Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகளா? அதிர்ச்சியில் உறைந்த பிரான்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 335 பேர் உயிரிழந்துள்ளனர்.

 
 
 
ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகளா? அதிர்ச்சியில் உறைந்த பிரான்ஸ்
கொரோனாவால் உயிரிழந்தவர்கள் (கோப்பு படம்)
 
பாரிஸ்:
 
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ள வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 
 
தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
 
 
உலகம் முழுவதும் 10 லட்சத்து 9 ஆயிரத்து 452 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 52 ஆயிரத்து 853 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
கொரோனா வைரஸ் பரவியவர்களில் 7 லட்சத்து 44 ஆயிரத்து 721 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 2 லட்சத்து 11 ஆயிரத்து 878 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
 
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய நாடான இத்தாலியில் கோரத்தாண்டவம் ஆடிவந்தது. 
 
ஆனால், இத்தாலியைக் காட்டிலும் மற்றொமொரு ஐரோப்பிய நாடான பிரான்சில் கொரோனா தற்போது தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 59 ஆயிரத்து 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
கொரோனா நோயாளியை கொண்டு செல்லும் காட்சி (கோப்பு படம்)
 
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 355 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பிரான்சில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 387 ஆக அதிகரித்துள்ளது.
 
ஒரே நாளில் கொரோனாவுக்கு ஆயிரத்து 355 பேர் உயிரிழந்துள்ளதால் பிரான்ஸ் மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.
 
14 hours ago, உடையார் said:

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 355 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பிரான்சில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 387 ஆக அதிகரித்துள்ளது.

பிரான்ஸ்  கடுமையான நிலையை எடுத்திருப்பதால், நிலைமைகள் விரைவில் கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டும். 

இருந்தாலும், சில சமூகங்கள் சார்ந்த பழக்கவழக்கங்கள் மற்றும் முதியோர் காப்பக இல்லங்கள் உலகம் முழுவதும் சிக்கல்  தருபவையாக உள்ளன. 

Edited by ampanai
Spelling error

நேற்று திடீரென பிரான்ஸ் தனது நேற்றயை நாளிலான இறப்பை 1355 ஆக பதிவு செய்தது. இன்று வரை எந்தவொரு நாடும் ஒரு நாளில் இறப்பில் ஆயிரம் எண்ணிக்கையை கடக்கவில்லை. இது சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியும் ஆகியது. ஆனால் அந்த எண்ணிக்கைக்கு வேறு வியாக்கியானம் ஒன்று வேறு இருந்தது. அதாவது 461 பேர் தான் நேற்றைய கணக்கில் இறப்பில் வருபவர்கள். ஏனைய 884 பேரும் வைத்தியசாலைகளுக்கு வெளியே காப்பகங்களில் பல்வேறு நாட்களில் கோவிட்-19 நோய்த்தாக்கம் காரணமாக இறந்து போனவர்கள். தற்போது கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்களாம். என்ன குழப்பமாக இருக்கிறதா? அதாவது வைத்தியசாலைக்கு வந்து அனுமதிக்கப்பட்டு இங்கு உங்களுக்கு கோவிட் நோய்த்தொற்று உண்டு என உறுதிப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் இறந்து போனால் தான் நீங்கள் கணக்கில் வருவீர்கள் என்பதே செய்தி. இவ்வாறு தான் ஏனைய நாடுகளும் கணக்கை முடிக்க முயல்கின்றன என்றால் உண்மையான இறப்பு எண்ணிக்கை என்ன? இன்று கட்டை மீறியுள்ள இத்தாலியும் சரி ஸ்பெயினும் சரி வைத்தியசாலைகளில்; இடமின்றி நிரம்பி வழிவதால் முத்தவர்களை அனுமதிக்க முடியாமலே பலர் இறந்து போகின்றனர். இவர்கள் கணக்கில் இல்லை என்பதா செய்தி?

