Jump to content

சாத்தான்குளத்தில் தடையை மீறி கடையை திறந்ததாக கைது: சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் சாவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரவதைத் தடுப்புச் சட்டத்துக்கு முன்னுரை எழுதும் சாத்தான்குளம் மரணங்கள்

தமிழகப் பொலிஸ் துறையின் வரலாற்றில், ‘கரும்புள்ளி’யாக மாறிய சாத்தான்குளம் மரணங்கள், பொலிஸாரின் சித்திரவதைக்கு எதிரான குரலை, இந்திய அளவில் எழுப்பியுள்ளது.   

ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக அழைத்துச் செல்லப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் அடித்துத் துவைக்கப்பட்டார்கள். பின்னர், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு, அங்கிருந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, உயிரிழந்தார்கள்.   
தமிழகத்தின் தென் மாவட்டங்களை மட்டுமின்றி, மாநிலத்தையே உலுக்கிய இந்த ‘இருவர் மரணம்’ , சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் தீர்ப்புகளுக்குப் பின்னர், இந்திய அளவில் பேசப்படும் மரணங்களாக மாறியிருக்கின்றன.   

இந்த வழக்கை விசாரித்த நீதியரசர்கள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகிய இருவரும், இன்று தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் மனித உரிமையை நிலைநாட்டும் நீதிபதிகளாகவும் உயர்நீதிமன்றத்தின் அதிகாரம் என்ன என்பதைப் பொலிஸாருக்கு அறிவுறுத்தும் நீதிபதிகளாகவும் புகழ் பெற்று, உயர்ந்து நிற்கிறார்கள்.   

மனித உரிமை ஆர்வலர்கள் பாராட்டும் நீதிபதிகளான இவர்கள், இந்த வழக்கில் பிறப்பித்த அதிரடி உத்தரவுகள், நீதி தேடிப் போராடிய மக்களுக்குப் பெரிய ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது. பொது அமைதி மீண்டும் தென் மாவட்டங்களில் மட்டுமின்றி, தூத்துக்குடி மாவட்டத்திலும் வழமைக்குத் திரும்பியிருக்கிறது.  

“ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணங்களில், கொலை வழக்காகப் பதிவு செய்வதற்கான முகாந்திரம் இருக்கிறது என்பது, பின்வரும் நடவடிக்கைகள் மூலம் உணர்ந்தகொள்ள முடியும். 
பொலிஸ் நிலையத்துக்கு விசாரிக்கப் போன நீதிபதியைப் பணி செய்ய விடாமல் தடுத்த அதிகாரிகளை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராக வைக்கப்பட்டது. 

சம்பவம் நடைபெற்ற சாத்தான்குளம் பொலிஸ் நிலையத்தை, பொலிஸ் அதிகாரிகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, வருவாய் துறையின் கட்டுப்பாட்டின் கொண்டு வரப்பட்டது. சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதை மாற்றி, அது காலதாமதம் ஆகும் என்றும், உடனடியாக சி.பி.சி.ஐ.டி விசாரணையை, ஒரு நிமிடம் கூடத் தாமதம் ஆகாமல் எடுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

பொலிஸ் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டமை குறித்துச் சாட்சி சொன்ன, அந்த நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ரேவதியுடன், உயர்நீதிமன்ற நீதிபதிகளே நேரடியாக அலை பேசியில் தொடர்புகொண்டு, பாதுகாப்பு, லீவு, சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டது. 

மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் எல்லாமே, மனித உரிமையை நிலைநாட்டுவதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் போட்ட உத்தரவுகள். தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற பொலிஸ்  நிலைய மரணம், நீதிமன்றக் காவல் மரணம் போன்றவற்றில், இதுவரை இல்லாத அளவுக்கு முன்னுதாரணமாக, இந்த உத்தரவுகள் அமைந்துவிட்டன. 

இனியொரு முறை, இப்படியொரு தாக்குதல் சம்பவமோ, மரணமோ பொலிஸ் நிலையத்தில் நடக்கக் கூடாது என்பது இந்த உத்தரவுகளில் மேலோங்கியுள்ளது. அந்த வகையில், சட்டத்தின் ஆட்சியை உயர்நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.  

அதே சமயத்தில், பொலிஸ் நிலைய நிர்வாகக் கட்டுப்பாட்டை பொலிஸ் துறையிடமிருந்து வருவாய்த்துறைக்கு மாற்றியமையானது, வரலாறு காணாத உத்தரவு. இந்திய வரலாற்றில், இது முதல் உத்தரவாகவே போலிஸ் அதிகாரிகளால் பேசப்படுகிறது. 

குறிப்பாக, பொலிஸ் துறை,  முதலமைச்சரின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. பொலிஸ் நிலைய நிர்வாகத்தை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருந்தே, வேறு ஒரு துறைக்கு மாற்றியமை, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில், எப்போதுமே முன்னணிக் கள வீரர்களாக நிற்போம் என்பதை வெளிக்காட்டும் விதத்தில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் செயற்பட்டுள்ளார்கள். இந்த உத்தரவு, இந்திய மக்கள் அனைவராலும் வரவேற்கப்படுகிறது; வாழ்த்தப்படுகிறது. 

இந்த இரு மரணங்களும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மனதை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பதற்கு, அவர்கள் அளித்துள்ள உத்தரவில் உள்ள வாசகங்களே போதுமான ஆதாரங்களாக இருக்கின்றன. இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி சப்-இன்ஸ்பெக்டர் அனில் குமாரை நியமித்த உத்தரவில், “இறந்த இருவரின் குடும்பத்தினரின் கண்களில் ஆறாக ஓடும் கண்ணீரைத் தன் முன் நிறுத்தி,- பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கண்ணீரைத் துடைக்கும் விதத்தில், புலனாய்வு செய்வார் என்று நம்புகிறோம்” என்று உருக்கமாகத் தெரிவித்த குறிப்பிட்ட நீதிபதிகள், “இந்த வழக்கு விசாரணையை, உயர்நீதிமன்றம் நேரடியாகக் கண்காணிக்கிறது என்பதை, புலனாய்வு அதிகாரி மனதில் கொள்ள வேண்டும்” என்றும், எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்கள்.  

