Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தபால் துறையை வினை திறன்கொண்ட அமைச்சாக மாற்றியமைக்க திடசங்கற்பம் பூண்டுள்ளோம் – வியாழேந்திரன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தபால் துறையை வினை திறன்கொண்ட அமைச்சாக மாற்றியமைக்க திடசங்கற்பம் பூண்டுள்ளோம் – வியாழேந்திரன்!

 

தபால் துறையை வினை திறன்கொண்ட அமைச்சாக மாற்றியமைக்க திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

தபால் சேவைகள் திணைக்களத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டை சகல துறை சார்ந்தும் ஒரு சுபீட்சத்தின் அடிப்படையில் இந்த நாட்டை கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணக்கருவினை நடைமுறைப்படுத்துகின்ற செயற்திட்டத்தினை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

தபால்துறையை உலகத் தரம்வாய்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நோக்காக இருகின்றது.

புதிய தொழிநுட்ப முறைகளை கையாண்டு பல புதிய பரிமானங்களை தபால் சேவை ஊடாக புகுத்தி. இதை மக்களுடைய காலடிக்கு கொண்டு வந்து செயற்படுத்துவதற்குரிய ஒரு துறையாக மாற்றியமைக்க வேண்டும் என்பதே அனைவருடைய நோக்கமாக காணப்படுகின்றது.

    by : Benitlas

http://athavannews.com/தபால்-துறையை-வினை-திறன்க/

தபால் துறை மட்டுமல்ல. கிழக்கு , வன்னி மக்களுக்கு வேறு பிரச்சினைகள் நிறையவே இருக்கின்றன. இன்று எல்லாமே முஸ்லீம் மயப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் பிரதேசங்களை குறைந்தது முஸ்லீம் பிரதேசத்தின் அரைவாசி நிலைக்காவது கொண்டுவர முயட்சிக்க வேண்டும். இதட்கு கருணா,பிள்ளையானுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் வியாழேந்திரன், நன் கீழே எழுதுவது தபால் அல்லது அஞ்சல் சேவை பற்றிய வேண்டு கோள்கள் மட்டுமே.

தபால் துறையை பற்றி சில நாட்களுக்கு கூட இலங்கை தீவில் வசிப்பவருடன் உரையாட வேண்டிய சந்தர்ப்பம் வந்தது.

தபால் துறைக்கு மறுசீரமைப்பு மிகவும் அவசியமாகிறது.

தொழில்நுட்ப அறிமுகம் தேவை தான். 

ஆனாலும், எந்த சேவையாயினும், அதில் முக்கியமானது மனித வலுவும், ஊடாட்டமும் (interaction),  எத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அறிமுகப்படத்தப்பட்டாலும்.

அதில் முக்கியமானது, தபால் அலுவலகங்களிற்கு வரும் வாடிக்கையாளர்களை, மரியாதையுடனும், மதிப்புடனும், கண்ணியமாக சேவையை வழங்குவது பற்றியது.     

தபால் அலுவலங்கங்களுக்கு வரும் வாடிக்கையாளர் மீது எரிந்து விழுவதும, அவர்களை மரியாதையை குறைவாக நடத்துவதும், வாடிக்கையாளர் ஒருவர் மட்டும் வரும் போது (வேறு எந்த வாடிக்கையாளர் இல்லாத நிலையிலும்) அல்லது பல வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் போதே, தாம் ஏதோ பாரிய வேலைப்பளு சுமத்தப்பட்டு, அப்போது தான் வேகமாக வேலை செய்வது போன்று நடிப்பதும், அப்படி உண்மையில் வேலைப்பளு  இருந்தாலும் வாடிக்கையாளரை முதலில் கவனிக்க வேண்டியபோதிலும், அவர்களை கவனிக்காதது போன்று  புறக்கணித்து தாமதிக்க  வைப்பதும் நடைபெறுகிறது.

இது இன்றல்ல, நேற்றல்ல, கலாதிகாலமாக நடைபெறுகிறது.

இது எல்லா தபாலகங்களிலும் நடைபெறுவதாக கருத முடியாதாயினும், பொதுவாக, வெளிப்படையாக அவதானிக்கப்படக் கூடியவாறு தெரியாக் கூடியவாறு நடை  பெறுகிறது.    

இதனால், பலர் தமது அருகில் இருக்கும் தபாலகத்தை தவிர்த்து, தமக்கு தூர இடங்களில் இருக்கும், அவர்களின் பார்வையில் தம்மை கண்ணியமாக நடத்தும் தபாலகத்தை நாடுகின்றனர்.

நீங்கள் , தபால் சேவையில் வாடிக்கையாளரே-முதன்மை (customer-first) எனும் சேவை நெறிமுறையை அறிமுகப்படுத்துங்கள். இதற்கு வாடிக்கையாளர் திருப்தி என்பதும் அளவிடப்பட வேண்டும்.

