Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்ரை லண்டன் மச்சானை ஒருக்கால் பேசி விடுங்கோ.

என்ரை லண்டன் மச்சானை ஒருக்கால் பேசி விடுங்கோ. 29 members have voted

  1. 1. என்ரை லண்டன் மச்சானை ஒருக்கால் பேசி விடுங்கோ.

    • கலோ லண்டன்! என்ன சேட்டையோ?
    • குமாரசாமியை அமைதியாக இருக்க விடவும்.
    • லண்டன் மச்சானுக்கு காலம் சரியில்லை.
    • குமாரசாமி ஒரு தங்கப்பவுண். அவரை திட்டாதீர்கள்.
    • அண்ணை வீட்டு விலாசத்தை சொல்லு.வீட்டுக்கு கல்லு எறிவம்.
    • மைத்துனரே மரியாதை கொடுத்து மரியாதை வாங்க பழகவும்.

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

போட்டா போச்சு.. என்ன குமாரசாமியர் என்னைய வச்சு மீம்சு போடுறியா மாம்சுன்னு சண்டைக்கு வராம இருக்கணும்..😂

க‌ள்ளு கொட்டில்ல‌ நான் பார்த்து கொள்ளுறேன் ஓணாண்டி / மிம்ஸ்ச‌ சீக்கிர‌ம் த‌யார் செய் மாப்பிள‌  /

தாத்தாட்ட‌ பேச்சு வேண்டுற‌து என‌க்கு புதிதில்லை 😁 /

 

  • Replies 61
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 11/4/2020 at 17:22, பாலபத்ர ஓணாண்டி said:

யூ மீன் இங்கிலீஸ்..?

spacer.png

அதே....அதே  என்ரை லண்டன் மச்சானிட்டையும் பெரிசாய் ஒண்டுமில்லை. கோபம் வந்தால் இல்லாட்டி விஷ்கியை மணத்தால் ஒரே இங்கிலிசுதான். 😎

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

அதே....அதே  என்ரை லண்டன் மச்சானிட்டையும் பெரிசாய் ஒண்டுமில்லை. கோபம் வந்தால் இல்லாட்டி விஷ்கியை மணத்தால் ஒரே இங்கிலிசுதான். 😎

சாமிகளே, எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்..!

ஏன் மச்சானை இப்படி கரித்துக் கொட்டுகிறீகள்..? 😡

இளவயதில் தங்கள் வீட்டம்மணியை காதலிக்கும்போதோ அல்லது திருமணத்தின்போதோ மச்சினன் உங்களை போட்டு கும்மி விட்டாரா..? :shocked:  Be frank please..! :)

திருமண சடங்கில் அக்கினியை இல்லாளுடன் வலம் வரும்போது துணைக்கு வந்த மச்சினனை இப்படி தூற்றுவது சரியல்ல சாமிகளே..!

மச்சினனின் அருமையை விளக்க இன்றும் தூத்துக்குடி பகுதிகளில் உலாவரும் பழக்கத்தை சொல்கிறேன்..

முத்துக்குளிக்கும்போது கடலுக்குள் மூழ்கும் மீனவரின் சொந்த மச்சினனிடம் தான் மீனவர் இறங்கும் கயிற்றை கொடுப்பார்களாம், ஏனெனில் அவர்தான் கரையில் தவிப்புடன் காத்திருக்கும் தன் சகோதரியின் வாழ்வுக்கு பங்கம் நினைக்காமல் பொறுப்புடன் முத்தெடுக்க மூழ்குபவருக்கு கடலுக்கடியில் ஏதும் இடர் வந்தால்  தன்னை கயிற்றுடன் மேலிழுத்து காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை கொடுப்பவர். மற்ற மீனவர்கள் அல்ல..

இவ்வளவு ஏன்..?

'மச்சினன் இல்லாத வீட்டில் யாரும் பெண்ணெடுக்க மாட்டார்கள்' என்ற பழக்கம் இன்றளவும் தமிழ்நாட்டில் உள்ளது.. அறிவீர்களா..?

தன்னையும், தன் குடும்பத்தையும் கட்டையில் வேகும் வரை வீட்டில் நடக்கும் இன்ப துன்பங்கள் அனைத்திலும் உறுதுணையாய் இருக்கும் மச்சினனின் அருமை தெரியாமல், இப்படி சகட்டுமேனிக்கு கரித்துக்கொட்டுகிறீர்களே.. vil-colere1.gif

இது அடுக்குமா..?