பொலிஸ் நிலையங்களில் இது போன்று சித்திரவதைகள், மனித நேயமற்ற விசாரணை முறைகள் (Third Degree Methods) இருக்கக் கூடாது என்று, பலமுறை உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் எச்சரித்து வந்துள்ளன. இதன் உச்சக்கட்டமாக, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களே இதைத் தடுக்கும் வகையில், சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று, குரல் எழுப்பி வந்துள்ளனர். 

அதன் விளைவாக, 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இருந்த போது, 1975இல் ஐ.நா சபை கொண்டு வந்த, ‘சித்திரவதைக்கு எதிரான பிரகடனம்’  அதிகமாகப் பேசப்பட்டது. இந்தப் பிரகடனத்தில் 1997இல் இந்தியா கையெழுத்திட்டாலும், அதை ஏற்று உள்ளூர் சட்டங்களில் சித்திரவதைக்கு எதிரான, சட்டத் திருத்தங்கள் கொண்டு வரவில்லை என்ற குரல் எழும்பியது.  

உச்சநீதிமன்றமே சில வழக்குகளில், “ஏன் ஐ.நா பிரகடனத்தில் கையெழுத்திட்டும் இதுவரை சித்திரவதை தடுப்புச் சட்டம் கொண்டு வரவில்லை” என்று மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே, இதைச் சமாளிக்க, சித்திரவதைத் தடுப்புச் சட்டமூலம் -2010 இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளில், ஒன்றான மக்களவையில் 2010 ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்டு,  மே மாதம் நிறைவேற்றப்பட்டது. 

அது, இன்னோர் அவையான மாநிலங்களவையில் நிறைவேறி இருக்க வேண்டிய நேரத்தில், அந்தச் சட்டமூலத்தில் சித்திரவதைகளைத் தடுக்கும் வலுவான பிரிவுகள் இல்லை என்று கூறி, அன்றைய சட்டத்துறை அமைச்சர் அஸ்வனி குமார் தலைமையிலான 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட தேர்வுக்குழுவுக்கு ஓகஸ்ட் 2010 இல் அனுப்பி வைக்கப்பட்டது.  

அந்தக் குழு, இந்தச் சித்திரவதைத் தடுப்புச் சட்டமூலத்தை ஆய்வு செய்வதற்காக, ஒன்பது கூட்டங்கள் நடத்தியது. கைதிகள்,  மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி, இறுதியில் ஒரு சட்டமூலத்தை 2010 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் தயாரித்தது. 

அந்தச் சித்திரவதைத் தடுப்புச் சட்டமூலத்தில், பொலிஸ் காவலில் சட்டவிரோதமாகச் சித்திரவதை செய்தால், மூன்று வருட சிறைத் தண்டனையும்  பாதிக்கப்பட்டவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் நட்டஈடும் சித்திரவதை செய்யப்பட்டது குறித்து, பாதிக்கப்பட்டவர் இரண்டு வருடங்களுக்குள் புகார் அளித்திருக்க வேண்டும் எனவும் இது போன்ற சித்திரவதை வழக்கில், ஒரு வருடத்துக்குள் விசாரித்துத் தீர்ப்பளித்து விட வேண்டும் என்பன போன்ற முக்கிய பிரிவுகள், சேர்க்கப்பட்டு இருந்தன. ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஆட்சி இழந்ததால், அந்தச் சட்டமூலம் அப்படியே காலாவதியானது.  

பின்னர், 2014இல் ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கத்துக்கும் இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது. குறிப்பாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் அஸ்வணி குமார், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இந்திய சட்ட ஆணைக்குழுவுக்கு இந்த விடயம் அனுப்பப்பட்டு, ஐ.நா பிரகடனத்தை ஏற்று, உள்ளூர் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவது குறித்து ஆராயுமாறு பணிக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில், 273ஆவது சட்ட அறிக்கை அளிக்கப்பட்டு, அதில் புதிதாக ‘சித்திரவதைத் தடுப்புச் சட்டமூலம் 2017’ தயார் செய்யப்பட்டது. இந்தப் புதிய அறிக்கையில், 2010 சட்டமூலத்தில் இருந்த மூன்றாண்டு சிறைத்தண்டனை, ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டமை மிக முக்கியமான பரிந்துரையாகும். 

அதேபோல், ஒருவரைச் சித்திரவதை செய்யவில்லை என்று நிரூபிக்கும் பொறுப்பு, பொலிஸ் நிலைய அதிகாரியின் மீது சுமத்தப்பட்டது. 

பாதிக்கப்பட்டவரின் சமூக, பொருளாதார இழப்புகளை அடிப்படையாக வைத்து, நீதிமன்றமே நட்ட ஈட்டை நிர்ணயிக்க வேண்டும்  என்று கூறப்பட்டது. 

இந்தச் சித்திரவதைச் சட்டம் 2017இல் நடைமுறைக்கு வந்திருந்தால், பொலிஸ் நிலைய மரணங்கள் நிகழ்ந்திருக்காது. 

1975இல்  வெளிவந்த ஐ.நா பிரகடனத்துக்கு, 22 வருடங்களுக்குப் பிறகு கையெழுத்திட்டும் இன்றுவரை,  சித்திரவதை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு,  உள்ளூர் குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் 1973, இந்திய தண்டனைச் சட்டம் 1872 ஆகியவற்றில் உரிய திருத்தங்கள் கொண்டு வரவில்லை என்ற கோரிக்கை அலை நாடு முழுவதும் பரவியிருக்கிறது. 

