Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பிக்கைகளும் நாங்களும் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

நானும் அதைப் பற்றி கொஞ்ச காலமாய் யோசித்து கொண்டு தான் இருக்கிறேன் ...சரியாய் முயற்சி செய்யாமல் தோல்வியடைந்து விட்டு அந்த தோல்விக்கு விதியை காரணமாக்குகின்றேனோ தெரியவில்லை

👍

மிகச் சரியாக சிந்தித்து இருக்கிறீர்கள்.

  • Replies 58
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

நியதி என்று விட்டு சும்மா குந்தியிருப்பதல்ல மனித வாழ்க்கை.
மற்றவர்களின் படிப்பினைகள் எமக்கு உதவுமே தவிர அவர்களைப்போல் நாமும் வாழ வேண்டும் என்றால் அது முடியாத காரியம்.ஜேர்மனியரைப்போல் என்னால் வாழ முடியாது. என்னைப்போல் ஜேர்மனியராலும் வாழமுடியாது.நாம் எந்த இயற்கையில் எப்படி பிறந்தோமோ அப்படியேதான் வாழமுடியும். ஏனெனில் எமது உடம்புவாகும் அதற்கேற்பவே அமைந்துள்ளது.இதைத்தான் நியதி என்பது.

நல்ல கருத்து  👍

On 25/7/2020 at 23:26, விளங்க நினைப்பவன் said:

👍

நல்ல சிறந்த கருத்து.

 

எமக்கு வேண்டுமானால் நாம்  தான் கஸ்டப்பட வேண்டும் என்ற உண்மையை உணர்ந்தவர் ஏன் விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்கிறார் என்பது எனக்கும் விளங்கவில்லை.

 

13 hours ago, தோழி said:

இயற்கையை வணங்குவதும் அதில் தெய்வத்தை காண்பதும் கூட ஒரு வித நம்பிக்கை தான்.  எனக்கு பிடித்ததும் கூட, ஆனால் நியதி என்பது கேள்விக்குறியதல்லவா ? அது பற்றிய சந்தேகங்கள் எனக்குண்டு. மற்றவர் போல வாழ வேண்டும் என்று  பேராசைப்படுவதற்கும்  மற்றவர் வாழ்க்கையை ஒரு படிப்பினையாக, ஊன்று கோலாக நினைப்பதற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறதல்லவா ? எல்லாம் நியதி என நினைத்தால் நாம் எந்த நல்ல இலட்சியம்  நோக்கியும் பயணிக்க முடியாது என நினைக்கிறேன்.  

 

  • தொடங்கியவர்
3 minutes ago, tulpen said:

 

 

அருமையான தெரிவு! 👏🏼👏🏼👏🏼

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, tulpen said:

 

 

 

 

இவையெல்லாம் இருந்தால் மற்றவை தானாக வரும்.:cool:
ஓம் நமச்சிவாய. 🙏🏽

43 minutes ago, குமாரசாமி said:

 

 

இவையெல்லாம் இருந்தால் மற்றவை தானாக வரும்.:cool:
ஓம் நமச்சிவாய. 🙏🏽

நான் இணைத்த பாடல் சிந்திக்கும் ஆற்றலுடைய மனிதர்களுக்காகவே.  உங்கள் பாடல் மூட நம்பிக்கைகளை நம்பும் சோம்பேறி பஞ்சபரதேசி களுக்கானது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, tulpen said:

நான் இணைத்த பாடல் சிந்திக்கும் ஆற்றலுடைய மனிதர்களுக்காகவே.  உங்கள் பாடல் மூட நம்பிக்கைகளை நம்பும் சோம்பேறி பஞ்சபரதேசி களுக்கானது. 

 சிந்திக்கும் ஆற்றலுடைய மனிதர்கள் இதுவரை என்ன செய்தார்கள்?
நம்பிக்கைவாதிகள் இதுவரை செய்யாதது என்ன? யாரை நம்பி வாழ்கின்றார்கள்?  நீங்கள் அவர்களுக்கு சோறு போட்டீர்களா?
நம்பிக்கைவாதிகளும் வேலைசெய்கிறார்கள் தங்கள் பாட்டை தாங்கள் பார்க்கின்றார்கள். அது ஏன் உங்களுக்கு குத்துது குடையுது?

9 minutes ago, குமாரசாமி said:

 சிந்திக்கும் ஆற்றலுடைய மனிதர்கள் இதுவரை என்ன செய்தார்கள்?
நம்பிக்கைவாதிகள் இதுவரை செய்யாதது என்ன? யாரை நம்பி வாழ்கின்றார்கள்?  நீங்கள் அவர்களுக்கு சோறு போட்டீர்களா?
நம்பிக்கைவாதிகளும் வேலைசெய்கிறார்கள் தங்கள் பாட்டை தாங்கள் பார்க்கின்றார்கள். அது ஏன் உங்களுக்கு குத்துது குடையுது?