தகுமா..?

va-taper.gif

 

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 11/4/2020 at 17:55, ராசவன்னியன் said:

ما شاء الله

 😂 استمتع! أنت رجل جريء ..... يوبخ حفيد لندن 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, ராசவன்னியன் said:

'மச்சினன் இல்லாத வீட்டில் யாரும் பெண்ணெடுக்க மாட்டார்கள்' என்ற பழக்கம் இன்றளவும் தமிழ்நாட்டில் உள்ளது.. அறிவீர்களா..?

ஏன் மச்சினன் இல்லாத வீட்டில் பெண் எடுக்க மாட்டார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ராசவன்னியன் said:

சாமிகளே, எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்..!

ஏன் மச்சானை இப்படி கரித்துக் கொட்டுகிறீகள்..? 😡

இளவயதில் தங்கள் வீட்டம்மணியை காதலிக்கும்போதோ அல்லது திருமணத்தின்போதோ மச்சினன் உங்களை போட்டு கும்மி விட்டாரா..? :shocked:  Be frank please..! :)

திருமண சடங்கில் அக்கினியை இல்லாளுடன் வலம் வரும்போது துணைக்கு வந்த மச்சினனை இப்படி தூற்றுவது சரியல்ல சாமிகளே..!

மச்சினனின் அருமையை விளக்க இன்றும் தூத்துக்குடி பகுதிகளில் உலாவரும் பழக்கத்தை சொல்கிறேன்..

முத்துக்குளிக்கும்போது கடலுக்குள் மூழ்கும் மீனவரின் சொந்த மச்சினனிடம் தான் மீனவர் இறங்கும் கயிற்றை கொடுப்பார்களாம், ஏனெனில் அவர்தான் கரையில் தவிப்புடன் காத்திருக்கும் தன் சகோதரியின் வாழ்வுக்கு பங்கம் நினைக்காமல் பொறுப்புடன் முத்தெடுக்க மூழ்குபவருக்கு கடலுக்கடியில் ஏதும் இடர் வந்தால்  தன்னை கயிற்றுடன் மேலிழுத்து காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை கொடுப்பவர். மற்ற மீனவர்கள் அல்ல..

இவ்வளவு ஏன்..?

'மச்சினன் இல்லாத வீட்டில் யாரும் பெண்ணெடுக்க மாட்டார்கள்' என்ற பழக்கம் இன்றளவும் தமிழ்நாட்டில் உள்ளது.. அறிவீர்களா..?

தன்னையும், தன் குடும்பத்தையும் கட்டையில் வேகும் வரை வீட்டில் நடக்கும் இன்ப துன்பங்கள் அனைத்திலும் உறுதுணையாய் இருக்கும் மச்சினனின் அருமை தெரியாமல், இப்படி சகட்டுமேனிக்கு கரித்துக்கொட்டுகிறீர்களே.. vil-colere1.gif

இது அடுக்குமா..?

தகுமா..?

va-taper.gif

 

அது மச்சினன்.. நம்மாளுக்கு வாச்ச இது விசம்..

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

ஏன் மச்சினன் இல்லாத வீட்டில் பெண் எடுக்க மாட்டார்கள்?

வீட்டில் நடக்கும் நல்லது, கெட்டது அனைத்து சடங்களிலும், தனக்கு பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு தாய் மாமன் சடங்குகள் செய்ய மச்சினனின் பங்கு மிக முக்கியமானது. (மிக முக்கியமாக பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால்..)

திருமண நிச்சயதார்த்ததில் (உங்கள் வழியில் எழுத்து எழுதுதல்)இரு வீட்டிலும் தாய் மாமன்கள் தான் முதலில் பேச வேண்டும். மாலை மாற்றிக்கொண்டு இரு வீட்டாரும் தட்டுகள் மாற்றிக்கொள்ள வேண்டும். அனைத்து சடங்குகளிலும் மச்சினனுக்கு தான் முதலிடம். எந்த காரியங்களுக்கும் மச்சினனைத் தான் முதலில் அழைக்க வேண்டும்.

அந்த வெற்றிடத்தை நிரப்ப வேறு யாராலும் முடியாது, இது தொன்றுதொட்டு கடைப்பிடித்து வரும் பழக்கம்.

"கிழக்குச் சீமையிலே" படத்தில் கூட இதை சரியாக சொல்லியிருப்பார்கள். 'தாய் மாமன் சீர்' கேள்விப்பட்டுருப்பீர்களே?

இவ்வழக்கம் ஈழத்தில் இல்லையா..?

எனது திருமணத்திற்கும் அப்படியே பார்த்து முடித்தார்கள், என் மச்சினன் தான் இன்றளவும் உறுதுணை.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

அட உங்கடை மச்சானை பேசுவதுக்கும்  ஒரு திரியா ?

