Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`நவீனகால கடற்கொள்ளையர்கள்..!' - ஐரோப்பிய பொருள்களைத் தட்டிப் பறித்ததா அமெரிக்கா?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவிடமிருந்து பிற நாடுகள் ஆர்டர் செய்யும் மருத்துவ உபகரணங்களை அதிகப் பணம் கொடுத்து அமெரிக்கா தட்டிப் பறிப்பதாக ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளது.

கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் இந்தச் சூழலில் சர்வதேச பதற்றமும் பெருமளவில் அதிகரித்துள்ளது. உலக அளவில் வைரஸ் தொற்று அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும் அடுத்தடுத்த இடங்களில் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் போதிய மருத்துவப் படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்புப் பொருள்கள் இல்லாமலும் வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமலும் அரசுகள் திணறி வருகின்றன.

ஜெர்மனி
 
ஜெர்மனி AP

அதிலும் குறிப்பாக முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவிலும் மருந்துகளுக்கும் பாதுகாப்புக் கவசங்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, தங்கள் பகை அனைத்தையும் மறந்து ரஷ்யா, சீனா போன்ற நாடுகளிடமும் இந்தியா, தென்கொரியா போன்ற நட்பு நாடுகளிடமும் உதவி கேட்டு வருகிறார் அதிபர் ட்ரம்ப். கொரோனாவிலிருந்து மீண்டுவிட்ட சீனா தற்போது அதிகளவில் முகமூடிகள், வென்டிலேட்டர்கள், பாதுகாப்பு உடைகள் போன்ற அனைத்து மருத்துவ உபகரணங்களையும் தயாரித்துப் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது

 

அப்படி சீனாவிடம் 2 லட்சம் மாஸ்க்குகள் ஆர்டர் செய்துள்ளது ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள். இதை அறிந்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கொடுத்த பணத்தைவிட அதிகளவு பணம் கொடுத்து அந்த மாஸ்க்குகளைப் பறிமுதல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

``சீனா தயாரித்த மாஸ்க்குகள் தாய்லாந்து வழியாக ஜெர்மனி வரவிருந்தன. இதை அறிந்த அமெரிக்கா, விமானம் தாய்லாந்தில் தரையிறங்கியதும் அனைத்து மாஸ்க்குகளையும் அதிக விலைகொடுத்து வாங்கியது.

அதனால் தாய்லாந்திலிருந்து ஜெர்மனி செல்லவேண்டிய விமானம் அங்கிருந்து அமெரிக்காவுக்குப் பறந்தது. இதை நவீன திருட்டு, கடல் கொள்ளையாகவே நாங்கள் கருதுகிறோம். அமெரிக்காவின் நட்பு நாடான எங்களிடமே அவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள். உலகளாவிய நெருக்கடிக் காலத்தில்கூட இத்தகைய நடவடிக்கை மூலம் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது" என ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் ஆண்ட்ரியாஸ் கீசல் குற்றம் சுமத்தியுள்ளார்

அதேபோல் பாரிஸ் பிராந்தியத் தலைவர் வலேரி பெக்ரெஸ் கூறியுள்ள குற்றச்சாட்டில், `நாங்கள் ஆர்டர் கொடுத்துள்ள முகமூடிகளுக்குப் பாதி விலை கொடுத்து வாங்குகிறோம். நாங்கள் வாங்கும் பொருள்கள் தரமாக இருக்க வேண்டும் அதனால் பொருளைக் கண்ணில் பார்த்துவிட்டு மீது பணத்தைக் கொடுக்கிறோம். ஆனால் அமெரிக்கா, நாங்கள் ஆர்டர் கொடுத்திருந்த மாஸ்க்குகளைப் பார்க்காமல் மொத்த விலை கொடுத்து ஒரே நேரத்தில் வாங்கிவிட்டது. உலகின் துயருக்குப் பின்னாலும் அமெரிக்கா லாபம் பார்க்க நினைக்கிறது’ எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

 

ஆனால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது அமெரிக்க அதிகாரிகளா, பிராந்திய நிறுவனங்களா அல்லது தனியார் நபர்களா என எந்தத் தகவலையும் யாரும் தெரிவிக்கவில்லை. மேலும், இதுபோன்ற செயல்களில் நிச்சயம் அமெரிக்கா ஈடுபடவில்லை. இதை எப்போதும் செய்யவும் செய்யாது. இந்த தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று பாரிஸில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

