Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களின் அழிவுக்கு நானும் ஒரு வகையில் காரணம் – டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

d6a6fe25-0afe-44fa-9a6c-18f77f56afc4-768x355-1.jpg

தமிழ் மக்கள் கடந்த காலங்களில் எதிர்கொண்ட அத்தனை அழிவுகளுக்கும் ஒருவகையி்ல் தானும் காரணம் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அழிவுகளில் இருந்து மக்களை மீட்டு சிறந்த வாழ்கை தரத்தினை ஏற்படுத்தும் நோக்கிலேயே தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

வவுனியா, பூரசங்குளத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் சார்பான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலப் போராளிகளில் ஒருவன் என்ற வகையில் அத்தனை அழிவுகளுக்குமான தார்மீகப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக நெரிவித்த அமைச்சர் அவர்கள், மக்கள் தன்னோடு கைகோர்த்து வருவார்களாயின், எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொள்வதன் ஊடாக சிறந்த வாழ்கை தரத்தினை ஏற்படுத்திக் கொள்ள முடியும் எனவும் உறுதியுடன் தெரிவித்தார்.

அதேவேளை, பூரசங்குள மக்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சர் அவர்கள், உடனடியாக தீர்வு காணக்கூடிய விடயங்களுக்கு தீர்வினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டதுடன் ஏனைய விடயங்கள் தேர்தலுக்குப் பின்னர் தீர்த்து வைக்கப்படும் எனவும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.todayjaffna.com/201358

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

தமிழ் மக்கள் கடந்த காலங்களில் எதிர்கொண்ட அத்தனை அழிவுகளுக்கும் ஒருவகையி்ல் தானும் காரணம் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அழிவுகளில் இருந்து மக்களை மீட்டு சிறந்த வாழ்கை தரத்தினை ஏற்படுத்தும் நோக்கிலேயே தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இத்தனை காலமும் நானொரு விடலை என்று ஞானம் கொண்டிருந்தவருக்கு இப்போதுதான் சுடலை ஞானம் வந்திருக்கிறது.🥴

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Paanch said:

இத்தனை காலமும் நானொரு விடலை என்று ஞானம் கொண்டிருந்தவருக்கு இப்போதுதான் சுடலை ஞானம் வந்திருக்கிறது.🥴

 சுடலை ஞானம் இன்னும் கனபேருக்கு வரும். சுடலை ஞானம் வந்த  கொஞ்சப்பேர் சுய கௌரவம் தடுக்குதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப்பின்னால  வாறவனெல்லாம் முள்ளமாறிகளாகவே இருக்கிறார்களே என கொஞ்ச காலத்துக்கு  முன்னர் அழுத மாதிரி ஞாபகம்?

நீங்க  திருந்திட்டிங்களா சாரு???

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

எனக்குப்பின்னால  வாறவனெல்லாம் முள்ளமாறிகளாகவே இருக்கிறார்களே என கொஞ்ச காலத்துக்கு  முன்னர் அழுத மாதிரி ஞாபகம்?

நீங்க  திருந்திட்டிங்களா சாரு???

 

கிளட்டுப்புலி ஒன்று தருப்பைக்காப்பை கையில் வைத்துக்கொண்டு அரச மரத்தடியில் இருந்ததாம். அதைக்கண்டு மற்றைய விலங்குகள் எல்லாம் பயந்து விலகிச் சென்றதாம். அதை பார்த்து புலி சொல்லிச்சாம், நான் கடந்த காலங்களில் உங்கள் இனத்தை கொன்று தின்றேன். இப்போ எனக்கு வயதாகி விட்டது. செய்த பாவத்துக்கு பரிகாரமாக  மாமிசம் உண்பதை தவிர்த்து, சுவர்க்கம் போக விரதமிருக்கிறேன். நாளொன்றுக்கு ஒருவர்  என்னிடம் வந்து  ஆசி பெற்றால் உங்களுக்கு நல்லது நடக்கும் என்றதாம். அதை நம்பிய அப்பாவி விலங்குகள் ஒவ்வொன்றாக கிளட்டுப்  புலியை தரிசிக்க சென்றபோது, இருந்த இடத்திலேயே ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வலங்கை கொன்று தின்றிச்சாம்.  அந்தக்கதை தான் நினைவில் வருகுது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

கிளட்டுப்புலி ஒன்று தருப்பைக்காப்பை கையில் வைத்துக்கொண்டு அரச மரத்தடியில் இருந்ததாம். அதைக்கண்டு மற்றைய விலங்குகள் எல்லாம் பயந்து விலகிச் சென்றதாம். அதை பார்த்து புலி சொல்லிச்சாம், நான் கடந்த காலங்களில் உங்கள் இனத்தை கொன்று தின்றேன். இப்போ எனக்கு வயதாகி விட்டது. செய்த பாவத்துக்கு பரிகாரமாக  மாமிசம் உண்பதை தவிர்த்து, சுவர்க்கம் போக விரதமிருக்கிறேன். நாளொன்றுக்கு ஒருவர்  என்னிடம் வந்து  ஆசி பெற்றால் உங்களுக்கு நல்லது நடக்கும் என்றதாம். அதை நம்பிய அப்பாவி விலங்குகள் ஒவ்வொன்றாக கிளட்டுப்  புலியை தரிசிக்க சென்றபோது, இருந்த இடத்திலேயே ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வலங்கை கொன்று தின்றிச்சாம்.  அந்தக்கதை தான் நினைவில் வருகுது.

