Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அசுர பலத்துடன் மீண்டும் ராஜபக்சே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அசுர பலத்துடன் மீண்டும் ராஜபக்சே

இலங்கையில் தேர்தல்கள் நடைபெற சில தினங்களே உள்ளன.

இம்முறை ஐதேக இரண்டாக உடைந்து போயுள்ளது. அதன் முன்னாள் எதிராளி, சுதந்திர கட்சியோ தனது இறுதி மூச்சினை இழுத்துக் கொண்டு இருக்கிறது.

சிங்கள மக்களின் வாக்குகளை விரும்பும் பிரதான கட்சிகள் அரசியல் நிலைபாடினால் முஸ்லீம் கட்சிகள், யாருமே சீண்டாத, அதாவது வழமைபோல கூட்டு சேர முடியாதவாறு, தனித்து போட்டி இடுகின்றன.

மறுபுறம் தமிழர் பகுதியில், என்றும் இல்லாதவாறு குழப்பம் நிலவுகிறது. விளைவாக ததேகூ இம்முறை 10 சீட்டுகளுக்கு மேலே எடுப்பதே கடினம் என்கிறார்கள்.

ஆகவே, இன்றய நிலையில், வாலை கிளப்பியபடி, மைதானத்தினை சுத்தி வரும் முரட்டுக்காளையாக, கெத்தாக சுத்தி வருபவர் சந்தேகமில்லாமல் மகிந்தா ராஜபக்சே தான்.

தம்பி கோத்தபாய ஜனாதிபதியாக அமர்ந்து இருக்கும் நிலையில், மகிந்தா குடும்பம், மீண்டும் அரசியலில் பெரும் சக்தியாக உருவெடுக்கும் நிலையில், அவர்களது சீன சார்பு நிலைப்பாடு, இந்தியாவின் நலன்களுக்கு எவ்வாறு குந்தகம் விளைவிக்கும் என்ற கவலை டெல்லி வட்டாரங்களில் சில கரிசனைகளை உண்டாக்கி இருக்கிறது.

ஏற்கனேவே சீனா கொடுத்த தைரியத்தினால், நேபாளம், கொடுத்த சில அதிரடிகளினால்,  இந்த கரிசனை அதிகமாக உள்ளது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

அசுர பலத்துடன் மீண்டும் ராஜபக்சே

இலங்கையில் தேர்தல்கள் நடைபெற சில தினங்களே உள்ளன.

இம்முறை ஐதேக இரண்டாக உடைந்து போயுள்ளது. அதன் முன்னாள் எதிராளி, சுதந்திர கட்சியோ தனது இறுதி மூச்சினை இழுத்துக் கொண்டு இருக்கிறது.

சிங்கள மக்களின் வாக்குகளை விரும்பும் பிரதான கட்சிகள் அரசியல் நிலைபாடினால் முஸ்லீம் கட்சிகள், யாருமே சீண்டாத, அதாவது வழமைபோல கூட்டு சேர முடியாதவாறு, தனித்து போட்டி இடுகின்றன.

மறுபுறம் தமிழர் பகுதியில், என்றும் இல்லாதவாறு குழப்பம் நிலவுகிறது. விளைவாக ததேகூ இம்முறை 10 சீட்டுகளுக்கு மேலே எடுப்பதே கடினம் என்கிறார்கள்.

ஆகவே, இன்றய நிலையில், வாலை கிளப்பியபடி, மைதானத்தினை சுத்தி வரும் முரட்டுக்காளையாக, கெத்தாக சுத்தி வருபவர் சந்தேகமில்லாமல் மகிந்தா ராஜபக்சே தான்.

தம்பி கோத்தபாய ஜனாதிபதியாக அமர்ந்து இருக்கும் நிலையில், மகிந்தா குடும்பம், மீண்டும் அரசியலில் பெரும் சக்தியாக உருவெடுக்கும் நிலையில், அவர்களது சீன சார்பு நிலைப்பாடு, இந்தியாவின் நலன்களுக்கு எவ்வாறு குந்தகம் விளைவிக்கும் என்ற கவலை டெல்லி வட்டாரங்களில் சில கரிசனைகளை உண்டாக்கி இருக்கிறது.

ஏற்கனேவே சீனா கொடுத்த தைரியத்தினால், நேபாளம், கொடுத்த சில அதிரடிகளினால்,  இந்த கரிசனை அதிகமாக உள்ளது.