நீங்கள் உங்கள் எண்ணங்களை யாழ் இணையத்தில் பரிமாறக்கூடியதாக இருப்பது  சிந்திக்கும் ஆற்றலுடைய மனிதன் இணையத்தை கண்டுபிடித்ததால் உருவானதே.  சிவனே என்று சாப்பிட்டுவிட்டு மடத்தில் தூங்கும் சோம்பேறிகளால் உருவானதல்ல. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, tulpen said:

நீங்கள் உங்கள் எண்ணங்களை யாழ் இணையத்தில் பரிமாறக்கூடியதாக இருப்பது  சிந்திக்கும் ஆற்றலுடைய மனிதன் இணையத்தை கண்டுபிடித்ததால் உருவானதே.  சிவனே என்று சாப்பிட்டுவிட்டு மடத்தில் தூங்கும் சோம்பேறிகளால் உருவானதல்ல. 

சிவனே என்று சாப்பிட்டு விட்டு குந்தியிருப்பவர்களால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றுதான் கேட்கின்றேன்? நீங்கள் ஏதாவது அவர்களுக்கு கொடுக்கின்றீர்களா? அல்லது அவர்கள் உங்கள் கதவை தட்டுகின்றார்களா?

சிந்தனைவாதி   சிந்தனைவாதி என்கிறீர்களே நீங்கள் ஏதாவதை கண்டு பிடித்தீர்களா? அல்லது ஏதாவதை உருவாக்கினீர்களா? 
நீங்கள் பிறந்தது முதல் இன்றுவரை மற்றவர்கள் கண்டுபிடித்ததின் மூலமாகத்தானே வளர்தீர்கள். அது போல்தான் நானும் என்னைப்போன்ற நம்பிக்கை வாதிகளும்.

நீங்களும் எம்மைப்போல் சாதாரண மனிதர்தான்.சிந்தனைவாதியுமல்ல.விஞ்ஞானியுமல்ல

34 minutes ago, குமாரசாமி said:

சிவனே என்று சாப்பிட்டு விட்டு குந்தியிருப்பவர்களால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றுதான் கேட்கின்றேன்? நீங்கள் ஏதாவது அவர்களுக்கு கொடுக்கின்றீர்களா? அல்லது அவர்கள் உங்கள் கதவை தட்டுகின்றார்களா?

சிந்தனைவாதி   சிந்தனைவாதி என்கிறீர்களே நீங்கள் ஏதாவதை கண்டு பிடித்தீர்களா? அல்லது ஏதாவதை உருவாக்கினீர்களா? 
நீங்கள் பிறந்தது முதல் இன்றுவரை மற்றவர்கள் கண்டுபிடித்ததின் மூலமாகத்தானே வளர்தீர்கள். அது போல்தான் நானும் என்னைப்போன்ற நம்பிக்கை வாதிகளும்.

நீங்களும் எம்மைப்போல் சாதாரண மனிதர்தான்.சிந்தனைவாதியுமல்ல.விஞ்ஞானியுமல்ல

சிவனே என்று  இருப்பவர்களை பற்றி நான் எதுவும் கூறவில்லையே. சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்தேன், எதிர்காலத்திலும் அவ்வாறு சிந்திக்கும் ஆற்றல் கொண்ட மனிதர்கள் எங்கள் மத்தியில் அதிகமாக  உருவாக வேண்டும் என்று விரும்புவதில் தவறில்லையே.  

  • தொடங்கியவர்
53 minutes ago, tulpen said:

சிவனே என்று  இருப்பவர்களை பற்றி நான் எதுவும் கூறவில்லையே. சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்தேன், எதிர்காலத்திலும் அவ்வாறு சிந்திக்கும் ஆற்றல் கொண்ட மனிதர்கள் எங்கள் மத்தியில் அதிகமாக  உருவாக வேண்டும் என்று விரும்புவதில் தவறில்லையே.  

@குமாரசாமி

@tulpen

தற்போதைய இந்திய அரசியல் பின்புலத்தில் பெரியாரும், பகுத்தறிவாளர்களும், மதம், கடவுள் நம்பிக்கையுள்ளோருமென்று பாரிய கருத்து முரண்பாடு ஒன்று தோன்றியுள்ளது. இதற்கு முழுக்க முழுக்க அரசியல் காரணிகளே பலம் சேர்க்கின்றன. இந்த மாற்றங்களை திடீரென நாம் தாயகத்தில் எதிர்பார்க்க முடியாது அல்லவா? 

சிவனேயென்று இருப்பவர்களால், சமூகத்திற்கு தீங்கில்லாதவரை இருந்து விட்டு போகட்டுமே. அவர்களிடம் பெண்ணடிமைத்தனத்தின் மனப்பாங்கோ, வர்க்க பேதங்களோ மூட  நம்பிக்கைகளோ இல்லாதவரை அவர்களால் என்ன கொடுமை ஏற்படப்போகிறது. 

