Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை போலவே கொரோனாவிற்கும் முடிவு கட்டுவோம்: அரச புலனாய்வு பிரிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலமைத்துவத்தின் எண்ணக்கருவிற்கு அமைவாக கொவிட் 19 வைரசை நாட்டில் முழுமையாக இல்லாதொழிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு என்று அரச புலனாய்வு பிரிவின் உதவிப் பணிப்பாளர் பராக்கிரம சில்வா தெரிவித்தார்.

சுகாதாரத்துடன் தொடர்புபட்ட இந்த நோய் தொற்றை தடுப்பதில் புலனாய்வு பிரிவு மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் தனிப்பட்டவர்களின் பிரத்தியோக தகவல்களுக்கு எந்தவித குந்தகமும் ஏற்படாது. இதற்கான உறுதியை எம்மால் தெரிவிக்க முடியும். எமது பணி நோயை இல்லாதொழிப்பதற்கு சுகாதார பிரிவின் நோயை தடுப்பதற்கான முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகும் என்று அவர் தெரிவித்தார்.

அரசாங்க தொலைக்காட்சி ஒன்றிற்கு இன்று காலை வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயங்களை தெரிவித்தார்.

தற்பொழுது இந்த வைரசு தொற்று நாட்டில் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, பதிலளிக்கையில் இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். நாட்டிலிருந்து இதனை முழுமையாக இல்லாதொழிப்பதற்கான வலிமை சுகாதார பிரிவைப் போன்று பாதுகாப்பு தரப்பினருக்கும் இருப்பதாகவும் அவர் கூறினார்.

உலகில் புலனாய்வுத் துறையில் முன்னணியில் விளங்கும் நாடுகளைப் போன்று இலங்கைப் புலனாய்வுப் பிரிவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார். உலகில் இஸ்ரேல் போன்ற நாடுகள் புலனாய்வுத் துறையில் முன்னணியில் திகழ்கின்றன. இருப்பினும் இவ்வாறான நாடுகளின் புலனாய்வு விடயங்களை நாம் பின்பற்றவில்லை. எமது நாட்டுக்கென புலனாய்வு சேவையொன்று எம்மிடம் உண்டு. இதன் மூலமே எவறாலும் முடிவுக்கு கொண்டு வரமுடியாது என்று தெரிவிக்கப்பட்ட 30 வருட கால யுத்தத்தை நாம் வெற்றிகரமாக நிறைவு செய்தோம். இதற்கு தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அப்போது தலமை தாங்கினார். அவரது எண்ணக்கருவிற்கு அமைவாக விடயங்களின் அடிப்படையிலே தற்பொழுது இந்த கொவிட் 19 தொற்றை இல்லாதொழிப்பதற்கு புலனாய்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

குற்றச்செயல்கள் போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றிலேயே புலனாய்வு பிரிவினர் பாரிய நடவடிக்கைகளில் மேற்கொள்கின்றனர். கொவிட் 19 எஎன்பது சுகாதார துறையுடன் சம்பந்தப்பட்ட நோய்த தொடர்பான விடயமாகும். இதில் இலங்கை புலனாய்வு பிரிவு தமது பணியை எவ்வாறு முன்னெடுக்கின்றது குறித்து அவர் விவரித்தார்.

கடந்த ஓரிரு தினங்களில் 400 கொவிட் 19 நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டிருந்த நிலையில் இந்த எண்ணிக்கை திடீரென 600 ஆக அதிகரித்தது. இதற்கான காரணத்தை விளக்குகையில், இந்த நோய் மார்ச் மாத காலப்பகுதியிலே இலங்கையில் வேகமாக பரவ ஆரம்பித்தது. இதற்கு முன்னதாக நாம் இந்த நோய் எவ்வாறு எத்துறைகள் மூலம் பரவ ஆரம்பித்தது என்பதை 31 கொத்து அடிப்படையில் வகுத்து கொண்டோம். அதன் அடிப்படையில் சுற்றுலா பயணிகள், இரத்தினக்கல் வர்த்தகம், போதைப்பொருள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், விசேடமாக இத்தாலி போன்ற நாடுகளில்ருந்து வந்தவர்கள், சுதுவெல்ல பகுதியில் போதைப்பொருள் பாவணையில் ஈடுபட்டிருந்தவர்கள் போனற பிரிவுகளின் அடிப்படையில் நாம் எமது புலனாய்வு நடவடிக்கைகளை நாம் விரிவுபடுத்தினோம்.

