Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு இலட்சம் பேருக்கு அரச வேலை வாய்ப்பு – வடக்கு, கிழக்கு மாகாணங்கள் புறக்கணிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

government.jpg

ஒரு இலட்சம்  பேருக்கு அரச வேலை வாய்ப்பு – வடக்கு, கிழக்கு மாகாணங்கள் புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம்  பேருக்கு அரச வேலை வாய்ப்பை வழங்கும் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இப்போதைக்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி கற்றவர்களில் இருந்து நாடு முழுவதும் ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கவுள்ளதாக அரசு அறிவித்தது.

எனினும் தற்போது வடக்கு, கிழக்கில் மட்டும் அதனை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு வழங்குவதனை இடைநிறுத்துவதற்கான உத்தரவு வடக்கு கிழக்கின் 8 மாவட்டத்திலும் உள்ள மாவட்டச் செயலகங்களிற்கு நேற்று மாலை தொலை நகல் மற்றும் மின் அஞ்சல்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், குறித்த நியமனத்தில் யாழ்ப்பாணத்தில் 6 ஆயிரத்து 626 பேரும்  கிளிநொச்சியில் 2 ஆயிரத்து 261 பேரும்  மன்னாரில் ஆயிரத்து 830 பேரும்  முல்லைத்தீவில் ஆயிரத்து 565 பேரும் நியமிக்கப்படவிருந்ததோடு, வவுனியாவில் ஆயிரத்து 258 பேரும் நியமிக்கப்படவிருந்தனர்.

இவர்களுக்கு எதிர்வரும் 31ஆம் திகதி முதல் நியமனம் வழங்கப்படும் எனவும் மாவட்டச் செயலகங்களிற்கு உறுதியளிக்கப்பட்டது. இந்த நிலையிலையே அதனை இடை நிறுத்துமாறு அவசர உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் பேருக்கும் தொழில்வாய்ப்பு இன்றி காணப்படும் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்திற்கு அமைய 50 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்பு பெற்றவர்களின் பெயர் விபரங்கள் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தன.

மேலும் ஒரு இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்பு தெரிவிற்கு நாடளாவிய ரீதியில் வறிய குடும்பத்திலிருந்து  தெரிவு செய்ய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஒரு-இலட்சம்-பேருக்கு-அரச/

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் வென்றுவிட்டால் பின்னர் தேர்தல் வாக்குறுதிகளை காப்பாற்றவேண்டிய தேவை இல்லை தானே. அதுவும் வடகிழக்கு மக்களுக்கு இது பழகிபோன ஒன்று. டக்கியர் மனம் வைத்தால் எல்லோரும் கடல்தொழில் செய்யலாம்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஒரு இலட்சம்  பேருக்கு அரச வேலை வாய்ப்பு – வடக்கு, கிழக்கு மாகாணங்கள் புறக்கணிப்பு

வடக்கு அங்கயன் மூலமாகவும்
கிழக்கு பிள்ளையான் மூலமாகவும்
அரச உத்தியோகங்கள் வழங்க இருப்பதால்
அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

  • கருத்துக்கள உறவுகள்

வெயிலில் காய்ந்து கொண்டிருக்காமல் வீடுகளிற்கு கிளம்புங்கள்..! பட்டதாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுரை..

Cropped-15739701111495373.jpg?source=nar

ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில், போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேலையற்ற பட்டதாரிகளை, “வெயிலில் காய்ந்து கொண்டிருக்காமல் வீடுகளிற்கு கிளம்புங்கள் “ என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய கன்னி அமைச்சவையில், 10,000  பட்டதாரிகளிற்கு நியமனம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

பின்னர், ஜனாதிபதி செயலகத்திலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி போராட்டக்காரர்களிற்கு அருகில் வந்து, வாகனத்தில் இருந்தபடியே சில வார்த்தைகள் பேசினார்.

10,000 பேருக்கு நியமனம் வழங்க அமைச்சரவை எடுத்த முடிவை அறிவித்த ஜனாதிபதி, “வெயிலில் காய்ந்து கொண்டிருக்காமல் வீடுகளிற்கு கிளம்புங்கள்“ என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

https://vanakkamlondon.com/world/srilanka/2020/08/81184/

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னடாப்பா.. தமிழ் தேசியம் வேண்டாம் என்று வாக்குப் போட்டத்துக்கு நீட்டி நிமித்து வாழ்த்தினவை... இப்ப என்னடான்னா.. தமிழ் தேசியத்தை வேலை கேட்கட்டாம்.

அப்ப இதோ அங்கசன் வந்திட்டார் வசந்தம் வீசப் போகிறது.. இதோ டக்கி வந்திட்டார்.. பருத்துறைக்குள்ளால்.. பவளம் திரளப்போகிறது.. அங்கால பிள்ளையான் வந்திட்டார்.. பிள்ளைகளே உங்களுக்கு எனி என்ன கஸ்டம்.. வியாழேந்திரன் வந்திட்டார் எனி விடியல் தான்.. என்றதுகள் எல்லாம்.. தமிழ் தேசிய நீக்கத்துக்கு மட்டும் தானா..??!

  • கருத்துக்கள உறவுகள்

எங்களை நமது பிரதேசத்தில் சுதந்திரமாக வாழ, சுய நிர்ணயத்தோடு வாழ விட்டால் எமக்கு தேவையானதை நாமே பார்த்துக்கொள்வோம். சமஷ்டி என்றால் நாடு இரண்டாகி விடுமாம், பொருளாதாரம் அபிவிருத்தி இது கூட தமது கைக்குள் தான் வைத்திருப்பார்கள். எம்மிடம் தந்தால் நாடு இரண்டாகி ஈழம் மலரும் என்று பூச்சாண்டி காட்டுவார்கள். போலிக்கு ஒரு மாகாண சபையை உருவாக்கி போட்ட நாடகம், ஏற்படுத்தப்பட்ட தடைகள்  தெரியாதா? தமிழரை அடக்கி, சுரண்ட எத்தனை போலிகளை உருவாக்க முடியுமோ அத்தனையையும் செய்யும் சிங்களம். அதற்கு வக்காலத்து வாங்கும்  நீங்களும் ஒரு உதாரணம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.