Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரவு பகலாக ஓய்வின்றிப் போராடும் ஸ்ரீலங்கா மருத்துவர்கள்! புகைப்படங்கள் வெளியாகின.... பாராட்டும் பொது மக்கள்

Featured Replies

உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் ஸ்ரீலங்காவிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது.

கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பவர்களை இனம் கண்டு அவர்களுக்கு அனைத்து மருத்துவ தேவைகளையும் மருத்துவர்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், அவர்களின் அர்ப்பணிப்பும், கடுமையான உழைப்பும் மனிதாபிமான செயல்பாடுகள் தொடர்பிலும், கொழும்பு அங்கொட IDH வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் பேசிய அவர்,

“நாங்கள் மக்களுக்காக வீடுகளுக்கு செல்லாமல் வைத்தியசாலையிலேயே தங்கியிருந்து சேவை செய்கின்றோம். முழுமையான வைத்தியசாலை ஊழியர்களும் கொரோனா தொற்று உறுதியாகிய நோயாளிகளுடனேயே உள்ளோம்.

வைத்தியர்கள், தாதியர்கள், ஏனைய ஊழியர்கள் ஒரு நிமிடமேனும் அணிந்திருக்க கடினமான, விண்வெளிக்கு செல்லும் ஆடையை போன்ற ஆடை ஒன்றே அணிந்து, வியர்வையில் வெந்து இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு சேவை செய்கின்றோம்.

ஏனைய அனைத்து ஊழயர்களும் தங்கள் சேவையை முழுமையாக வழங்குகின்றோம். நாங்கள் எங்கள் முழுமையான பணியை செய்கின்றோம். நோயாளர்கள் சிறிது சிறிதாக குணமடையும் போது நாங்கள் எங்கள் தூக்கம் பசியை மறந்து விடுகின்றோம்.

எங்கள் ஊழியர்கள், நெருக்கமானவர்கள், நண்பர்கள் மற்றும் நாங்கள் தங்கும் அறைகளில் உட்பட நாங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு இவற்றை குறித்து கவலையில்லை. அனைவரும் தங்கள் உயிர் மீது அன்பு வைத்துள்ளார்கள்.

நாங்கள் இவை அனைத்தையும் பல்வேறு குறைப்பாடுகளுக்கு மத்தியிலேயே செய்கின்றோம். இராணுவம், விமான நிலைய ஊழியர்கள் வழங்கும் சேவைகளும் மிகவும் பெரியது. எங்கள் உயிர் அச்சுறுத்தல் குறித்து எண்ணாமல் நோயாளிகளை பார்த்துக் கொள்கிறோம். முடிந்த நாள் ஒன்றில் வீட்டிற்கு செல்வோம்.

நீங்கள் எந்த நாட்டில் இருந்து வந்திருந்தாலும் தனிமைப்படுத்தலுக்கு உதவுகள். எங்கள் நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவுவதனை தடுப்பதற்கு அதுவே ஒரே வழியாக உள்ளது. நீங்கள் ஒரு போதும் ஒதுக்கப்பட மாட்டீர்கள். அது குறித்து அச்சப்பட வேண்டாம்.

இந்த அனைத்து அர்ப்பணிப்பும் நாட்டிற்காகவே செய்கின்றோம். நீங்கள் யாரும் மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருங்கள். எங்கள் கஷ்டங்கள் நன்மையை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

இதேவேளை, சீனாவில் கொரோனா தாக்கம் உச்ச கட்டத்தினை அடைந்திருந்த போது அந்நாட்டு மருத்துவர்கள் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.350.160.300.053.800.668.160.91.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.91.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.91.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.91.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.91.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.91.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.91.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.91.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.91.jpg


https://www.ibctamil.com/srilanka/80/139261
  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா படம் காட்டினம்  .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

நல்லா படம் காட்டினம்  .

பெருமாள், வசதியான நாடுகளே வளங்கள் இல்லாமல் தடுமாறிக் கொண்டு இருக்கும் போது அவர்கள் குறைந்தளவு வசதிகளைக் கொண்டு தங்களால் முடிந்தளவு சேவையினை செய்கிறார்கள்...உங்களுக்கு அவர்களது சேவை தேவை இல்லை...ஆனால் அங்கிருக்கும் மக்களுக்கு தேவை ....அவர்களை பாராட்ட தேவையில்லை. ஆனால் நக்கலடிக்காமல் இருக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
Esri, FAO, NOAA
 
 
 
 
 
+Zoom In
Zoom Out
 
Showing 1
 
Sri Lanka
Confirmed: 51
Deaths: 0
Recovered: 1 
Active: 50
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரதி said:

பெருமாள், வசதியான நாடுகளே வளங்கள் இல்லாமல் தடுமாறிக் கொண்டு இருக்கும் போது அவர்கள் குறைந்தளவு வசதிகளைக் கொண்டு தங்களால் முடிந்தளவு சேவையினை செய்கிறார்கள்...உங்களுக்கு அவர்களது சேவை தேவை இல்லை...ஆனால் அங்கிருக்கும் மக்களுக்கு தேவை ....அவர்களை பாராட்ட தேவையில்லை. ஆனால் நக்கலடிக்காமல் இருக்கலாம் 

கொர்னோவை  வென்ற கோத்தபாய 

புலிகளை அழித்த  எங்களுக்கு கொர்னோ  ஒன்றும் பெரிய விடயமல்ல இந்த சவுடாலுக்குத்தான் நக்கல் மற்றபடி பாதிக்க படப்போவது அப்பாவிகள் அதுகளை யார் அங்கு கணக்கில் எடுக்கிறார்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

கொர்னோவை  வென்ற கோத்தபாய 

புலிகளை அழித்த  எங்களுக்கு கொர்னோ  ஒன்றும் பெரிய விடயமல்ல இந்த சவுடாலுக்குத்தான் நக்கல் மற்றபடி பாதிக்க படப்போவது அப்பாவிகள் அதுகளை யார் அங்கு கணக்கில் எடுக்கிறார்கள் ?

