Jump to content

இளநீர் திருட்டால் இரு கிராமத்தினர் இடையே மோதல்: தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொலை- 30 வீடுகள் சேதம், கடும் பதட்டத்தால் போலீஸ் குவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இளநீர் திருட்டால் இரு கிராமத்தினர் இடையே மோதல்: தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொலை- 30 வீடுகள் சேதம், கடும் பதட்டத்தால் போலீஸ் குவிப்பு

college-student-murder-in-tutucorin-clashes-between-two-groups-police-force-deployed  

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே இளநீர் திருடிய தகராறில் கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் எதிர் தரப்பைச் சேர்ந்தவர்களின் 30 வீடுகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

இரண்டு தரப்பினரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் சத்தியமூர்த்தி (22). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை 6 மணியளவில் நடைப்பயிற்சிக்காக செல்வதாகக் கூறிவிட்டு வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் தேடிய போது, தலைவன்வடலி பாலத்தின் அருகே முற்புதருக்குள் சத்தியமூர்த்தியின் உடல் மட்டும், தலை இல்லாமல் முண்டமாகக் கிடந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர். அப்போது அங்கு திரண்டிருந்த தலைவன்வடலி கிராம மக்கள் உடலை எடுக்கவிடாமல் தடுத்து போராட்டம் நடத்தினர்.

சத்தியமூர்த்தியின் தலையைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும். கொலைஹ் குற்றவாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என அவர்கள் முழக்கம் எழுப்பினர். போலீஸார் அவர்களை சமாதானம் செய்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சத்தியமூர்த்தியின் தலையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் சத்தியமூர்த்தியின் உடல் கிடந்த இடத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் அவரது தலை கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்து, அதனைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தலைவன்வடலி கிராம மக்களுக்கும், அருகேயுள்ள கீழ கீரனூர் கிராம மக்களுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது தெரியவந்தது.

கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தலைவன்வடலியைச் சேர்ந்த ஒருவர் இறந்தபோது, அவரது உடலை அடக்கம் செய்ய விடாமல் கீழ கீரனூரை சேர்ந்த சிலர் தடுத்து தகராறு செய்துள்ளனர்.

இதனை சத்தியமூர்த்தி தட்டிக் கேட்டுள்ளார். மேலும், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கீழ கீரனுரில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் சிலர் இளநீரை திருடியுள்ளனர். தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தான் இளநீரைத் திருடியதாகக் கூறி பேசியுள்ளனர். இது தொடர்பாகவும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் காரணமாகவே சத்தியமூர்த்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை தொடர்பாக ஆறுமுகநேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கீழ கீரனுரை சேர்ந்த ராஜேஷ், பழனிச்சாமி, குட்டி என்ற முனியசாமி, ஸ்டீபன்ராஜ், ஸ்ரீதர், வினோத் ஆகிய 6 பேரையும் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த கொலையால் ஆத்திரமடைந்த தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்த சிலர் கீழ கீரனூர் கிராமத்துக்குள் அத்துமீறி நுழைந்து 30 வீடுகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

தலைவன்வடலி மற்றும் கீழ கீரனுர் கிராமங்களை சேர்ந்தவர்கள் இரு வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த பகுதியில் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி சரக டிஐஜி பிரவின்குமார், தூத்துக்குடி எஸ்பி அருண் பாலகோபாலன் ஆகியோர் இந்த பகுதியில் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர். சுமார் 600 போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

https://www.hindutamil.in/news/tamilnadu/557051-college-student-murder-in-tutucorin-clashes-between-two-groups-police-force-deployed-2.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎30‎-‎05‎-‎2020 at 12:25, பெருமாள் said:

வெறும்  இளனிக்கு இவ்வளவு அக்கப்போர் தேவைதானா ?

.

சாதி பிரச்சனையாய் இருக்கும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/5/2020 at 13:25, பெருமாள் said:

வெறும்  இளனிக்கு இவ்வளவு அக்கப்போர் தேவைதானா ?

.

ஊரிலையெல்லாம் தேங்காய்,மாங்காயிலை  தொடங்கின சின்னப்பிரச்சனையள் தான் கடைசியிலை வெட்டுக்கொத்து கொலையிலை வந்து நிக்கிறது.
என்ரை காணிக்கை தென்னோலை களவெடுத்தவனோடை நான் இண்டு வரைக்கும் கதைக்கிறதேயில்லை. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

ஊரிலையெல்லாம் தேங்காய்,மாங்காயிலை  தொடங்கின சின்னப்பிரச்சனையள் தான் கடைசியிலை வெட்டுக்கொத்து கொலையிலை வந்து நிக்கிறது.
என்ரை காணிக்கை தென்னோலை களவெடுத்தவனோடை நான் இண்டு வரைக்கும் கதைக்கிறதேயில்லை. :grin:

நம்ம காணிகளுக்குள் திருடர்களே  எங்கள்  வகுப்பு நண்பர்கழும் நானும்தான் மத்தியானம் கள்ளு  அடித்துவிட்டு போகிற கிழட்டுக்கூட்டம்  சும்மா  போகாமல் வீட்டில் தட்டி சொல்லி விட்டு போகுங்கள் பிறகென்ன வழக்கமானபஜனைதான் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.