மதநம்பிக்கை அற்ற சமுதாயம் ஒன்று கட்டி எழுப்பப்பட வேண்டுமானால் அது சிறிது சிறிதாக ஆரம்பக்கல்வி, அடிப்படை சமுதாய மாற்றங்களினால் மட்டுமே முடியும் என நம்புகிறேன். இருந்தாலும் நல்லூர்  கந்தசுவாமி கோயிலில் இராணுவத்தை தேர் இழுக்க விட்டவர்கள், எமது சமூகத்திலுள்ள அனைவரையும் தேர் இழுக்க விடுவார்களா என்பது போன்ற கேள்விகளும் எழாமல் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

நியதி என்று விட்டு சும்மா குந்தியிருப்பதல்ல மனித வாழ்க்கை.
மற்றவர்களின் படிப்பினைகள் எமக்கு உதவுமே தவிர அவர்களைப்போல் நாமும் வாழ வேண்டும் என்றால் அது முடியாத காரியம்.ஜேர்மனியரைப்போல் என்னால் வாழ முடியாது. என்னைப்போல் ஜேர்மனியராலும் வாழமுடியாது.நாம் எந்த இயற்கையில் எப்படி பிறந்தோமோ அப்படியேதான் வாழமுடியும். ஏனெனில் எமது உடம்புவாகும் அதற்கேற்பவே அமைந்துள்ளது.இதைத்தான் நியதி என்பது.

 மற்றவர்களை போல வாழோணும் என்று ஆசைப்படவில்லை . ஆனால் ,தகுதியில்லாத சிலருக்கு எதுவும் இருந்த இடத்திலேயே சுலபமாய் கிடைக்கும் போதும்,எங்களுக்கு அப்படி கஸ்ரப்பட்டாலும் கிடைக்காத போது ஒரு வித ஆற்றாமை எழுகின்றது  
 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
49 minutes ago, தோழி said:

@குமாரசாமி

@tulpen

தற்போதைய இந்திய அரசியல் பின்புலத்தில் பெரியாரும், பகுத்தறிவாளர்களும், மதம், கடவுள் நம்பிக்கையுள்ளோருமென்று பாரிய கருத்து முரண்பாடு ஒன்று தோன்றியுள்ளது. இதற்கு முழுக்க முழுக்க அரசியல் காரணிகளே பலம் சேர்க்கின்றன. இந்த மாற்றங்களை திடீரென நாம் தாயகத்தில் எதிர்பார்க்க முடியாது அல்லவா? 

சிவனேயென்று இருப்பவர்களால், சமூகத்திற்கு தீங்கில்லாதவரை இருந்து விட்டு போகட்டுமே. அவர்களிடம் பெண்ணடிமைத்தனத்தின் மனப்பாங்கோ, வர்க்க பேதங்களோ மூட  நம்பிக்கைகளோ இல்லாதவரை அவர்களால் என்ன கொடுமை ஏற்படப்போகிறது. 

மதநம்பிக்கை அற்ற சமுதாயம் ஒன்று கட்டி எழுப்பப்பட வேண்டுமானால் அது சிறிது சிறிதாக ஆரம்பக்கல்வி, அடிப்படை சமுதாய மாற்றங்களினால் மட்டுமே முடியும் என நம்புகிறேன். இருந்தாலும் நல்லூர்  கந்தசுவாமி கோயிலில் இராணுவத்தை தேர் இழுக்க விட்டவர்கள், எமது சமூகத்திலுள்ள அனைவரையும் தேர் இழுக்க விடுவார்களா என்பது போன்ற கேள்விகளும் எழாமல் இல்லை. 

உங்களுடைய கருத்திற்கு நிறைய எழுதலாம். இருந்தாலும் ஒரு குறுகிய கேள்வி.
இந்த உலகில் மத நம்பிக்கை அற்ற நாடு அல்லது மத நம்பிக்கை அற்ற சமுதாயத்தை முன்னுதாரணமாக எடுத்துக்காட்டுங்கள் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, ரதி said:

 மற்றவர்களை போல வாழோணும் என்று ஆசைப்படவில்லை . ஆனால் ,தகுதியில்லாத சிலருக்கு எதுவும் இருந்த இடத்திலேயே சுலபமாய் கிடைக்கும் போதும்,எங்களுக்கு அப்படி கஸ்ரப்பட்டாலும் கிடைக்காத போது ஒரு வித ஆற்றாமை எழுகின்றது  

இருப்பதை/ கிடைத்ததை வைத்து திருப்திப்படுவதும் மனித வாழ்க்கையின் ஒரு அங்கம்.
பலர் நல்ல படிப்பு படித்தும் ஒழுங்கான வேலை வந்து அமையாது.சிலர் எட்டாம் வகுப்பு வரை படித்தாலும் சொத்து சுகங்களுடன் டாம்பீகமாக வாழ்வார்கள்.
இதுதான் நியதி.

மற்றவர்களை போல் நாமும் வாழவேண்டும் என நினைத்து மாரடித்தால் நோய் நொடிகள் தான் மிஞ்சும்.

  • தொடங்கியவர்
12 minutes ago, குமாரசாமி said:

உங்களுடைய கருத்திற்கு நிறைய எழுதலாம். இருந்தாலும் ஒரு குறுகிய கேள்வி.
இந்த உலகில் மத நம்பிக்கை அற்ற நாடு அல்லது மத நம்பிக்கை அற்ற சமுதாயத்தை முன்னுதாரணமாக எடுத்துக்காட்டுங்கள் பார்க்கலாம்.

நானும் பலவிதமான மத நம்பிக்கைகளினால் வளர்க்கப்பட்டவள் தான். அதில் தவறில்லை. இந்தப்பதிவில் நான் அதை எழுதியிருந்தேன். 