 

https://www.vikatan.com/news/international/germany-accused-the-us-of-taking-face-masks-already-ordered?artfrm=v3

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்கனவே ஜேர்மனியர்களுக்கு டொனால் ரம்பை பிடிப்பதில்லை......இப்ப இது வேறை😁

  • கருத்துக்கள உறவுகள்

இனி மேலும் அமெரிக்காவை உலக வல்லரசு என்று யாரும் சொல்லுவினம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, ரதி said:

இனி மேலும் அமெரிக்காவை உலக வல்லரசு என்று யாரும் சொல்லுவினம் 

அடுத்த நாலுவருசத்துக்கும் உவர் திரும்பி வருவார் எண்டால் நிறுதிட்டமாய் ஒரு முடிவு கட்டிப்போட்டுத்தான் விடுவார்.🤣

3 hours ago, உடையார் said:

அப்படி சீனாவிடம் 2 லட்சம் மாஸ்க்குகள் ஆர்டர் செய்துள்ளது ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள். இதை அறிந்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கொடுத்த பணத்தைவிட அதிகளவு பணம் கொடுத்து அந்த மாஸ்க்குகளைப் பறிமுதல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

``சீனா தயாரித்த மாஸ்க்குகள் தாய்லாந்து வழியாக ஜெர்மனி வரவிருந்தன. இதை அறிந்த அமெரிக்கா, விமானம் தாய்லாந்தில் தரையிறங்கியதும் அனைத்து மாஸ்க்குகளையும் அதிக விலைகொடுத்து வாங்கியது

நிறுவனத்தின் தலைமை மற்றும் வடடிவமைக்கும் பகுதியே அமெரிக்காவில் உள்ளது. ஆனால், உற்பத்தி வலு சீனாவில் உள்ளது.  

சீனா எந்த நாடுகளுக்கு முக கவசங்களை அனுப்பவது என்ற முடிவுகளை எடுக்கின்றது. 

ஆக, சண்டை அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில். 

கண்டா, ஜெர்மனி  போன்ற நாடுகளால் அதிகமாக ஒன்றும் செய்ய முடியாது இந்த விடயத்தில்   

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

சீனா தயாரித்த மாஸ்க்குகள் தாய்லாந்து வழியாக ஜெர்மனி வரவிருந்தன. இதை அறிந்த அமெரிக்கா, விமானம் தாய்லாந்தில் தரையிறங்கியதும் அனைத்து மாஸ்க்குகளையும் அதிக விலைகொடுத்து வாங்கியது.

இதில் நாடுகளுக்கிடையில் குழப்பத்தை உருவாக்கி குளிர் காய்வது சைனாவாக   இருக்காது என்பதை இலகுவாக மறந்து விடுகிறார்கள் அனைவரும்.

ஒரு பொருள் விலை  நிர்ணயிக்கப்பட்டு வியாபாரம் முடிந்தபின் அடுத்தவன் வந்தான் கூட காசு கொடுத்தான் அதனால் நான் அவனுக்கு குடுத்தன்  என்று சாட்டு சொல்வதை எப்படி ஏற்று கொள்வது ? இல்லை இவர்களுக்கு முகவராக இருப்பவன் அமெரிக்க முகவரிடம்  இடையில் காசு வேண்டி விட்டான் என்று பொருள் .

 

செத்த வீட்டில் வியபாரம் செய்வது சைனீஸ் களுக்கு கைவந்த கலை  இத்தாலிக்கு முதலில் அவசர அவசரமாய் மாஸ்க் வெண்டிலேட்டர்கள்  விமானத்தில் உதவி என்று அனுப்பி விட்டு. இப்ப அதுக்கு பணம் கொடுக்க சொல்லி பிடுங்குப்பாடு செய்கினம் .கீழே முழு விபரம் .

https://www.dailymail.co.uk/news/article-8193197/China-forces-Italy-BUY-masks-coronavirus-supplies-donated-Beijing.html?ito=social-facebook&fbclid=IwAR3JOhHo5VhfOQhyAnPesNx3llaxr5KAh5zjdMdIryQ8PjhQOyh_SFajgw4

இத்தனைக்கும்  இத்தாலி சைனீஸ் கொரோனா  தாக்கத்தில் உள்ளபோது விழுந்தடித்து உதவி செய்த நாடுகளுள் முதன்மையானது . 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.