மகிந்தவின் அண்மைய படங்களை பார்க்க, அவரின் கெத்து தெரிகின்றாது, ஆனா கட்டாயம் நிம்மதியின்றிதான் இவர்களின் இறப்பு இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அசுர பலத்துடன் மீண்டும் ராஜபக்சே

நாதம் 
கொரோனா வந்து கொஞ்சம் கெடுத்துப் போட்டுது போல.
முதல் தேர்தல் திகதியிலேயே தேர்தல் நடந்திருந்தால் நீங்கள் சொல்வது போல நடந்திருக்கலாம்.
இப்போ ஐதேகட்சி பிளவைத் தவிர வேறு சாத்தியங்கள் குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் கனவு அது தான்

பிரதம மந்திரி

பிரதம மந்திரிக்கு அதிகாரம் (மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி)

இன்னும் சில தேர்தல்கள்வரை குறையாத  பலம்

தமிழர்கள்??????

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

அசுர பலத்துடன் மீண்டும் ராஜபக்சே

இலங்கையில் தேர்தல்கள் நடைபெற சில தினங்களே உள்ளன.

இம்முறை ஐதேக இரண்டாக உடைந்து போயுள்ளது. அதன் முன்னாள் எதிராளி, சுதந்திர கட்சியோ தனது இறுதி மூச்சினை இழுத்துக் கொண்டு இருக்கிறது.

சிங்கள மக்களின் வாக்குகளை விரும்பும் பிரதான கட்சிகள் அரசியல் நிலைபாடினால் முஸ்லீம் கட்சிகள், யாருமே சீண்டாத, அதாவது வழமைபோல கூட்டு சேர முடியாதவாறு, தனித்து போட்டி இடுகின்றன.

மறுபுறம் தமிழர் பகுதியில், என்றும் இல்லாதவாறு குழப்பம் நிலவுகிறது. விளைவாக ததேகூ இம்முறை 10 சீட்டுகளுக்கு மேலே எடுப்பதே கடினம் என்கிறார்கள்.

ஆகவே, இன்றய நிலையில், வாலை கிளப்பியபடி, மைதானத்தினை சுத்தி வரும் முரட்டுக்காளையாக, கெத்தாக சுத்தி வருபவர் சந்தேகமில்லாமல் மகிந்தா ராஜபக்சே தான்.

தம்பி கோத்தபாய ஜனாதிபதியாக அமர்ந்து இருக்கும் நிலையில், மகிந்தா குடும்பம், மீண்டும் அரசியலில் பெரும் சக்தியாக உருவெடுக்கும் நிலையில், அவர்களது சீன சார்பு நிலைப்பாடு, இந்தியாவின் நலன்களுக்கு எவ்வாறு குந்தகம் விளைவிக்கும் என்ற கவலை டெல்லி வட்டாரங்களில் சில கரிசனைகளை உண்டாக்கி இருக்கிறது.

ஏற்கனேவே சீனா கொடுத்த தைரியத்தினால், நேபாளம், கொடுத்த சில அதிரடிகளினால்,  இந்த கரிசனை அதிகமாக உள்ளது.

தேர்தல் நடக்கும் கடைசி நேரம் மட்டும் எதுவும் மாறலாம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நாதம் 
கொரோனா வந்து கொஞ்சம் கெடுத்துப் போட்டுது போல.
முதல் தேர்தல் திகதியிலேயே தேர்தல் நடந்திருந்தால் நீங்கள் சொல்வது போல நடந்திருக்கலாம்.
இப்போ ஐதேகட்சி பிளவைத் தவிர வேறு சாத்தியங்கள் குறைவு.

 

2 hours ago, பெருமாள் said:

தேர்தல் நடக்கும் கடைசி நேரம் மட்டும் எதுவும் மாறலாம் .

தமிழகத்தில், 2016 பொது தேர்தலின் போது, ஜெயலலிதா சொன்னார், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகள் தென்படவில்லை என்று.

அது உண்மைதான்.... ஆனாலும் ஒரு முதல்வராக சிறைக்கு செல்வது அந்த பதவிக்கு மகா கேவலம் என்று நினைத்த, மேல்படியார்கள் சிலர், அம்மாவை அந்த ஆண்டு இறுதிக்குள் அனுப்பி விட்டார்கள்.

மரணம் குறித்து விசாரணை கமிஷன் வைத்து.... வி..... சா....ரித்திக் கொண்டே இருக்கின்றனர்.

அதே நிலையில் தான் ஐயா மகிந்தரும், அவரது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை.

ஆனாலும்.... பெருமாள் சொன்னது போல, தேர்தலுக்கு முதல் நாள் வரை எதுவுமே நடக்கலாம். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

மகிந்தவின் அண்மைய படங்களை பார்க்க, அவரின் கெத்து தெரிகின்றாது, ஆனா கட்டாயம் நிம்மதியின்றிதான் இவர்களின் இறப்பு இருக்கும் 

அவர்கள் இறந்தாலென்ன ஆயிரம் வருடம் உயிர் வாழ்ந்தால்தான் எங்களுக்கென்ன வந்தது. ☹️

நாம் எமது காரியத்தைப்(?) பார்ப்பதுதான் உசிதம்.  🙂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.