இதற்கமைவாக விசேடமாக சுதுவெல்ல பகுதியில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்தவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததை அடையாளங் கண்டோம். இவர்களுள் ஒருவர் கிராண்ட்பாஸ் பகுதியில் போதைப் பொருளை பெற்றுள்ளார். இதனை விற்பனை செய்தவருக்கு கொரோனா தொற்று இருக்கவில்லை. ஆனால் போதைப்பொருளை வாங்கியவருக்கு கொரோனா தொற்று காணப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் போதைப் பொருள் விற்பனை செய்தவர் தொடர்பு கொண்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு மட்டத்தில் நாம் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு தகவல்களை பெற்று சுகாதாரப் பிரிவினருக்கு வழங்கினோம் என்றும் அவர் தெரிவித்தார்.

சுதுவெல்ல பகுதியில் அடையாளங் காணப்பட்ட கொவிட் 19 நோயாளி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கடற்படையினர் அந்தப் பகுதியை முடக்குவதிலும் பாதுகாப்பு வேலியை அமைப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இதனாலேயே வெலிசறை கடற்படை வீரர்கள் இந்த நோய்த்தொற்றக்குள்ளார்கள். இவர்களில் சிலர் விடுமுறையில் வீடுகளுக்குச் சென்றிருந்தனர். இந்த கடற்படை முகாம் தனிமைப்படுத்தப்பட்டது. விடுமுறையில் சென்றிருந்த கடற்படை வீரர்கள் தொடர்புபட்டிருந்த குடும்ப உறுப்பினர்கள், நெருக்கமாக பழகியவர்கள், அயலவர்கள் உள்ளிட்டவர்கள் அடங்கலாக சுமார் 800 பேரை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதார நடவடிக்கைகளுக்குமாக சுகாதார அதிகாரிகள் ஒழுங்குகளை மேற்கொண்டனர்.

வெலிசறை முகாமில் 2000 வீரர்கள் இருக்கின்றனர். விடுமுறையில் சென்றிருந்தவர்கள் 500 பேர். முகாமைச் சேர்ந்த வீரர்கள் தமது முன்னைய முகவரியில் அல்லாது வேறு இடங்களில் வசித்து வந்துள்ளனர். அதாவது திருமணத்திற்குப் பின்னர் இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளது. இவர்கள் அனைவரது தகவல்களும் திரட்டப்பட்டன. என்றும் அவர் விபரித்தார். தற்பொழுது 88 233 பேர் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.pagetamil.com/121600/?fbclid=IwAR1QyGqXUMTtXZ7Keeq3VouvEgCAHfyBnTYWckgUAMl1Mz-xKRbD3Ozc5dQ

  • கருத்துக்கள உறவுகள்

இவனுகளுக்கு நாட்டில் இப்போ ஒரு பயங்கரவாதம் தேவைப்படுகிறது. தமது பயங்கரவாதத்தை மறைக்கவும், மிச்சமுள்ள தமிழரை அழிக்கவும், வாக்கு அள்ளவும், பிச்சை எடுக்கவும்.  

1 hour ago, பெருமாள் said:

30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலமைத்துவத்தின் எண்ணக்கருவிற்கு அமைவாக கொவிட் 19 வைரசை நாட்டில் முழுமையாக இல்லாதொழிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு என்று அரச புலனாய்வு பிரிவின் உதவிப் பணிப்பாளர் பராக்கிரம சில்வா தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தலை, அரச கோஷ்டிகளின் ஊழல்களை, கள்ள மண் கடத்தலை இல்லாதொழிக்க வக்கில்லாத இந்த கோஷ்டிக்கு தெரிஞ்சதெல்லாம் படுகொலை செய்வது தான். அதான் ஏற்கனவே நடக்க தொடங்கியிருக்கே.

2 hours ago, பெருமாள் said:

கடந்த ஓரிரு தினங்களில் 400 கொவிட் 19 நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டிருந்த நிலையில் இந்த எண்ணிக்கை திடீரென 600 ஆக அதிகரித்தது. இதற்கான காரணத்தை விளக்குகையில்,

நீங்கள் சுகாதார சேவையை மீறி, 'நாங்கள் வென்றவர்கள் ...' என்ற மமதையில் பயணித்து, மக்களை அழிக்கப்பபோகின்றீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை போலவே கொரோனாவிற்கும் முடிவு கட்டுவோம்: 

அடப்பாவிகளா..உங்களிட்டை இன்னும் கொரனாவே வரல்லீடா...வந்தாப்பிறகு..இதை சொல்லுங்கடா..

