Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களை பலி எடுப்பதில் சிங்கள அரசு குறியாக இருக்கிறது….

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களை பலி எடுப்பதில் சிங்கள அரசு குறியாக இருக்கிறது….

March 14, 2020

Sivamohan-800x533.jpg

வெளி நாட்டிலிருந்து வரும் பயணிகளின் கொரேனா வைரஸ் தடுப்பு மையமாக வவுனியா-மன்னார் வீதியில் உள்ள பம்பைமடு பெண்கள் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாட்டிற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, கொரோனா வைரஸ்  தொடர்பான அனைத்து விதமான செயற்பாட்டு நிலையங்களையும் வடக்கு கிழக்கு தமிழர் நிலங்களில் இருந்து அகற்றி சிங்களப்பிரதேசத்தில் அமைத்துக் கொள்ளுமாறும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

-இவ்விடையம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

நடந்து முடிந்த யுத்தத்தின் மூலம் இலட்சக்கணக்கான உயிர்களையும், சொத்துக்களையும் பரிகொடுத்த மக்கள் தங்களுடைய சுய முயற்சியால் மீட்சி பெற்று வருகிறார்கள்.

அதை பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள அரசு தமிழ் மக்களை நோயாளிகளாக்கி மீண்டும் ஒரு இன அழிப்பை செய்வதற்கு முயற்சிக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.

கொரோனா நோயாளர்களை தங்கவைப்பதற்கு அல்லது வெளிநாட்டில் இருந்து வருபவர்களை தடுத்து வைத்து பரிசோதனை செய்வதற்கு தென் பகுதியில் இடங்கள் இல்லையா? வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசம் மட்டும்தான் உங்கள் கண்களுக்கு தெரிகிறதா?

இவ்வாறு தான் கடந்த வருடம் கொழும்பு குண்டு வெடிப்புகளின் பின் இலங்கையில் இருந்த பாகிஸ்தானியர்களை வடக்கில் தங்க வைப்பதற்கான நடவடிக்கையினை அரசு மேற்கொண்டிருந்தது.

மேலும் மேலும் தமிழர்களை அழித்தொழிக்கும் சிந்தனைகளை அரசு கைவிட வேண்டும. எவ்வளவு வறுமையில் வாழ்ந்தாலும் தமிழ் மக்கள் தூய்மையில் சிறந்தவர்களாகவே காணப்படுகிறார்கள்.

கலாச்சார சீர் கேடுகளுடன் நோய் கிருமிகளை காவிக் கொண்டு வரும் வெளி நாட்டவரை தமிழர் தாயகப்பகுதிகளில் தங்க வைக்கும் நடவடிக்கையை அரசு உடனடியாக கைவிடுவதுடன் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பகுதியில் அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தி அவர்களின் அனுமதியினை பெற வேண்டும். என அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

http://globaltamilnews.net/2020/138254/

14 hours ago, கிருபன் said:

அதை பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள அரசு தமிழ் மக்களை நோயாளிகளாக்கி மீண்டும் ஒரு இன அழிப்பை செய்வதற்கு முயற்சிக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது

கூட்டமைப்பு ஊடகத்தை கூட்டி கேள்விகளை கேட்டு மக்களை ஏமாற்றுவதை விட ...

- சிங்கள சுகாதார அமைச்சின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் 
- மக்களை இணைத்து வைத்தியசாலைக்கான பாதைகளை மறுத்து போராட்டம் செய்ய வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

மக்களை இணைத்து வைத்தியசாலைக்கான பாதைகளை மறுத்து போராட்டம் செய்ய வேண்டும் 

A87-FBF0-F-4-F63-42-A1-8-C9-C-3-A671256-

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு வேலை மக்களை ஏத்தி விடுவது தான் பலன் இவர்களுக்கு பாதிப்பு மக்களுக்கு

21 hours ago, கிருபன் said:

கலாச்சார சீர் கேடுகளுடன் நோய் கிருமிகளை காவிக் கொண்டு வரும் வெளி நாட்டவரை தமிழர் தாயகப்பகுதிகளில் தங்க வைக்கும் நடவடிக்கையை அரசு உடனடியாக கைவிடுவதுடன்

கலாச்சார சீர்கேடும் நோய் கிருமிகளை கொண்ட வெளிநாட்டவருடன் தமிழர்கள் வெளிநாடுகளில் வாழலாமோ?