 

எனக்கும் ஒரு மண்டை கயிறு ஜெர்மனில் இருக்கு தறுதலை 42 வயதாகியும் தறி கெட்டு  திரியிது .😃

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ் நாட்டு க‌லாச்சார‌த்துக்கும் ஈழ‌த்து க‌லாச்சார‌த்துக்கும் நிறைய‌ வித்தியாச‌ம் இருக்கு /

த‌மிழ் நாட்டில் கூட‌ பிற‌ந்த‌ அக்காவின் ம‌க‌ளை த‌ம்பி திரும‌ண‌ம் செய்து கொள்ள‌லாம்  / 

த‌மிழீழ‌த்தில் அப்ப‌டி இல்லை /
ம‌ச்சான் ம‌ச்சால‌ திரும‌ண‌ம் செய்வ‌து தான் முறை /

  • கருத்துக்கள உறவுகள்

தாய் மாமன்:

தாய் மாமன் தமிழர் பண்பாட்டில் இருக்கும் ஒரு முக்கிய உறவு முறையாகும். இது தாயின் உடன் பிறந்தவரைக் குறிக்கும். பெரும்பாலான தாலாட்டுப் பாடல்களில் மாமன் பெருமையைக் கூறும் பாடல்களே அதிகம்

தொட்டிலிடுதல்

குழந்தை பிறந்ததும் தாய் மாமன் தொட்டில் கம்பு, தொட்டிற் சீலை அல்லது தொட்டில் முண்டு போன்றவற்றைக் கொண்டுவந்து தொட்டில் கட்டி குழந்தையைக் கிடத்தி மூன்றுமுறை ஆட்டிவிடும் வழக்கம் பல குடும்பங்களில் உண்டு.

காது குத்துதல்

காது, மூக்கு ஆகிய பகுதிகளில் துளையிட்டு உலோக ஆபரணம் பூட்டுவதற்கு தாய் மாமன் மடியில் குழந்தையை அமர வைத்துக் காது குத்துதல் என்பது மாறாத வழக்கமாக இருந்து வருகிறது.

பூப்புச் சடங்கு

ஒரு பெண் குழந்தை பருவம் அடைந்து விட்டால் தாய் மாமன் சீர் கொண்டு வந்து பூப்படைந்த பெண்ணிற்குப் பச்சை ஓலைகளால் குச்சில் கட்டுதல் அல்லது குடிசை கட்டும் வழக்கமும் தமிழகத்தில் உள்ளது.

தாய்மாமன் சீர்" தங்கை மகள் பூப்பெய்திய(வயதுக்கு வந்ததும்) தாய் வீட்டுசீர்வரிசையாக(மஞ்சள், குங்குமம்,வெற்றிலை பாக்கு, பச்சை ஓலை குச்சில் கட்டுவது, பட்டுச்சேலை, பூ, மாலை, பாத்திரம், மேளதாளம், வானவேடிக்கைகள் மேலும் பலசகல பொருட்கள் அன்றயதினம் தேவையான) தாய்மாமன் உறவு வழங்குவது தமிழர் மரபுவழி வாழ்வியல் பண்பாட்டு கலாச்சார சடங்கு சம்பிரதாய வழக்கம் இதுவே.

மருமகள் பூப்பெய்திய புனித நீராட்டு விழா எடுப்பது தாய்மாமன்முறை என்பது எம் தமிழர் மரபின் வழிசம்பிரதாயம்..

பட்டம் கட்டுதல்

திருமணத்தில் தாலி கட்டிய பிறகு தாய் மாமன் திருமணப் பெண்ணுக்கு நெற்றிப் பட்டம் கட்டுவார். பட்டம் கட்டுதல் என்பது உரிமை கொடுப்பதைக் குறிக்கும் சொல்லாகும்.

தமிழ் திரைப்பட பாடல்களில்

"நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்"

***

"தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி"

 

விக்கிப்பீடியா

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 'கு.சா' சாமியார் இருக்கிறாரே, ஏதாவது ஒரு திரியை தொடங்கி பத்த வச்சுடுறார், நாமளும் அதில் விழுந்து மீண்டெழ ரொம்ப நேரமெடுக்கிறது..! 

இப்பொழுது அதிகாலை மணி 02. நேரம் போனதே தெரியலை..!:)

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

தாய் மாமன் சீர்சுமந்து வாராண்டீ..
அவன் , தங்க கொலுசு கொண்டு தாராண்டீ..

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.