நிற்க, கியூபாவை எடுத்துக்கொள்ளலாம். அவர்களது நாடு சமுதாயத்தின் பல பாகங்களிலும் சமத்துவம் பேணி, உலகிலேயே தரம் வாய்ந்த மருத்துவத்துறையையும், சிறப்பான சமூகக்கட்டுமானத்தையும் கொண்டதை நாம் அறிவோம் அல்லவா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, தோழி said:

நானும் பலவிதமான மத நம்பிக்கைகளினால் வளர்க்கப்பட்டவள் தான். அதில் தவறில்லை. இந்தப்பதிவில் நான் அதை எழுதியிருந்தேன். 

நிற்க, கியூபாவை எடுத்துக்கொள்ளலாம். அவர்களது நாடு சமுதாயத்தின் பல பாகங்களிலும் சமத்துவம் பேணி, உலகிலேயே தரம் வாய்ந்த மருத்துவத்துறையையும், சிறப்பான சமூகக்கட்டுமானத்தையும் கொண்டதை நாம் அறிவோம் அல்லவா? 

கியூபா???????
நீங்கள் தெரிந்துதான் எழுதுகின்றீர்களா அல்லது தெரியாமல் எழுதுகின்றீர்களா என தெரியவில்லை. கியூபாவில் சிறந்த மருத்துவமும் கட்டுப்பாடும் இருக்கின்றதுதான். இவை ஒரு நாட்டுக்கு போதுமா? பொருளாதார சீரழிவு நிறைந்த நாடு. எவ்வித அபிவிருத்தியுமின்றி இருந்த மாதிரியே இருக்கும் நாடு அது. உணவுப்பற்றாக்குறை அதிகம். பட்டினியின் கொடுமையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் பெண்கள். இதே போல் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். கியூபாவிற்கு சுற்றுலா சென்றவர்களை கேட்டால் அங்கிருக்கும் கஷ்டங்களை சொல்வார்கள்.

Kuba Armut Fassade - Kostenloses Foto auf Pixabay

Oldtimer auf Kuba

Bild: © Jorge Luis Baños/IPS

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகில் மத நம்பிக்கை அற்ற நாடு அல்லது மத நம்பிக்கை அற்ற சமுதாயத்தை முன்னுதாரணமாக எடுத்துக்காட்டுவது என்றால் மதநம்பிக்கை அற்றவர்கள் பெரும்பான்மையாக உள்ள மேலும் அந்த தொகை  அதிகமாகி கொண்டே போகும் வளர்ச்சி அடைந்த நாடுகள் சுவீடன் அவுஸ்ரேலியா நோர்வே, சவுத் கொரியா, யேர்மனி யப்பான், சுவிட்சலண்ட் போன்றநாடுகளை சொல்லலாம். இந்த நாடுகளில் மத நம்பிக்கையாளர்கள் குறைவாக இருக்கின்றனர் அவர்களை நாம் எம்மவர்களினதும் இந்தியாவின் மதநம்பிக்கைகளுடன் ஒப்பிட முடியாது நாமும் இந்தியர்களும் மோசமான மதநம்பிக்கையாளர்கள். பிரபா சிதம்பரநாதன் இது பற்றி இங்கே சரியாக சொல்லியிருந்தார்.

***அதீத கடவுள் நம்பிக்கை, மதவெறி, காலத்திற்கு ஒவ்வாத நடைமுறைகள் என்பன எல்லா சமூகத்திலும் இருந்தாலும் எங்களுடைய சமூகத்தில் கொஞ்சம் அதிகமாகவே கலந்துள்ளது. இதில் படித்தவர், பாமரர் என்ற பிரிவு இல்லாது எல்லோரிடமும் உள்ளது என்பதால் இலகுவில் அதை இல்லாதெழிக்க முடியாது.***

எனது உறவினர் ஒருவர் படித்தவர் வசதி உள்ளவர் ஆஞ்சநேயர் சக்தி கொண்ட கடவுள் என்று எனக்கு பரிந்துரை செய்கிறார் எனது நண்பரின் தகப்பனார் சேர்ச்சில் முன்பு எல்லாம் இப்படி கடவுள் மயகூத்துகள் நடப்பதில்லை என்கிறார்.சமுதாயத்தில் பெண்கள் பக்திமயமாக மாற்றபடுகிறார்கள் இப்படிபட்ட சமுதாயத்தில் தோழி ரதி போன்றவர்களின் சிந்தனைகளை பார்க்கும் போது பெருமையாக உள்ளது.

  • தொடங்கியவர்
22 minutes ago, குமாரசாமி said:

கியூபா???????
நீங்கள் தெரிந்துதான் எழுதுகின்றீர்களா அல்லது தெரியாமல் எழுதுகின்றீர்களா என தெரியவில்லை. கியூபாவில் சிறந்த மருத்துவமும் கட்டுப்பாடும் இருக்கின்றதுதான். இவை ஒரு நாட்டுக்கு போதுமா? பொருளாதார சீரழிவு நிறைந்த நாடு. எவ்வித அபிவிருத்தியுமின்றி இருந்த மாதிரியே இருக்கும் நாடு அது. உணவுப்பற்றாக்குறை அதிகம். பட்டினியின் கொடுமையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் பெண்கள். இதே போல் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். கியூபாவிற்கு சுற்றுலா சென்றவர்களை கேட்டால் அங்கிருக்கும் கஷ்டங்களை சொல்வார்கள்.

