொடங்கியவர்

கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்று உள்ளவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

எதிர்வரும் 2 வாரங்களுக்கு மக்கள் பெருமளவில் கூடும் நிகழ்வுகளுக்கான அனுமதிகளை வழங்குவதை நிறுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தபட்டுள்ளது என்றார். 

குறிப்பாக வெளிநாடுகளில் அதிகளவில் மக்கள் கூடிய இடங்களிலிருந்தே கொரோனா தொற்று பரவியுள்ளதென தெரியவந்துள்ளதென தெரிவித்த அவர்,  இலங்கைக்குள் தனிமைப்படுத்தபட்ட மருத்து ஆய்வு கூடங்கள் குறுகிய காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன என்றார். 

அதனால் சில குறைபாடுகள் நிலவியிருக்காலம் எனத் தெரிவித்த அவர்,  அந்த நேரத்தில் இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்கள் தெரிவித்த எதிர்ப்பால் அந்த பணிகள் மேலும் தாமதமாகின என்றார்.

அதேபோல் வீடுகளிலிருந்து தனிமைப்படுத்தபட்ட ஆய்வை செய்ய முறையாக ஒத்துழைப்பது அவசியமென கோரிய அவர் வெளிநாடுகளிலிருந்து வருவோராலேயே நோய் பரவுகிறது என்றார். 

மேலும் கொரோன தொற்று ஒழிப்புக்கான செயலணியின் பணிகள் நாளைய தினம் முதல் ராஜகிரியவில் அமைக்கப்படவுள்ள விஷேட அலுவலகத்திலிருந்து முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.    

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கரன-தறறயர-எணணகக-7-ஆக-அதகரபப/150-246867

  • தொடங்கியவர்

விழாக்கள், பாரிய கூட்டங்களுக்கு தடை

கொரோனா வைரஸ் பரவும் அச்சம் காரணமாக நாடு முழுவதும் மக்கள் ஒன்று கூடும் விழாக்கள், பாரிய கூட்டங்கள் ஆகியவை 2 வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மேலும், பொதுமக்கள் சன நாட்டமுள்ள இடங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/77811

  • தொடங்கியவர்

இலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை !

<p>இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது 10  ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இன்றையதினம் மாத்திரம் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளானவர்கள் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது.

இதனால் பொதுமக்கள் அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் சுகாதார நடவடிக்கைகளை கடைப்பிடித்து அரசாங்கம் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நேற்றையதினம் 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், இன்றையதினம் மாலை 44 , 43 வயதுடைய இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

குறித்த கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இத்தாலியில் இருந்து வருகை தந்துள்ளதோடு , ஒருவர் கண்டக்காடு மற்றும் சிலாபம் நாத்தாண்டி பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

இதையடுத்து 7 ஆக அதிகரித்த கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, சிறிது நேரத்தில் 8 ஆக அதிகரித்தது.

இத்தாலியில் இருந்து கடந்த 7 ஆம் திகதி இலங்கை வந்த 42 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மேலும் இரு பெண்களுக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இலங்கையில் இதுவரை 10 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

காய்ச்சலுக்காக சிகிச்சைபெற்று வந்த 17 வயதுடைய யுவதியொருவருக்கும் கடந்த 7 ஆம் திகதி இத்தாலியில் இருந்து இலங்கை வந்த 56 வயதுடைய பெண்ணொருவருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

 

https://www.virakesari.lk/article/77822

 

 

  • தொடங்கியவர்

Update - 16 ஆம் திகதி விடுமுறை !"

எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமையை விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமையை வர்த்தக, வங்கி மற்றும் பொதுவிடுமுறை தினமாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட் கிழமை அரச விடுமுறை வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/77824

  • தொடங்கியவர்

தடுப்பு முகாம் : கண்டகாடு, வெலிக்கந்தை

400 பேர் வரை தடுத்து வைக்கப்படலாம்

S5200018.jpg

S5200012.jpg

 

 

400 க்கு மேற்பட்ட மருந்து கொல்லி பூசும் காவலர்கள்

DSCF0756.jpg

பீதியால் அங்காடிகளை வழித்தெடுக்கும் மக்கள் 

IMG-20200313-WA0006.jpg

  • தொடங்கியவர்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்!

