Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐநாவிலிருந்து இலங்கை விலகுவது என்ற சிந்தனையே விபரீதமானது- ஜெனீவாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் தமரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐநாவிலிருந்து இலங்கை விலகுவது என்ற சிந்தனையே விபரீதமானது- ஜெனீவாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் தமரா

ஐநாவிலிருந்து இலங்கை விலகுவது குறித்து ஜெனீவாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் தமரா குணநாயகம் எச்சரித்துள்ளார்.

இலங்கை படையினருக்கு எதிராக தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் அமைப்புகளில் இருந்து வெளியேறுவோம் என இலங்கை ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளமை குறித்தே முன்னாள் தூதுவர் தனது கருத்தினைவெளியிட்டுள்ளார்

.tamara1-300x199.jpg
ஜனாதிபதி தனது உரையில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையையும், ஐக்கியநாடுகளின் மனித உரிமைகளிற்கான ஆணையாளர் அலுவலகத்தையுமே குறிப்பிட்டிருப்பார் என நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது.

ஜனாதிபதியின் கருத்து ஐநா குறித்து அவருக்கு பிழையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது அல்லது அரசியல் நோக்கத்தை அடிப்படையாக வைத்து அவர் அதனை தெரிவித்துள்ளார் என்பதை புலப்படுத்தியுள்ளது.

ஐநாவின் அமைப்புகளில் விலகுவது யுத்தவீரர்களை காப்பாற்றுவதற்கு இலங்கைக்கு சர்வதேச ஆதரவு அவசியமாகவுள்ள தருணத்தில் இது இலங்கைக்கு பாதகமான விடயமாக மாறலாம்.
உலகளாவிய செல்வாக்குள்ள வெளிநாட்டு ஊடகங்கள் ஜனாதிபதியின் இந்தகருத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கியுள்ளன

Gotabaya-Rajapaksa-may-19-2-300x168.jpg

இந்த அறிக்கையில் என்ன பிரச்சினையுள்ளது?
இலங்கை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடில்லை , மாறாக அது பார்வையாளர் அந்தஸ்த்து மாத்திரமே உள்ள நாடு .
இதன்காரணமாக நான் விலகுகின்றேன் என்றகேள்வியே எழவில்லை.
மேலும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை ஐநாவின் ஒரு பகுதி,ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் ஒரு துணை அமைப்பு. பொதுச்சபையே மனித உரிமை பேரவைக்கான உறுப்பினர்களை தனது உறுப்பு நாடுகள் மத்தியிலிருந்து தெரிவு செய்கின்றது

.un-general-ass.jpg

ஐக்கியநாடுகள் அமைப்பிலிருந்து விலகுவது மாத்திரமே ஐக்கியநாடுகள் மனித உரிமை அமைப்பிலிருந்து முற்றாக விலகுவதற்கான வழியாகும்.
இதேபோன்று ஐக்கியநாடுகளின் மனித உரிமைகளிற்கான ஆணையாளர் அலுவலகத்திலிருந்து வெளியேறுவது என்றாலும் ஐக்கியநாடுகளில் இருந்து வெளியேற வேண்டும்.மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் ஐநாவின் ஒரு பகுதி, விசேடமான முகவர் அமைப்பல்ல.

ஐநா சாசனத்தின் படி பலதரப்பு என்ற அம்சத்தினை பாதுகாக்ககூடிய ,அதன் மூலம் எங்களை போன்ற வலுகுறைந்த நாடுகளின் நலன்களை பாதுகாக்க கூடிய ஒரு உலகளாவிய பலதரப்பு அமைப்பிலிருந்து விலகுவது என இலங்கை சிந்திப்பதே விபரீதமானது

.unhumanrightscouncil-300x200.jpg

ஐநாவின் கீழ் ஏற்படுத்தப்பட்ட உலக ஒழுங்கு- பல பலவீனங்களை கொண்டுள்ள போதிலும், வலுக்குறைந்த நாடுகளினதும்,எங்களை போன்ற காலனித்துவ நாடுகளினதும் இறைமையை வெளிச்சக்திகளின் ஆக்கிரமிப்பு,அத்துமீறல், யுத்தத்திலிருந்து காப்பாற்றக்கூடிய ஒரேயொரு உலக ஒழுங்காக காணப்படுகின்றது.அமெரிக்காவின் பல்வேறுபட்ட ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகளின் மத்தியில் – இறைமையுள்ள நாடுகள்கொள்கைகளை மாற்றிக்கொள்வதற்காக தடைகள்;, தடைகள் குறித்த அச்சுறுத்தல்கள் நிபந்தனைகள், மிரட்டல்கள் மூலம் மீது அழுத்தங்களை பிரயோகிப்பது,போன்றவை- இந்த அமைப்பினை பலப்படுத்தவேண்டும், பலவீனப்படுத்தக்கூடாது.