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.ஷாவே, “சட்ட விரோத சித்திரவதைகளுக்கு முடிவுரை எழுதும் காலம் வந்து விட்டது” என்று தன் ஆவேசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆகவே, சித்திரவதைத் தடுப்புச் சட்டம் விரைவில் வருவதற்கு, சாத்தான்குளம் பொலிஸ் நிலைய மரணங்கள் முன்னுரை எழுத வேண்டும் என்பது, சட்டத்தின் ஆட்சியை விரும்பும் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சித்திரவதைத்-தடுப்புச்-சட்டத்துக்கு-முன்னுரை-எழுதும்-சாத்தான்குளம்-மரணங்கள்/91-252842

 

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை விசாரணைக்கு ஏற்றது சி.பி.ஐ.

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை விசாரணைக்கு ஏற்றது சி.பி.ஐ.

சாத்தான் குளம் தந்தை மகன் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
பதிவு: ஜூலை 07,  2020 13:30 PM மாற்றம்: ஜூலை 07,  2020 14:33 PM
சென்னை,

துத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ்  ஆகிய இருவரும் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் மரணம் அடைந்தனர்.
போலீசார் அடித்துக்கொன்றதாக குடும்பத்தினரும் உறவினர்களும்  குற்றச்சாட்டு எழுப்பியதால் இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றது. மாஜிஸ்திரேட்டு நடத்திய விசாரணையில் தந்தை - மகன் இருவரும் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. 

இந்த வழக்கை மதுரை ஐகோர்ட் உத்தரவின் படி  சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி, வழக்கில் தொடர்புடைய காவலர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. தொடர்ந்து இந்த வழக்கை சிபிசிஐடி தீவிரமாக விசாரித்து வருகிறது.

இந்த நிலையில்,  இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. ஏற்கனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் இது தொடர்பாக முதல் அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் சிபிஐ மேற்கூறிய வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/07133011/CBI-Register-case-in-sathankulam-incident.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: மேலும் 5 போலீசாரும் கைதாக வாய்ப்பு என தகவல்

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: மேலும் 5 போலீசாரும் கைதாக வாய்ப்பு என தகவல்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் பால்துரை உள்பட 5 காவலர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
பதிவு: ஜூலை 08,  2020 09:25 AM
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை- மகனுமான ஜெயராஜ் (வயது 58), பென்னிக்ஸ் (31) ஆகியோர் ஊரடங்கு காலத்தில், கடையை அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக திறந்து வைத்திருந்த குற்றச்சாட்டில், கடந்த மாதம் 19-ந்தேதி இரவு கைது செய்யப்பட்டனர்.

பின்னர், சாத்தான்குளம் போலீஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், இருவரும் அங்கு கடுமையாக தாக்கி சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. ஜூன் 20-ந்தேதி அதிகாலை சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில், 22-ந்தேதி பென்னிக்சும், 23-ந்தேதி ஜெயராஜூம் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் சாத்தான்குளம் மட்டுமல்லாது, தமிழகத்திலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு மதுரைக் கிளை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. நீதிபதிகள் உத்தரவின்பேரில் கடந்த மாதம் 28-ந்தேதி, கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், சாத்தான்குளம் காவல் நிலையம் சென்று விசாரணை நடத்தினார். ஆனால், அவரது விசாரணைக்கு போலீசார் ஒத்துழைக்கவில்லை. அதேநேரத்தில், தலைமை பெண் காவலர் ரேவதி, ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டபோது நடந்தது என்ன? என்பது குறித்து பரபரப்பு சாட்சியம் அளித்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாகவும், சி.பி.ஐ. இந்த வழக்கை கையில் எடுக்கும் வரை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த ஐகோர்ட்டு மதுரைக் கிளை அதிரடியாக உத்தரவிட்டது. அதன்படி, நெல்லைசி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. அனில்குமார் உடனடியாக விசாரணையை தொடங்கினார்.  விசாரணையை தொடர்ந்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் பால்துரை உள்பட 5 காவலர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பின் 5 பேரும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/08092513/sathankulam--Murder-case-Five-more-cops-arrested.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்- சிபிஐ வழக்குப் பதிவு

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்- சிபிஐ வழக்குப் பதிவு

சென்னை:

சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிஐ மூலம் விசாரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது.

 
சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. அதன்படி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, இதுவரை 10 பேரை கைது செய்தது.

இந்த வழக்கை சிபிஐ ஏற்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டது.

இதையடுத்து சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ததை தொடர்ந்து, வழக்கு விவரங்களை சி.பி.சி.ஐ.டி. ஒப்படைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.ஐ. குழு சாத்தான்குளம் செல்கிறது. 

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/07/08134525/1682464/CBI-Case-Filed-Sathankulam-Custodial-Deaths.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

`பரவும் வதந்திகள்...' - சாத்தான்குளம் வழக்கை நீர்த்துப்போகச் செய்ய முயற்சி?

`பென்னிக்ஸ் குடும்பத்தினர்’

 

சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் செல்போனில் சொல்லியிருக்கிறார். அப்போது ஸ்ரீதர், "மரக்கடைக்காரனா... அவன்கிட்ட ஏற்கெனவே ஒரு விவகாரம் இருக்குது. ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு வா” என்று உத்தரவு போட்டுள்ளார்.

சாத்தான்குளம் போலீஸார்மீதான இரட்டைக் கொலை வழக்கை முன்வைத்து கடந்த இதழில் சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரையில், 'ஆரம்ப ஜோரில் கைது, சிறையில் அடைப்பு என்றெல்லாம் வேகம் காட்டுவார்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு மக்கள் இதை மறக்க ஆரம்பித்ததும், தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடுவார்கள். நீர்த்துப்போகும் அளவுக்கான சாட்சிகள், காரணங்களையெல்லாம் எடுத்துவைத்து வழக்கை ஒன்றுமில்லாமல் போகச் செய்துவிடுவார்கள்' என்று எழுதியிருந்தோம்.

ஆனால், மக்கள் மறக்க ஆரம்பிப்பதற்கு முன்னதாக... இப்போதே இந்த வழக்கை திசை திருப்பி நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்த வகையில் சி.பி.சி.ஐ.டி தரப்பிலிருந்து கசியவிடப்படும் தகவல்களைப் பார்ப்போம்...

