Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். அரியாலை ஆலயத்திற்கு சென்றவர்கள் உடனடியாக அடையாளப்படுத்தவும் - வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்

Featured Replies

கொரோனா தொற்று சர்ச்சைக்குரிய யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்று இதுவரை தனிமைப்படுத்தலுக்கு செல்லாது மறைந்திருப்பவர்கள் தங்களை உடனடியாக அடையாளப்படுத்தவும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சுவிஸ் போதகர் ஒருவரால் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தற்போது ஒவ்வொருவராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் நெருங்கிப் பழகிய 325 பேர் வரையிலானவர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் தற்போது குறித்த தேவாலயத்திற்குச் சென்று இன்றுவரை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் சிலர் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறு இருப்பவர்கள் பற்றிய தகவல்கள் நமக்கு தெரியப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளன மேலும் அவர்கள் தாமாக முன்வந்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுமாறு இந்த சந்தர்ப்பத்திலே கேட்டுக்கொள்கின்றோம்.

யாழ்ப்பாண மாவட்டத்தை பொருத்தவரையில் கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவே தனிமைப்படுத்தப்பட்டு உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு முயற்சிகளை எடுத்துள்ளோம் அந்த அடிப்படையில் தாவடியில் உள்ள ஒரு பகுதியினருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளனர் மேலும் அரியாலைப் பகுதியில் உள்ளவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன.

https://www.virakesari.lk/article/79281

  • கருத்துக்கள உறவுகள்

தவறுவோரும் அவர்களுக்கு உடந்தையாக இருப்போரும்  அடையாளம் காணப்பட்டு  மிகக் கடுமையாத் தண்டிக்கப்படல் வேண்டும்.😡

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறையில் அல்லுலோயா மதத்தில்  இருப்பவரின் வீட்டில் இந்த கூட்டத்துக்கு போய் வந்தவர் பெண்மணி ஒளித்து இருந்து காய்ச்சலுக்கு தாமாக வைத்தியம் பார்த்து முடியாமல் இன்று சுகாதாரத்திணைக்களத்துக்கு அறிவித்து அவர்களின் வண்டியில் முதல் அவ போயிருக்கின்றா .

எல்லாம் சரி இவவை வைத்து பராமரித்தவர்கள் மூலம் எத்தனை பேருக்கு கொரனோ  பரவியிருக்கும் ?

அரியாலை பூசையில் கலந்து கொண்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி அரியாலை தேவாலயத்தில் இடம்பெற்ற பூசை ஆராதனையில் கலந்துகொண்டவர்கள் தற்பொழுது சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள்.

பூசை ஆராதனையில் கலந்துகொண்டு தங்களை இனங்காட்டாது மறைந்து இருப்பவர்களும் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அல்லது அவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தமக்கு தெரியப்படுத்துமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தாவடியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளவரகளில் 18 பேருக்கு நேற்றையதினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளட்பட்டது இன்று மாலை பரிசோதனை அறிக்கை வெளிவரும் எனவும் அறிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/140539

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

தவறுவோரும் அவர்களுக்கு உடந்தையாக இருப்போரும்  அடையாளம் காணப்பட்டு  மிகக் கடுமையாத் தண்டிக்கப்படல் வேண்டும்.😡

நல்லது ஆனால் அவங்கள் வருவாங்களா என்பது சந்தேகமே 

இலங்கையில் அரசு மாணவர்களுக்கென அறிமுகப்படுத்திய சுரக்‌ஷா காப்புறுதி திட்டம்  மாணவர்கள் சுகவீனம் அடைந்தாலோ, சத்திரசிகிச்சை செய்தாலோ, அல்லது மாணவ மாணவிகளின் தாய் தந்தையர் இறந்தாலோ அவர்களுக்கு 2 லட்சம் வரைக்கும் காப்புறுதி பணம் வழங்கப்படும் எங்கள் பாடசாலையில் மாணவர்களுக்கு அரசினால் வழங்கப்பட்ட காப்புறுதி அட்டைகளை மாணவர்கள் அல்லது பெற்றோர் வந்து பொறுப்பெடுத்து கைஒப்பம் வைத்துக்கொள்ளலாம் என அறிவித்தல் கொடுத்தோம் மாணவிகளும் வந்து பெற்றுக்கொண்டார்கள் பெற்றுக்கொண்டு சென்ற அவர்கள் அடுத்த நாள் சில பெற்றோர்களால் நாங்கள் இதெல்லாம் பெற்றுக்கொள்வதில்லை , மருத்துவமும் செய்வதில்லை என்று காட்டை திருப்பி கொடுத்தார்கள். 