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுவதையும் கூட்டி வைத்து புலிகளை அழிச்சது  போல, கொரோனாவையும் வந்தால்  உலகத்தின் தலையில் கட்டிவிட்டு, சுகம் காணலாம் என்று வீரம் பேசுகிறார்கள். உலகம் படும் அவஸ்தை புரியாத விவஸ்தை கெட்டதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் உச்சத்தில் இருந்தபோது நீங்கள் அச்சத்தில் இருந்தீர்கள்......உலகநாடுகளும் வேற வேலை வெட்டி இல்லாமல் இருந்தன அதனால் உங்களுக்கு முன்டு குடுத்தன.நாயும் ஓட உறியும்  அறுந்து விழுந்த மாதிரி உங்களுக்கும் வாச்சுப்போச்சு......இப்ப தங்களுக்கு யார் வந்து முன்டு குடுப்பினம் என்டு எல்லாரும்  தவித்துப்போய் கிடக்கினம் நீங்கள் வேற கொமடி பண்ணிக்கொண்டு.....!   🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கை சிங்கம்கள் யாருமே சைனாவில் இருந்து தங்கள் நாட்டுக்கும் நோய்  வந்ததை ஒரு வார்த்தை கூட  செல்லினம்  இல்லை  பல்லாயிரக்கணக்கான சைனீஸ் கட்டுமான பணிகளில் சொறிலங்காவில் வேலை செய்கினம் அவர்களுக்கு பல தென்னிலங்கை கொட்டல்களின் மெனு கார்ட் கூட சைனீஸ் லும்  ஆங்கிலத்திலும் மட்டுமே உள்ளது சிங்களம் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

அறிக்கை சிங்கம்கள் யாருமே சைனாவில் இருந்து தங்கள் நாட்டுக்கும் நோய்  வந்ததை ஒரு வார்த்தை கூட  செல்லினம்  இல்லை  பல்லாயிரக்கணக்கான சைனீஸ் கட்டுமான பணிகளில் சொறிலங்காவில் வேலை செய்கினம் அவர்களுக்கு பல தென்னிலங்கை கொட்டல்களின் மெனு கார்ட் கூட சைனீஸ் லும்  ஆங்கிலத்திலும் மட்டுமே உள்ளது சிங்களம் இல்லை .

பெருமாள், அவர்கள் சீனத்து சிறைக்கைதிகள். கடுழிய சிறை.... சிறை அதிகாரிகள், கட்டுமான வேலைக்கு டென்டிரில் பங்கு கொண்டு, வென்று, இவர்களை ஆபிரிக்கா, ஆசியா எங்கும் வைத்து வேலை செய்விக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

அறிக்கை சிங்கம்கள் யாருமே சைனாவில் இருந்து தங்கள் நாட்டுக்கும் நோய்  வந்ததை ஒரு வார்த்தை கூட  செல்லினம்  இல்லை  பல்லாயிரக்கணக்கான சைனீஸ் கட்டுமான பணிகளில் சொறிலங்காவில் வேலை செய்கினம் அவர்களுக்கு பல தென்னிலங்கை கொட்டல்களின் மெனு கார்ட் கூட சைனீஸ் லும்  ஆங்கிலத்திலும் மட்டுமே உள்ளது சிங்களம் இல்லை .

புள்ளி விபரங்களின்படி ஒரு லட்ஷம் சீனர் இலங்கையில்  கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதில் பெருபாலானோர் சீனப் புத்தாண்டு கொண்டாட சீனாவுக்கு போய் வந்தவர்கள். அவர்கள் பற்றி இந்த அரசு மூச்... நாட்டில் எல்லாம் மூடியிருக்கும்போது, இவர்களுக்கு மட்டும் இங்கு என்ன வேலை? கொஞ்சம் காலந்தாழ்த்தி வந்திருக்கலாந்தானே? சொல்லப் பயம், வந்ததை எல்லாம் ஏற்றுக் கொண்டு, பழியை வேறொருவர் மேல் சுமத்தியது. அதைவிட, சீனாவில் தொழில், கல்வி என்று  விஷேசமாக வுகானில் தங்கியிருந்த இலங்கையர்களையும் கொண்டுவந்து, தற்காலிக நிலையத்தில் தங்க வைத்திருந்தார்கள். அவர்களின் உடல் நிலை பற்றியும் வாய் திறந்ததாக தெரியவில்லை. சுற்றுலாப் பயணிகளோடு சென்றவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கு என்று அறிவிக்கிறார்கள். இவர்களோடு வந்தவர்கள் எத்தனை பேர் நோயாளிகள் எத்தனைபேர். என்கிற செய்தி ஒன்றும் இல்லை. கேள்வியும் இல்லை, பதிலும் இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.