நாடு முழுமைக்கும் கொரோனா எதிர்புக்கு தலைமை சவேந்திர சில்வா. 

டாங்கி, மிக், ஆட்டிலெறி வச்சு வெளுக்கிற ஐடியாவோ தெரியா😂

அம்மானுக்கும் சில துவக்குகளை கொடுத்து விட்டால் கிழக்கை புல்லா கொரோனாவில் இருந்து கிளியர் பண்ணி விடுவார் 🤪

கோட்டா இதை கையாளும் விதம் மிக மோசமாகவே எனக்குப் படுகிறது. 

இலங்கையில் இது ஒரு epidemic ஆகினால் 2 மில்லியன் பேரை கிட்டதட்ட ஒரே நேரத்தில் பராமரிக்க போதியளவு படுக்கைகள், வெண்டிலேட்டர்ஸிருக்கிறதா?

இதுகுள்ள யாரோ ஒரு மனிசன் லண்டன்ல இருந்து போய் கொரோனாவை மட்டகளப்பில கொடுத்ததா ஒரே அமளி. 

சனம் தாமே இறங்கி, வேறு காரணதுக்காக அம்பூலன்சில் வரும் ஆக்களையும் ஆஸ்பத்திரிக்கி போகாமல் தடுக்கிறது.

ஆனால் வைத்தியர்களை குறை சொல்ல முடியாது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

கொர்னோவை  வென்ற கோத்தபாய 

புலிகளை அழித்த  எங்களுக்கு கொர்னோ  ஒன்றும் பெரிய விடயமல்ல இந்த சவுடாலுக்குத்தான் நக்கல் மற்றபடி பாதிக்க படப்போவது அப்பாவிகள் அதுகளை யார் அங்கு கணக்கில் எடுக்கிறார்கள் ?

இந்த திரியில் ஒருவரும் கோத்தாவை பற்றி எழுதலேயே

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

இந்த திரியில் ஒருவரும் கோத்தாவை பற்றி எழுதலேயே

அப்படியா அட அப்ப  நானும் எழுதலை எஸ்கேப் .

  • கருத்துக்கள உறவுகள்

வைரஸ் பிறந்த நாடான சைனா காரங்களை உள்ளே விட்டுகொண்டு சம்பந்தமில்லா நாடுகளை தடை பன்னின  சூரர்கள் இந்த கருத்தும் இங்கு சம்பந்தமில்லை தான் எல்லாம் கழுத்துக்கு மேலே போன பின் இவர்கள் செய்வதை என்னவென்று சொல்வது உங்க இடத்தில் ?

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் சொல்கிறார்கள் சீனாக்காரரிடமிருந்து இதுவரைக்கும் அங்கிருக்கும் ஒருவருக்கும் பரவவில்லையாம்...ஒரே ஒரு சீனப் பெண்ணுக்கு கண்டு பிடித்து ,சுகமாக்கி அனுப்பியுள்ளார்கள் ...அதிகமாய் இத்தாலி ,ஈரான் ,கொரியா போன்ற நாடுகளில் இருந்து போயுள்ளவர்களால் தான் பரவியுள்ளதாம் 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரதி said:

அவர்கள் சொல்கிறார்கள் சீனாக்காரரிடமிருந்து இதுவரைக்கும் அங்கிருக்கும் ஒருவருக்கும் பரவவில்லையாம்...ஒரே ஒரு சீனப் பெண்ணுக்கு கண்டு பிடித்து ,சுகமாக்கி அனுப்பியுள்ளார்கள் ...அதிகமாய் இத்தாலி ,ஈரான் ,கொரியா போன்ற நாடுகளில் இருந்து போயுள்ளவர்களால் தான் பரவியுள்ளதாம் 

கண்ணுக்கு முன்னாள் நடந்த போர் குற்ற கொலைகளை இன்னும் பல போர் குற்றங்களை நடக்கவே இல்லை என்று வாதிடுபவர்களிடம் என்ன உண்மையை பெற முடியும் ?

  தற்போது சைனா  குடுத்த கடனுக்கு வாயை பொத்திக்கொண்டு இருப்பார்கள் தானே ?

அவர்கள் வாங்கிய கடன் ஆதாரத்தை தேடி போடணுமா ?

  • தொடங்கியவர்

நெருப்புக்குள்ள நடக்கும் இந்த மருத்துவ தாதியர்களுக்கும் ஊழியர்களுக்கும் வைத்தியர்களுக்கும் இதயத்தில இருந்து ஒரு சல்யூட்!

On 3/18/2020 at 6:07 AM, Rajesh said:

இந்த அனைத்து அர்ப்பணிப்பும் நாட்டிற்காகவே செய்கின்றோம். நீங்கள் யாரும் மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருங்கள். எங்கள் கஷ்டங்கள் நன்மையை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

நன்றிகள். உலகில் உள்ள அனைத்து வைத்தியசாலை ஊழியர்களும் அவ்வாறே செயல்படுகின்றனர்.

அதனால் தான் நீங்கள் என்றும் உயர்ந்த இடத்தில் சமுதாயத்தில் வைக்கப்பட்டு மதிக்கப்படுகின்றீர்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.