Kuba Armut Fassade - Kostenloses Foto auf Pixabay

Oldtimer auf Kuba

Bild: © Jorge Luis Baños/IPS

உங்கள் தகவலுக்கு நன்றி. இதில் எல்லாவற்றிலும் உடன்பாடில்லாமைக்கு வருந்துகிறேன்.
 கியூபா ஒரு கம்யூனிஸ்ட் நாடு அதனால் அவர்கள் பெரும்பான்மையான வழங்களைத் தம் நாட்டிலேயே உற்பத்தி செய்து தன்னிறைவு பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பிய சரித்திரம் உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.  உதாரணமாக, சீனி, உப்பு போன்றவை தம் நாட்டிற்கு பாவித்து போக அண்டைய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள்.  பெற்றோலிய வளத்திலும் இயற்கை அவர்களுக்கு சுய உற்பத்தியை உண்டு பண்ணியிருப்பதால், அவர்கள் வேறு நாடுகளிடம் கையேந்தாத நிலையில் இருக்கிறார்கள். கியூபாவின் இராணுவ வளர்ச்சியில் அமெரிக்காவிற்கு கூட ஒருவித பயம் உண்டு என்பதை மறக்க முடியாது.

பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு வறுமை மட்டும் காரணமில்லை. அது அங்கு உல்லாசத் துறை காரணமாக அங்கு செல்லும் ஆண்களின் பங்களிப்பு எனவும் சொல்லலாம்.  யாழ்ப்பாணத்திலும் முன்னாள் பெண் போராளிகள் பாலியல் துறையில் ஈடு பட்டிருக்கும் வலி மிகுந்த சம்பவங்கள் அறிந்திருப்பீர்கள்.  ஆக கடவுள் நம்பிக்கையுள்ள நாடுகள் , முதலாளித்துவ நாடுகளிலும் இந்தக் கொடுமை இருக்கிறது.  
கியூபாவின் ஒரு சிறிய தீவு (கயகோகோ)  உல்லாசத்துறையினால் அதிகம் பாதிக்கப்படாதது, எனக்கும்  இரு வாரங்களுக்குப்  போகும்  வாய்ப்புக்கு  கிடைத்தது. வெறுமே ஐந்து நட்சத்திர விடுதிகளில் இருந்து நேரத்தை ஓட்டாமல் சிறிது தைரியமாக சில மைல்கள் தள்ளியிருந்த ஒரு கிராமத்திற்குப்  போய்அங்குள்ள மக்களின் சராசரி வாழ்வு, வேலை வாய்ப்புகள், பெண்களின் உரிமைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், இராணுவப்பயிற்சி போன்ற பலவற்றையும் பார்த்தும் கேட்டும் வந்தோம். பழகுவதற்கு மிக இனிமையான மக்கள்.  வறுமை இருந்தாலும் மக்களிடையே சமத்துவமும் திருப்தியும் நிலவுகிறது.

கியூபாவின் பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணம் அமெரிக்க சந்தைப் பொருளாதாரதில் இணைத்துக் கொள்ளகூடாது என்ற அவர்களின் வைராக்கியமான கம்யூனிச கொள்கைகளே. ஆனால் அதைத்தாண்டி அவர்களின் சாதனைகள் பல உண்டு. குற்றச்செயல்கள் மிக குறைவாக நடைபெறும் நாடு கியூபா எனபதை அங்கு போய் வந்த மக்களிடம் அறியலாம். பக்கத்து கரிபியன் நாடுகளில் Resort ஐ விட்டு வைளியே சென்றாலே உயிருக்கு உத்தரவாதம் என்ற நிலையில் கியூபாவில் எந்த இரவிலும் தனியாக எங்கும் சென்று வரலாம். அங்குள்ள உள்ளூர் மக்கள் மிகவும் பண்பாக பழகுவார்கள் என்பது அங்கு சென்று வந்தவர்கள் தெரிவித்த தகவல். 

 இது இவ்வாறிருக்க மூடநம்பிக்கையை முக்கிய முதலீடாக கொண்டு கட்டி வளர்க்கப்பட்ட இந்து மத நம்பிக்கையாளர்கள் அதிகம் வாழும் இந்தியாவில் தான் பாலியல் தொழில் மிக அதிகமாக உள்ளது மட்டுமல்ல சாதாரணமாக பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளும் மிக அதிகமாக உள்ளது. ஒப்பீட்டு ரீதியில் மத நம்பிக்கை குறைந்த ஐரோப்பிய நாடுகளில் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகம்.   எமது பெண்பிள்ளைகள் இரவு கடைசி தொடரூந்தில் கூட பாதுகாப்பாக வீடு திரும்பும் சாத்தியம் இங்கு அதிகம். இந்தியாவில் கோவிலுக்கு அண்மையில் கூட இந்த பாதுகாப்பு பெண்களுக்கு கிடையாது என்பதே உண்மை. மத நம்பிக்கை குற்றச்செயல்களை குறைக்கிறது என்று வாதாடுவோர்கள் கூட இந்தியாவில் கோவில்களுக்கு அண்மையில்  கூட தமது பெண்பிள்ளைகளை  தனியே விடமாட்டார்கள். 