மேலே  நீங்கள் சொன்னது எனது  கண்களில்  நிஐமாகவே  காட்சியாக  விரிந்தது

அந்த கிழட்டு மாமாவால் அதிகம் பாதிக்கப்பட்ட

அதிகம் வலிகளை  சுமந்த

மனித நடமாட்டமற்று பேயாண்ட பூமியாக உள்ளது  எனது ஊர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு நன்மை செய்துவிடுவேன்  என்று ஒவ்வொரு முறையும் தேர்தலில் ஒட்டு பிச்சை கேட்க்கும் பசுதோல்  போர்த்திய ஓநாய்களை நம்புவதை விட வேஷம் போடாத எதிரியை நம்பிவிட்டு போகலாம் .

தங்கள் தலைவிதியை நிர்மாணிப்பவர்கள் அங்கிருப்பவர்கள் இம்முறை யார்வந்தும் பிரயோசனம் கிடையாது தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது அப்படிதங்களால் முடியும் என்று சொல்பவர்கள் சுமத்திரனும் சம்பந்தனும் மட்டுமே பகிடி என்னவென்றால் பத்து வருடங்களாக தமிழருக்கு ஒன்றும் செய்ய முடியாதவர்கள் இனி செய்வம்  என்று சொல்வது உலக மகா வேடிக்கை இராணுவத்தால் காணிகள் விடுவிக்கும் போது  நடக்கும் விழாக்களில் அழையா விருந்தாளியாகி ஓடி ஓடி போய்  குந்தியிடுவார் சுமத்திரன் இராணுவ காணி விடுவிப்புக்கும் சுமத்திரனுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது ஒரு சில இடங்களில் சிங்கள விசுவாசம் காரணமாக சிங்கள அரசால் அவருக்கு சம்பந்தம் இருப்பதுபோல் காண்பிக்கப்பட்டது .

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெருமாள் said:

நடக்கும் விழாக்களில் அழையா விருந்தாளியாகி ஓடி ஓடி போய்  குந்தியிடுவார் சுமத்திரன் இராணுவ காணி விடுவிப்புக்கும் சுமத்திரனுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது ஒரு சில இடங்களில் சிங்கள விசுவாசம் காரணமாக சிங்கள அரசால் அவருக்கு சம்பந்தம் இருப்பதுபோல் காண்பிக்கப்பட்டது .

ஒரு சில இடங்களில் டக்கியரும் இவ்வாறு செயற்படுவதுண்டு. முண்டிக்கொண்டு போட்டிடோவுக்கு போஸ் கொடுப்பது, பல் இளிப்பது.  ஏதோ தாம் தான் சாதித்தது போல் ஒரு பிம்மம். கொடுத்தது யார்? மக்கள்.  ஒரு படத்தில் கவுண்டமணியோ, வடிவேலுவோ சரியாக நினைவில்லை. தமது தொண்டர்களுக்கு முன்னால் பெரிய வீரன், சாதனையாளர் போல் பீலா விடுவார் பின் தலைவரின் அறையில், அவர்  முன்னால் எண்சாண் கிடையாய் விழுந்து கிடப்பார். நம் அரசியல் வாதிகளின் வாய்வீச்சை கேட்டால் அந்த பகிடிதான் நினைவுக்கு வரும். தேடிப்பார்த்தேன் இணைப்பதற்கு கிடைக்கவில்லை. யாராவது முடிந்தால் இணைத்துவிடுங்கள். நம்மவருக்கு பொருத்தமானது. 

  • கருத்துக்கள உறவுகள்

விவேகம் இல்லாத வீரத்தின் விளைவுகளையே மக்கள் அனுபவிக்கின்றனர்: அமைச்சர் டக்ளஸ் ஆதங்கம்

July 18, 2020

meet-21.jpegவிவேகம் இல்லாத வீரத்தின் விளைவுகளையே எமது மக்கள் அவலங்களாக அனுபவிக்கின்றார்கள் என்று தெரிவித்த ஈழ மக்கள ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, குறித்த அவலங்களில் இருந்து மக்களை மீட்பதற்காகவே தான் தொடர்ந்தும் அரசியலில் இருப்பதாவும் தெரிவித்தார்.

அராலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

 

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஆயுதப் போராட்டம் விவேகமற்ற தலைமைகளினால் தவறான வழியில் திசை திருப்பப்பட்டமையினால் மோசமான அழிவுகளையும் மக்களுக்கு அவலங்களையும் ஏற்படுத்தி விட்டதாக தன்னுடைய ஆதங்கத்தினை வெளியிட்டார்.

எனினும், குறித்த ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப கால போராளிகளில் ஒருவன் என்ற வகையில் மக்கள் எதிர்கொண்ட அழிவுகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று மக்களுக்கான சிறந்த வாழ்வை ஏற்படுத்துவதற்காக உழைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

 

அத்துடன், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெருமுன அணியினரே வெற்றி பெறவுள்ளமையினால் வடக்கு கிழக்கில் தனக்கு கணிசமான ஆசனங்கள் கிடைக்குமாயின் இலகுவாக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.
 

http://thinakkural.lk/article/55624

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.