ஜெயராஜ்,  பென்னிக்ஸ்
 
ஜெயராஜ், பென்னிக்ஸ்

பென்னிக்ஸ் கடையை மூடாமல் இருந்ததால்தான் அவரின் தந்தைக்கும், சிறப்பு உதவி காவல் ஆய்வாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அந்தச் சிறப்பு உதவி ஆய்வாளர், சம்பவ இடத்திலிருந்து சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் செல்போனில் சொல்லியிருக்கிறார். அப்போது ஸ்ரீதர், "மரக்கடைக்காரனா... அவன்கிட்ட ஏற்கெனவே ஒரு விவகாரம் இருக்குது. ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு வா” என்று உத்தரவு போட்டுள்ளார்.

உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் டீம் அங்கு சென்று ஜெயராஜை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தது. அங்கு விசாரணை நடக்கும்போது ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்களிடம், "அவன்கிட்ட ஒரு வீடியோ சிக்கியிருக்கு. அதைப் பத்தி அவன் சொல்ற வரைக்கும் விடாதீங்க” என்று சொல்லியிருக்கிறார். 'நாசரேத் பகுதியைச் சேர்ந்த ஒரு வி.ஐ.பி-யின் செல்போனில் இருந்த ரகசிய விவகாரம் பென்னிக்ஸ் கைக்குச் சென்றிருக்கிறது; அதை வாங்கவே ஸ்ரீதர் முயன்றுள்ளார்' என்று சி.பி.சி.ஐ.டி தரப்பில் சொல்கிறார்கள்.

கூடுதலாக, வி.ஐ.பி ஒருவரின் பேத்தியை பென்னிக்ஸ் காதலித்தார்; அதனால் நடத்தப்பட்ட தாக்குதல் என்று ஒரு காதல் விவகாரத்தையும் கசியவிடுகிறார்கள்

பென்னிக்ஸுக்கு நெருக்கமான நண்பர்கள் ஏழு பேர். அவர்களில் இருவர் வழக்கறிஞர்கள். அவர்களிடம், `இந்தத் தகவல்கள் உண்மையா?' என்று கேட்டோம். "பென்னிக்கு நிறைய நண்பர்கள் இருந்தாலும், எங்க ஏழு பேர்கிட்டதான் நெருக்கமாக இருப்பான். நாங்க தினமும் அவன் செல்போன் கடைக்குப் போவோம். டீ சாப்பிடுவோம். எங்களுக்குள்ள எந்த ஒளிவுமறைவும் இருந்ததில்லை.

செல்போன் வீடியோ அவன்கிட்ட சிக்கியிருக்கு, காதல் விவகாரம், கட்சிப் பின்னணி... இப்படி போலீஸ் கசியவிடுற தகவல்கள் எங்களுக்கும் வருது. இவை எல்லாமே வதந்தி. முழுக்க முழுக்கப் பொய். இட்டுக்கட்டி வழக்கை திசை திருப்புகிறார்கள்" என்றவர்கள் கண்கலங்க மேலும் பல தகவல்களைப் பகிர்ந்தனர்.

https://www.vikatan.com/news/general-news/is-attempts-made-to-dilute-the-investigation-of-sathankulam-case

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, உடையார் said:

சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிஐ மூலம் விசாரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது.

இதில்  அரசியல் புள்ளியின் கரங்கள் இன்ஸ்பெக்ரர் சிறீதருடன் இருப்பதாக எல்லா ஊடுகங்களும் சொல்கின்றன.ஆனாலும் எந்த ஒரு ஊடகமாவது அவரின் விபரத்தை வெளியிட தயாரில்லை.
  
ஆனாலும் கடலூர் ராஜா தான் அது என்று பொதுமக்கள் முணுமுணுக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

.
  
ஆனாலும் கடலூர் ராஜா தான் அது என்று பொதுமக்கள் முணுமுணுக்கிறார்கள்.

இப்படிபட்டவர்களை நடு ரோட்டில் கட்டி வைத்து சவுக்கடி கொடுக்கனும் மக்கள்😡😡

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, உடையார் said:

இப்படிபட்டவர்களை நடு ரோட்டில் கட்டி வைத்து சவுக்கடி கொடுக்கனும் மக்கள்😡😡

இவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்குகள் திசை திரும்பலாம்.

இன்ஸ்பெக்டரும் இவருக்காக எத்தனை என்கவுண்டர் பண்ணினாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான்குளம் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது 2 வழக்குகள் உடனடியாக பதிவு

சாத்தான்குளம் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது 2 வழக்குகள் உடனடியாக பதிவு

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை உடனடியாக தொடங்கியது. சி.பி.ஐ. போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர்.
பதிவு: ஜூலை 09,  2020 05:30 AM
சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் நீதிமன்ற காவலில் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அடுத்தடுத்து மரணம் அடைந்தனர்.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலைவழக்குப்பதிவு செய்தனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். நேற்று 2-வது கட்டமாக சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் பணியாற்றிய மேலும் 5 போலீசாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் தமிழக அரசின் பரிந்துரையின்பேரில் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படுவதாக மத்திய அரசு நேற்றுமுன்தினம் அறிவித்தது. இதையடுத்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு பிரிவு சூப்பிரண்டு தன்மயா பெரா தலைமையில் சி.பி.ஐ. போலீசார் விசாரணையை உடனடியாக தொடங்கினார்கள். ஏற்கனவே வியாபாரி ஜெயராஜ் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது மரணம் அடைந்தது தொடர்பாகவும், அவரது மகன் பென்னிக்ஸ் அதே சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் மரணம் அடைந்ததையொட்டியும் 2 வழக்குகளை தனித்தனியாக கோவில்பட்டி கிழக்கு போலீசார் பதிவு செய்திருந்தனர்.

இந்த 2 வழக்குகளும் உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த 2 வழக்குகளையும் சி.பி.ஐ. போலீசார் தங்களது பாணியில் தனித்தனியாக பதிவு செய்தனர். குற்றவியல் நடைமுறை சட்டம் 176(1)(ஏ)(1) (மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கு) என்ற பிரிவின் கீழ் சி.பி.ஐ. வழக்கை பதிவு செய்து உள்ளது.