நானும் அதிபரிடமும் சொல்லி விட்டு காட்டை கைவசம் வைத்திருக்கிறேன் . இப்படியும் சில சபைகளும் ஆட்களும் இருக்கு 

நான் எதற்க்காக சொல்ல வருகிறேன் என்றால் இவர்களும் மருத்துவம் பார்க்கமாட்டோம் என்று பிடிவாதமாக இருப்பவர்களாக இருந்தால் நிலமை இன்னும் மோசமாகும் 

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நல்லது ஆனால் அவங்கள் வருவாங்களா என்பது சந்தேகமே 

இலங்கையில் அரசு மாணவர்களுக்கென அறிமுகப்படுத்திய சுரக்‌ஷா காப்புறுதி திட்டம்  மாணவர்கள் சுகவீனம் அடைந்தாலோ, சத்திரசிகிச்சை செய்தாலோ, அல்லது மாணவ மாணவிகளின் தாய் தந்தையர் இறந்தாலோ அவர்களுக்கு 2 லட்சம் வரைக்கும் காப்புறுதி பணம் வழங்கப்படும் எங்கள் பாடசாலையில் மாணவர்களுக்கு அரசினால் வழங்கப்பட்ட காப்புறுதி அட்டைகளை மாணவர்கள் அல்லது பெற்றோர் வந்து பொறுப்பெடுத்து கைஒப்பம் வைத்துக்கொள்ளலாம் என அறிவித்தல் கொடுத்தோம் மாணவிகளும் வந்து பெற்றுக்கொண்டார்கள் பெற்றுக்கொண்டு சென்ற அவர்கள் அடுத்த நாள் சில பெற்றோர்களால் நாங்கள் இதெல்லாம் பெற்றுக்கொள்வதில்லை , மருத்துவமும் செய்வதில்லை என்று காட்டை திருப்பி கொடுத்தார்கள். 

நானும் அதிபரிடமும் சொல்லி விட்டு காட்டை கைவசம் வைத்திருக்கிறேன் . இப்படியும் சில சபைகளும் ஆட்களும் இருக்கு 

நான் எதற்க்காக சொல்ல வருகிறேன் என்றால் இவர்களும் மருத்துவம் பார்க்கமாட்டோம் என்று பிடிவாதமாக இருப்பவர்களாக இருந்தால் நிலமை இன்னும் மோசமாகும் 

நீங்கள் சில கிறீத்துவ சபைகளின் பெற்றோரைக் கூறுகிறீர்களென நம்புகிறேன். இச் சபைகளின் (கொசுத்) தொல்லை சொல்லி மாளாது.  
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில்,  யாழ் நகர் பாடசாலைகளிடையே  மிகவும் பிரபலமான விளையாட்டு வீராங்கனை ஒருவருக்கு விசர் நாய் கடித்தது.  ஆனால் அவர்களின் மத நம்பிக்கைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை.  அவர் கடுமையாக நோயுற்று இறந்தார். 

பாவம் இயேசுக் கிறீத்து. 😏

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் போர்ச்சூழல், இடப்பெயர்வு. ஒரு பெண் கிணற்றில் தவறி விழுந்து விட்டார். அவரை வெளியே கொண்டு வருவதற்கு முயற்சிக்காமல், கிணற்றை சுற்றி நின்று பெருங்குரலில் செபித்துக்கொண்டு இருந்தார்கள். தெருவில் போன ஒருவர், நிலைமையை உணர்ந்து கூடிநின்றவர்களை தள்ளிவிட்டு, தானே கிணற்றில் குதித்து அப்பெண்ணை காப்பாற்றினார். அல்லேலூயா! 

சுவிஸ் போதகரால் எழுந்துள்ள நிலைமை : யாழில் தீவிரமடைந்தால் பெரும் சிக்கல்

இலங்கையிலும் கொரோனா தொற்று இனம் காணப்பட்டதும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என சுமார் 1300 பேரை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தி வைத்திருந்தோம் எனவும் அந்த நேரத்திலே தான் சுவிஸிலிருந்து வருகை தந்த மதபோதகரால் பிரச்சினை ஆரம்பித்தது என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் தொடர்ந்தும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலமையை வைத்துக் கொண்டு தொற்று இல்லை எனக் கூற முடியாது. அரியாலை ஜெபக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் அனைவரும் நல்ல உடல்நிலையோடு விடுவிப்பதற்கு தயாரான நிலையில் இருந்தவர்கள். எனினும் பரிசோதனையின் பின்னர் அவர்கள் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

ஆகவே யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று இனித் தீவிரமடைந்தால் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்தும் விடயம் பெரும் சிக்கலாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் தற்போது யாழ்ப்பாணத்தில் ஆரம்பத்தில் இருந்ததைவிட மக்கள் கொரோனா வைரஸ் பற்றி விழிபுணர்வடைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/140670?ref=imp-news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.