Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.மிருசுவில் பகுதியில் சற்றுமுன்னர் கோர விபத்து -இரண்டு இளைஞர்கள் ஸ்தலத்தில் பலி

Featured Replies

யாழ்.மிருசுவில் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த டிப்பர் வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டவேளை யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற டிப்பருடன்நேருக்குநேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இயக்கச்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/145535

  • தொடங்கியவர்

வைத்தியர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

யாழில் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 337 பேர் பல்வேறு விபத்துக்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வீதி விபத்து மற்றும் தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு விபத்துக்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில்,

கடந்த கால விபத்துக்கள் தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

யாழ் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 337 பேர் பல்வேறு விபத்துக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதத்தில் மட்டும் வீதி விபத்தில் சிக்கிய 212 பேரும், ஏனைய விபத்துக்களில் 118 பேரும், தீ விபத்தில் 07 பேரும் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை கடந்த 08 ஆம் திகதியில் இருந்து 14 ஆம் திகதி வரையில் வீதி விபத்தில் சிக்கிய 43 பேரும், ஏனைய விபத்தில் 68 பேரும் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் வீதி விபத்தில் காயமடைந்த இருவர் உயிரிழந்துள்ளனரென அவர் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/145524

  • கருத்துக்கள உறவுகள்

40 பேருக்கு கொரோனா என்ற போது பதறித்துடித்த சமூகம்.. 2009 க்குப் பின் விபத்துக்களால்.. திட்டமிட்ட.. மற்றும் திட்டமிடப்படாத விபத்துக்களால்.. எத்தனை உயிர்களை பலிகொடுத்திருக்கும். அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் ஏதும் இல்லாமல் போனது தான் ஏனோ..?????????! 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

40 பேருக்கு கொரோனா என்ற போது பதறித்துடித்த சமூகம்.. 2009 க்குப் பின் விபத்துக்களால்.. திட்டமிட்ட.. மற்றும் திட்டமிடப்படாத விபத்துக்களால்.. எத்தனை உயிர்களை பலிகொடுத்திருக்கும். அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் ஏதும் இல்லாமல் போனது தான் ஏனோ..?????????! 

சிங்களவனின் நரிக்குணம் எப்படியென்றால் தமிழன் அழிந்து கொண்டு இருக்கணும் என்பதில் குறியாய் இருக்கிறான் .

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் விபத்துக்களால் தமிழர் சாவதற்கும் சிங்களவன் தான் காரணமா 🤯

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ரதி said:

ஊரில் விபத்துக்களால் தமிழர் சாவதற்கும் சிங்களவன் தான் காரணமா 🤯

சிங்களவனும் ஒரு காரணம்.

என் கண்முன்னால் கண்டேன்.. சிங்களக் கடற்படை..  மற்றும் இராணுவம்.. ஓடும் டிப்பர்கள் சகட்டு மேனிக்கு வீதி ஒழுங்குகளையும் மீறி செலுத்தப்படுவதை. டிப்பரில் போவனுக்கு மரண பயமில்லை. ஆனால்.. கார்.. ஸ்கூட்டி.. மோட்டார் சைக்கிள்.. சைக்கிளில்.. போகும் எம் மக்களே.. இந்த பொறுப்பற்ற.. போர் வெற்றித் திமிர்த்தன சிங்களப் படையிருப்பின்.. திமிர்த்தன செயற்பாடுகளால் பாதிக்கப்படுகின்றனர்.

போர் முடிந்த கையோடு இராணுவம் குறைக்கப்பட்டு.. இராணுவத்தில் இருப்பவர்கள்.. பொது வாழ்வுக்கு பயிற்றப்பட்டு.. பொதுவாழ்வில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்.. சிங்கள தேசம் இன்னும் இன்னும் இராணுவ பூதத்தை வளர்க்கிறது. அதற்கு தீனி வடக்குக் கிழக்கு. 

வடக்குக் கிழக்கில்.. எத்தனை ஆயிரம் இராணுவ வாகனங்களும்.. இராணுவக் கட்டுமானங்களுக்காக ஓடித்திரியும் கனரக வாகனங்களும் உள்ளன என்பது தெரியுமா..???!

இவையும் தான் கூடுதல் மரணங்களுக்கு காரணம். மறுக்க முடியாத ஒரு காரணி. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, nedukkalapoovan said:

சிங்களவனும் ஒரு காரணம்.

என் கண்முன்னால் கண்டேன்.. சிங்களக் கடற்படை..  மற்றும் இராணுவம்.. ஓடும் டிப்பர்கள் சகட்டு மேனிக்கு வீதி ஒழுங்குகளையும் மீறி செலுத்தப்படுவதை. டிப்பரில் போவனுக்கு மரண பயமில்லை. ஆனால்.. கார்.. ஸ்கூட்டி.. மோட்டார் சைக்கிள்.. சைக்கிளில்.. போகும் எம் மக்களே.. இந்த பொறுப்பற்ற.. போர் வெற்றித் திமிர்த்தன சிங்களப் படையிருப்பின்.. திமிர்த்தன செயற்பாடுகளால் பாதிக்கப்படுகின்றனர்.

போர் முடிந்த கையோடு இராணுவம் குறைக்கப்பட்டு.. இராணுவத்தில் இருப்பவர்கள்.. பொது வாழ்வுக்கு பயிற்றப்பட்டு.. பொதுவாழ்வில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்.. சிங்கள தேசம் இன்னும் இன்னும் இராணுவ பூதத்தை வளர்க்கிறது. அதற்கு தீனி வடக்குக் கிழக்கு. 

வடக்குக் கிழக்கில்.. எத்தனை ஆயிரம் இராணுவ வாகனங்களும்.. இராணுவக் கட்டுமானங்களுக்காக ஓடித்திரியும் கனரக வாகனங்களும் உள்ளன என்பது தெரியுமா..???!

இவையும் தான் கூடுதல் மரணங்களுக்கு காரணம். மறுக்க முடியாத ஒரு காரணி. 

நெடுக்கர் ,நான் போன வருடம் யாழ் போய் கிட்டதட்ட 2 மாதங்கள் நின்று விட்டு வந்தேன்..அங்கே ஆமிக்காரங்களையோ ,கவச வாகனங்களையோ பெரிதாய் ரோட்டில் நான் காணவில்லை..

அங்கு விபத்துக்கள் நடப்பதற்கு முக்கிய காரணம் பெற்றோர் ...பிள்ளைகளுக்கு 18 வயசு வந்தவுடனே வாகனங்களை வேண்டி கொடுக்கிறது ...அதை ஒரு கெளரவமாய் நினைப்பது .
போட்டி போட்டுக் கொண்டு ஓடுவது 
குடிச்சுப் போட்டு ஓடுவது 
ஒழுங்காய் ஓடி பழக முன் ஓடுவது 
இப்படி பல காரணங்கள் இருக்கு  

6 hours ago, Rajesh said:

பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த டிப்பர் வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டவேளை யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற டிப்பருடன்நேருக்குநேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

வலு கூடிய உந்துருளியில் கண்மண் தெரியாமல் ஓடி மோதுண்டு இறப்பதற்கு பொறுப்பற்ற அவர்களது பெற்றோர்கள் /அதற்கு பண உதவி செய்தவர்கள் தான் காரணம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.