40 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கலாச்சார சீர்கேடும் நோய் கிருமிகளை கொண்ட வெளிநாட்டவருடன் தமிழர்கள் வெளிநாடுகளில் வாழலாமோ?

இதைச் சொல்வது 'படித்துப்'  பட்டம் பெற்ற ஒரு உயர்தரநிலையுலுள்ள ஒருவர்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இவருக்கு வேலை மக்களை ஏத்தி விடுவது தான் பலன் இவர்களுக்கு பாதிப்பு மக்களுக்கு

கலாச்சார சீர்கேடும் நோய் கிருமிகளை கொண்ட வெளிநாட்டவருடன் தமிழர்கள் வெளிநாடுகளில் வாழலாமோ?

உங்களின் வாதம் அடிப்படை விளக்கங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது.

தாயகத்தில் எம் மக்கள் போரால் முற்றிலுமாக சிதைக்கப்பட்ட மண்ணில் அடிப்படைவசதிகள் குறைந்த நிலையில் வாழ்ந்து வரும் போது.. அங்கு அதிக தொற்றுத் தன்மை நிறைந்த.. கொரானா வைரஸ்கள் பரவக் கூடிய சூழலை ஏற்படுத்துவது அந்த மக்கள் கூண்டோடு அழிப்பதற்கே உதவும்.

இந்தச் சூழலையும் வெளிநாட்டில் வாழும் நம்மவர்கள் எதிர்கொள்ளும் சூழலையும் உங்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லையா..??!

கொழும்பில்.. நீர்கொழும்பில்.. மற்றும் மேற்கு.. மத்திய.. தெற்கு மாகாணங்களில் போர்த்தாக்கம் மிகக் குறைவு என்பதுடன் அடிப்படை சுகாதார வசதிகள் ஒப்பீட்டளவில் மேம்பட்டிருக்கின்றன. மேலும் சர்வதேச விமான நிலையம் உட்பட குடிவரவாளர்கள் நீர்கொழும்பு.. கொழும்பை தான் முதலில் அடைவார்கள். நோய் தொற்றுள்ள ஒருவரை.. பல நூறு கிலோமீற்றருக்கு அப்பால் நகர்த்திச் செல்லும் போது தொற்றுக்கான வாய்ப்பும் நகர்த்திச் செல்லப்படும். 

அதைதவிர்த்து.. குடிவரவாளர்களை.. கட்டுநாயக்கா பகுதியில் வைத்தே தனிமைப்படுத்துவது இலகும்.. செலவு குறைந்ததும் ஆகும். உள்ளூர் மக்களிடையே தொற்றுக்கான வாய்ப்பையும் குறைக்கும். அதைவிடுத்து எதற்காக.. தமிழர் நிலங்களை நோக்கி பல நூறு கிலோமீற்றர்கள் தாண்டி தொற்றுச் சந்தேக நபர்களை நகர்த்த வேண்டும். குடிவரவாளர்களை நகர்த்த வேண்டும்..???!

உலகில் எந்த நாடும் இப்படிச் செய்யவில்லையே...??! சொறீலங்காவைத் தவிர..!!!!!

லண்டன் ஊடாக வரும் தொற்றுக்களுக்கு லண்டனில் தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது.. ஸ்காட்லாந்தில் அல்ல. 

இவர்கள் எவ்வளவுக்கு எவளவு சத்தமிடுகிறார்களோ , அத்தனை அதிகமாக அவன் வடக்கு கிழக்கில் அதிக முகாம்களை உருவாக்குவான்।  அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது। எல்லாம் தேர்தல் வாக்குகளை அள்ளுவதட்கே। சிங்களவனுக்கு சிங்கள வாக்குகள், தமிழனுக்கு தமிழ் வாக்குகள்।

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.