கோவில் சுற்றாடலில் கூட மக்களையும்  கோவில் நகைகளையும் கூட அறிவியலாளன் கண்டு பிடித்த கண்காணிப்பு கமராக்கள் தான் பாதுகாக்கின்றன. 

 உத்தியோபூர்வமாக அடையாளத்திற்காக  மதங்கள் இருந்தாலும் மதங்களை intensiv  ஆக நம்பாமல் இருக்கும் மக்களே ஐரோப்பிய நாடுகளில் அதிகம். இந்நாடுகளில் உள்ள குற்றச்செயல்களுடன் ஒப்பிடும் போது மதங்களை intensiv ஆக நம்பும் நாடுகளில் தான் குற்றங்கள் அதிகம்.இந்தியாவில் மதத்தையும்  ஆன்மீகத்தையும் உபயோகித்து  அயோக்கியத்தனமான எத்தனையோ குற்றசெயல்களில் ஈடுபடுவோரைக் கூட தடுக்க சக்தி  கடவுளுக்கு இல்லை. 

மதநம்பிக்கைகளையும் அதன் அடிப்படையாக இருக்கும் மூடநம் பிக்கைகளையும் நான் விமர்சித்தாலும் புராதன சின்னங்கள் என்ற அடிப்படையில் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் பேணிப்பாது காக்கப்படல் வேண்டும் என்பதே எனது கருத்து.     

            

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் தொழிலை பற்றி  சொல்லும் போது ஆன்மீகம் தழைத்தோங்கும் இந்தியாவில் பாலியல் தொழில் எப்படி இருக்க முடியும்? AIDS நோய் கொண்டநாடாக உலகத்தில் இரண்டாம் இடத்தில் எப்படி வரலாம்? முதலாம் இடத்தில் இருக்கின்ற ஆபிரிக்க நாடுகளும் இந்தியா போன்று மதநம்பிக்கை கொண்டவை தான்.
Tulpen சொன்னவை மிகச் சரியானவை 👍  
மத நம்பிக்கையுள்ளோர் குறைவாகவும் மதநம்பிக்கை இல்லாதோர் அதிகமாகவும் உள்ள நாடுகளில் வசிக்கின்ற  எமது பெண்களே இரவு வேலை முடிந்து தனியாக சர்வசாதாரணமாக ரெயினில் பஸ்சில் போகிறார்கள். ஆன்மீகம் நிறைந்த இந்தியாவில் பெண்கள் நிலை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 29/7/2020 at 01:51, தோழி said:

உங்கள் தகவலுக்கு நன்றி. இதில் எல்லாவற்றிலும் உடன்பாடில்லாமைக்கு வருந்துகிறேன்.
 கியூபா ஒரு கம்யூனிஸ்ட் நாடு அதனால் அவர்கள் பெரும்பான்மையான வழங்களைத் தம் நாட்டிலேயே உற்பத்தி செய்து தன்னிறைவு பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பிய சரித்திரம் உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.  உதாரணமாக, சீனி, உப்பு போன்றவை தம் நாட்டிற்கு பாவித்து போக அண்டைய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள்.  பெற்றோலிய வளத்திலும் இயற்கை அவர்களுக்கு சுய உற்பத்தியை உண்டு பண்ணியிருப்பதால், அவர்கள் வேறு நாடுகளிடம் கையேந்தாத நிலையில் இருக்கிறார்கள். கியூபாவின் இராணுவ வளர்ச்சியில் அமெரிக்காவிற்கு கூட ஒருவித பயம் உண்டு என்பதை மறக்க முடியாது.

பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு வறுமை மட்டும் காரணமில்லை. அது அங்கு உல்லாசத் துறை காரணமாக அங்கு செல்லும் ஆண்களின் பங்களிப்பு எனவும் சொல்லலாம்.  யாழ்ப்பாணத்திலும் முன்னாள் பெண் போராளிகள் பாலியல் துறையில் ஈடு பட்டிருக்கும் வலி மிகுந்த சம்பவங்கள் அறிந்திருப்பீர்கள்.  ஆக கடவுள் நம்பிக்கையுள்ள நாடுகள் , முதலாளித்துவ நாடுகளிலும் இந்தக் கொடுமை இருக்கிறது.  
கியூபாவின் ஒரு சிறிய தீவு (கயகோகோ)  உல்லாசத்துறையினால் அதிகம் பாதிக்கப்படாதது, எனக்கும்  இரு வாரங்களுக்குப்  போகும்  வாய்ப்புக்கு  கிடைத்தது. வெறுமே ஐந்து நட்சத்திர விடுதிகளில் இருந்து நேரத்தை ஓட்டாமல் சிறிது தைரியமாக சில மைல்கள் தள்ளியிருந்த ஒரு கிராமத்திற்குப்  போய்அங்குள்ள மக்களின் சராசரி வாழ்வு, வேலை வாய்ப்புகள், பெண்களின் உரிமைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், இராணுவப்பயிற்சி போன்ற பலவற்றையும் பார்த்தும் கேட்டும் வந்தோம். பழகுவதற்கு மிக இனிமையான மக்கள்.  வறுமை இருந்தாலும் மக்களிடையே சமத்துவமும் திருப்தியும் நிலவுகிறது.