கோவில்பட்டி கிழக்கு போலீஸ்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முருகன் என்பவர் தான் முதலில் மேற்கண்ட 2 வழக்குகளையும் பதிவு செய்திருந்தார்.

வியாபாரி ஜெயராஜ் மரணம் அடைந்தது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் முருகன் பதிவு செய்திருந்த வழக்கில் கூறியிருப்பதாவது:-

ஜூன் மாதம் 23-ந்தேதி காலை 6.45 மணிக்கு நான் பணியில் இருந்தேன். அப்போது கோவில்பட்டி கிளைச்சிறை சூப்பிரண்டு மு.சங்கர் போலீஸ்நிலையத்தில் வந்து ஆஜராகி புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

ஜூன் 20-ந்தேதி அன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஜெயராஜ் என்பவர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜூன் 22-ந்தேதி அன்று இரவு 10.20 மணிக்கு தனக்கு காய்ச்சல் இருப்பதாக சிறைக்காவலரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக சிறையின் முதன்மை தலைமை காவலர் அழகர்சாமி, 2-ம் நிலை காவலர் செந்தூர்ராஜா ஆகியோர் இரவு 10.30 மணிக்கு ஜெயராஜை மருத்துவமனையில் சேர்த்தனர். ஜூன் 23-ந்தேதி அன்று அதிகாலை 5.40 மணிக்கு ஜெயராஜ் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரி தகவல் தெரிவித்தார். இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு சூப்பிரண்டு சங்கர் கொடுத்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேற்கண்டவாறு முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதேபோன்று பென்னிக்ஸ் இறந்தது தொடர்பாகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சி.பி.ஐ. போலீசார் அடுத்தகட்டமாக சாத்தான்குளத்துக்கு சென்று விசாரணையை துரிதப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சி.பி.ஐ. சிறப்பு குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா இந்த வழக்கு விசாரணையை முன்னின்று நடத்துவார் என்று சி.பி.ஐ. தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/09051747/Chathankulam-incident-CBI-probe-The-investigation.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு
 

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
பதிவு: ஜூலை 09,  2020 10:57 AM மாற்றம்: ஜூலை 09,  2020 11:00 AM
மதுரை,

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறை தாக்கியதில் தந்தை மகன் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், சிபிஐ-யும் இரு வழக்குப்பதிவை செய்துள்ளது. இன்னும் சில தினங்களில் சிபிஐ தனது விசாரணையை தொடங்கும் என்று தெரிகிறது.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும்  காவலர்கள் முருகன், முத்துராஜா  உள்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 8 போலீசார் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி முதன்மை நீதிமன்றத்தில் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு காணொலி வாயிலாக விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/09105730/Inspector--sridhar-and-SI-sridhar-file-a-bail-pettion.vpf

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை; அதிகாரிகள் நாளை தமிழகம் வருகை

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை; அதிகாரிகள் நாளை தமிழகம் வருகை

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நாளை சி.பி.ஐ. அதிகாரிகள் 7 பேர் தமிழகம் வருகின்றனர்.
பதிவு: ஜூலை 09,  2020 16:50 PM
சென்னை,

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசார் நடத்திய தாக்குதலில் தந்தை-மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் முதற்கட்டமாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று மேலும் 5 காவலர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 10 பேர் மீதும் கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இது தொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. தற்போது இந்த வழக்கு குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சாத்தான்குளம் காவல்நிலையம், கிளை சிறை, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆவணங்கள், பொருட்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. விசாரணை நாளை தொடங்கப்பட இருக்கும் நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் 7 பேர் நாளை காலை சிறப்பு விமானத்தில் டெல்லியிலிருந்து மதுரை வருகிறார்கள். இதுவரை இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்டுள்ள ஆதாரங்கள் குறித்து ஆய்வு செய்த பின்னர் அவர்கள் விசாரணையை தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/09165038/CBI-investigation-in-Sathankulam-incident-Officials.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு ஆவணங்கள் இடமாற்றம்

சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு ஆவணங்கள் இடமாற்றம்

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் மதுரை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பதிவு: ஜூலை 10,  2020 11:48 AM
மதுரை,

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தாக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.இந்த வழக்கை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 பேரை கைது செய்தனர். ஏராளமான ஆவணங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற பரிந்துரை செய்தது. அதன்பேரில் புதுடெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 7-ந் தேதி மாலையில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கில்  சிபிஐ இன்று  விசாரணையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பான ஆவணங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.  தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு  ஆவணங்கள் மாற்றப்பட்டுள்ளது.  சிபிஐ விசாரணை இன்று தொடங்க உள்ள நிலையில், வழக்கு ஆவணங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/10114844/Sathankulam-fatherson-murder-case-Transfer-of-case.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான்குளம் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை குழு தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் வருகை

சாத்தான்குளம் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை குழு தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் வருகை

 

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. விசாரணை குழு தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் வந்து சேர்ந்தனர்.
பதிவு: ஜூலை 10,  2020 16:30 PM
தூத்துக்குடி,

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசார் நடத்திய தாக்குதலில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உயிழந்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து விசாரணையை தொடங்குவதற்காக டெல்லியில் இருந்து விஜயகுமார் சுக்லா தலைமையிலான 7 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து அவர்கள் கார் மூலமாக தூத்துக்குடியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர்.

இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக இதுவரை கைப்பற்றப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. அணில்குமார் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதற்கு அடுத்த கட்டமாக இந்த கொலை வழக்கில் தொடர்புடைய இடங்களான சாத்தான்குளம் காவல்நிலையம், கோவில்பட்டி சிறைச்சாலை, தூத்துக்குடி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வையிட்ட பிறகு விசாரணையை தொடர்ந்து நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/10163022/Sathankulam-incident-CBI-Investigation-Team-visit.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: மேலும் 5 போலீசார் பணியிடை நீக்கம்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: மேலும் 5 போலீசார்  பணியிடை நீக்கம்

 

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்களில் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பதிவு: ஜூலை 12,  2020 12:31 PM மாற்றம்: ஜூலை 12,  2020 12:39 PM
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடை திறந்து வைத்ததாக கூறி போலீசார் அழைத்து சென்று தாக்கினார்கள். பின்னர் கோவில்பட்டி ஜெயிலில் அடைக்கப்பட்ட 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.  இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசாரை கைது செய்தனர்.

மேலும், சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாத்தான்குளம் போலீஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, கோவில்பட்டி ஜெயிலில் விசாரணை நடத்தி பல்வேறு ஆவணங்களை சேகரித்தனர்., இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதன்படி, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.  

இதற்கிடையே, இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை,  காவலர்கள், சாமதுரை, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸிஸ், வெயிலுமுத்து ஆகிய 5 பேரையும்  பணியிடை நீக்கம் செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரம்: கைதான போலீஸாரை காவலில் எடுக்க மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல்

 
சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரம்: கைதான போலீஸாரை காவலில் எடுக்க மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல்
 

சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தில் கைதான போலீஸாரை காவலில் எடுக்க மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்துள்ளது.
பதிவு: ஜூலை 13,  2020 17:08 PM
சென்னை,

சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த 5 பேரையும் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்ககோரி சிபிஐ சார்பில் மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

சிபிஐ மனு மீது மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.  முதலில் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/13170851/Sathankulam-fatherson-death-affair-CBI-files-petition.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவலில் எடுத்து விசாரிப்பது என்டால் பென்டு எடுக்கிறது தானே.நடக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை ஐகோர்ட் அனுமதி

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை ஐகோர்ட் அனுமதி

 

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாருக்கு 16ஆம் தேதி வரை சிபிஐ காவல் அளிக்கப்பட்டது
பதிவு: ஜூலை 14,  2020 12:33 PM
மதுரை

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு  கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜை காவலில் எடுக்க சிபிஐ  மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. சிபிஐ காவல் கோரிய மனு மீது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.


சாத்தான்குளம் கொலை வழக்கில் 5 போலீசாரை விசாரிப்பது மிக முக்கியமான ஒன்று சிபிஐ சார்பில் வாதிடப்பட்டது. காவலில் எடுத்து விசாரிக்க கோருவது ஏன்? என சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது.

சிபிஐ காவலில் செல்வது குறித்து 5 போலீசாரிடமும் நீதிபதி தனித்தனியே கேட்டறிந்தார் 

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போலீசாரும் சிபிஐ காவலில் செல்ல ஒப்புதல் அளித்து உள்ளனர் மேலும் வழக்கறிஞர்கள் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என 5 போலீசாரும் கோரிக்கை வைத்து உள்ளனர்.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாருக்கு  16ஆம் தேதி வரை சிபிஐ காவல் அளிக்கப்பட்டது  சிபிஐ 5 நாள் அனுமதி கேட்ட நிலையில் 3 நாள் அனுமதி அளித்தது மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/14123350/Including-Police-Inspector-Sridhar-5-policemen-taken.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF.jpg

சாத்தான்குளம் வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரணை செய்யக்கோரிய மனு தள்ளுப்படி!

சாத்தான்குளம் தந்தை,  மகன் கொலை வழக்கில் முதலமைச்சர் எடப்படி பழனிசாமியை விசாரணை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுப்படி செய்துள்ளது.

இந்த வழக்கில் முதலமைச்சரை விசாரணை செய்யவேண்டும் எனக்கூறி வழக்கறிஞர் ராஜாராமன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு  இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் மேற்படி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை வழக்கறிஞர் ராஜாராமன் தாக்கல் செய்திருந்த மனுவில்,  “தந்தை,  மகன் கொலை வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கும் முன்னரே அவர்கள் உடல்நிலை கோளாறு காரணமாக உயிரிழந்ததாக முதலமைச்சர் முன்னுக்குபின் முரணாக பேசியதாக மனுதாரர் கூறியிருந்தார்.

மேலும்  முதலமைச்சரின் பேச்சு குற்றவாளிகளை காப்பாற்றும் செயலாகக் கருதி கொலை வழக்கில் முதலமைச்சருக்கு தொடர்பு உள்ளதா? என்பதை விசாரிக்க உத்தரவிட வேண்டும்”  எனத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/சாத்தான்குளம்-வழக்கில்-எ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான்குளம் வழக்கு: அடுத்த 5 போலீசாரை காவலில் எடுக்க சி.பி.ஐ. திங்கள்கிழமை மனு

சாத்தான்குளம் வழக்கு:  அடுத்த 5 போலீசாரை காவலில் எடுக்க  சி.பி.ஐ. திங்கள்கிழமை மனு

 

தூத்துக்குடி,

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கினார்கள். கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.


இந்த வழக்கின் விசாரணையை சிபிஐயிடம் தமிழக அரசு ஒப்படைத்தது. இதன்படி, சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவ்வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகனேஷ் உள்ளிட்ட 5 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து சிபிஐ விசாரித்தது. சிபிஐ காவலில் முடிந்ததும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 5 பேரையும் வரும் 30 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 5 காவலர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. இதற்காக வரும் திங்கள் கிழமை மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிகிறது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/17143042/CBI-plan-to-take-custody-5-cops-who-arrested-in-sathankulam.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான்குளம் கொலை வழக்கு: சி.பி.ஐ. காவலில் உள்ள 3 போலீசாரிடம் விசாரணை தீவிரம்

சாத்தான்குளம் கொலை வழக்கு: சி.பி.ஐ. காவலில் உள்ள 3 போலீசாரிடம் விசாரணை தீவிரம்

தூத்துக்குடி,

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை-மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீசார் நடத்திய கொடூர தாக்குதலில் உயிரிழந்த சம்பவத்தில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்டமாக ஜெயராஜ், பென்னிக்ஸின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த அன்று காவல்நிலையத்தில் பணியில் இருந்த அனைத்து போலீசாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து காவலர்கள் சாமத்துரை, வெயில்முத்து மற்றும் செல்லத்துரை ஆகிய 3 பேரையும் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து தற்போது அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் 3 பேரும் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்.