பிரான்சின் தற்போதைய கணக்கு இது தான். மொத்த நோய்த்தொற்று: 59 ஆயிரத்து 105. இதில் வைத்தியசாலையிலான இறப்பு: 4,503. (கவனத்தில் கொள்ள இது நாடுதழுவிய மொத்த இறப்பு அல்ல) முதற்தடவையாக இதுவரை வெளியிலான இறப்பாக ஏற்றுக் கொண்ட தொகை: 884. வைத்தியசாலைகளில் அனுமதி: 26 ஆயிரத்து 246. அங்கு கடுமையான நிலையில்: 6,399. முழுமையாக குணமடைந்தவர்கள்: 12 ஆயிரத்து 428. ஆகவே பிரான்ஸ் இதையாவது தெளிவுபடுத்தியது. எவ்வித தெளிவுபடுத்தலும் இன்றி தமது அரசியல் இருப்பிற்காக அரசியாளலர்கள் உலகளாவி வெளிப்படுத்த அனுமதிக்கும் இந்தத் தரவுகள் எம்மை எவ்வளவு தூரம் ஏமாற்றுகின்றன என்ற புரிதலுக்காக இந்தப்பகிர்வு.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
(முகநூல்) 
  • கருத்துக்கள உறவுகள்

இது தவறான தகவல். 

சரியான விபரம் தெரியாது அரைவேக்காட்டுத் தனமாகச் செய்தி எழுது இணையத் தளங்கள் முதலில் ''அதிர்ச்சி'' என்ற சொல்லைப் பாவிக்காமல் தலைப்பு எழுதப் பழக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பம் முதலே கொர்னோ  விடயத்தில் இஷ்ட்டத்துக்கு எண்ணிக்கைகள் ஏறி இறங்குது அத்துடன் தொற்றும் விதம் குறித்து ஆள் ஆளுக்கு ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு கதை நேற்று 27 அடி  மட்டும் தும்மும் போது  பரவும் என்கிறார்கள் இன்று ஜெர்மன் விஞ்சானி அப்படி இல்லை என்கிறார் .https://www.telegraph.co.uk/news/2020/04/02/no-proof-coronavirus-can-spread-shopping-says-leading-german/

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, இணையவன் said:

சரியான விபரம் தெரியாது அரைவேக்காட்டுத் தனமாகச் செய்தி எழுது இணையத் தளங்கள் முதலில் ''அதிர்ச்சி'' என்ற சொல்லைப் பாவிக்காமல் தலைப்பு எழுதப் பழக வேண்டும்.

உண்மையில் 1000க்கும் மேற்பட்டவர்கள் பிரான்சில் இறந்தார்களா ?

பிரான்சில் கடந்த இரு நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி பல்வேறு இணையதளங்களிலும், சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. உண்மையில் அது பிழையான புள்ளிவிபரம் என தெரியவருகின்றது.

கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பிரான்சின் சுகாதாரத்துறையின் அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் 471பேர்களை மருத்துமனைகளில் உயிரிழந்தனர் எனத் தெரிவித்திருந்தது.

மேலும் அச்சுகாதாரஅறிக்கையில், கொரோனா வைரஸ் நெருக்கடிகாலத்தில் மூதாளர் இல்லங்களில் இதுவரை 884 முதியவர்கள் உயிரிந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வெள்ளிக்கிழமை சுகாதாரஅறிக்கையில் மொத்தமாக இதுவரை மூதாளர் இல்லங்களில் 1416 மூதாளர்கள் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுவரை மூதாளர் இல்லங்களில் இறந்த எண்ணிக்கையினையும், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வெளிவந்த நாளாந்த மருத்துவமனை இறப்புக்களை கூட்டி, பிழையான புள்ளிவிபரத்துடன் செய்திகளை பல ஊடகங்கள் பகிர்ந்துள்ளன.

வியாழக்கிழமை மருத்துமனைகளில் 471பேரும், வெள்ளிக்கிழமை 588பேரும் உயரிழந்துள்ளனர் என்பதே சுகாதார அறிக்கையின் புள்ளிவிபரம்.

(காணொளி வெள்ளிக்கிழமை ஐ.பி.சி தமிழின் சிறப்பு நிகழ்சிக்கான வியாழன் நிலைவரம்.).           http://www.francetamils.com/?p=2853

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.