அணிசேரா அமைப்பு நீண்டகாலமாக போரிட்ட , முன்னாள் காலனித்துவநாடுகளின் நலன்களை முன்னேற்றுவதற்கு வழிவகுத்த, பல்தரப்பு அம்சத்தினை பலவீனப்படுத்தும் ,அமெரிக்காவின் மேலாதிக்க உலகம் பற்றிய ஒரு தலைப்பட்சமான நோக்கத்தை ஐநாவிலிருந்து வெளியேறுவது மேலும் பலப்படுத்தும்.tamara-2.jpg
ஒருதலைப்பட்சமான செயற்பாடுகளை முன்னிறுத்தும் போக்கு பலவீனப்படுத்த படுத்த முயலும் அதே கொள்கைகளை காப்பாற்றும் நோக்கத்தில், விடுதலைப்புலிகளின் பயங்கரவாதம் பிரிவினைவாதத்திற்கு எதிரான போரில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த யுத்த வீரர்களின் நிகழ்வில் ஜனாதிபதி அவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது பொருத்தமற்றது.
ஆபிரிக்கா ஆசியா இலத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள எங்களின் சகாக்கள் , அவர்களின் இறைமையுள்ள நாடுகள் என்ற உயிர்பிழைத்தல் ஐநா சாசனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நோக்கங்களையும் கொள்கைகளையும் மதிப்பதிலேயே தங்கியிருக்கும் இந்த தருணத்தி;ல், சர்வதேச நோய் தொற்றின் மத்தியில் உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து வெளியேறப்போவதாக டிரம்ப் இதேபோன்று அச்சுறுத்தும சூழ்நிலையில் ஜனாதிபதியின் இந்த கருத்தினை எவ்வாறு கருதுவார்கள்

http://thinakkural.lk/article/42667

4 hours ago, உடையார் said:

ஐநாவிலிருந்து இலங்கை விலகுவது குறித்து ஜெனீவாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் தமரா குணநாயகம் எச்சரித்துள்ளார்.

The 23 Provinces in the Country of China

சீனாவின் ஒரு மாகாணமாக இணைத்து விடுவார்  

15 minutes ago, ampanai said:

The 23 Provinces in the Country of China

சீனாவின் ஒரு மாகாணமாக இணைத்து விடுவார்  

அப்படி இணைத்தால் பாதுகாப்பு சபையில் வீட்டோ பவர் கிடைக்கும். வீட்டோ பவர் உள்ள நாட்டு மாகண முதலமைச்சராய் கோத்தா இருக்கலாம். 😂

  • கருத்துக்கள உறவுகள்

ஐநாவிலிருந்து இலங்கை விலகுவது குறித்த முடிவை, போர்நடந்த காலத்தில் அன்றைய சனாதிபதி எடுத்திருந்தால்.... பல இலட்சம் தமிழர்களும், பல ஆயிரம் சிங்கள இராணுவத்தினரும் இன்றும் உயிரோடு இருந்திருப்பர்.  

  • கருத்துக்கள உறவுகள்

இராமன் ஆண்டால்  என்ன,  இராவணன் ஆண்டால் என்ன, கூடவந்த குரங்கு ஆண்டால் என்ன நாங்கள் ஆங்கிலேயனிடம் இழந்த எங்கள் தேசம் கிடைக்கும் வரை......!   

5 hours ago, உடையார் said:

உலகளாவிய செல்வாக்குள்ள வெளிநாட்டு ஊடகங்கள் ஜனாதிபதியின் இந்தகருத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கியுள்ளன

பாலஸ்தீனம் போன்ற முழு அங்கத்துவம் இல்லாமல் போராடும் இனத்திற்கு, அந்த உரிமை மறுக்கப்பட்டு வருகின்றது. 

ஆனால், வெள்ளித்தட்டில் வாங்கிய சிங்களம் அங்கத்துவத்தை இழக்க எண்ணுவது என்பது  புத்த சிங்கள வைராக்கியத்தின் வெளிப்பாடு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.