 (எம்.மனோசித்ரா)
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 11 ஆவது நபர் இன்று மாலை இணங்காணப்பட்டார்.

இவர் இதற்கு முன்னர் ஜேர்மனிலிருந்து வருகை தந்த கொரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட நபருடன் வருகை தந்தவர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

45 வயதுடைய குறித்த நபர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/77881

  • தொடங்கியவர்

Wher_can_you_get_tested_for_COVID-19_tamil-01.jpg

  • தொடங்கியவர்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவரும் இத்தாலியிலிருந்து வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த ஆண்கள் என்பதுடன் அவர்கள் தற்போது கந்தகாடு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் குறித்த 7 பேரும் தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் தற்போது மொத்தமாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 18 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்கத்கது. 

https://www.virakesari.lk/article/77890

  • தொடங்கியவர்

திருமண நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படவில்லை..!

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவியுள்ள நிலையில் மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டாலும் திருமண நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன, நேற்று இடம்பெற்ற ஊடகவியாலாள் சந்திப்பில் வைத்து இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான நிகழ்வுகள் நடத்தப்படுமாயின் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி தனிமைப்படுத்தல் நடவடிக்கையை எடுக்குமாறு அவர் தெரிவித்துள்ளார். எனினும் விழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கான அனுமதியை வழங்க வேண்டாம் என அனைத்து காவல்துறை நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

http://www.hirunews.lk/tamil/236580/திருமண-நிகழ்வுகளுக்கு-தடை-விதிக்கப்படவில்லை

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு : சுகாதார அமைச்சு விசேட அறிவிப்பு

corrona-virus-1.jpg

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் பெரும்  அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மார்ச் மாதம் 10 ஆம் திகதக்கு முன்பாக நாட்டிற்கு வருகை தந்த நபர்களை தடுப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச தகவல் திணைக்களத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் நான்காயிரத்து 405 பேர் தொடர்ந்து  கண்காணிக்கப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இவர்களுள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 2,769 இலங்கையர்கள் உட்பட 1,120 சீனர்கள் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை மேலும்  7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் இதுவரையும் 18 பேர்  கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-தாக்கம்-அதி/

  • கருத்துக்கள உறவுகள்

E9-FC2471-8031-4465-A3-C8-66010478-F19-B

  • கருத்துக்கள உறவுகள்

இரவோடு இரவாக... வவுனியா வந்த கொரோன சந்தேக விமான பயணிகள்.
மட்டக்களப்பை அடுத்து தற்போது வவுனியாவில் கொரோனா சிகிச்சை முகாம்.

9 minutes ago, Kavi arunasalam said:

E9-FC2471-8031-4465-A3-C8-66010478-F19-B

கொரோனாவின் பரவலை சிறப்பாக காட்டும் சித்திரம்!

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 22 ஆவது நபரும் அடையாளம் காணப்பட்டார்!

Disease-X-Coronavirus-1232570.jpg

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 22 வது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த 73 வயது ஆண் தற்போது கராபிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது 22 ஆக அதிகரித்துள்ளது.

http://athavannews.com/கொரோனாவினால்-பாதிக்கப்-4/

  • தொடங்கியவர்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்தது!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 28 ஆக அதிகரித்துள்ளது.

இது தவிர, நாடு முழுவதும் உள்ள பல வைத்தியசாலைகளில் சுமார் 200 நோயாளிகள் இன்னும் கண்காணிப்பில் உள்ளதாகவும் அனில் ஜசிங்க மேலும் கூறினார்.

இன்று மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/77971

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.