அங்கு அவர்களிடம் போலீசார் விசாரணையின் போது நடந்த சம்பவங்கள் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்கடுத்ததாக ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான இடங்களுக்கு 3 காவலர்களையும் அழைத்துச் சென்று விசாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/21143140/Sathankulam-murder-case-CBI-Intensity-of-investigation.vpf

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த சாத்தான்குளம் ? ஆழ்வார் குறிச்சி வன துறை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்காசி: வனத்துறை விசாரணையில் உயிரிழந்த விவசாயி உடலில் 18 காயங்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு பணிநியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு பணிநியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்

 

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீஸ் விசாரணையின்போது கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த இரட்டைக்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. 

ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.


இந்நிலையில் ஜெயராஜின் மூத்த மகளும், பென்னிக்சின் சகோதரியுமான பெர்சிக்கு அரசு பணிக்கான நியமன ஆணையை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 

பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்ட பெர்சி, செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

தன் தந்தை, சகோதரர் மரணத்தில் நீதியை நிலைநாட்ட தமிழக அரசு உதவும் என்றும் கொலை வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரவேண்டும்.

இவ்வாறு கூறினார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/27102733/Chief-Minister-Palanisamy-has-issued-a-government.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிந்தால்தான் உடலை வாங்குவோம்: உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினர் திட்டவட்டம்

tenkasi-farmers-family-refuse-to-get-the-body  

தென்காசி 

வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தால் தான் உடலை வாங்குவோம் என உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அணைக்கரை முத்து (65).

இவரது விவசாய நிலத்தைச் சுற்றி மின் வேலி அமைத்திருந்ததாகக் கிடைத்த தகவலின்பேரில், கடையம் வனத்துறையினர் கடந்த 22-ம் தேதி இரவு அணைக்கரை முத்துவை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், அணைக்கரை முத்துவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி, தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அணைக்கரை முத்துவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர். அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் கார்த்திகேயன் விசாரணை நடத்தி வருகிறார்.

அணைக்கரை முத்து குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மரணத்துக்குக் காரணமான வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 23-ம் தேதி முதல் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை அணைக்கரை முத்து உடலைப் பெற முடியாது என்று மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், அணைக்கரை முத்து குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இருப்பினும் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காததால் உடலை வாங்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் இன்று 5-வது நாளாக போராட்டம் நீடித்தது. அணைக்கரை முத்துவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் வருவாய்த் துறையினரும், காவல்துறையினரும் ஈடுபட்டனர். ஆனால் அவரது குடும்பத்தினர் சமாதானத்தை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அணைக்கரை முத்துவின் மகள் வசந்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழக முதல்வர் எங்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதியுதவி வழங்குவவதாக அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

எங்கள் அனுமதியை பெறமால் உடற்கூறாய்வு செய்தது சந்தேகத்தை அளிக்கிறது. எங்கள் தந்தை மரணத்துக்குக் காரணமான வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, உரிய நியாயம் வழங்க வேண்டும். அப்போது தான் உடலை வாங்குவோம்” என்றார்

https://www.hindutamil.in/news/tamilnadu/566707-tenkasi-farmers-family-refuse-to-get-the-body-1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்காசியில் வனத்துறையினர் தாக்கி விவசாயி உயிரிழந்ததாக எழுந்த புகார்: 4 இடங்களில் காயங்கள் உள்ளன - நீதிபதி

தென்காசியில் வனத்துறையினர் தாக்கி விவசாயி உயிரிழந்ததாக எழுந்த புகார்: 4 இடங்களில் காயங்கள் உள்ளன - நீதிபதி

 

தென்காசி,

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஆழ்வார்குறிச்சி வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து (வயது 72), விவசாயி. இவர் தனது வீட்டு அருகே வயலில் மின்வேலி அமைத்தது தொடர்பாக கடையம் வனத்துறையினர் அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.