சிறிலங்காவிற்கு உல்லாச பயணிகளாக செல்லும் கூடுதலான வெளிநாட்டவர்கள் அங்கு எவ்வித பிரச்சனைகளும் இல்லையென்றே சொல்கிறார்கள்.எல்லா மக்களும் சமமாகவும் சகோதரத்துவமாகவும் வாழ்கின்றார்களாம்.தமிழ் அமைச்சர்கள் இருக்கின்றார்கள்.தமிழர் உயர் பதவிகளில் இருக்கின்றார்கள்.எல்லோரும் பழகுவதற்கு பண்பானவர்களாக இருக்கின்றார்கள்.அறிவுப்புகள் பாரபட்சம் இல்லாமல் மூன்று மொழிகளும் இருக்கின்றன.முன்னர் இருந்த தமிழ் பயங்கரவாதிகளும் இப்போதில்லை.சிறிலங்கா ஒரு சொர்க்கபுரி என சொல்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும் தமிழனாகிய நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் நிச்சயம் ஏறுக்கொள்வீர்கள் என நம்புகின்றேன். 😎

இது போல்தான் உங்கள் கியூபா நல்லெண்ணங்களும்....

  • தொடங்கியவர்
54 minutes ago, குமாரசாமி said:

சிறிலங்காவிற்கு உல்லாச பயணிகளாக செல்லும் கூடுதலான வெளிநாட்டவர்கள் அங்கு எவ்வித பிரச்சனைகளும் இல்லையென்றே சொல்கிறார்கள்.எல்லா மக்களும் சமமாகவும் சகோதரத்துவமாகவும் வாழ்கின்றார்களாம்.தமிழ் அமைச்சர்கள் இருக்கின்றார்கள்.தமிழர் உயர் பதவிகளில் இருக்கின்றார்கள்.எல்லோரும் பழகுவதற்கு பண்பானவர்களாக இருக்கின்றார்கள்.அறிவுப்புகள் பாரபட்சம் இல்லாமல் மூன்று மொழிகளும் இருக்கின்றன.முன்னர் இருந்த தமிழ் பயங்கரவாதிகளும் இப்போதில்லை.சிறிலங்கா ஒரு சொர்க்கபுரி என சொல்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும் தமிழனாகிய நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் நிச்சயம் ஏறுக்கொள்வீர்கள் என நம்புகின்றேன். 😎

இது போல்தான் உங்கள் கியூபா நல்லெண்ணங்களும்....

எல்லா நாடுகளிலும் அரசியல், பொருளாதார, பிரச்சனைகள் உண்டு. ஆனால் குறிப்பிட்ட ஒரு மதத்தை பிரதானமான மதமாகக் கொண்டுள்ள அரசு இயந்திரங்களிலும் பார்க்க மதச்சார்பற்ற ஒரு அரசு இறைமையானது  அறம்  சார்ந்து நடப்பதை நாம் அனுபவத்திலேயே பார்க்கிறோமே.  இதில் சிறிலங்கா மதச்சார்பான அல்லது மதவெறி கொண்டவர்களால் காலம் காலமாக ஆட்சி செய்யப்பட்டு வருவதாலேயே நீங்கள் குறிப்பிட்டுள்ளவை எல்லாம் நடக்கின்றது. தமது மதத்தை முன் நிறுத்துவதற்காக அவர்கள் எல்லாமே பூசி மெழுகுவார்கள்.

கியூபாவாவில் வறுமை உண்டாயினும் அவர்கள் அதை நிவர்த்தி செய்ய பலவழிகளிலும் முயற்சி செய்வது மட்டுமல்ல அங்கு சமதர்மம் நிலவுகிறது. எல்லோருடைய உரிமைகளும் சமமாகவே மதிக்கப்படுகிறது. இங்கு நாம் வெறுமே உல்லாசப் பயணம் மேற்கொள்ளாதது மட்டுமல்ல அங்குள்ள சில குடும்பங்களுடனான நீண்ட காலத் தொடர்புகள் இருப்பதால் நீங்கள் குறிப்பிட்டதை விடக்  கூடுதலாகவே அந்நாட்டைப் பற்றி அறியக்கூடியதாய் உள்ளது. 

சரி, கியூபா ஒரு உதாரணத்திற்கு எடுக்கப்பட்டது. எப்படி பார்த்தாலும் உலக நாடுகள் பலவற்றிலும் மதம், மொழி சார்ந்த அரசுகளைப்  பார்க்கினும் மதத்தை முன் வைத்து நடாத்தப்படும் ஆட்சிகள்  வெறி பிடித்தவை. இந்நாடுகளில்   சாதாரண மக்களின்  வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டு மனித   உரிமைகள் மறுக்கப்பட்டே வருவது கண்கூடு.