 வாடிக்கையாளர் திருப்தி அளவிடுவதற்கு (செல்லிடப் பேசி இணையவெளி மூலமாக) கணக்கீடை (survey) அறிமுகப்படுத்துங்கள்.

வாடிக்கையாளர் திருப்தி அளவு மட்டம், தபாலகங்ளிடற்கு வழங்கப்படும் நிதியை நிர்ணயிக்கும் அளவு கோலிகளுள் (Metric) ஒன்றாக இருத்தல் அவசியம்.

Edited by Kadancha
amend

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் சர்வதேச ரீதியில் இனி உருப்பட முடியாத துறை இது. 

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கோ அண்ணே. கொஞ்ச வேலைவாய்ப்புகளையாவது சொந்தக்காரர்களுக்கு கொடுத்தாலும் தமிழருக்கு கொடுக்கட்டும். 

அதை சொல்லித்தானே வந்தவர்.🤪

  • கருத்துக்கள உறவுகள்

PoisedFickleAnemoneshrimp-size_restricte முக்கியமானது எல்லாம் அவயள் லவட்டி கொண்டு ஒப்புக்கு ஏதோ கொடுத்திருக்கினம் .. அவனவன் ஈ மெயில் இன்டர் நெட் என்டு இருக்கையில் .. சரக்கு கையளித்தல்  மற்றும் சிறுசேமிப்பு வகையில் முன்னேற சான்ஸ் உண்டு..👍

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

PoisedFickleAnemoneshrimp-size_restricte முக்கியமானது எல்லாம் அவயள் லவட்டி கொண்டு ஒப்புக்கு ஏதோ கொடுத்திருக்கினம் .. அவனவன் ஈ மெயில் இன்டர் நெட் என்டு இருக்கையில் .. சரக்கு கையளித்தல்  மற்றும் சிறுசேமிப்பு வகையில் முன்னேற சான்ஸ் உண்டு..👍

சரக்கு கையளிப்பு அல்ல தோழர் சரக்கு கையாடல்.

முன்னர் வெளிநாடுகளில் இருந்து ஈழத்துக்கு குறிப்பாக தமிழர் பகுதிகளுக்கு அல்லது தமிழர்கள் செறிந்து வாழும் இடங்களுக்கு பார்சல் அனுப்பினால்.. அல்லது கடிதம் அனுப்பினால்... உடைச்சுப் பார்த்து.. அதில் பெறுமதியான பொருட்கள்.. அவசர தேவைக்கு அனுப்பப்பட்டும் வெளிநாட்டு பணத்தை சுருட்டுவதே வாடிக்கையாக இருந்தது. இப்பவும் தொடர்வதாக பலமுறைப்பாடுகள் உண்டு.

அதில் அதிகம் கையாடல் செய்யப்பட்டது கொழும்பில். அதில் ஒரு பகுதி அமைச்சுக்களுக்கு பகிர்ந்தளிப்பு. கீழ்மட்டத்தில் இருந்து உயர்மட்டம் வரை கொள்ளை தான். தமிழினிடம் கொள்ளை அடித்தால் கேட்டுக்கேள்வி இருக்காது. 

9 hours ago, nedukkalapoovan said:

சரக்கு கையளிப்பு அல்ல தோழர் சரக்கு கையாடல்.

முன்னர் வெளிநாடுகளில் இருந்து ஈழத்துக்கு குறிப்பாக தமிழர் பகுதிகளுக்கு அல்லது தமிழர்கள் செறிந்து வாழும் இடங்களுக்கு பார்சல் அனுப்பினால்.. அல்லது கடிதம் அனுப்பினால்... உடைச்சுப் பார்த்து.. அதில் பெறுமதியான பொருட்கள்.. அவசர தேவைக்கு அனுப்பப்பட்டும் வெளிநாட்டு பணத்தை சுருட்டுவதே வாடிக்கையாக இருந்தது. இப்பவும் தொடர்வதாக பலமுறைப்பாடுகள் உண்டு.

அதில் அதிகம் கையாடல் செய்யப்பட்டது கொழும்பில். அதில் ஒரு பகுதி அமைச்சுக்களுக்கு பகிர்ந்தளிப்பு. கீழ்மட்டத்தில் இருந்து உயர்மட்டம் வரை கொள்ளை தான். தமிழினிடம் கொள்ளை அடித்தால் கேட்டுக்கேள்வி இருக்காது. 

நீங்கள் எழுதியது உண்மை. எனக்கும் அந்த அனுபவம் இருக்குது. கொஞ்சம் பொறுங்கோவன். ஐயா இப்பதானே பதவிக்கு வந்திருக்கிறார். 70 வருடம் பொறுத்த உங்களுக்கு இன்னும் 5 வருடம் பொறுக்க முடியாதா? ஆக்க பொறுத்த நாம் ஆறவும் பொறுக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.