இதற்கிடையே, அணைகரைமுத்துவின் உடல் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படடது. ஆனால், வனத்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயி உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட கோரி அவரது மனைவி தொடர்ந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில் நீதித்துறை நடுவர் அறிக்கையின்படி உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்ததாக மனுதாரர் தரப்பு வாதம் முன் வைக்கப்பட்டது.  பிரேத பரிசோதனை அறிக்கையின்படி அணைக்கரை முத்து உடலில் 4 இடங்களில் காயங்கள் உள்ளன என்று வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/29142256/Complaint-that-a-farmer-was-killed-after-being-attacked.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "இப்பொது Neanderthals (Homo neanderthalensis) இன் மரபணு இப்போதுள்ள மனித வர்க்கத்தில் 2 - 2.5% இருக்கிறது என்பது பின்னைய முடிவு" ஆம் , அது சரி , ஏனென்றால்,     Though Modern humans and Neanderthals lived in separate regions evolving along separate evolutionary lineages for hundreds of thousands of years, Neanderthals are still our closest currently known relative. Because of that evolutionary proximity, despite being recognized as different species, it is still possible that members of our two species exchanged genetic information. This exchange of DNA is called introgression, or interbreeding. Neanderthal-Homo sapiens interbreeding Neanderthals are known to contribute up to 1-4% of the genomes of non-African modern humans, depending on what region of the word your ancestors come from, and modern humans who lived about 40,000 years ago have been found to have up to 6-9% Neanderthal DNA (Fu et al., 2015).  ............................................................... "சிங்கமும், மனிதனும் species அடிப்படை யில் மிக தொலைவு என்பதால் சாத்திய கூறுகள் மிக, மிக  குறைவு என்பதே இப்பொது நம்ப கூடியது" ஆம், அது முற்றிலும் சரியான வாதம்  ................................................................... "மகாவம்சம்  சிங்கம் என்ற சொல்லை மிருகத்தை குறிக்க பயன்படுத்தியதா அல்லது அந்த தன்மை மனிதன் (போன்ற) குறிக்க பயன்படுத்தியதா. " கட்டாயம் சிங்கத்தைக் [மிருகத்தைக்] குறிக்கத்தான் பயன்படுத்தப் பட்டுள்ளது தெளிவாக அங்கு தெரிகிறது  ஆறாம் அத்தியாயம் / விஜயன் வருகையில் [CHAPTEE VI / THE COMING OF VIJAYA ]  "மற்றவர்கள் அங்கும் இங்குமாக ஓடி விட்டனர். ஆனல் அவள் [விஜயனின் தாய்], சிங்கம் வந்த அதே பாதையில் ஓடினாள் .... தூரத்தில் அவளைப் பார்த்தது. உடனே காமவெறி சிங்கத்தைப் பற்றிக்கொண்டது. வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது ....  அவளைத் தனது முதுகின் மீது சுமந்து கொண்டு வேகமாகத் தனது குகையைச் சென்றடைந்தது. அங்கு சிங்கம் அவளுடன் கூடியது. இந்தக் கூடலின் விளவாக ராஜகுமாரி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஒன்று ஆண் [சீகபாகு / சிங்கபாகு /Sihabahu / Sinhabahu] ; ஒன்று பெண் [சிங்கசீவலி / சீகவலி / Sinhasivali or Sihasivali]. [the other folk fled this way and that, but she fled along the way by which the lion had come ...  love (for her) laid hold on him, and he came towards her with waving tail and ears laid back ...  took her  upon his back and bore her with all speed to his cave, and there he was united with her, and from this union with him the princess in time bore twin-children, a son and a daughter.]   "வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது" [he came towards her with waving tail and ears laid back]   என்ற வரி தெளிவாக மிருகம் என்று சொல்லுகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை  ..................................................................... மகாவம்சம் அத்தக்கதா [Aṭṭhakathā - Buddhist Commentarial Literature / The word aṭṭhakathā is a general term, meaning exposition of the sense (aṭṭha = attha, Skt. artha), explanation, commentary.] Buddhist monks of Mahavihara, maintained this historical record of the Sri Lankan history starting from 3rd century B.C., some what similar to a modern day diary. These records were combined and compiled into a single document in the 5th century CE by Buddhist monk Mahathera Mahanama. There is evidence as per Wilhelm Geiger, there was another compilation prior to this known as “Mahavamsa Atthakatha” and Mahathera Mahanama relied on this text. Earlier document known as “Dipavamsa” also come down to us which is much simpler and contain less information than Mahavamsa, probably compiled using previously mentioned “Mahavamsa Atthakatha”?   ........................................... "சிங்களத்தில் இருந்த அத்தக்கதாவை  புத்தகோச பாளியில் எழுதிவிட்டு, சிங்கள மூலத்தை எரித்து விட்டததாகவும், ஏனெனில் சிங்களம் தெய்வ மொழி இல்லை என்றும் கருதப்படுகிறது' It is observed two groups of people in the 5th century A.D. – Hindus, speaking Tamil and the converts (Buddhists) speaking the new language (Sinhala).  There is a popular here say, emerged from the Later Burmese Biographical Text Buddhaghosuppatti ( perhaps as early as the 15th century) that Buddhaghosa Thera burnt ancient Sihala Atthakathas after he translated them into  Pali, introducing the Mula Bhasha [first language, primary language; epithet for Pali, the liturgical language of Theravada Buddhism. /  பாளி மொழியை வழிபாட்டு அல்லது தெய்வீக மொழியாக தேரவாத பௌத்தத்தில் கருதப்படுகிறது]  Please note that The Buddhaghosuppatti, a later biographical text, is generally regarded by Western scholars as being legend rather than history. So the text is not very reliable. Also It is not stated in Culavamsa [The Cūḷavaṃsa is a continuation of the Mahavamsa. But unlike the Mahavamsa it was written by different authors at different periods. / இதுவும்  பாளி மொழியில் தான் எழுதப்பட்டது / கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது] that he burned the scriptures , Though it contains the main account of Buddhaghosa’s life. ஆகவே உண்மையில் அவர் எரித்தாரா என்பதும் ஒரு கேள்விக்குறியே? Tradition regarding the Aṭṭhakathā [Buddhist Commentarial Literature by L. R. Goonesekere, BPS / Buddhist Publication Society, Kandy • Sri Lanka] The Ceylonese tradition regarding the aṭṭhakathā is that they were composed (in Pali, it is to be presumed) at the First Council (Saṅgīti) and rehearsed at the two following Councils. They were introduced to Ceylon by Mahinda who also, it is said, translated them into Sinhala. The earliest record of this tradition is contained in the introduction in Buddhaghosa’s commentaries. [“For explaining the meaning, the Commentary was originally recited by the 500 Masters (i.e. the Arahats assembled at the First Council) and was later rehearsed (at the two following Councils). Then it was brought to the island of the Sinhalese by the great Mahinda, the master (of Dhamma), and was rendered into the Sinhala language for the benefit of the island dwellers.”] It recurs in the accounts of Buddhaghosa contained in the Mahāvaṃsa  and the Saddhammasaṅgaha.  According to the Dīpavaṃsa  and the Mahāvaṃsa,  the commentaries (the Sinhala version, it is to be inferred) were put into writing in Ceylon along with the Pali canon in the reign of Vaṭṭagāmaṇī Abhaya in the first century B. C. The Mahāvaṃsa,  and Saddhammasaṅgaha  further state that, at the time of Buddhaghosa, the aṭṭhakathā (the original Pali) had disappeared in India. It is not known how far this statement was correct, but the original Pali aṭṭhakathā were not recorded in writing and no trace of them exists today. As will be seen, the Sinhala aṭṭhakathā put into writing in Vaṭṭagāmaṇī Abhaya’s time have also disappeared.
    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.