ஸ்ரீலங்காவிலும் சிறுபான்மை மக்களின் இனப்படுகொலை நடந்ததற்கு மிகப் பிரதான காரணமே பெரும்பான்மை மக்களின் மத, மொழி வெறி என்பதையும் தமிழனாகிய நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நானும் நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவரிடம் வாதிட்டு, உங்கள் வாதத்தில் நீங்கள் வெற்றி பெறுவதால் மட்டும் இது சாத்தியமா?
ஒருவருடைய தொண்டைக்குளிக்குள் கையை விட்டு போதை மருந்தைக்காணத் துடிக்கும் நீங்களும் ஏதோ ஒரு போதையில் துடிக்கவில்லையா?
 
..................... I like these lines. :) 
  • தொடங்கியவர்
34 minutes ago, Sasi_varnam said:
கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவரிடம் வாதிட்டு, உங்கள் வாதத்தில் நீங்கள் வெற்றி பெறுவதால் மட்டும் இது சாத்தியமா?
ஒருவருடைய தொண்டைக்குளிக்குள் கையை விட்டு போதை மருந்தைக்காணத் துடிக்கும் நீங்களும் ஏதோ ஒரு போதையில் துடிக்கவில்லையா?
 
..................... I like these lines. :) 

நன்றி.  😀🙏கருத்து வேறுபாடுகள் இருப்பதில் தவறில்லையே தோழர்!  உதாரணமாக நான் மிகவும் ஐதீங்கங்கள் பார்க்கும் ஒரு சைவக்  குடும்பத்தில் பிறந்தாலும் வேறு பல மதங்களின் நம்பிக்கைகளையும் அறிந்தவள். மூட நம்பிக்கைகளும் அதீதமான மத வெறியும் மக்களுக்கு தீமையே விளைவிக்கும் என நம்புகிறவள். அது மட்டுமல்ல பெரியார் போன்ற பகுத்தறிவுவாதிகள் தமது கருத்தை படிப்படியாக மக்களுக்கு புரிய வைத்தார்கள். பல கேள்விகளை முன் வைத்து பதில்களையும் கொடுத்தார்கள். இன்றைக்கு பகுத்தறிவாளர்கள் எனச் சொல்பவர்கள் அதை செய்வதில்லையே. அவர்கள் வெறுமனே ஒரு உதாரணத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மத அல்லது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை நக்கல் நையாண்டி பண்ணுகிறார்கள் என்பதும் எனது ஆதங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎28‎-‎07‎-‎2020 at 21:13, குமாரசாமி said:

இருப்பதை/ கிடைத்ததை வைத்து திருப்திப்படுவதும் மனித வாழ்க்கையின் ஒரு அங்கம்.
பலர் நல்ல படிப்பு படித்தும் ஒழுங்கான வேலை வந்து அமையாது.சிலர் எட்டாம் வகுப்பு வரை படித்தாலும் சொத்து சுகங்களுடன் டாம்பீகமாக வாழ்வார்கள்.
இதுதான் நியதி.

மற்றவர்களை போல் நாமும் வாழவேண்டும் என நினைத்து மாரடித்தால் நோய் நொடிகள் தான் மிஞ்சும்.

மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காத கடவுள் பக்தியுள்ள தம்பதியினர்...அவர்கள் ஒவ்வொரு வருடமும் அநேகமாய் எல்லா விரதங்களும் முறையாக பிடிப்பார்கள்...அவர்களுக்கு பிள்ளை இல்லை...இதே சிலர் கோயிலுக்கு வந்து உடனேயே அநேகமாய் அவர்கள் கேட்டது கிடைத்து விடும்....ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு அக்கிரமம் செய்யக் கூடியவர்களாய் இருப்பார்கள்...இந்த சிலர் அந்த தம்பதியினரை பார்த்து சொல்வார்கள் இவர்களது மனம் சரியில்லை அது தான் பிள்ளை இல்லாமல் இருக்கினம் என்று இல்லையா?
இதே மருத்துவ  ரீதியாய் பார்த்தால் அந்த தம்பதியினரில் ஒருவருக்கு ஏதாவது குறைபாடு இருக்க கூடும்.. மருத்துவ ரீதியாய் தீர்க்க கூடியதாய் இருக்கும் . சில நேரம் இல்லாமலும் இருக்கும் 
எங்கடையாக்களிட்ட கேட்டால் முற் பிறப்பில்செய்த பாவம் அல்லது விதி என்டுவினம்...கடவுளால் அதை  மாற்ற முடியா விட்டால் பிறகு எதற்கு கடவுள் என்று ஒருவர் தேவை?
வைத்தியர் ஏதாவது சிகிச்சை குழந்தை பிறந்திட்டால் கடவுள் தான் வைத்தியர் வடிவத்தில் வந்தவர் என்று சொல்லும் நாங்கள் அதே குழந்தை பிறக்கா விட்டால் அவர்கள் பாவம் செய்தவர்கள் ,முற்பிறப்பு வினை என்று சொல்வது எந்த விதத்தில் சரி?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.